Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

4 பெண்களை ஏமாற்றி 5வது திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

4 பெண்களை ஏமாற்றி 5வது திருமணம்

செய்ய முயன்ற மதபோதகர் கைது

மே 09, 2007

சென்னை: 4 பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கொடுங்கை யூரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் என்ற ஜெய் மார்ட்டின் லூதர் (40). இவர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் ஜெபக் கூடம் நடத்தி வருகிறார். மதபோதகரான இவர் மற்ற ஜெபக் கூடங்களுக்குக்கும் சென்று பிரசங்கம் செய்வதுண்டு.

இவர் கொடுங்கையூர் சீதாராம் நகர் முதல் தெருவைச் சேர்ந்த பிரேமிபியூலா என்பவரை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பியூலா தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பியூலா சமீபத்தில் ஜெய் மார்ட்டின் லூதர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில்,

ஜெய்மார்ட்ன் லூதர் நடத்தி வரும் ஜெபக்கூடத்துக்கு நான் அடிக்கடி ஜெபம் செய்ய செல்வேன். அப்போது எனக்கும், ஜெய்மார்ட்டின் லூதருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

பின்னர் இருவரும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெய் மார்ட்டின் லூதருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. மேலும் மேரி, பரிமளம், சலோமியா ஆகிய 3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி இருப்பதும் தெரிந்தது. அவர்கள் மூவருக்கும் குழந்தைகள் உள்ளனர்.

இதில் மேரியை மனநிலை சரி இல்லாதவர் என்று ஒதுக்கி வைத்து விட்டார். மற்ற இரண்டு பெண்களையும் அது போல விரட்டி விட்டார். என்னையும் சில காலமாக சித்ரவதை செய்து வருகிறார். மேலும் என்னை விபச்சாரத்தில் தள்ள ஏற்பாடு செய்து வருகிறார்.

மேலும் வரதட்சணை வாங்கி வர சொல்லி தினமும் என்னை அடித்து துன்புறுத்தினர். சில வாரங்களுக்கு முன் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி என்னை வீட்டை விட்டு விட்டிவிட்டார்.

இந்நிலையில் அவர் 5வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறார். இதை தடுத்து நிறுத்தி ஜெய்மார்ட்டின் லூதர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெய் மார்ட்டின் லூதர் மீது நடவடிக்கை எடுக்க மகாகவி பாரதி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி ஜெய் மார்ட்டின் லூதரை இன்று போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/05/09/pastor.html

போதகனா இவன் பாதகன்...

ஹும் இவங்களையெல்லாம் என்ன செய்யிறது எண்டு தெரியல..... :angry:

ஒருவர் கிட்ட 4 பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கினம்... ஹும் நெடுக்ஸ் தாத்தா இந்தச் செய்தியையும் ஒருக்கா வாசிச்சுப் பாருங்க... B) ;)

Edited by அனிதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹும் இவங்களையெல்லாம் என்ன செய்யிறது எண்டு தெரியல..... :angry:

ஒருவர் கிட்ட 4 பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கினம்... ஹும் நெடுக்ஸ் தாத்தா இந்தச் செய்தியையும் ஒருக்கா வாசிச்சுப் பாருங்க... B) ;)

நெடுக்ஸ் சார் வந்து என்ன செய்யப்போறாரு

நெடுக்ஸ் சார் வந்து என்ன செய்யப்போறாரு

இல்லை வாசிச்சுப் போட்டு, இந்த 4 பெண்களும் பொல்லாதவர்கள் எண்டு சொன்னாலும் சொல்லுவார் :P <_< B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்டதுமு; காதல் காதல் கொண்ட சில துளிப்பொழுதில் திருமணம் என்று யோசித்தால் இப்பகடித்தான் நிகழும்.. திருமணம் மிகவும் சிக்கலானது நிதானமாக யோசித்து பாருங்களன்.

பெண்கள் ஏமாளிகளாக இருப்பதுதான் இப்படியானவர்களுக்கு வாய்ப்பாகிவிடுகிறது.

எதிலும் நிதானம்....

பாவம் அனி ..

யாரும் ஆதரவா பேசுறாங்க இல்லைப் போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வி கறுப்பி அவர்களே அந்த மத(து)போதகரின் புகைப்படம் இருந்தால் இப்பகுதியில் இணைத்து விடவும்.ஏனெனில் யாழ் கள உறவுகளுக்கு எங்கள் சின்னப்பு மேல் சந்தேகம் வந்துவிடக்கூடாதல்லவா <_<

வழக்கு மன்றத்துகுச் சென்றால் நான் அவனில்லை என்று சொல்வார்.

இப்ப எல்லாருமே நான் அவனில்லை என்னு சொல்லிடறாங்கப்பா..

சத்தியமா நான் அவனில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்வி கறுப்பி அவர்களே அந்த மத(து)போதகரின் புகைப்படம் இருந்தால் இப்பகுதியில் இணைத்து விடவும்.ஏனெனில் யாழ் கள உறவுகளுக்கு எங்கள் சின்னப்பு மேல் சந்தேகம் வந்துவிடக்கூடாதல்லவா <_<

ஐயே காட்டிக்கொடுத்திடுவேனா குமாரசாமி .

அதில் இருப்பது உங்க படம் தானே

5 வதா? கடவுளே எப்படி தான் சமாளிக்கீரார்கலோ தெரியா

இவன்களால நானும் மாட்டுப்படவேண்டி வரலாம்

இனி வேற பெண்ணை ஏறஎடுத்தும் பார்ப்பது இல்லை

அசினை கட்டின கையோடு அப்படியே திரிசாவுக்கும் ஒரு நல்ல வீடு பாத்துபோட்டு கொஞ்ச நாளைக்கு சினேகவை வாடகை வீட்டில் வைச்சு இருந்து கொண்டே நாயனதாரவை அம்மா வீட்டில் கொண்டுபோய்விட்ட உடனே அப்ப தான் அந்தரம் ஆபத்துக்கு ஹரினி யோடு இந்த கொடைகால விடுமுறைஅயை சுவிஸில் அனுபவிக்க வேண்டும் இல்லையேல் காஞ்ச மாடு கம்புல பாச்ச மாதிரி கோவை சராளா தான் மீண்டும் :P

இதை எல்லாம் எப்படியும் விடிய எழும்பின பின் மனைவிக்கு சொல்லனும் இல்லாட்டி அவா யார் முலம் கேள்விப்படா சாப்பாடும் கிடைக்காது( என்ன ஒரு இனிமையான கனவு நாளைக்கும் வரனும்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5 வதா? கடவுளே எப்படி தான் சமாளிக்கீரார்கலோ தெரியா

இவன்களால நானும் மாட்டுப்படவேண்டி வரலாம்

இனி வேற பெண்ணை ஏறஎடுத்தும் பார்ப்பது இல்லை

அசினை கட்டின கையோடு அப்படியே திரிசாவுக்கும் ஒரு நல்ல வீடு பாத்துபோட்டு கொஞ்ச நாளைக்கு சினேகவை வாடகை வீட்டில் வைச்சு இருந்து கொண்டே நாயனதாரவை அம்மா வீட்டில் கொண்டுபோய்விட்ட உடனே அப்ப தான் அந்தரம் ஆபத்துக்கு ஹரினி யோடு இந்த கொடைகால விடுமுறைஅயை சுவிஸில் அனுபவிக்க வேண்டும் இல்லையேல் காஞ்ச மாடு கம்புல பாச்ச மாதிரி கோவை சராளா தான் மீண்டும் :P

இதை எல்லாம் எப்படியும் விடிய எழும்பின பின் மனைவிக்கு சொல்லனும் இல்லாட்டி அவா யார் முலம் கேள்விப்படா சாப்பாடும் கிடைக்காது( என்ன ஒரு இனிமையான கனவு நாளைக்கும் வரனும்)

கறுவலுக்கு வாற கனவைப்பாரப்பா???? <_<

கறுவலுக்கு வாற கனவைப்பாரப்பா???? <_<

குசு தாத்தா வேண்டாம் வயது போனவர் என்று மரியாதை வைச்சு இருக்கேன் பிறகு இரவில முடக்கில் நிண்டு தள்ளி விழுத்தி போடுவேன் ஆமா சொல்லிட்டன் :angry:

ஹும் இவங்களையெல்லாம் என்ன செய்யிறது எண்டு தெரியல..... :angry:

ஒருவர் கிட்ட 4 பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கினம்... ஹும் நெடுக்ஸ் தாத்தா இந்தச் செய்தியையும் ஒருக்கா வாசிச்சுப் பாருங்க... B) ;)

என்ம்மா பிள்ளை அனிதா நெடுக்கு காட்டி என்ன பலன் மனுசன் முதல் கட்டிய ஆத்துகாரிஅயை கூட கண்ணாடி அலுமாரியில பூட்டி வைச்சு கொண்டு இருக்கிறார் ஆவருக்கு ஒய்வாக ஆய்வு எழுத ததன் வருமாம்

:P

ஹும் இவங்களையெல்லாம் என்ன செய்யிறது எண்டு தெரியல..... :angry:

ஒருவர் கிட்ட 4 பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கினம்... ஹும் நெடுக்ஸ் தாத்தா இந்தச் செய்தியையும் ஒருக்கா வாசிச்சுப் பாருங்க... B) ;)

உங்களுக்கு ஒன்று தெரியுமா எமாற்றுபவர்களை விட ஏமாறுவர்களே குற்றவாளிகள்.ஒரு புடவை வாங்க பலதரம் யோசனை செய்யும் பெண்கள் ஏன் கணவனை மட்டும் அப்படி தெரிவு செய்யவில்லை.எனை பொறுத்தவரையில் இந்த சம்பவங்களுக்கு முக்கிய காரணம் இந்த புகார் கொடுத்த பெண்ணே முதல் பெண்களுக்கு ஆப்பு வசாரோ உங்களுக்கு தெரியாது எனக்கும் தெரியாது.ஏன் எனின் ஒரு போதகர் அதுவும் அவரின் ஜெபகூடத்தில் ஜெபம் செய்யப்போகும் அந்த பெண்ணுக்கு அந்த போதகரை பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும் உள்ளூர் போதகர் என்பதால் அவரை பற்றி ஊர் அறிந்திருக்கும் அந்த பெண்ணும் அறிந்திருப்பார் ஆனால் எடுத்ததுகெல்லாம் ஆண்கள் ஏமாற்றூபவர்கள் என சொல்லகூடாது அனித்தா

இதே தாற்ஸ்தமிழில் பெண்கள் செய்த கொலைகளையும் ஆசிங்கத்தை வெளியிட்டு இருந்தது ஆனால் அதனை நாகரிகம் கருதி விவாதிக்கவும் இல்லை இங்கு பிரசுரிக்கவும் இல்லை ஆனால் உங்கள் கருத்து ஒட்டு மொத்த ஆண்களையும் குற்றம் சாட்டும்வகையில் இருந்திருப்பதால் நான் என் கருத்தை முன்வைகின்றேன்.அத்துடன் இவாறான பேர்வழிகளுக்கு துணைபோகும் அல்லது தெரிந்தும் ஏமாறும் இப்படிப்பட்ட பெண்களை கண்டிக்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போலிச்சாமியா

உங்களுக்கு ஒன்று தெரியுமா எமாற்றுபவர்களை விட ஏமாறுவர்களே குற்றவாளிகள்.ஒரு புடவை வாங்க பலதரம் யோசனை செய்யும் பெண்கள் ஏன் கணவனை மட்டும் அப்படி தெரிவு செய்யவில்லை.எனை பொறுத்தவரையில் இந்த சம்பவங்களுக்கு முக்கிய காரணம் இந்த புகார் கொடுத்த பெண்ணே முதல் பெண்களுக்கு ஆப்பு வசாரோ உங்களுக்கு தெரியாது எனக்கும் தெரியாது.ஏன் எனின் ஒரு போதகர் அதுவும் அவரின் ஜெபகூடத்தில் ஜெபம் செய்யப்போகும் அந்த பெண்ணுக்கு அந்த போதகரை பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும் உள்ளூர் போதகர் என்பதால் அவரை பற்றி ஊர் அறிந்திருக்கும் அந்த பெண்ணும் அறிந்திருப்பார் ஆனால் எடுத்ததுகெல்லாம் ஆண்கள் ஏமாற்றூபவர்கள் என சொல்லகூடாது அனித்தா

இதே தாற்ஸ்தமிழில் பெண்கள் செய்த கொலைகளையும் ஆசிங்கத்தை வெளியிட்டு இருந்தது ஆனால் அதனை நாகரிகம் கருதி விவாதிக்கவும் இல்லை இங்கு பிரசுரிக்கவும் இல்லை ஆனால் உங்கள் கருத்து ஒட்டு மொத்த ஆண்களையும் குற்றம் சாட்டும்வகையில் இருந்திருப்பதால் நான் என் கருத்தை முன்வைகின்றேன்.அத்துடன் இவாறான பேர்வழிகளுக்கு துணைபோகும் அல்லது தெரிந்தும் ஏமாறும் இப்படிப்பட்ட பெண்களை கண்டிக்கின்றேன்

ஈழவன் உங்களுக்கு ஒன்று தெரியுமா ? யாரும் ஏமாறும் போது தெரிஞ்சுகொண்டு ஏமாறுவதில்லை. இப்படிப்பட்டவர்களை பற்றி தெரியாமல் கல்யாணம் கட்டி பல பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். கல்யாணம் கட்ட முதல் நடந்தவற்றை சொல்லாமல் மறைத்து சில ஆண்கள் பெண்களை ஏமாற்றுகின்றனர்.கல்யாணம் கட்டும் வரை நல்லவராக இருப்பவர்கள். கல்யாணம் கட்டிய பிறகு தங்களின் குணத்தை காட்டுகின்றனர்.

இந்த போதகர் வேற வேற இடங்களில் ஜெபக் கூட்டம் நடத்தி அதில் தெரிஞ்ச 3 பெண்களை கல்யாணம் முடித்திருக்கலாம்.4 வதாகா கல்யாணம் கட்டிய இந்த புகார் குடுத்த பெண்ணுக்கு , ஏற்கனவே இவர் 3 கல்யாணம் கட்டியவரென்று தெரியாமல் இருந்திருக்கு..இப்ப இந்த போதகரின் பழைய வாழ்க்கையும் ,5 வதாக வேற கல்யாணம் கட்ட போறார் எண்டு தெரிஞ்சதும், (அதுவும் தன்னை விபச்சாரி எண்டு பொய் சொல்லி ஊரை ஏமாற்றி) தன்னைப் போல் வேற ஒரு பெண் இவரால் ஏமாற்றப்படப்போகிறார் என்ற ஒரு நல்லென்னத்தில் அந்த பெண் புகார் குடுத்திருக்கலாம். B)

மற்றது நான் ஒட்டு மொத்த ஆண்களையும் ஏமாற்றுபவர்கள் எண்டு சொல்லவில்லை, எனக்கும் ஒரு அண்ணா இருக்கிறார். அத விட யாழ்ல எனக்கு தெரிஞ்ச அண்ணாமாரும்& நண்பர்களும் இருக்கினம். அவர்களைப்பற்றியும் எனக்கு நன்கு தெரியும். சோ நான் சொல்வது இந்த போதகர் மாதிரியான ஆட்களையும் அந்த மூக்கு ( :unsure: )அறுபட்டவர்மாதிரியான ஆண்களையும் தான்.இப்படி 4 பெண்களை ஒருவர் ஏமாற்றியிருக்கிறார் எண்டு தெரிந்தும் அவருக்காக வாதடும் சில பேரை நான் வண்மையாக கண்டிக்கின்றேன். :rolleyes: B) :angry:

உலகத்தில இவளவு விஷயம் நடக்குதா........? நல்ல வேலை நான் பையனா போய்ட்டேன், இல்லைன இந்த வடிவு, குசா சின்னப்பு போல ஆக்கள் என்ன ஏமாத்தியிருப்பாங்க

உலகத்தில இவளவு விஷயம் நடக்குதா........? நல்ல வேலை நான் பையனா போய்ட்டேன், இல்லைன இந்த வடிவு, குசா சின்னப்பு போல ஆக்கள் என்ன ஏமாத்தியிருப்பாங்க

என்ன தான் இருந்தாலும் அவரை பாராட்ட தான் வேண்டும் வான்வில் கு,சா தாத்தா,வடிவேல் மாமா எல்லாம் ஒன்றை வைத்து கஷ்டபடினம் ஆனால் அவர் 5 ஆவதுக்கும் ரேடியாம்,உண்மையா அவர் கிரேட் தான்

:P :rolleyes:

ஒருவர் கிட்ட 4 பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கினம்...

ஏமாற்றப்படவிலையங்கோ ஏமாந்து இருக்கினம். இவர்கள் சிறுமிகள் தானே இந்தா பாப்பா மிட்டாய் என்றதும் பின்னாலே போவதற்கு.

மாதுகா இதைத்தான் நானும் சொல்றேன்..

எங்கட பாதுகாப்பை நாங்க உறுதிப்படுத்திக்கணும்..

பணத்துக்கும்..பகட்கு;கும்..

பக்திக்கும்..கருணைக்கும்னு 1008 விடயம் இருந்தாலும்..நாங்க தெளிவாக இருக்கணும்..

ஏமாறுறது எங்க தப்பு

இதையே நானும் சொன்னேன் ஆனால் அனித்தா நான் அந்த கபோதி போதகருக்கு சபோட் பண்ணுவதாக அனிதா நினைத்துவிட்டார் போலும்.

ஒரு வாழ்கை துணையைதேர்வு செய்யும் போது சரிவர விசாரிக்காமல் இப்படி ஏமாறுவது பெண்களின் பிழையே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏராளம். ஏமாந்து போகின்ற பெண்களும் ஏமாற்றுவதே வாழ்க்கை என்று வாழ்கின்ற கயவர்களும் அதிகம்!.

ஏமாந்து போகின்றவர்கள் தான் உண்மையில் குற்றவாளிகள். ஒருவரைப்பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளமால் எப்படி கட்டிக்கொள்வது?!.

மதத்தின் போர்வையால் தங்கள் வெறிகளை தீர்த்துக்கொள்ளும் இந்த மாதிரியான ஆக்களை கல்லால் அடித்தே கொல்ல வேண்டும்.

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

haiyo........... நான் அவன் இல்லப்பா.... :P :huh::huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.