Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு - சிறப்பு நேரலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: ஓங்கி ஒலித்த தமிழ்!

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.jpg

23 ஆண்டுகளுக்குப் பின்னர் தஞ்சைப் பெரியகோயிலில் குடமுழுக்கு!

23 ஆண்டுகளுக்குப் பின்னர் தஞ்சைப் பெரியகோயிலில் இன்று(புதன்கிழமை) குடமுழுக்கு நடைபெறுகின்றது.

தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்கிறது தஞ்சைப் பெருவுடையார் கோயில்.

பெரியகோயில் என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய சோழப் பேரரசன் ராஜராஜனின் ஆட்சி, நிர்வாகத் திறன், ராணுவ வலிமை, கலை, கட்டுமானம் என்று அனைத்துக்கும் சாட்சியாக நிற்கிறது.

சுல்தான்களின் தாக்குதல்கள், மாலிக்குகளின் படையெடுப்புகள், மேலை நாட்டினரின் பீரங்கிகள், இயற்கைச் சீற்றங்களான இடி, மின்னல், நில நடுக்கம் ஆகியவற்றைக் கடந்து 1000 ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரமாக நிற்கும் பெருவுடையார் கோயிலுக்கு இன்று குடமுழுக்கு நடைபெறுகின்றது.

தஞ்சைப் பெரியகோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, கி.பி 1010 இல் ராஜராஜனால் குடமுழுக்கு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு 1729, 1843 ஆகிய ஆண்டுகளில் தஞ்சை மராத்திய மன்னர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டது.

பின்னர் 1997-ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பின்னர் தஞ்சைப் பெரியகோயிலில் ஓதுவார்களால் தீந்தமிழ்த் தேவாரம் முழங்க, இன்று குடமுழுக்கு நடைபெறுகின்றது.

கி.பி 985ல், சோழப் பேரரசனாக முடிசூடிக்கொண்ட ராஜராஜன், தன் 25 -ம் ஆட்சியாண்டில் உலகமே வியக்கும் வண்ணம் பெரிய கோயிலைக் கட்டியெழுப்பினான்.
ராஜராஜன் காலத்தில் இக்கோயில், ஹராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது.

அதன்பிறகு, பெருவுடையார் கோயில், பெரியகோயில், பிரகதீஸ்வரர் ஆலயம் என்று பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. கி.பி 1003 – 1004ல் கட்டத் தொடங்கிய பெரிய கோயில், கி.பி 1010ல் கட்டி முடிக்கப்பட்டது.

இதை சுமார் ஏழு ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட பிரமாண்டத்தின் உச்சம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். முழுவதும் கற்களால் ஆன பெரியகோயிலின் எடை, சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தொன் என்கிறார்கள் கட்டடக்கலை நிபுணர்கள்.

216 அடி உயரம் கொண்ட கோயிலின் அஸ்திவாரம், வெறும் ஐந்தடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/23-ஆண்டுகளுக்குப்-பின்னர்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky, cloud and outdoor

Image may contain: 1 person, text

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோபுரம் ஏறிய... தமிழ்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Thanjavur Temple Yagasalai Poojai

 

Thanjavur Temple Yagasalai Poojai

 

Thanjavur Temple Yagasalai Poojai

  • கருத்துக்கள உறவுகள்

83848347_2605407726360040_42320104155397

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, outdoor

தஞ்சைப் பெருங்கோவிலின் பெருவுடையார் கோபுரத்தின் மீதான கலசத்தின் உயரம் 12 அடி.

இந்த கலசத்திற்கு இவ்வாண்டு 36 லட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான தங்கம் பூசப்பட்டது. இதனை ஶ்ரீகுமார் என்பவர் தன் வீட்டை வங்கியில் அடமானமாக வைத்து தனியொருவராக செய்து முடித்துள்ளார்.

Inuvaijur Mayuran

On 2/5/2020 at 6:13 AM, தமிழ் சிறி said:

Image may contain: sky, cloud and outdoor

Image may contain: 1 person, text

அருமை சிறி உங்கள் வாதம் புல்லரிக்கவைத்தது நன்றி

இதை விட எம்மவர்கள் மிகபெரிய சாதனை செய்தார்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பே சுவிஸ் தலைநகரில் தனித்தமிழில் குடமுழுக்கு ஞானலிங்கேச்சுவரத்தில் செய்து இன்றுவரை தனித்தமிழ் வழிபாடு நடைபெறுகிறது  அது மட்டும் இல்லை புதிதாக நான்கு கோவிலகள் லண்டன் இலங்கை மாட்டினீ போன்ற இடங்களும அடங்கும் ஆனால் அந்த சாதனையை பறையடிக்காமல் செய்வது சிறப்பு முடிந்தால் அதை வெளிப்படுத்துங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2020 at 5:09 AM, தமிழ் சிறி said:

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: ஓங்கி ஒலித்த தமிழ்!

தமிழைப் புடம்போட்டு மாசுநீங்க வைப்பது இன்றைய தமிழர்களின் தலையாய கடமை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மார்த்தாண்டன் said:

இதை விட எம்மவர்கள் மிகபெரிய சாதனை செய்தார்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பே சுவிஸ் தலைநகரில் தனித்தமிழில் குடமுழுக்கு ஞானலிங்கேச்சுவரத்தில் செய்து இன்றுவரை தனித்தமிழ் வழிபாடு நடைபெறுகிறது  அது மட்டும் இல்லை புதிதாக நான்கு கோவிலகள் லண்டன் இலங்கை மாட்டினீ போன்ற இடங்களும அடங்கும் ஆனால் அந்த சாதனையை பறையடிக்காமல் செய்வது சிறப்பு முடிந்தால் அதை வெளிப்படுத்துங்கள் 

விபரங்களை ஒலி ஒளி வடிவில் இணைக்கலாம் அல்லவா? சிறப்பாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.