Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2020]


Recommended Posts

"க‌ருணாவின் திரும‌ண‌ புகைப் ப‌ட‌ம்"  எனும் தலைப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 65
  • Created
  • Last Reply

செய்தி திரட்டி பகுதியில் இணைக்கப்பட்ட “13-ம் நம்பரைப் பார்த்து பயப்படணுமா?  ‘வாழைக்கு தாலி’ பரிகாரம் சரியா?” எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

தொடர்பான களவிதிகள்:

  • எதுவித அடிப்படையும், உண்மைத்தன்மையும் அற்ற சாத்திரம், மூட நம்பிக்கைகள், சாமியார்கள் வழிபாடு சம்பந்தமான பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும். தீவிர நம்பிக்கையை ஊக்கப்படுத்தாமல் பொழுதுபோக்காக அமையும் பதிவுகளுக்கு இவ்விதி தளர்த்தப்படுகின்றது.
  • மானுடம், மக்கள் நலன், நன்நெறி, பண்பாடு, சீர்திருத்தங்கள், தனிமனித ஒழுக்கம், ஆன்மீகம் சார்ந்து மக்களை நெறிப்படுத்தும் மெய்யியல்/இறையியல் சம்பந்தமான பதிவுகள் ஊக்குவிக்கப்படுகின்றது. எனினும் மதப் பிரச்சாரம் செய்யும் வகையிலான பதிவுகள் அனுமதிக்கப்படமாட்டாது.
Link to comment
Share on other sites

எங்கள் மண் பகுதியில் திறக்கப்பட்ட எந்த ஆதாரமும் அற்ற விடயங்களை உள்ளடக்கிய திரி நீக்கப்பட்டது. 

நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து எனும் திரியில் இறுதியாகப் பதிந்த தலைப்புக்கு சம்பந்தமற்ற பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம் எனும் திரியில் கள உறுப்பினரை சீண்டும் வகையில் அமைந்த கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் கருத்தாடற்பண்பைக் கடைப்பிடித்து கருத்துக்கள் வைக்கப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அநாமேதய தளங்களில் இருந்து ஒட்டப்பட்ட நம்பகத்தன்மையில்லாத சில செய்திகள் நீக்கப்பட்டுள்ளன.

பரபரப்பைத் தூண்டும் நோக்கிலும், இலங்கையில் நடக்கவுள்ள தேர்தலில் பங்குபற்றும் அரசியல்வாதிகளை இழிவாக தூற்றும் நோக்கிலும் செய்திகள், பதிவுகள் இணைப்பது தவிர்க்கப்படவேண்டும்.

யாழ் களம் கள உறுப்பினர்களிடம் இருந்து பண்பான, ஆக்கபூர்வமான கருத்து/விமர்சனங்களையே எதிர்பார்க்கின்றது.

Link to comment
Share on other sites

"நடிகர் விஜயகுமார் மகள் நடிகை வனிதாவின் மூன்றாவது கலியாணமும் சிக்கலில்" எனும் திரி மூடப்பட்டு அகற்றப்படுகின்றது.

இத்தகைய நாலாம் தரமான மற்றவர்களின் சொந்த வாழ்க்கைக்குள் மூக்கை நுழைக்கும் செய்திகளையோ அல்லது திரிகளையோ திறக்க வேண்டாம் என யாழ் இணையம் தொடச்சியாக உறவுகளிடம் கேட்டுக் கொண்டு வருகின்றது. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு விடயம் யாழிலும் இணைக்கப்படும் போது அதன் தரத்தை எடை போட்டு அது யாழின் தரத்திற்கு எந்த வகையில் செல்வாக்கு செலுத்தும் என்பது தொடர்பாக மதிப்பீடு செய்து இணைக்கவும்.

 

Link to comment
Share on other sites

விஞ்ஞான ரீதியிலான அறிவியல் ரீதியிலான எந்த அடிப்படையும் இன்றிய கருத்துகளை கொண்டிருந்த 'அடையாளங்களை தொலைக்கும் தமிழன்!' திரி அகற்றப்படுகின்றது.

அண்மைக் காலங்களில் எந்த அடிப்படையும் அற்ற மருத்துவ பதிவுகளும், மருத்துவ குறிப்புகளும், மூட நம்பிக்கைகளை பரப்பும் திரிகளும் யாழில் பெருகி வருவது அவதானிக்கப்படுகின்றது. தமிழக சஞ்சிகைகளில் இருந்தும் சமூக வலைத்தளங்களில் இருந்தும் பெறப்படும் இத்தகையை பதிவுகளை யாழில் இணைக்க வேண்டாம் என மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம். 

இவ்வாறு இணைக்கப்படும் பதிவுகள் கருத்துகள் மேலதிக விளக்கம் எதுவும் கொடுக்கப்படாமல் அகற்றப்படும்.

Link to comment
Share on other sites

தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு எனும் திரியில் இறுதியாகப் பதியப்பட்ட பல கருத்துக்கள் நீக்கப்பட்டு திரியும் மூடப்பட்டுள்ளது.

தொடர்பான களவிதிகள்:

  • யாழ் கருத்துக்களத்தில் குழுக்களாக இணைந்து இயங்குவதையும், ஆரோக்கியமற்ற குழுநிலைக் கருத்தாடல்களையும் தவிர்த்தல் வேண்டும்.
  • கருத்துக்கள விதிகளைச் சட்டை செய்யாது தொடர்ந்தும் குழுக்களாக இயங்குவது அவதானிக்கப்பட்டால் விதிகளுக்கு அப்பால் சென்று கடுமையான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
Link to comment
Share on other sites

சமூகச் சாளரம் பகுதியில் இருந்து “குறிப்பு பொருத்தம் பாருங்கோவன்” எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

களவிதி:

எதுவித அடிப்படையும், உண்மைத்தன்மையும் அற்ற சாத்திரம், மூட நம்பிக்கைகள், சாமியார்கள் வழிபாடு சம்பந்தமான பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும்

Link to comment
Share on other sites

'பண்டாரநாயக்க: ஆங்கிலேயத்தனத்திலிருந்து சிங்களத்தனம் வரை' என்ற தலைப்பிலிருந்து சக உறுப்பினரைச் சீண்டி எழுதிய கருத்துக்களும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

வீழ்ச்சியடைந்த பிரான்ஸ் – உலகப்போர் 2 - பகுதி 7 எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் திசை திருப்பும் வகையிலும், வெறுமனே சீண்டுவதற்காகவும் பதியப்பட்ட இரு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

தொடர்பான களவிதி:

  • கருத்தாடலைத் திசை திருப்பும் வகையிலும் தலைப்புக்கு தொடர்பில்லாத விதத்திலும், வீண் விதண்டாவாதங்களாகவும் எழுதுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
Link to comment
Share on other sites

ஆங்கிலத்தில் பதியப்பட்ட கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.

 

  • யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும். தமிழில் எழுதப் பின்வருவனவற்றைப் பயன்படுத்தலாம்.
    • விண்டோஸ் இயங்குதளத்தில் அமைந்த கணினி:
      • இகலப்பை. காணொளி விளக்கம்: 
      • Keyman - தமிழ் சுரதா பாமுனி. கட்டணமற்றது. விண்டோஸ் 8 எனில் அதில் உள்ள Short-Cut வசதியைப் பாவித்து தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாற்றிக் கொள்ள முடியும்
      • Keyman Tavultesoft * கட்டணம் செலுத்தவேண்டும்.
    • iOS இயங்குதளத்தில் அமைந்த iPad வரைபட்டிகை (tablet), iPhone திறன்பேசி (smartphone):
      • தமிங்கில விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Anjal
      • தமிழ்99 விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Tamil 99
    • Android இயங்குதளத்தில் அமைந்த வரைபட்டிகை (tablet), திறன்பேசி (smartphone):
Link to comment
Share on other sites

முகநூலில் இருந்து இணைக்கப்பட்ட காணொளிச் செய்திகள் ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளன

களவிதி:

  • சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.

மேலும் ஊர்ப்புதினம் பகுதியில் செய்திகள் இணைப்பது பற்றிய விளக்கங்களை கீழுள்ள இணைப்பில் படித்து உள்வாங்கி எதிர்காலத்தில் இணையுங்கள்.

 

Link to comment
Share on other sites

காத‌ல் என்ற‌ பெய‌ரில் காசு ப‌றித்த‌ பெண் எனும் திரி நீக்கப்படுகின்றது. இவ்வாறான மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்கள் சார்ந்த தட்டைப் பார்வை கொண்ட திரிகளை / பதிவுகளையும், தரமற்ற வார்த்தைப் பிரயோகங்கள், ஒருமையில் தனிப்பட்டவர்களை அழைக்கும் சொற்களுடனான கட்டுரைகளையும்  இணைக்க வேண்டாம் என பல முறை கேட்டும் தொடர்ந்து இணைப்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதை தவிர எமக்கு வேறு வழிகள் இல்லையென்பதையும் உணர்ந்து கொள்க.

யாழ் இணையம் தொடர்ந்து ஆரோக்கியமான உரையாடல்களுக்கும் கருத்துகளுக்கும் உரிய தளமாக பேண உங்கள் அனைவரினது உதவியும், பங்களிப்பும் அவசியம் என்பதை உணர்ந்து செயற்படவும்.

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர் எனும் திரியில் சக கருத்தாளர்களை பணத்திற்காக கருத்து எழுதுபவர்கள் என்ற அவதூறான கருத்துக்களும் அதன் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

யாழ் களம் ஆக்கபூர்வமான விவாதங்களையே கள உறுப்பினர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றது. எனவே, கருத்தாளர்களைப் பற்றிய ஊகங்களைத் தவிர்த்து பண்புடன் கருத்தாடல்களைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்தும் நானே இருப்பேன் எனும் திரியில் ஆங்கிலத்தில் பதியப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது.

களவிதிகளின்படி கருத்துக்கள் தமிழில் மாத்திரமே பதியப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

அறிவியல் விவாதம் எனும் திரியில் இணைக்கப்பட்ட அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் இரண்டு வீடியோக்கள் நீக்கப்பட்டன.  இணைய வெளியில் கொட்டிக் கிட்டக்கும் இவ்வாறான போலி அறிவியல் வீடியோக்களை இணைக்க வேண்டாம் என அடிக்கடி வலியுறுத்தியும் தொடர்ந்து இணைக்கப்படுவதை தவிர்க்கவும். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'சுற்றுச்சூழல்' எனும் பெயரில் திறக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட கட்சி ஒன்றினது ஒளித்தொகுப்புகளை / வீடியோக்களை மாத்திரம் இடப்பட்டுக் கொண்டு இருந்தமையால் அந்த திரி நீக்கப்படுகின்றது.

யாழ் இணையம் எந்தக் கட்சியையும் சாராத தளம். அதனால் எந்தக் கட்சியினதும் பிரச்சார மேடையாக யாழை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இவ்வாறு திறக்கட்டுள்ள திரிகளும் விரைவில் அகற்றப்படும் என்பதையும் கவனத்தில் எடுக்கவும்.

நன்றி

Link to comment
Share on other sites

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 எனும் திரியில் கள உறுப்பினர்களைப் பற்றிய அநாவசியமான கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் வந்துள்ளமையால் அவற்றினை பரிசீலித்து மட்டுறுத்தும்வரை திரி தற்காலிகமாக பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 திரியில் இருந்து கள உறுப்பினர்களைப் பற்றிய அநாவசியமான பல கருத்துக்கள் நீக்கப்பட்டு மீண்டும் கருத்தாடலுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.

கள உறுப்பினர்கள் வெறும் கட்சிப் பிரச்சாரத்திற்காக அளவுக்கதிகமான காணொளிகளை இணைப்பதைத் தவிர்த்து ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தொடருங்கள்.

 

Link to comment
Share on other sites

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் சக கள உறுப்பினரை நையாண்டி செய்யும் வகையில் திறக்கப்பட்ட திரி ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

இப்படியான அப்ப்பட்டமான களவிதிகளை மீறும் பதிவுகளை கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 இல் பதியப்பட்ட பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

யாழ் களம் ஆக்கபூர்வமான வகையிலும் பண்புடனும் கருத்தாடுவதற்கான தளம். களவிதிகளை மீறும் சீண்டல் கருத்துக்களை தொடர்ந்தும் வைப்பது ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வழிவகுக்காது. எனவே இத்தகைய கருத்துக்களை பதிவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். 

சக உறுப்பினர்கள் சீண்டும் கருத்துக்களை வைத்தால் முறைப்பாட்டு முறை மூலம் நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.