Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரனா படையெடுப்புக்கு சீன அரசு தான் காரணம் ! அரசின் சதி

Featured Replies

டிசம்பர் மாதம் தொடக்கத்தில் கொரனாவை கண்டறிந்த மருத்துவரை இது குறித்து பேச கூடாது என சீன அரசு மிரட்டியுள்ளது. தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சீனாவின் வூகான் நகரை சேர்ந்த மருத்துவர் லி வென்லியாங் (Li Wenliang) வூகான் மத்திய மருத்துவமனையில் இதய மருத்துவராக பணியாற்றி வருகிறார். டிசம்பர் மாதம் தொடக்கத்தில் அந்த மருத்துவமனையில் காய்ச்சலால் 10 பேர் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

Wuhan doctor Li Wenliang in an intensive care bed on oxygen support after contracting the coronavirus.

அதனை சோதித்த லி வென்லியாங் அது சார்ஸ் குடும்ப வகையை சேர்ந்த வைரஸ் என்பதை கண்டறிந்து அதிர்ந்துள்ளார். இதனை தனது மருத்துவர்கள் இருக்கும் வாட்ஸ் ஆப் குழுவிலும் பகிர்ந்துள்ளார்.

லி வென்லியாங் ரிப்போர்ட்டினை பார்த்த சீன மருத்துவர்கள் சார்ஸ்  வைரஸ் வகையை இது ஒத்திருக்கிறது என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சீன அதிகாரிகள் லி வென்லியாங்கை மிரட்டி இது குறித்து வெளியே பேச கூடாது எனவும் சமூக வலைதளங்களில் இதனை பகிர கூடாது என்று மிரட்டி இது தொடர்பாக ஒப்பந்தம் பெற்றுள்ளனர்.

லி வென்லியாங் கொரனா வைரஸ் பற்றி எதுவும் பேசாத நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கொரனா தாக்கபட்ட பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். அதன்பின் அவருக்கும் கொரனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்தார்.

கொரனா வேகமாக பரவி வரும் நிலையில் லி வென்லியாங் படுத்த படுக்கையில் இருந்தே இந்த வைரஸ் குறித்து முன்பே கண்டறிந்ததாகவும் இதனை சொல்ல முயற்சித்த போது அதிகாரிகள் இது குறித்து பேச கூடாது என்று மிரட்டி ஒப்பந்தம் போட்டுள்ளனர். மேலும் சீன மக்களே பாதுகாப்பாக இருங்கள் எனவும் சீன அரசு மக்களிடம் எதையோ மறைக்கிறது என்று வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து கொரனா வைரஸ் பரவி வருவதை ஒப்புக்கொண்ட சீன அரசு லி வென்லியாங்கிடம் மன்னிப்பு கேட்டு கொண்டது.

https://www.polimernews.com/dnews/99410/கொரனா-படையெடுப்புக்கு-சீனஅரசு-தான்-காரணம்-!-அரசின்-சதி- 

 

  • தொடங்கியவர்

கொரோனா வைரஸ் குறித்து முன் கூட்டியே எச்சரித்த மருத்துவரும் வைரசிற்கு பலி

ஜனவரி மாத ஆரம்பத்தில் கொரோனவைரஸ் குறித்து எச்சரிக்க முற்பட்டவேளை சீனாவின் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்ட மருத்துவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

வுகான் மத்திய மருத்துவமனையின் மருத்துவர் லீ வென்லியாங் என்பவரேஇன்று உயிரிழந்துள்ளார்

இதனை உலக சுகாதார ஸ்தாபனம் இன்று அறிவித்துள்ளது.
அவரது பணியை போற்றவேண்டும் என உலக சுகாதாரஸ்தாபம் தெரிவித்துள்ளது.

வுகான் மத்திய மருத்துவமனையின் மருத்துவர் லீ வென்லியாங் என்பவரே கொரேனோ வைரஸ் குறித்து எச்சரிக்க முறபட்டவேளை காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டார்.

கடந்த டிசம்பர் இறுதியில் குறிப்பிட்ட மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தவேளை அவர் சார்ஸ் போன்றதொரு வைரசினை அவர் அவதானித்தார்.

வுகானின் கடல் உணவு சந்தையிலிருந்து பாதிக்கப்பட்ட நிலையில் வந்தவர்கள் மத்தியிலேயே வைத்தியர் புதிய வைரசினை அவதானித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் வுகான் மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கிசிச்சை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிசம்பர் 30 திகதி லீ வென்லியாங் சமூக ஊடக உரையாடலின் போது  இது குறித்து சக மருத்துவர்களிற்கு எச்சரித்துள்ளார்.
doctor.jpg

புதிய நோய் தொற்றுகாணப்படுகின்றது முகக்கவசத்தை அணியவேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால் தான் கண்டுபிடித்தது முற்றிலும் புதிய வைரஸ் என்பதை அவர் உணரவில்லை.

இதற்கு நான்கு நாட்களிற்கு பின்னர் அவரை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்த காவல்துறை பாதுகாப்பு பணியகத்தினர் ஆவணமொன்றில் கைச்சாத்திடுமாறு கேட்டுள்ளனர்.

குறிப்பிட்ட கடிதத்தில் அவர் பொய்யான தகவலை வெளியிட்டதாகவும், சமூக ஒழுங்கை குழப்பியதாகவும் காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாங்கள் உங்களை எச்சரிக்கின்றோம் நீங்கள் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பாட்டால் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் நீதியின் முன் நிறுத்தப்படுவீர்கள் என காவல்துறையினர் அந்த கடிதத்தில் எச்சரித்துள்ளனர்.

வதந்திகளை பரப்பியதற்காக எச்சரிக்கப்பட்ட எட்டு பேரில் வைத்தியரும் ஒருவர்.
ஜனவரி மாதத்தில் மருத்துவர் சமூக ஊடகத்தில் பதிவொன்றை வெளியிட்டு என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன் பின்னர் உள்ளுர் அதிகாரிகள் அவரிடம்; மன்னிப்பு கேட்டுள்ளனர்.

ஜனவரி பத்தாம் திகதி நான் இருமத்தொடங்கினேன்,அதற்கு இரண்டு நாட்களிற்கு பின்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன்,அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என அவர் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

https://www.virakesari.lk/article/75080

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.