Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் திருப்தியளிக்கிறது

Featured Replies

(ஆர்.யசி)

ஸ்ரீலங்கா பொதுஜன  முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் ஆரோக்கியமானதும்  திருப்திகரமான, தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய விதத்திலான தேர்தல் விஞ்ஞாபனத்தை புதிய ஜனநாயக முன்னணி முன்வைத்துளதென கருதுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. 

தாம்  தொடர்ச்சியாக முன்வைத்து வந்த  கோரிக்கைகள்  சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலில்  தமிழ் தேசிய கூட்டமைப்பு நிலைபாட்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாவும் கூறுகின்றது. 

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பிரதான இரண்டு வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கவுள்ள அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து வினவிய போதே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.  

https://www.virakesari.lk/article/68026

9 hours ago, ampanai said:

தாம்  தொடர்ச்சியாக முன்வைத்து வந்த  கோரிக்கைகள்  சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலில்  தமிழ் தேசிய கூட்டமைப்பு நிலைபாட்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாவும் கூறுகின்றது. 

ஒரு கொலைகாரக் கும்பலைவிட இன்னொரு கொலைகாரக் கும்பல் பரவாயில்லை என்ட அடிமை மனோநிலையில் இவ்வளவு காலமும் பின்கதவு வழியா வாங்கின பெருந்தொகை காசு சுமந்திரனை மிக அப்பட்டமான பொய்களை பேசவைக்குது.

டக்ளஸ், கருணா, ஆனந்தசங்கரி போன்றாக்களைவிட மோசமான பேர்வழி தான் என்பதை சுமந்திரன் உறுதிப்படுத்தி வருகிறார்.

  • தொடங்கியவர்

சஜித், கோத்தா, அனுர இல்லை சிவாஜி  அதைவிட பகிஷ்கரிப்பு - இதில் எல்லாவற்றையுமே எம்மில் ஒரு பகுதியினர்,  " மீண்டும் வரலாற்று தவறை விட்ட தமிழ் மக்கள் " என கூறுவோம். காரணம் கூறலாம், ஏனெனில் குறை கூறுவது இலகு. ஆனால், சரியான பாதையை கண்டுபிடித்தது வழிநடாத்துவது ஒரு இடியப்ப சிக்கலான விடயம். 

On 11/2/2019 at 3:29 PM, ampanai said:

தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

இந்த அறிக்கைகளை விடுவது தமிழ் தேசிய கூட்டமைப்பா? தமிழரசுக் கட்சியா?

ரணிலின் எடுபிடிகள் சம்மந்தனும் சுமந்திரனும் விடும் அறிக்கைகளை கூட்டமைப்பின் அறிக்கைகள் எனக் கூறி ஊரை ஏமாற்றுவது கூட விளங்காது டெலோவும் புளட்டும் மயக்கத்தில் இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
2 minutes ago, போல் said:

இந்த அறிக்கைகளை விடுவது தமிழ் தேசிய கூட்டமைப்பா? தமிழரசுக் கட்சியா?

ரணிலின் எடுபிடிகள் சம்மந்தனும் சுமந்திரனும் விடும் அறிக்கைகளை கூட்டமைப்பின் அறிக்கைகள் எனக் கூறி ஊரை ஏமாற்றுவது கூட விளங்காது டெலோவும் புளட்டும் மயக்கத்தில் இருக்கிறார்கள்.

சம்பந்தன்த சுமந்திரனின் கருத்தை ஒட்டுமொத்த கூட்டமைப்பின் கருத்தாக ஏற்க முடியாது செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சம்பந்தனும் சுமந்திரனும் கருத்து சொல்லி யுள்ளார்கள். அது அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பார்க்க வேண்டுமே அன்றி தமிழ்த்; தேசிய கூட்டமைப்பின் ஒட்டுமொத்த பதிலாகவோ அல்லது ஐந்து கட்சிகளின் பதிலாகவோ பார்க்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று முல்லைத்தீவு உண்ணாப்புலவு பகுதியில் கட்சி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
 

தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து கட்சிகளையும் ஒன்றிணைத்து அந்த ஐந்து கட்சிகளின் செயற்பாடுகளைத்தான் நாங்கள் தொடர்ந்து செய்து வருகின்றோம்.

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவராத பட்சத்தில் நாங்கள் தபால்மூலம் வாக்களிக்கின்ற உத்தியோகத்தர்களுக்கு சொல்லியுள்ளோம், நீங்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று. இப்போது போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கை வெளிவந்துள்ளது. இது ஆராயப்படவேண்டும்.

ஐந்து கட்சிகளும் ஒரு மித்த அறிவிப்பினை செய்ய வேண்டும் என நான் எதிர் பாக்கின்றேன். தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சம்பந்தனும் சுமந்திரனும் தங்கள் கருத்துக்களை சொல்;லியுள்ளார்கள். அது அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.
 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒட்டுமொத்த பதிலாகவோ அல்லது ஐந்து கட்சிகளின் பதிலாகவோ பார்க்க முடியாது. அது தலைவர் அவர்களின் தனிப்பட்ட கருத்து சுமந்திரனும் தன்னுடைய அபிப்பிராயத்தினை சொல்லியுள்ளார் என அவர் மேலும் தெரி வித்துள்ளார்.

http://valampurii.lk/valampurii/content.php?id=19720&ctype=news
 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2019 at 12:44 PM, Rajesh said:

ஒரு கொலைகாரக் கும்பலைவிட இன்னொரு கொலைகாரக் கும்பல் பரவாயில்லை என்ட அடிமை மனோநிலையில் இவ்வளவு காலமும் பின்கதவு வழியா வாங்கின பெருந்தொகை காசு சுமந்திரனை மிக அப்பட்டமான பொய்களை பேசவைக்குது.

டக்ளஸ், கருணா, ஆனந்தசங்கரி போன்றாக்களைவிட மோசமான பேர்வழி தான் என்பதை சுமந்திரன் உறுதிப்படுத்தி வருகிறார்.

நீங்கள் இவர்கள் எல்லோருக்கும் பாடம் எடுக்க தக்கவர் போல தெரிகிறதே?

உங்களை போல தமிழ் தேசியம் பேசி கோத்தபாயவை வெல்ல வைக்கும் சாணக்கியம் சிவாஜிலிங்கத்தை தவிர வேறு யாருக்கும் வராது!

Edited by Jude

On 11/4/2019 at 12:06 PM, Jude said:

நீங்கள் இவர்கள் எல்லோருக்கும் பாடம் எடுக்க தக்கவர் போல தெரிகிறதே?

உங்களை போல தமிழ் தேசியம் பேசி கோத்தபாயவை வெல்ல வைக்கும் சாணக்கியம் சிவாஜிலிங்கத்தை தவிர வேறு யாருக்கும் வராது!

உங்களைப் போல பூச்சாண்டி காட்டி சிங்களக் கொலைகாரர்களுக்கு, பேரினவாதிகளுக்கு வாக்கு கேட்கும் சாணக்கியம் டக்ளஸ், கருணா, ஆனந்தசங்கரி போன்ற ஆட்களை தவிர வேற ஆட்களுக்கு வராது.

 நீங்கள் இவர்கள் எல்லோருக்கும் பாடம் எடுக்க தக்கவர் போல தெரிகிறதே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.