Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வைரமுத்து பதில்க்ள்

Featured Replies

வைரமுத்து பதில்க்ள்

யாரோ கதை எழுத, யாரோ இசையமைக்க, யாரோ பாட்டெழுத, யாரோ இயக்க, கடைசியில் நடிகர்கள் தானே பேரும் பணமும் வாங்குகிறார்கள்... அநியாயமில்லையா?

ஒரு சம்பவம் சொல்கிறேன் :

படம் : கைதியின் டயரி

இடம் வாகினி அரங்கம். பாரதிராஜா இயக்கத்தில் இது ரோசாப் பூவு என்ற பாடலின் படப்பிடிப்பு. அடுத்த பாடலைக் கொடுக்கச் சென்ற நான் ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறேன். அந்தரத்தில் ஒரு கூண்டு. அதில் இரண்டு தட்டு, மேல்தட்டில் கனமான நடிகை (அனுராதா) ; கீழ்த்தட்டில் கமல், ரெடி டேக் என்றதும் டிராலியில் கேமரா உற்சவிக்கிறது ; உறுமி மேளத்திற்கேற்பக் கூண்டு சுற்றுகிறது. மேல்தட்டு மங்கை ஆடத் தொடங்கிய அடுத்த நொடி அந்தரத்தில் ஆடிய கூண்டு அறுந்து விழுகிறது. யாத்தே! பாரதிராஜா பதறுகிறார். அய்யோ நான் அலறுகிறேன்.

நண்பா! மூச்சு இருக்கிறதா? இல்லையா? உடைந்து சிதறிய கூண்டுக்கடியில் நெஞ்சில் நடிகையின் பாரம்தாங்கி அசைவின்றிக் கிடக்கிறார் கமல். யாரும் நகரவில்லை. ஒரு மயான மௌனம் காது கிழிகிறது. சற்று நேரத்தில் மெல்ல அசைந்து தானே எழுந்துகைகால் உதறி நடந்து என்னை மட்டும் கண் ஜாடையில் அழைத்துக் கொண்டு வெளியே வருகிறார் கமல். எப்படி பாரம் தாங்கினீர்கள்? என்றேன் நான். தன் வயிற்றைக்காட்டி குத்துங்கள் என்றார். குத்தினேன் வயிற்றில் மெதுவாக, குத்துங்கள் என்றால் பலமாக, ஓங்கிக் குத்தியபோது கல்லாய் இறுகிக் கிடந்தது உதரவிதானம். இழுத்த மூச்சை இறுக்கிக்கட்டிப் பாரம் தாங்கியிருக்கிறார். பிறகுதான் மூச்சு விட்டோம் இருவரும். தொழில் நுட்பக்கலைஞன் பெரும்பாலும் மூளையைப் பணயம் வைக்கிறான் ; நடிகன் _ உயிரையே.

காலை உணவாக என்ன சாப்பிடுகிறீர்கள்?

முளைக்கட்டிய பயறு, முட்டையின் வெண்கரு மிளகளாவிய காய்கறி, மெல்லிய ரொட்டி, கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் கொதிக்கவைத்த ஓட்ஸ். பேரீச்சம்பழம் இரண்டு, பப்பாளி ஆறு துண்டு. இவற்றுள் ஒன்றிரண்டு மாறலாம். ஒன்றிரண்டு குறையலாம். எப்போதாவது சாப்பிடும் இட்லிக்கு இரண்டு சட்டினி இருக்கும். ஒன்று தக்காளிச் சட்டினி ; இன்னொன்று தேங்காய்ச் சட்னி. இதில் தக்காளிச் சட்டினி மனைவி மாதிரி; தொட்டுக் கொள்ளலாம். தேங்காய்ச் சட்டினி ; தொடாதவரைக்கும் நல்லது ; அதில் கொழுப்பு உள்ளது.

மண்ணுக்குள் போனாலும் மல்லிகா எனது கண்ணுக்குள் நீ வாழ்வாய் கண்ணே என்று எனக்கு வெண்பா எழுதியிருக்கிறான் என் அண்ணனின் நண்பன். எனக்குக் காதல் வந்துவிடும்போல் இருக்கிறதே!

தங்கை மல்லிகா! மொழி பார்த்தோ, முகம் பார்த்தோ வந்துவிடக் கூடாது காதல், நேசித்தல்_ புரிதல்_ பொருந்துதல்_ மதித்தல் _ சத்தியம்_ சாத்தியம் எல்லாம் கூடிய கலவையே நல்ல காதல். இன்னொன்று_ உன் நண்பன் எழுதிய வெண்பா தளைதட்டுகிறது.

மல்லிகா என்பது கூவிளம் விளமுன் நேர்வர வேண்டும் வெண்பாவுக்கு; இங்கே நிரை வந்திருக்கிறது. என என்ற புளிமாச்சீருக்குப் பிறகு நிரை வரவேண்டும். இங்கே நேர் வந்திருக்கிறது. இன்னொன்று கண்ணே என்று முடியக்கூடாது வெண்பா. நாள்_ மலர்_ காசு_ பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றால்தான் அது முடிய வேண்டும். ஆகவே மண்ணுக்குள் போனாலும் மல்லிகா என்னிரண்டு கண்ணுக்குள் நீ வாழ்வாய் காண் என்றிருந்தால் அது தளைதட்டாத வெண்பா. வெண்பா தளைதட்டினால் திருத்திக் கொள்ளலாம். காதல் தளை தட்டாமல் பார்த்துக்கொள்.

ஜேசுதாஸ் _ எஸ்.பி.பி. யார் குரல் மீது உங்களுக்கு மயக்கம்?

ஒன்று காந்தக்குரல்; இன்னொன்று காதல் குரல். காதலித்துக் கொண்டே சாகத் தூண்டும் ஜேசுதாஸ் குரல்; சாகும் போதும் காதலிக்கத் தூண்டும் எஸ்.பி.பி. குரல். மயிலிறகால் காது மடல் வருடும் பரவசம் ஜேசு; கோழி இறகால் காது குடையும் சுகம் பாலு. முன்னவர் இரவுப் பாடகர்’ பின்னவர் பகல் பாடகர்.

அது பழைய காதலியின் ஸ்பரிசம்; இது புது மனைவியின் முத்தம். என் குரல் மாறாது; பாத்திரமே பொருந்திப்போ இது ஜேசு. பாத்திரம் மாறட்டும் என் குரலே பொருந்திப்போ இது பாலு. இருவருக்கும் தாய் மொழி தமிழ் இல்லை. ஆனால் இந்த இருவரும் இல்லாமல் நாற்பதாண்டுத்திரைத் தமிழ் இல்லை. இருவர் தொட்ட சிகரங்களை இன்னொருவர் தொடமுடியுமா என்ற கேள்வியே அவர்களின் கிரீடம்

உங்கள் வீட்டில் உங்களுக்கு அறிவுரை சொல்வார்களா?

நீங்கள் குடும்பம் நடத்துவதே தொலைபேசியோடுதான் ; குறைத்துக் கொள்ளுங்கள் இது பொன்மணி. கோபத்தை நிறுத்தி விடுங்கள் அப்பா. அதனால் சக்தி விரயமாகுமே தவிர, காரியம் ஆகாது இது மூத்த மகன் மதன் கார்க்கி, கலைஞர் மீதுள்ள அன்பை அளந்து வையுங்கள் அப்பா. அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் உங்களால் தாங்கவே முடியாது. இது இளைய மகன் கபிலன். மூன்று பேரும் மன்னித்துவிடுங்கள்! முடியவில்லை என்னால் மூன்றும்.

வைரம் வாய்ந்த பதில்கள்

கவித்தாய் பெற்றெடுத்து இன்னொரு மகவு

இது கருங்காலி நாட்செல்ல நாட்செல்லத்தான் இதன் வைரம் இன்னும் இறுகியே செல்கின்றது.

நன்றி நண்பரே இவ் அரியதோர் கேள்வி பதிலை இங்கு இணைத்தமைக்கு

நட்புடன் வைரமுத்துவின் கவிக்காதலன் பரணீதரன்

இணைப்புக்கு நன்றி.....ஜம்மு...

ஆரோக்கியமான கருத்தாடல்...சொல் குழைதல்...

இணைப்புக்கு நன்றி.....ஜம்மு...

ஆரோக்கியமான கருத்தாடல்...சொல் குழைதல்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பில் இணைத்தமைக்கு நன்றி ஜம்மு.

  • தொடங்கியவர்

கருத்துகளை சொன்ன பரணி,வன்னிமனிதன்,கு.சா தாத்தா எல்லோருக்கும் நன்றிகள்.

இவ்வளவும் சொல்லும் வைரமுத்து புறநாற்றை பிதற்றிக் கொண்டு திரியும் கவிஞர் இன்று புறநாறு நடத்திக்கொண்டிருக்கும் ஈழப்போராளிகளை பற்றி தனது வைர வரிகளால் ஒரு வீரப்பா பாடி இருக்கலாம் தானே..

எல்லாம் பம்மாத்து காசுக்காக மாரடிக்கும் கவிஞர் தான் இவர்.

கவிஞர் அறிவுமதி புதுவை இரத்தினதுரை போன்ற உண்மைக் கவிஞர்களோடு இவர் கிட்டவும் நிற்க இயலாது

  • தொடங்கியவர்

இவ்வளவும் சொல்லும் வைரமுத்து புறநாற்றை பிதற்றிக் கொண்டு திரியும் கவிஞர் இன்று புறநாறு நடத்திக்கொண்டிருக்கும் ஈழப்போராளிகளை பற்றி தனது வைர வரிகளால் ஒரு வீரப்பா பாடி இருக்கலாம் தானே..

எல்லாம் பம்மாத்து காசுக்காக மாரடிக்கும் கவிஞர் தான் இவர்.

கவிஞர் அறிவுமதி புதுவை இரத்தினதுரை போன்ற உண்மைக் கவிஞர்களோடு இவர் கிட்டவும் நிற்க இயலாது

நீங்க சொல்வது முழு உண்மை நான் மறுக்கமாட்டேன் இது எனக்கு கிடைத்த இணைப்பு அது தான் பதிந்தேன் பிழை என்றா மன்னிக்கவும்

:unsure:

நேசன் சொல்வது உண்மையாக இருக்கும் போல தோன்றுகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைரமுத்துவும் ஒருசிறந்த கவிஞர் தானெ

வைரமுத்து ஒரு தமிழ் வைரம் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார்.

உவபி.தமிழ்.ஈழ

='நேசன்' date='May 12 2007, 09:48 AM' post='301448']

இவ்வளவும் சொல்லும் வைரமுத்து புறநாற்றை பிதற்றிக் கொண்டு திரியும் கவிஞர் இன்று புறநாறு நடத்திக்கொண்டிருக்கும் ஈழப்போராளிகளை பற்றி தனது வைர வரிகளால் ஒரு வீரப்பா பாடி இருக்கலாம் தானே..

எல்லாம் பம்மாத்து காசுக்காக மாரடிக்கும் கவிஞர் தான் இவர்.

கவிஞர் அறிவுமதி புதுவை இரத்தினதுரை போன்ற உண்மைக் கவிஞர்களோடு இவர் கிட்டவும் நிற்க இயலாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காசுக்குக் காவியம் பாடும் வைரமுத்து ஒரு விபச்சாரி (prostitute) - இந்த வரைவிலக்கணத்தின் படி

http://www.tamilcanadian.com/page.php?cat=135&id=4942

:o:lol:

  • தொடங்கியவர்

நீங்கள் இபடி சொல்லுறீங்க ஆனால் சிலர் விளையாட்டு வேற போராட்டம் வேற,கலைநிகழ்ச்சி வேற போராட்டம் வேற என்று சொல்லூவீனம் இதுக்கு தங்களின் பதில்கள் தான் என்ன?

:o

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இபடி சொல்லுறீங்க ஆனால் சிலர் விளையாட்டு வேற போராட்டம் வேற,கலைநிகழ்ச்சி வேற போராட்டம் வேற என்று சொல்லூவீனம் இதுக்கு தங்களின் பதில்கள் தான் என்ன?

:o

விளையாட்டு வேறு,அரசியல் வேறு

களியாட்டம் வேற ,அரசியல் வேற

கிரிக்கட் வேற,அரசியல் வேற

சிங்கள நண்பர்கள் வேற ,அரசியல் வேற

சிங்கள இராணுவம் வேற,அரசியல் வேற

இப்படி நாங்கள் எல்லாம் வேற வேற என்று சொல்ல சிங்களவன் புலி வேற தமிழ் மக்கள் வேறு என்று பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறான்

:lol:

  • தொடங்கியவர்

விளையாட்டு வேறு,அரசியல் வேறு

களியாட்டம் வேற ,அரசியல் வேற

கிரிக்கட் வேற,அரசியல் வேற

சிங்கள நண்பர்கள் வேற ,அரசியல் வேற

சிங்கள இராணுவம் வேற,அரசியல் வேற

இப்படி நாங்கள் எல்லாம் வேற வேற என்று சொல்ல சிங்களவன் புலி வேற தமிழ் மக்கள் வேறு என்று பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறான்

:o

இப்படி எல்லாம் கதைத்தீங்க என்றா நீங்க வேற நாங்க வேற என்று சொன்னாலும் சொல்லுவீனம் கவனம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திரு. புதுவை இரத்தினதுரையவர்கள் யுத்தபூமியிலே எம் மக்களின் அவலங்களினூடே வாழ்பவர். ஆதலால் அவரது வார்த்தைகள் உணர்ச்சிவசத்தில் சிந்தனையின்றி தானாகவே வந்து விழுபவை. விலைமதிக்க முடியாதவை.

கவிஞர் அறிவுமதியவர்கள் நிழலில் நின்று கொண்டு களத்தையும், பார்த்து வீட்டையும் நினைத்து பாடுபவர்.

கவிஞர் வைரமுத்து அவர்களோ சினிமாவென்னும் அரன்மனை நந்தவனத்தில் உக்காந்து பாடுபவர். அவரது ஒவ்வொரு சொல்லுடனும் விலைப்பட்டியலும் கூடவே வருகிறது. அதையும்மீறி அவர் எம்மவர் நிகழ்வுகளைப் பாடுவாரேயானால் அது அரிதாரம் பூசிய நடிகர்கள் போல் செயற்கையாக இருக்குமென்று தவிர்த்திருக்கலாம்!

எப்படியாயினும் மூவருமே அவர்தம் வழியில் அற்புதமான கவிஞர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. :lol::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.