Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் குறித்து கூடிய விரைவில் தீர்மானம் - அரசாங்கம்

Featured Replies

(ஆர்.யசி)

யுத்த காலகட்டத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இலங்கையர்களில் 3,815 பேர்  மீண்டும் இலங்கைக்கு வர இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் குறித்து இலங்கை அரசாங்கம் கூடிய விரைவில் தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்கும் என்கிறது இலங்கை அரசாங்கம். ஏனையவர்கள் குறித்தும் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு இடமுள்ளதாக கூறுகின்றனர். 

இலங்கையின் யுத்த சூழல் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமாகும்.

1990 ஆம் ஆண்டுகளில் அதிகளவில் அகதிகள் இந்தியாவிற்கு வந்தாலும்  பிற்பட்ட காலப்பகுதியில் அவர்கள் மீண்டும் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். எனினும் இப்போது இந்தியாவில் 60 ஆயிரத்து 52 பேர் தமிழ் நாட்டிலும் ஆந்திர எல்லை பகுதிகளிலும் 107 முகாம்களில் உள்ளனர். 

மேலும் 35 ஆயிரம் பேர் இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் பரந்து வாழ்கின்றனர். எனினும் இவர்களுக்கு இன்னமும் இந்திய குடியுரிமை வழங்கப்படாத நிலையில் அகதிகளாக வந்தர்களின் இரண்டாம் பரம்பரையினர் இன்னமும் குடியுரிமை இல்லாத மக்களாக இந்தியாவில் வாழ்கின்றனர்.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் இது குறித்து முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் என்னவென வினவியமைக்கு அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சரும்மான ரமேஷ் பதிரன கூறியதானது, 

இப்போது இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள பிரஜாவுரிமை சட்டமானது இலங்கை அகதிகள் குறித்து எதுவித தீர்மானங்களையும் எடுத்துள்ளதாக தெரியவில்லை. அவர்கள் நாட்டில் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கும் சட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் எவ்விதத்திலும் கருத்துக்களை முன்வைக்கவும் முடியாது. 

எவ்வாறு இருப்பினும் இலங்கை பிரஜைகளுக்கு இலங்கையில் வாழ சகல அதிகாரமும் உள்ளது. அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வர முடியும். அது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தும்.

அதேபோல் அவர்களுக்கான வாழ்வாதார ஏற்பாடுகள் குறித்தெல்லாம் அரசாங்கம் ஆராய்ந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கும், இவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசி தீர்மானம் எடுக்க வாய்ப்புள்ளது  என்றார். 

https://www.virakesari.lk/article/71179

  • தொடங்கியவர்
6 hours ago, ampanai said:

1990 ஆம் ஆண்டுகளில் அதிகளவில் அகதிகள் இந்தியாவிற்கு வந்தாலும்  பிற்பட்ட காலப்பகுதியில் அவர்கள் மீண்டும் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். எனினும் இப்போது இந்தியாவில் 60 ஆயிரத்து 52 பேர் தமிழ் நாட்டிலும் ஆந்திர எல்லை பகுதிகளிலும் 107 முகாம்களில் உள்ளனர். 

மேலும் 35 ஆயிரம் பேர் இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் பரந்து வாழ்கின்றனர். எனினும் இவர்களுக்கு இன்னமும் இந்திய குடியுரிமை வழங்கப்படாத நிலையில் அகதிகளாக வந்தர்களின் இரண்டாம் பரம்பரையினர் இன்னமும் குடியுரிமை இல்லாத மக்களாக இந்தியாவில் வாழ்கின்றனர்.

அவர்கள் விரும்பினால், மீண்டும் தமிழீழத்திற்கு அழைத்து வருவதே சரியான, தார்மீக முடிவாக இருக்கும்.  

முகாம்களிலும், வெளியிலும் இருக்கும் எல்லாரையும் இலங்கைக்கு தாமதிக்காம அனுப்பினா நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Gowin said:

முகாம்களிலும், வெளியிலும் இருக்கும் எல்லாரையும் இலங்கைக்கு தாமதிக்காம அனுப்பினா நல்லது.

ஏன்?

  • தொடங்கியவர்

தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்குத் தப்ப முயன்ற 6 பேர் கைது

தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கியூ பிரிவு பொலிஸார் சுற்றவளைப்பில் ஈடுபட்டிருந்த போது  தனுஷ்கோடி அருகே எம்.ஆர். சத்திரம் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்றுகொண்டிருந்த 6 பேரைப் பிடித்து விசாரணை செய்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம்  பகுதியைச் சேர்ந்த இலங்கை அகதிகளான சதீசன், டிலக்சனா, சுதாகரன், சந்திரமதி, ஹரீஸ்கரன்,உதயகுமார் என இரு பெண்கள்,  மூன்று ஆண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை ஆகிய ஆறு பேரும் சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள முகாம்களில் வசித்து வந்ததாகவும், தனுஷ்கோடி கடல் வழியாகச் சட்ட விரோதமான முறையில் தோணியில் இலங்கைக்குத் தப்பிச் செல்ல இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த  ஆறு பேரையும் கைது செய்த கீயூ பிரிவு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தனுஷ்கோடி பொலிஸ் நிலையத்தில் வைத்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

 விசாரணைக்குப் பின் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

59682616_2359056400820686_45143166230410

 

  மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் பொலிஸ் விசாரணையின் போது தாங்கள் இலங்கையில் நடைபெற்ற  உள்நாட்டுப் போரின் போது தங்களது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள 2012 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாக சென்றதாகவும் தற்போது இலங்கையில்  பிரச்சினை இல்லாமல் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக தங்களது உறவினர்கள் கூறியதையடுத்து  இலங்கை திரும்பிச் செல்ல தனுஷ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் நின்றதாகவும் தெரிவித்தனர்.

 தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்ல இலங்கையைச் சேர்ந்த படகோட்டியிடம் தலா 10 ஆயிரம் என 60 ஆயிரம்  ரூபா கொடுத்ததாகவும் ஆனால்  கியூ பிரிவு பொலிஸாரை கண்டதும் படகோட்டி படகுடன் தப்பிச் சென்றார் எனத் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இலங்கை பணம் 8ஆயிரத்து ஐந்நூறு இந்தியப் பணம் ஆயிரம் ரூபா மற்றும் கடவுச்சீட்டு இலங்கை குடியுரிமை ஆவணங்கள் மற்றும் தமிழக வங்கிக் கணக்கு அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

https://www.virakesari.lk/article/71221

  • தொடங்கியவர்
6 minutes ago, ampanai said:

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இலங்கை பணம் 8ஆயிரத்து ஐந்நூறு இந்தியப் பணம் ஆயிரம் ரூபா மற்றும் கடவுச்சீட்டு இலங்கை குடியுரிமை ஆவணங்கள் மற்றும் தமிழக வங்கிக் கணக்கு அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து அவுசிற்கு போக விடமாட்டீர்கள் சரி. சொந்த மண்ணிற்குமாக தடை ? பாவங்கள் இந்த உடன் பிறப்புக்கள்.  

On 12/17/2019 at 4:29 PM, குமாரசாமி said:

ஏன்?

ஏன் அவை அங்கை இருக்கோணும்?

  • தொடங்கியவர்

 

 

இவர்கள் நாட்டுக்கு திரும்பி வருவது அல்லது திருப்பி அனுப்பப்படுவது விரைவில் நடந்தால் நல்லது.

இதன் மூலம் அவர்கள் சொந்த மண்ணில் வாழக்கூடிய ஒரு சஞ்சலமற்ற எதிர்காலத்தை உருவாக்கும் சந்தர்ப்பம் அதிகரிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.