Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதாகவும் ஆட்கள் கடத்தப்படுதல் கொலைகள் மற்றும் சட்டவிரோத ஆயுதக்குழுக்களை அரசு இயக்குதல் என்று அரசு தரப்பு மனித உரிமை மீறல்கள் தீவிரமடைந்துள்ளதைக் கண்டித்து அதை நிறுத்த அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் நிலைமை சீரடையும் வரை சிறீலங்காவுக்கான நிதி உதவிகளின் குறித்த அளவை நிறுத்தப் போவதாகவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது..!

அமெரிக்க சிறப்புத் தூதரின் செய்தியாளர் மகாநாட்டில் இவ் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆதாரம் skynews.

Edited by nedukkalapoovan

இவர்கள் இப்படி தான் கடும் தொனியில் தொடங்கி பயனம் முடிந்து அமெரிக்கா சென்றது வேற ஒரு அறிக்கை த்யாரித்து கொடுப்பார்கள்.

ஆ, எல்லாருமே நிப்பாடிட்டா எப்படி குண்டு வாங்கிறது, எப்படி வெளிநாடு சுற்றுலா போறது,.

இப்பவே கவலையா இருக்கு. :P

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு எதிராக கருத்தைப் பெற பௌச்சரிடம் போராடிய 'இந்து'

[வெள்ளிக்கிழமை, 11 மே 2007, 19:00 ஈழம்] [சி.கனகரத்தினம்]

கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் அமெரிக்காவின் பிரதி வெளியுறவுச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சரிடம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தை "இந்து" நாளேட்டின் கொழும்பு ஊடகவியலாளர் மிகக் கடுமையாகப் போராடிப் பெற்றுள்ளார் என்று எமது கொழும்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பியுள்ள செய்தி விவரம்:

இலங்கைக்கு 3 நாள் பயணமாக கொழும்பு வந்த பௌச்சர், யாழ்ப்பாணம்- அம்பாறை ஆகிய பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர், சிறிலங்கா அரச தலைவர் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினரையும் சிறிலங்கா தரப்பினரையும் சந்தித்து உரையாடினார்.

அதன் பின்னர் கொழும்பு கறுவாத் தோட்டம் பகுதியில் உள்ள கிராண்ட் விடுதியில் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

தொடக்கத்தில் ரிச்சர்ட் பௌச்சர் தனது பயணம் குறித்தும் இலங்கை நிலைமைகள் குறித்தும் ஊடகவியலாளர்களிடம் விளக்கினார்.

அதன் பின்னர் தான் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தாகக் பௌச்சர் கூறினார்.

2 ஆவது நபராக கேள்வி எழுப்பிய இந்து நாளேட்டின் கொழும்பு ஊடகவியலாளர், இலங்கை அமைதி முயற்சிகள் தொடர்பில் புதிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளதே, நீங்கள் எதனையும் கூறவில்லை. அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை வலிமையானது தெற்காசியாவின் அணுசக்தி நிலையங்களுக்கு ஆபத்தானது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கூறியிருப்பதை நீங்களும் ஏற்கிறீர்களா? என்றார்.

புலிகளின் வான்படை வலிமை மற்றும் அணுசக்தி நிலையங்கள் தொடர்பில் தான் அப்படி ஏதும் பார்க்கவில்லை. ஆகையால் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்று முதலில் மறுத்துவிட்டார்.

ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா கருத்து ஏன் எதனையுமே தெரிவிக்கவில்லை? என்று இந்து ஊடகவியலாளர் கேட்க, எங்களுக்கு கருத்து இருக்கிறது. நாங்கள் அதனை எதிர்க்கிறோம் என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டார்.

ஆனால் இந்து ஊடகவியலாளர் விடவில்லை. மீண்டும்,

நீங்கள் எதிர்ப்பதாகக் கூறும் எந்த ஒரு அறிக்கையையும் நாங்கள் பார்க்கவில்லையே என்று வலியுறுத்திய பின்னர் "வான் தாக்குதல்கள் மோசமானது. அப்படி நடந்திருக்கக் கூடாது. நிறுத்தப்பட வேண்டும். மக்களைப் பாதிக்கக் கூடிய- கொல்லக் கூடிய அல்லது தீவின் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடிய எந்த ஒரு வானூர்தி பறப்பையும் அரசாங்கத்துக்கு தடுக்க உரிமை உண்டு" என்றார் பௌச்சர்.

http://www.eelampage.com/?cn=31773

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணே, அப்படி ஒரு எச்சரிக்கையும் செய்தியாளர் மாநாட்டில் காணவில்லையே? ஒரு மாநாடு தானே நடந்தது? இணைப்பை ஒருக்கா ஒட்ட முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்து ஆசிரியர் போராடித் தமிழீழ வான்படைக்கு எதிரானவொரு கருத்தைப் பெற்ற நேரத்தில அரசாங்கம் அப்பாவித் தமிழர் மீது குண்டுபோடுறது சம்பந்தமா உங்கட நிலைப்பாடு என்ன எண்டு கேக்க நம்மட தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு முதுகெலம்பில்லாமப் போயிற்றுதோ!

  • கருத்துக்கள உறவுகள்

அதே கேள்வியில்லா விட்டாலும் மனித உரிமை மீறல் பற்றி தினக்குரல் நிருபர் கேட்டிருக்கிறார் பல தடவைகள். கடைசியில் அவரை வெட்டிக் கொண்டு பேச ஆரம்பித்து விட்டாராம், பவுச்சர்.

இந்துவின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றும் புதிதல்ல. இப்படிப்பட்ட பதிலொன்று இந்தியாவுக்குத் தேவை. சொல்லப்போனால் அமெரிக்கா கண்டனங்கள் ஏதும் தெரிவிக்காததினால் இந்தியாவினால் கண்டனங்கள் ஏதும் தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. அமெரிக்காவின் வழி எதுவோ அதுதான் இந்தியாவின் வழி. தனிவழி என்பதெல்லாம் சும்மா. இந்தியா ஈழத்தமிழினத்தைக் கைவிடுவது மட்டுமல்ல தனது பிராந்தியத்தையும் கைவிட்டுவிடும்.

இவங்களுக்கு அமெரிக்க இல்ல எல்லா வல்லரசுகழும் சேர்ந்து எச்சரிக்கை பண்னினாலும் இந்த இனவெறி பிடிச்ச சிங்கள அரசுக்கு புரியாது, அதுக்கு நம்ம தேசிய தலைவர் சொல்லுற விதத்துல சொன்னால் தான் இந்த சிங்கள அரசுக்கு புரியும் அந்த காலம் ஆரம்பிசிட்டுது அதன் உச்ச கட்டம் அடையும் வரை இவங்க, யார் சொன்னலும் திருந்த மாட்டாங்க .

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்,

நேற்றைய தினம் ஒரு வானொலியில் " யாழின் இன்றைய நிலை " என்ற கருத்துப்பட யாழ்நகரில் இருந்து ஊடகவியலாளர் தயாபரன் அவர்கள் ஒரு நீண்ட நேர்காணலை வழங்கியிருந்தார்.

இதில் முக்கியமாக அமெரிக்காவின் பிரதி வெளியுறவுச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் அவர்களின் யாழின் விஜயத்தைப் பற்றித்தான் பிரஸ்தாபிக்கப்பட்டது.

அவரின் கருத்துப்படி இதுவரை வடபகுதிக்கு விஜயம் செய்த வெளிநாட்டு அரசியல் பிரமுகர்களினர்க்கும், இவரின் அணுகுமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் காணக்கூடியதாவுள்ளது.

இவர் சந்தித்த சகல தரப்பினருடனும் தனிப்பட்ட முறையிலேயே சந்தித்துள்ளார். முக்கியமாக பாதுகாப்பு சம்பந்தப்பட்டவர்களைக் கூட உள்ளே அனுமதிக்கவில்லையாம்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட சகல தரப்பினரும் சுதந்திரமாக எந்தவிதமான இடையூறுகளோ அல்லது பயமோ இல்லாது தங்களின் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இதைவிட இவர் யாழ் பொது நூலகத்துக்கு சென்றபோது ஒரு வயோதிபப் பெண் திடீரென சமூகமளித்து காணாமல்போன தனது மகனை திருப்பிப் பெற்றுத்தருமாறு குளறியடித்துக்கொண்டு ஒரு மகஜர் நேரடியாகவே கொடுத்துள்ளார், இந்தச்சோகக் காட்சி எல்லோரையுமே கொஞ்சநேரம் சோகமயமாக்கி விட்டதாக கூறினார்.

மொத்தமாக இவரின் இந்த விஜயம் எங்கள் பிரச்சினைகளை தெளிவு படுத்தியிருக்கும் என்பதில் மறுப்பதிற்கில்லை.

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.