Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் பெருமாள் இயற்கை எய்தினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் பெருமாள் இயற்கை எய்தினார்

by in செய்திகள்

Perumal-300x198.jpg

ஈழத்து ஊடகத்துறையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான, சி.பெருமாள், யாழ்ப்பாணத்தில் நேற்று தனது 86ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

இரத்தினபுரியைப் பிறப்பிடமாகக் கொண்ட சின்னக்கண்ணு பெருமாள், ஊடகத்துறை மீது இருந்து ஆர்வத்தினால் இளவயதிலேயே, வீரகேசரி நாளிதழின் ஆசிரிய பீடத்தில் உதவி ஆசிரியராக இணைந்து கொண்டார்.

பின்னர், 1961ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு நாளிதழில், உதவி ஆசிரியராக இணைந்து கொண்ட அவர், பின்னர் அதன் செய்தி ஆசிரியராகவும், வாரமலர் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

அதையடுத்து, யாழ்ப்பாணத்தில் உதயன் நாளிதழின் ஆசிரிய பீடத்தில் உதவி ஆசிரியராகவும், ஆசிரிய பீட ஆலோசகராகவும் பணியாற்றிய, சி.பெருமாள், 2017இல் ஊடகத்துறைப் பணியில் இருந்து ஓய்வுபெற்றுக் கொண்டார்.

சுமார் 55 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிய சி. பெருமாள், தனது ஊடகத்துறை அனுபவங்களை இளம் ஊடகவியலாளர்கள், ஊடகத்துறை மாணவர்களுடன் பகிர்ந்து அவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவராக இருந்தவர்.

மரணத்துக்குப் பின்னர், தனது உடலை  மாணவர்களின் ஆய்வுக்காக யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கையளிக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருந்தார்.

இதற்கமைய அவரது உடல், இறுதிச் சடங்களுக்குப் பின்னர், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கையளிக்கப்படவுள்ளது.

Perumal-1.jpg

தமிழ் ஊடகத்துறையில் அரை நூற்றாண்டு காலம் தடம் பதித்துச் சென்ற மூத்த ஊடகவியலாளர் பெருமாள் அவர்களுக்கு ‘புதினப்பலகை’ சார்பில் அஞ்சலிகளை செலுத்துவதுடன், அவரது இழப்பால் துயருற்றிருக்கும், குடும்பத்தினருக்கும் எமது இரங்கலைப் பகிர்ந்து கொள்கிறோம்.

 

http://www.puthinappalakai.net/2019/11/06/news/40996

ஒரு இனப்பற்று  மற்றும் அறிவு சார்ந்த ஊடகவியலாளர் போல தெரிகின்றது. 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எனது வேண்டுதல்கள் !

" மரணத்துக்குப் பின்னர், தனது உடலை  மாணவர்களின் ஆய்வுக்காக யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கையளிக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருந்தார்.

இதற்கமைய அவரது உடல், இறுதிச் சடங்களுக்குப் பின்னர், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கையளிக்கப்படவுள்ளது. " 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்...!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.