Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாடாய் உழைத்து ..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வியாபாரி ஒருவர், தன் ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை, தன் மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று, பக்கத்து ஊரில் விற்பது வழக்கம். ஒருநாள் அந்த வண்டில் மாடு, வியாபாரியிடம் வந்து கேட்டது “எஜமான் இரண்டு ஆண்டுகளாக நான் உங்களுக்கு வேலை செய்கிறேன், நான் செய்யும் வேலைக்கு, நீங்கள் எனக்குக் கொடுக்கும் புல்லின் அளவோ மிகக் குறைவு.., தயவுசெய்து என் புல்லின் அளவைக் கூட்டுங்கோ” என்றது.
 
அதைக் கவனமாகக் கேட்ட வியாபாரி “மாடே, நீ கடினமாக உளைப்பது உண்மையே, ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு, ஒரு நாளைக்கு 25 மூட்டைகளை வண்டியில் சுமக்கிறது, நீயோ 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய், நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால், நானும் புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன் என்றார்.
 
பக்கத்து வீட்டு மாடு, பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாத இந்த மாடு, தானும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒத்துக் கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றதும், மாடு மறுபடியும் வந்து, தன் புல்லின் அளவை அதிகரிக்கச் சொல்லிக் கேட்டது.
 
அதற்கு வியாபாரி “மாடே, அதிக பாரம் ஏற்றியதால், நம் பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது, எனவே இப்பொழுது ஒரு புதுவண்டி செய்யச் சொல்லியுள்ளேன், அதற்கு ஆகும் செலவையும் நான் பார்க்க வேண்டும், இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்துக் கொள், புல்லின் அளவை நிட்சயம் அதிகரிக்கிறேன்” என்றார்.
 
வேறு வழியின்றி, மாடும் ஒத்துக் கொண்டது. புது வண்டியும் வந்து ஆறு மாதங்களும் ஆன பின்பு, மாடு திரும்பவும் சென்று புல்லின் அளவைக் கூட்டச் சொல்லிக் கேட்டது.. அதற்கு வியாபாரி..
 
“மாடே, இப்போதெல்லாம் உனது வேகம் மிகக் குறைந்துவிட்டது, பக்கத்து ஊருக்குச் செல்ல, முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய், இதனால என் வியாபார நேரம் குறைந்துவிட்டது, எனவே உனக்கு அதிக புல் தருவது, இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றார்.
 
கோபமடைந்த மாடு “எஜமான், இப்புது வண்டியின் பாரம், பழைய வண்டியை விட அதிகம், இந்தக் கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியிருப்பதாலேயே என்னால முன்பு போல விரைவாகச் செல்ல முடியவில்லை” என்றது... அதற்கு வியாபாரி..
 
“மாடே!.. நீ என்ன காரணம் சொன்னாலும், உன்னால் எனக்கு அதிக லாபத்தைப் பெற்றுத்தர முடியவில்லை, நான் வேண்டுமானால் உன்மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன், ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றார்.
 
தன் இத்தனை வருட உழைப்பும் வீணாகிவிடும் எனப் பயந்த மாடு “வேண்டாம் எஜமான், நான் எப்படியாவது வேகமாகச் சென்று, உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்”.. என்றது.
 
மறுநாள் தொடங்கி, மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி, வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும், முன்பு தான் எடுத்துக் கொண்ட நேரத்திலேயே வியாபாரியைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. ஆனால், மிகக் கடின உழைப்பால், ஒரு மாதத்திலேயே நோயுற்று, படுத்த படுக்கையானது. வழமையாகச் சாப்பிடும் புல்லைக்கூட, அதனால் உண்ண முடியவில்லை.
 
சில நாட்கள் அதற்கு மருந்து கொடுத்த வியாபாரி, ஒருநாள் அதனிடம் “மாடே, உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார், அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றார்.
 
“எஜமான், நான் இப்போதிருக்கும் நிலையில், என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாதே, இப்போ எதுக்கு என்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றது.
 
“உன்னை அவர்கள் வேலை செய்ய வாங்கவில்லை, உன்னைக் கொன்று, தோலை எடுக்கவே கேட்கிறார்கள்” என்றார் வியாபாரி. வியாபாரியின் பேச்சைக் கேட்ட மாட்டுக்கு அழுகை வந்தது, அழுதழுது மாடு சொன்னது..
 
“எஜமான், நிங்கள் செய்வது ரொம்ப அநியாயம், உங்கள் பேச்சை நம்பி, மாடாய் உழைத்ததாலேயே நோயுற்றேன், இல்லை எனில் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன், நீங்கள் செய்வதெல்லாம் துரோகம்” என்றது. அதைக் கேட்ட வியாபாரி..“நான் செய்வது துரோகம் இல்லை
 
 ஒரு  முதலாளியின் லட்சியம், தன் தொழிலாளியிடம், முடிந்த அளவு வேலை வாங்கி அதிக லாபம் பெறுவது. அதையே நானும் செய்தேன், உன் மூலம் 5 ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டியதை 3 ஆண்டுகளிலேயே சம்பாதித்து விட்டேன், இப்போ உன்னை விற்பதன் மூலமும் பணம் ஈட்டப்போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெறும் நோக்கம் நிறைவேற, உன்னுடைய ஆசையை என் மூலதனமாக்கிக் கொண்டேன். நீ ஆரம்பித்திலேயே சுதாகரித்துக் கொண்டிருந்தால், தப்பித்திருக்கலாம்” என்றார்.
 
 
தன் முட்டாள்தனத்தை எண்ணி, மாடு நொந்து அழுதது.
 
இப்படித்தான் சில நிர்வாகங்களின் நோக்கமும், ஊழியர்களிடமிருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ, அவ்வளவு வாங்கிக்கொள்வார்கள். எனவே ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
 
 
 படித்ததில்   பிடித்தது 
 
  • கருத்துக்கள உறவுகள்

இது மனிதருக்கும்... பொருந்தும்.

வேலை இடத்தில்... நீங்கள் திடகாத்திரமாக வேலை செய்யும் மட்டும் தான்,
முதலாளிக்கு... அந்த வேலையாள் தேவை.

அவரால்.... அந்த வேலையை செய்ய முடியாமல் போனால்....
அந்த இடத்திற்கு, வேறு ஒருவரை... முதலாளி நியமிப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலாளியை விடுங்கள்....இப்போதெல்லாம் தொழிலாளியே தொழிலாளிக்கு எதிரியாகின்றார்கள்.....!

---- ஒருத்தரை வேலைக்கு கொண்டு போய் சேர்த்தால் சில நாட்களிலேயே கொண்டு போய் சேர்த்தவரை புறஞ் சொல்லி ஓரங்கட்டி விடுகின்றார்கள்.....!

---- பத்து ஈரோவுக்கு வேலை செய்பவன் எதாவது சிறு பிரச்சினை வரும்போது முதலாளி சொல்கிறான் விருப்பமில்லை என்றால் விட்டுட்டு போ ....பின்னால எட்டு ஈரோவுக்கு வேலை செய்ய ஆள் ரெடியாய் இருக்கு என்று......!   🤔

1 hour ago, suvy said:

முதலாளியை விடுங்கள்....இப்போதெல்லாம் தொழிலாளியே தொழிலாளிக்கு எதிரியாகின்றார்கள்.....!

---- ஒருத்தரை வேலைக்கு கொண்டு போய் சேர்த்தால் சில நாட்களிலேயே கொண்டு போய் சேர்த்தவரை புறஞ் சொல்லி ஓரங்கட்டி விடுகின்றார்கள்.....!

---- பத்து ஈரோவுக்கு வேலை செய்பவன் எதாவது சிறு பிரச்சினை வரும்போது முதலாளி சொல்கிறான் விருப்பமில்லை என்றால் விட்டுட்டு போ ....பின்னால எட்டு ஈரோவுக்கு வேலை செய்ய ஆள் ரெடியாய் இருக்கு என்று......!   🤔

உண்மைதான்,  வேலையை விட்டு விட்டால் வேறு வேலை கிடைப்பது என்பது உடனடியாக சாத்தியமில்லை .எனவே எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு மாடாக உழைக்கத்தான் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிலாமதி said:
தன் முட்டாள்தனத்தை எண்ணி, மாடு நொந்து அழுதது.
 
இப்படித்தான் சில நிர்வாகங்களின் நோக்கமும், ஊழியர்களிடமிருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ, அவ்வளவு வாங்கிக்கொள்வார்கள். எனவே ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கதையாக இருந்தாலும் மனதுக்கு கஸ்டமாக இருந்தது.

முதலாளியாகிவிட்டால் மனிதன் மிருகமாகி ஆறாவது அறிவை இழக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் அக்கா சில அல்ல பல நிறுவனங்களில் அப்படித்தான் நடக்கிறது. அதற்கான காரணம் எம்மவர் பலர் எம்மவரையே உரித்து அந்நிய முதலாளிகளுக்கு இலாபம் ஈட்டிக் கொடுப்பதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.