Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி - பிரதமருக்கிடையில் பிரச்சினை வெடிக்கும் நிலை ஏற்படும் - த.தே.கூ.

Featured Replies

(நா.தனுஜா)

19 ஆவது அதிகாரத்தை இல்லாதொழிக்க முயற்சிகளை முன்னெடுத்தால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் பிரச்சினைகள் வெடிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்றுகூறி, அதனை செயற்படுத்துவாராக இருந்தால் பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்படும். அதற்கு தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடன்படுவாரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. 

ஏனெனில் ஏற்கனவே மட்டுமீறிய அதிகாரங்களுடன் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அதிகாரங்களற்ற பொம்மை பிரதமராக இருப்பதற்கு விரும்பமாட்டார். 

எனவே 19 ஐ ஒழிப்பதற்கான முயற்சியில் அவர்களுக்குள்ளேயே பிரச்சினைகள் வெடிப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகள், எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம், தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சர்ச்சை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். 

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டிருக்கின்றார். எனவே எதிரணியிலுள்ள கூட்டமைப்பும் அவருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். 

https://www.virakesari.lk/article/70670

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

எனவே 19 ஐ ஒழிப்பதற்கான முயற்சியில் அவர்களுக்குள்ளேயே பிரச்சினைகள் வெடிப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இப்படியே... சிங்களத் தலைவர்களுக்குள் பிரச்சனைகள் உருவாகும், அதில் கிடைப்பதை எடுக்கலாம் என்று நாக்கைத் தொங்கப்போட்டு காவலிருந்த பல தமிழ்த் கலைவர்களின் நாக்குகள் அந்தச் சிங்களத் தலைவர்களால் ஒன்றுகூடி அறுக்கப்பட்ட கதைகள் ஏராளம்.

  • தொடங்கியவர்
2 hours ago, ampanai said:

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டிருக்கின்றார். எனவே எதிரணியிலுள்ள கூட்டமைப்பும் அவருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். 

சஜித் தரப்பான ஐ.தே.க. சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து சனாதிபதி தேர்தல் போன்று போட்டியிட போவதில்லை என அறியப்படுகின்றது, காரணம்: சனாதிபதி தேர்தல் போன்று சிங்கள வாக்குகளை இழந்துவிடுவோம் என்ற பயம்.  

தேர்தலில் பின்னர் கூட்டமைப்புக்களை வைக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

அர

4 hours ago, ampanai said:

 

எனவே 19 ஐ ஒழிப்பதற்கான முயற்சியில் அவர்களுக்குள்ளேயே பிரச்சினைகள் வெடிப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்

அரசியல் வித்தையில் ஊக வணிகமும் உண்டு. ஆனால் அரசியல் ஊக வணிக வித்தையல்ல 

Edited by poet

செல்வம் அடைக்கலநாதன் கஞ்சா அடித்துவிட்டு கனவு காண்கிறார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.