Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்பி சிவாஜி… தேர்தலில் இருந்து விலகுங்கள்’: சம்பந்தன் பகிரங்க வேண்டுகோள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் இருந்து சிவாஜிலிங்கமும் விலக வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

இன்று (10) யாழில் நடந்த ரவிராஜ் நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் பாதிக்கப்பட்டால் எந்த விதத்திலேனும் உணர்ந்து மக்களிற்காக செயற்பட்டவர் ரவிராஜ்.

அவர் கொலை செய்யப்பட்டது ஏன் என்று எவருக்கும் தெரியவில்லை. அவருக்கு எதிரிகள் இல்லை. எல்லோருடனும் அன்பாக பழகினார். நாடாளுமன்றத்திற்குள் எல்லா உறுப்பினர்களுடனும் அன்பாக பழகினார். சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள மொழியில் உரையாற்றி, தமிழ் மக்களின் பிரச்சனைகளை புரிய வைத்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள தீவிரவாத தலைவர்கள் அவரை கொலை செய்தார்கள் அதைவிட வேறெந்த காரணமும் இல்லை.

ரவிராஜ் சிங்கள மொழியில் பிரச்சனைகளை புரிய வைக்கிறார், அதனால் சிங்கள மக்களிடம் மாற்றம் வருகிறது என்பதால் கொலை செய்யப்பட்டார் என்பது ஒரு கருத்து.

ரவிராஜ் கொல்லப்பட்ட மறுநாள் காலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்னை தொலைபேசியில் அழைத்தார். தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். எனக்கு ஆனுதாபம் சொல்லி என்ன பிரயோசனம் என்றேன். அவர் இளம் சட்டத்தரணி, அவரது எதிர்காலம் பிரகாசமாக இருந்தது, அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் என்ன? எனக்கு அனுதாபம் சொல்லி என்ன பயன் என்றேன். யார் ரவிராஜை கொன்றார்கள்? ஏன் ரவிராஜ் கொல்லப்பட்டார்? என்றேன். அவர் தொலைபேசியை வைத்து விட்டார்.

மறுநாள் காலை மீண்டும் தொலைபேசியை எடுத்தார். நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ரவிராஜிற்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன். ஆனால் செல்ல முடியாமல் உள்ளது. அதனால் என் மனைவி, பிள்ளைகளை சென்று அஞ்சலி செலுத்துமாறு கூறியுள்ளேன். 3 மணிக்கு அவர்கள் வருவார்கள். ஒன்றும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். ஒன்றும் நடக்காது, மனைவியை அனுப்பலாம் என்றேன்.

2005ம் ஆண்டில் நாங்கள் வாக்களிக்காமல் விட்டதால்தான் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெற்றார். அவர் வெற்றி பெற்று 2005 தொடக்கம் 2015 வரை என்னென்ன செய்தார் என்பதை நான் சொல்ல தேவையில்லை. நாம் சிந்தித்து வாக்களித்திருந்தால் இவ்வளவு அழிவை சந்தித்திருக்க தேவையில்லை.

தம்பி சிவாஜிலிங்கத்தை மிகவும் அன்பாக கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து இந்த தேர்தலில் இருந்து விலகுங்கள். எனது கோரிக்கையை அவர் தவறாக புரிந்து கொள்ள மாட்டார். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக, ஒரு தீர்மானத்தின் அடிப்படையில்  யாருடைய வெற்றி எமக்கு சாதகமாக இருக்கும், யாருடைய வெற்றி எமக்கு பாதகமாக இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும் என்றார்.

http://www.pagetamil.com/86385/

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

அவர் கொலை செய்யப்பட்டது ஏன் என்று எவருக்கும் தெரியவில்லை. அவருக்கு எதிரிகள் இல்லை. எல்லோருடனும் அன்பாக பழகினார். நாடாளுமன்றத்திற்குள் எல்லா உறுப்பினர்களுடனும் அன்பாக பழகினார். சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள மொழியில் உரையாற்றி, தமிழ் மக்களின் பிரச்சனைகளை புரிய வைத்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள தீவிரவாத தலைவர்கள் அவரை கொலை செய்தார்கள் அதைவிட வேறெந்த காரணமும் இல்லை.

ரவிராஜ் கொல்லப்பட்ட மறுநாள் காலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்னை தொலைபேசியில் அழைத்தார். தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். எனக்கு ஆனுதாபம் சொல்லி என்ன பிரயோசனம் என்றேன். அவர் இளம் சட்டத்தரணி, அவரது எதிர்காலம் பிரகாசமாக இருந்தது, அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் என்ன? எனக்கு அனுதாபம் சொல்லி என்ன பயன் என்றேன். யார் ரவிராஜை கொன்றார்கள்? ஏன் ரவிராஜ் கொல்லப்பட்டார்? என்றேன். அவர் தொலைபேசியை வைத்து விட்டார்.

மறுநாள் காலை மீண்டும் தொலைபேசியை எடுத்தார். நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ரவிராஜிற்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன். ஆனால் செல்ல முடியாமல் உள்ளது. அதனால் என் மனைவி, பிள்ளைகளை சென்று அஞ்சலி செலுத்துமாறு கூறியுள்ளேன். 3 மணிக்கு அவர்கள் வருவார்கள். ஒன்றும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். ஒன்றும் நடக்காது, மனைவியை அனுப்பலாம் என்றேன்.

ஐயா இப்ப உண்மை மட்டுமே பேசுவார்!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு இன்னமும் உண்மை தெரியவில்லையாம்.  கொன்றதுகூட யாரென்று தெரியாதாம். 

ஓம் ஐயா,  கொன்றவனுக்கும் கூடாது ரவிராஜ் யாரென்று தெரியாது,  ஏன் கொன்றோம் என்றும் தெரியவில்லையாம்.  

கொன்றவனுக்கே தெரியாதபோது உங்களுக்கு எப்படி ஐயா தெரியும். 

ஐயாவுக்கு இலங்கை சீனாவிடம் போன கவலை இன்னும் தீரவில்லை போல  ??? 

"தம்பி சிவாஜிலிங்கத்தை மிகவும் அன்பாக கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து இந்த தேர்தலில் இருந்து விலகுங்கள். எனது கோரிக்கையை அவர் தவறாக புரிந்து கொள்ள மாட்டார். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக, ஒரு தீர்மானத்தின் அடிப்படையில்  யாருடைய வெற்றி எமக்கு சாதகமாக இருக்கும், யாருடைய வெற்றி எமக்கு பாதகமாக இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும் என்றார்." 

 

 

கூட்டமைப்பு இதயசுத்தியுடன் தான் கேட்க்கின்றது என நம்பமுடியவில்லை. இப்பொழுது இப்படி பகிரங்கமாக கேட்பது நாளை இந்த 'தம்பியின்' தலையில் எம்மாற்றங்களை கட்டிவிடும் நோக்கமே உள்ளதாக தெரிகின்றது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.