Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

8 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


8 வயது சிறுமியை ஒரு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்த தந்தையை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள 4ஆம் காலனி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கூலித் தொழிலாளியான தந்தை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கடந்த 26ஆம் திகதி வரை தனது 8 வயதான மகளை  பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவதினமான நேற்றிரவு குறித்த தந்தையாரை பொலிஸார் கைதுசெய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள தந்தையாரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

http://athavannews.com/8-வயது-சிறுமியை-ஒரு-வருடமா/?fbclid=IwAR2JQHF0Zafn1WP50RnHOjdTRDFI1GFRGeRl-dHk6j13Kta-mhRNiKh5FrY 

 

  • கருத்துக்கள உறவுகள்

வெடி தான்.....

  • கருத்துக்கள உறவுகள்

பிரோ எங்க‌ த‌மிழ் ச‌முதாய‌ம் ரொம்ப‌ கெட்டு போச்சு , ம‌னித‌ நேய‌ம் இல்லா த‌ந்தை , வ‌ய‌து கூடின‌தொலிய‌ , அறிவு த‌ந்தையிட‌ம் சுத்த‌மாய் இல்லை 😓, வாழ் நாள் பூரா சிறையில் வாட‌னும் 😠

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வெளிநாடு வந்தால் நானும் நண்பனும் சேர்ந்து இரண்டு உதை,கண்ணத்தில் ஓர் அறை ஓர் எச்சிதுப்பு, சேர்டை பிடித்து தள்ளி விட்டு ஞாயம் கேட்டிருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, colomban said:

இவர் வெளிநாடு வந்தால் நானும் நண்பனும் சேர்ந்து இரண்டு உதை,கண்ணத்தில் ஓர் அறை ஓர் எச்சிதுப்பு, சேர்டை பிடித்து தள்ளி விட்டு ஞாயம் கேட்டிருப்பேன்.

உற‌வே இது என‌க்கு க‌ல் வைச்சு எறியிர‌ மாதிரி தெரியுது 😁😂,

ச‌முதாய‌த்தை திருத்த‌ வெளிக்கிட்டால் , எங்க‌டைய‌ல் சொல்லுவின‌ம்  , உப்ப‌டியான‌ ச‌ம்ப‌வ‌ம் அதிக‌ம் ந‌ட‌க்குது என்று , 

ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் ந‌ல் வ‌ழி என்று ப‌ய‌ணிக்கும் போது உப்ப‌டியான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் கேள்வி ப‌டும் போது பெரும் அதிர்ச்சியாய் இருக்கும் ,

ப‌ழ‌சை கில‌ற‌ வேண்டாம் அண்ணா 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்றது. சொந்த மகள் அதுவும் 8 வயசில். பொலீசில் பிடித்து கொடுத்த தாய்க்கு ஒரு சல்யூட். இனி அவள் தன்னையும், பிள்ளையையும் இந்த சமூகத்தில் இருந்து காக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

உற‌வே இது என‌க்கு க‌ல் வைச்சு எறியிர‌ மாதிரி தெரியுது 😁😂,

பையன் சும்மா சிரிப்புக்காக எழுதப்பட்டது.  :)

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இப்படி நடந்திருந்தால், அந்த சிறுமியின் வாழ்நாளில் ஆற்றப் பட முடியாத காயங்கள் இருப்பினும்,   தனிப்பட்ட உறவுகள் மற்றும்   சமூகவளவில் இது சீர்திருத்தமும், முன்னேற்றமும்.

1) சிறுமி இடம் உள்ள விழிப்புணர்வு, 

3) அதை தாயிடம் துணிவாக கொண்டு சென்றது.

3) தாய், தனது கணவன், சிறுமியின் தந்தை என்பதை மேவி, பிள்ளைக்கு நீதி பரிகாரம் தேடியது.

இவை போன்ற செயற்பாடுகளே, முற்றாக இந்த சீரழிவை நிறுத்தாவிட்டாலும், குறைப்பதற்கு வழி வகுக்கும்.

அடி, வெடி என்பது,  தண்டனை கொடுப்பவர் மற்றும் சமூகத்தின் வெப்பியாரம் என்பதை  உடனடியாக தணித்தாலும், சிறுமியை நீண்ட காலப்  போக்கில் எவ்வாறு பாதிக்கும் என்று சொல்ல முடியாது. அது நீதியாகவும் அமையாது.
 
பிரச்னை என்னவென்றால், தந்தை இப்படி செய்தாலும், அவ்வப்போது பிள்ளை எனும் பிணைப்பு ஏற்றப்பட்டு இருக்கும். 

காலம் போக, பிள்ளையின் உணர்வும், தற்போதுள்ள அருவருப்புடன் கூடிய கோபம், குரோதம் முற்றாக நீங்காவிட்டாலும், தான் செய்தது proportional ஆ எனும் குற்ற உணர்வு வரலாம், எதிர் காலத்தில் இப்படியான பிரச்னைகள் சீர்திருத்தம் என்பதன் அடிப்படையில் அணுகப்படும் பொது.

தந்தை இறப்பதற்கு அல்லது பகிரங்கமாக மற்றவர்களிடம் அடிவாங்குவதற்கு வழிகோலிவிட்டேன் என்ற குற்ற உணர்வு, தந்தை செய்ததை விட, சிறுமியின் வாழ்க்கையை மேலும் சீரழிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. 

இந்த குற்றத்திற்கும், தண்டனைக்கும், நீதிக்கும் உள்ள proportionality, தனிமனித உறவுகளுக்கிடையில் வரும் போது, மயிரிழையிலும் மெலிதாக உள்ளது.

இது போன்ற வழக்கில், jury service செய்யும் போதே இவற்றை புரிந்து கொள்ள முடிந்தது.

 

வேலியே பயிரை மேய்க்கிற நிலை கொடுமையானது.
போகிற போக்கில இதுக்கும் என்கவுண்டர் தீர்வு தான் சரி என்ற நிலை வரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.