Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இங்கிலாந்தில் கொன்சவேடிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் எமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும்"

Featured Replies

(எம்.ஆர்.எம்.வஸீம்)

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலுக்காக கொன்சவேடிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு அரசாங்கங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது எமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும். இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

udaya.jpg

பிவிதுரு ஹெலஉறுமய கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது. இதற்காக அந்நாட்டு ஆளும் கட்சியான கொன்சவேடிவ் கட்சி கடந்த 25ஆம் திகதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தது. 

அதில் இலங்கையில் இடம்பெறும் பிரச்சினைக்கு தீர்வாக இந்த நாட்டில் இரண்டு அரசுகளை உருவாக்கவேண்டும் என தேர்தல் விஞ்ஞாபனத்தின் 53 ஆம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.   

அதாவது, உலகம் பூராகவும் நல்லிணக்கம், நிலையான தன்மை மற்றும் நீதியை நிலைநாட்ட மேற்கொள்ளும் சர்வதேச ஆரம்பகர்த்தாக்களுக்கு எமது ஆதரவை வழங்குவதுடன் சைப்ரஸ், இலங்கை, மற்றும் மத்திய கிழக்கு போன்ற தற்போது அல்லது முன்னர் இருந்த பிரச்சினை இருக்கும் வலயங்களுக்கு தீர்வாக இரண்டு அரசுகள் உருவாக எமது ஆதரவை வழங்கிவருவோம் என தெரிவிக்கப்படுள்ளது.

தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கே இவர்கள் முயற்சிக்கின்றனர். இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஈழம் அல்லது வேறு பெயரிலோ தமிழ் அரசு ஒன்று இருந்ததில்லை. 

அதனால் இவ்வாறான அரசு ஒன்றுக்காக தலையீடு செய்வதற்கு அவர்களுக்கு எந்த நியாயமான காரணமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/70340

 

  • தொடங்கியவர்
1 hour ago, ampanai said:

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலுக்காக கொன்சவேடிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு அரசாங்கங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் பின்னால் உள்ள இங்கிலாந்து வாழ் புலம்பெயர் செயல்பாட்டார்களுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுவதற்கு  கொஞ்சம் எச்சரிக்கயுடன் இருக்கவேண்டிய உள்ளது.  செய்தி மூலங்கள் அப்படி. 

இந்த இலங்கை பிரச்சினை என்பது பிரிட்டீஷாரினால் உருவாக்கப்படட ஒன்று. எனவே இது அவர்களின் தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினை.

இருந்தாலும் என்ன நோக்கத்துக்காக இப்படியான ஒரு தீர்மானத்தை அவர்களது தேர்தல் விஞ்சபனத்தில் சேர்த்தர்களோ தெரியவில்லை. நல்ல நோக்குடன் செய்து நிறைவேற்றுவார்களானால் அதை வரவேற்போம்.

  • தொடங்கியவர்

UK’s Conservative Party clarifies its stance on Sri Lanka

Clarifying the UK's Conservative Party’s stance with regard to its reference to Sri Lanka in its election manifesto, senior party officials said the reference is applicable only to the Middle East but not to Cyprus or Sri Lanka.

The Foreign Ministry said in a statement that its attention had been drawn to remarks made by a member of parliament, Udaya Gammanpila, over media yesterday in connection with the reference to Sri Lanka in the election manifesto of the Conservative Party in the run-up to the general election in the United Kingdom scheduled for December 12, 2019.

The full statement is as follows:

http://www.dailymirror.lk/top_story/UKs-Conservative-Party-clarifies-its-stance-on-Sri-Lanka/155-179006

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

Clarifying the UK's Conservative Party’s stance with regard to its reference to Sri Lanka in its election manifesto, senior party officials said the reference is applicable only to the Middle East but not to Cyprus or Sri Lanka.

இதை முன்பு வேறு திரியில் சொல்லி இருந்தேன்.

எழுதியபடி,  conservative கட்சியின் விஞ்ஞாபன அறிவிப்பில் உள்ள கருத்தை, இருவேறு அர்த்தம் கற்பிக்கலாம். அதுவும் கண்டு கொண்டோம், ஒன்று இலங்கை இரு தேசம், மற்றது கட்சியின் விளக்கமான, கருத்து  மத்திய கிழக்குக்கு மட்டுமே, இதுவே உத்தியோக பூர்வமான கொள்கை ஆகும்.

ஆனாலும், conservative கட்சியின் விஞ்ஞாபன அறிவிப்பில் உள்ள கருத்தின் nuance ஐயும், இருண்டவன் கண்ணனுக்கு  கண்ணனுக்கு மருண்டதெலாம் பேய்யைப் போல அமைச்சரும், இதை இரு தேசமாக கருதியவர்களும் cannot see wood for the trees.

conservative கட்சியின் விஞ்ஞாபன அறிவிப்பில் உள்ள கருத்து, பிஜேபி இன் இந்து, பௌத்த பிரதேசங்கள் எனும் செயல் திட்டத்துடன் ஒருங்கி வருவதாக தென்படுகிறது.

  • தொடங்கியவர்
14 minutes ago, Kadancha said:

conservative கட்சியின் விஞ்ஞாபன அறிவிப்பில் உள்ள கருத்து, பிஜேபி இன் இந்து, பௌத்த பிரதேசங்கள் எனும் செயல் திட்டத்துடன் ஒருங்கி வருவதாக தென்படுகிறது.

இந்திய, இங்கிலாந்து வெளிவிவகார கொள்கைகளில் தமிழீழம் பற்றிய முன்னேறகரமான மாற்றமாக பார்க்கலாமா? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தல் விஞ்ஞாபனம்  தேர்தல் வரைக்குமா? அதற்கு பின்னும் தொடருமா ?

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2019 at 4:24 PM, ampanai said:

இந்திய, இங்கிலாந்து வெளிவிவகார கொள்கைகளில் தமிழீழம் பற்றிய முன்னேறகரமான மாற்றமாக பார்க்கலாமா?

"

On 12/4/2019 at 7:36 PM, ரதி said:

இந்த தேர்தல் விஞ்ஞாபனம்  தேர்தல் வரைக்குமா? அதற்கு பின்னும் தொடருமா ?

 

தனிப்பட்ட தொடர்புகள் மூலம் அறிந்தவற்றை சொல்கிறேன்.

கான்செர்வ்டிவ் கட்சியில் தீவிரமான செல்வாக்கும், நிலையும் உள்ள ஒருவரால் இது சொல்லப்பட்டது.

கான்செர்வ்டிவ் தமது இருதேச கருத்து இலங்கை தீவீற்கு பொருந்தாது எனும் விளக்கம், சிங்களத்தை குளிர்மை  படுத்தவும் மற்றும் தாக்கத்தை குறைக்கவும்.

மேலும் அந்த கான்செர்வ்டிவ் கட்சியில் தீவிரமான செல்வாக்கும், நிலையும் உள்ளவர் சொன்ன விளக்கம்,

இஸ்ரேல்-பலஸ்தீன் இல் ஓர் முழுமையான  சுதந்திர அரசும், பகுதி சுதந்திர அரசும் உள்ளது,
சைப்பிரஸ் நிலைமையில்,   ஓர் முழுமையான  சுதந்திர அரசும், நிழல் அரசும் உள்ளது,
ஸ்ரீ லங்கா இவற்றுடன் கொள்கை அளவில் வகைப்படுத்தப்பட்டதன் காரணம், இறுதி தீர்வுகள் இவை எல்லாவற்றிற்கும், கான்செர்வ்டிவ் கட்சியை பொறுத்தவரை, ஒரே வடிவத்திலேயே இருக்கும் என்பதால்.

இதில், முக்கியமாக நாம் காண்பது, பிரித்தானியரின் அதி உச்ச ராஜதந்திரம். 

Edited by Kadancha
add info.

  • தொடங்கியவர்
1 hour ago, Kadancha said:

கான்செர்வ்டிவ் தமது இருதேச கருத்து இலங்கை தீவீற்கு பொருந்தாது எனும் விளக்கம், சிங்களத்தை குளிர்மை  படுத்தவும் மற்றும் தாக்கத்தை குறைக்கவும்

ஒரு பக்கத்தில் தமிழர் தரப்பு சர்வதேச அழுத்தம் ஊடாக சிங்களம் தமிழர் பிரச்சனைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெறலாம் என எதிர்பார்க்கின்றது. 

மறுபக்கம், தாயகத்தில் உள்ள மக்களும் அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளும் ஒற்றையாட்சி கட்டமைப்பிற்குள் அரசியல் பகிர்வை கோருகின்றன. 

இவை இரண்டையுமே சிங்களம் அதன் இனவாதிகள் ஒரு "பயமாக" தமது மக்களுக்கு கூறிவருகிறார்கள். 

தமிழர் தரப்பால், தமிழகம் உட்பட,  இராணுவ ரீதியாகவோ இல்லை வேறு எந்த வழியிலுமோ பாதிப்பு வராது என்ற நம்பிக்கையை வளர்த்து ஒரு உடன்படிக்கைக்கு வந்தால், சிங்களம் ஒரு தீர்வை தரக்கூடிய சாத்தியங்கள் உண்டு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.