Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பௌத்த நாடு என்பதால், தேசியகீதம் சிங்கள மொழியில் பாடப்பட்டே ஆக வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

9355dac6-6138088e-wimal-weerawansa_850x460_acf_cropped.jpg

இலங்கை சிங்கள - பௌத்த நாடு என்பதால் தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்பட்டே ஆக வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

அதைத் தமிழ் மொழியில் பாடினால் இந்த நாட்டில் இரண்டு பிரிவினர் இருக்கின்றார்கள் என்று அர்த்தப்படும்.

 

அந்த அர்த்தம் தனி நாடு உருவாகுவதற்கு - பிரபாகரன் விரும்பிய தமிழீழம் மலர்வதற்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

 

'தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் பாடினால் அது மீண்டும் தமிழர்களைத் தனிநாடு கோருகின்ற நிலைக்கு தள்ளிவிடும்' என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

 

மேலும் கூறுகையில்,

 

தமிழர்களை உசுப்பேற்றுகின்ற வகையில் கருத்துக்களை வெளியிடுவதை ஜே.வி.பியினர் உடன் நிறுத்த வேண்டும்.

 

சிங்கள - பௌத்த நாடான இலங்கையில் சிங்களவர்களுக்கும், சிங்கள மொழிக்கும் தான் முதலிடம். இந்த வரையறைக்குள் இந்த நாட்டில் வாழும் சகல இனத்தவர்களும் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

 

ஒரு நாட்டுக்குள் ஒரு தேசியக் கொடியும் ஒரு தேசிய கீதமும்தான் இருக்கின்றன. அப்படி இருக்கின்றபோது தேசிய கீதம் மட்டும் ஏன் இரண்டு மொழிகளில் பாடப்பட வேண்டும்?

 

தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால் தேசியக் கொடியையும் இரண்டு வகைகளில் தமிழர்கள் கேட்பார்கள். அத்துடன், தமக்கென ஒரு நாடு வேண்டும் எனவும் கேட்பார்கள்.

 

அந்த நிலைமையை நாம் ஏற்படுத்த விரும்பவில்லை. அதுதான் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_97.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முட்டாள் எப்ப நித்திரையால் எழும்பியது? இது அதனுடைய குணம். அதை மாற்ற முடியாது. இதுக்கு கல்லெறிஞ்சால் நமது நேரமே வீணாகும். களைப்பு வர வாய் வலிக்க தானே விழுந்து படுக்கும். அதுக்கும் என்ன கட்டாயமோ? நம்ம சில தலீவருக்கு இருக்கிற மாதிரி.

6 hours ago, colomban said:

இலங்கை சிங்கள - பௌத்த நாடு என்பதால் தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்பட்டே ஆக வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

புத்தருக்கு சிங்களம் தெரியாததால் சிங்களவர் இலங்கையில இருக்க தகுதியற்றவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் பிறந்த தேசமே ஒரு இந்து நாடாக இருக்கிறது. இதில் புத்தர் சம்பந்தப்படாத நாடு பெளத்த நாடாம். அதுபோக புத்தர் பேசாத மொழி தான் சிங்களம். அப்படி இருக்க.. பெளத்த நாடு என்று இவர்கள் சொல்லும் நாட்டில் எப்படி சிங்களம் பெளத்த மொழியானது..??!

மொத்தத்தில் இலங்கை புத்தருக்கோ.. சிங்களத்துக்கோ உரிய தேசம் கிடையாது.

ஒவ்வொரு காலத்திலும் பலமான உலக ஆட்சியாளர்களை கைக்குள் போட்டு அடாத்தாகப் பறித்த தேசமே சிங்களவர்கள் வாழும் தென்னிலங்கை. 

மற்றும் படி இலங்கை என்பது இராவணன் எனும் சிவத் தமிழ் மன்னனின் சொந்த பூமியாகும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Rajesh said:

புத்தருக்கு சிங்களம் தெரியாததால் சிங்களவர் இலங்கையில இருக்க தகுதியற்றவர்கள்.

அப்பிடிப்போடு அரிவாளை 👍

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதம் ஸமஸ்கிருதத்தில்பூசைகள் செய்வது போல,  பௌத்தம் பாளி மொழியில் சமயாசாரங்கள் செய்வதால் சிங்களம் நீஸ்ஸ பாஸா(?) வாக இருக்க வாய்ப்புள்ளதால் சிங்களவரின் தேசிய கீதததை பாளி மொழியில் பாட பரிந்துரைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.