Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: 3 இலங்கையர்களுக்கு டுபாயில் சிறைத்தண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

court-568-720x450.jpg

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: 3 இலங்கையர்களுக்கு டுபாயில் சிறைத்தண்டனை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த 3 இலங்கையர்களிற்கு டுபாய் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதலில் உறவினரை இழந்த மட்டக்களப்பு இளைஞன் மற்றும் இரண்டு சிங்கள இளைஞர்களுக்கே சிறைத்தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும், தங்களது கையடக்கத் தொலைபேசியின் வழியாக சமூக ஊடகங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய படங்களை பகிர்ந்ததாக  குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பை சேர்ந்த குணதாஸ் டிரான் மற்றும் ரமேஷ் பெர்னாண்டோ, விஸ்வா டி சில்வா ஆகியோரே தண்டனைக்குள்ளாகியுள்ளனர்.

ஹோட்டலொன்றின் பாதுகாப்பு அதிகாரியாகவும், பாதுகாவலராகவும் இருந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 4ஆம் திகதி ஹோட்டலில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த டிசம்பர் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் அவர்கள் முற்படுத்தப்பட்டு, நேற்று (திங்கட்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணை இடம்பெற்றபோது, அவர்களிற்கு அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.

எனினும், குறித்த பணத்தை செலுத்த வசதியில்லையென அவர்கள் குறிப்பிட்டதைடுத்து அவர்களிற்கு மூன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/உயிர்த்த-ஞாயிறு-தாக்குத-15/

4 hours ago, தமிழ் சிறி said:

எனினும், குறித்த பணத்தை செலுத்த வசதியில்லையென அவர்கள் குறிப்பிட்டதைடுத்து அவர்களிற்கு மூன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிக்கும் தர்மத்திற்கும் இந்த அரபு நாடுகள் தான் இன்றைய மனு நீதி சோழர்கள் 😞 

இலண்டலில் உள்ள பணக்கார சிங்களவர்கள் இவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை போலும். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு அச்சுறுத்தல் விட்டால் கொடுத்திருப்பார்கள். இனிமேல் குடுக்கக்கூடும். 

இந்த அரபு காரன் பணம் கொடுத்து இங்கே மக்களை கொலை செய்கிறான் . அதை பிரசுரித்தால் தண்டனை கொடுக்கிறான். என்னடா நீதி இது? பணத்திமிர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.