Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘எனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு தாருங்கள்’: முதலாவது சந்திப்பிலேயே கோட்டாவிடம் சரணடைந்த தமிழ் அரசுக் கட்சி எம்.பி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘எனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு தாருங்கள்’: முதலாவது சந்திப்பிலேயே கோட்டாவிடம் சரணடைந்த தமிழ் அரசுக் கட்சி எம்.பி!

By admin -
66526528_357935018224327_682768624031839
 

“எமது சொந்தங்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்தவர். சரணடைந்தவர்களை பஸ் ஒன்றிற்குள் அடைத்து கிரேன் மூலம் கடலுக்குள் அமிழ்த்திக் கொன்றதாக ஒரு பத்திரிகையாளர் சொன்னார். அவர் எவ்வளவு கொடுமையானவர் என்பதற்கு உதாரணம், அவரிடம் கொண்டு செல்லப்பட்ட ஒருவர், அவரின் முன்பாக சிறுநீர் கழித்து விட்டார் என்றார்கள். தமிழர்கள் இப்படியானவரை ஆதரிக்க முடியுமா? எந்தக்காலத்திலும் இவர்களை மன்னிக்கக் கூடாது.“

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் யாழ் சங்கிலியன் தோப்பில் இப்படி மக்கள் முன் எழுச்சி உரையாற்றிய இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், அதே கோட்டாபய ராஜபக்சவிடம் தனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு கோரிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், ஊடக உரிமையாளர்களிற்குமிடையிலான சந்திப்பு நேற்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஊடக விவகாரங்கள் தொடர்பில் நடந்த அந்த கலந்துரையாடலில், குறுக்கே புகுந்து தனது இரும்பு ஆலைக்கு வரிவிலக்கு கோரியுள்ளார் தமிழ் மக்களின் பிரதிநிதி.

கோட்டாபய ஜனாதிபதியான பின்னர், இன்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்தியிருக்கவில்லை. இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பியான ஈ.சரவணபவன், பத்திரிகை உரிமையாளர்களுடனான சந்திப்பில் நேற்று கலந்து கொண்டிருந்தார். இதன்போது, தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாகவோ, குறைந்த பட்சம் உதயனில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியாளர்களிற்கு நீதி கோராமல், தனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு கோரிய அதிர்ச்சி சம்பவம் நடந்ததை தமிழ்பக்கம் அறிந்தது.

கலந்துரையாடலின் இடையில், கோட்டாவிடம் வரிவிலக்கு கோரிக்கையை முன்வைத்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள தனது இரும்புத் தொழிற்சாலைக்கு ரணில் அரசு வரிவிலக்கு தந்திருந்ததாகவும், இந்த அரசும் வரிவிலக்கு தர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.

ஊடகத்துறை தொடர்பான கலந்துரையாடலின் இடையில் அவர் இவ்வாறு தெரிவித்தது அந்த மண்டபத்தில் ஒருவித அசௌகரியத்தை உண்டாக்கியது.

ஜனாதிபதி தேர்தல் சமயங்களில் உதயன் பத்திரிகையில் தொடர்ந்து போலிச் செய்திகள் வெளியாகியதை அறிந்திருந்தபோதும் கோட்டாபய ராஜபக்ச அதைக்காட்டிக் கொள்ளாமல் நாசூக்காக கையாண்டார்.

“இந்த விடயத்தை நீங்கள் நிதியமைச்சரிடம்தான் (மஹிந்த ராஜபக்ச) பேச வேண்டும். நான் இதில் தலையிட முடியாது“ என கோட்டாபய தெரிவித்தார்.

http://www.pagetamil.com/93778/

  • கருத்துக்கள உறவுகள்

சரவணபவன்,  தானே.... 
முன்னாள் ஜனாதிபதி,  இவர் வீட்டில்.. "கேக்"  வெட்டியவர்.
ஒவ்வொரு..... இழவு,  அரசியல் வாதிகளையும் நினைக்க...
அவர்கள்..... செய்த, சேவைகளே... போதும். 

அடி, செருப்பால ...........   

  • கருத்துக்கள உறவுகள்

சரவணபவனைத் தெரிந்திருந்தால் இது ஒரு பெரிய விடயமாகத்தெரிந்திருக்காது

சப்ரா இப்படிச் செய்யாமல் இருத்தால்தான் நாங்கள் அதிர்ச்சி அடைய வேண்டும். ஒரே ஊரான் என்றவகையில் இவனையிட்டு வெக்கப்படுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சரவணபவன்,  தானே.... 
முன்னாள் ஜனாதிபதி,  இவர் வீட்டில்.. "கேக்"  வெட்டியவர்.
ஒவ்வொரு..... இழவு,  அரசியல் வாதிகளையும் நினைக்க...
அவர்கள்..... செய்த, சேவைகளே... போதும். 

அடி, செருப்பால ...........   

இந்தாளுக்கும் மட்டும் அடிக்கணுமா அல்லது எல்லோருக்கும் சேர்த்து அடிக்கணுமா இவனுகளுக்கு வெள்ளையடிக்க ஓர் கூட்டம் இன்னும் இருக்கும் வரைக்கும் மக்களுக்கு வெள்ளை அடிச்சிக்கொண்டிருப்பானுகள் 

  • கருத்துக்கள உறவுகள்

இதை சரா கேட்டது ஆச்சரியமில்லை.

ஆனால் எல்லோர் முன்னிலையிலும் கேட்கும் அளவுக்கு சமயயோசிதம் இல்லாத ஆளா சரா?

பேஜ் தமிழ் ஒரு போக்கிரி ஊடகம். ஒரு போக்கிரியை பற்றி இன்னொரு போக்கிரி சொல்வது நிச்சயம் உண்மையாக இருக்க வேண்டியதில்லை.

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தாளுக்கும் மட்டும் அடிக்கணுமா அல்லது எல்லோருக்கும் சேர்த்து அடிக்கணுமா இவனுகளுக்கு வெள்ளையடிக்க ஓர் கூட்டம் இன்னும் இருக்கும் வரைக்கும் மக்களுக்கு வெள்ளை அடிச்சிக்கொண்டிருப்பானுகள் 

வடகிழக்கு தமிழ் அரசியல்வாதிகளை இப்படி  ஒவ்வொரு விடயதுக்கும் செருப்பால் அடிக்க வெளிகிட்டால் - ஒரு கடையிலும் செருப்பிருக்காது. அந்தளவுக்கு இருக்கு அவர்களின் திருகுதாளங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இதை சரா கேட்டது ஆச்சரியமில்லை.

ஆனால் எல்லோர் முன்னிலையிலும் கேட்கும் அளவுக்கு சமயயோசிதம் இல்லாத ஆளா சரா?

பேஜ் தமிழ் ஒரு போக்கிரி ஊடகம். ஒரு போக்கிரியை பற்றி இன்னொரு போக்கிரி சொல்வது நிச்சயம் உண்மையாக இருக்க வேண்டியதில்லை.

வடகிழக்கு தமிழ் அரசியல்வாதிகளை இப்படி  ஒவ்வொரு விடயதுக்கும் செருப்பால் அடிக்க வெளிகிட்டால் - ஒரு கடையிலும் செருப்பிருக்காது. அந்தளவுக்கு இருக்கு அவர்களின் திருகுதாளங்கள்.

அவர் புதுச்செருப்பால் அடிக்கச்  சொல்லவில்லை,அதுக்கு வேற தண்டச்செலவு.  பழைய செருப்பைத்தான் சொல்லி இருப்பார் இல்லையா தனி.....!   🤔

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

அவர் புதுச்செருப்பால் அடிக்கச்  சொல்லவில்லை,அதுக்கு வேற தண்டச்செலவு.  பழைய செருப்பைத்தான் சொல்லி இருப்பார் இல்லையா தனி.....!   🤔

உண்மைதான் - இட் இஸ் ஓல்சோ என்வயர்மெண்டலி பிரெண்ட்லி😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.