Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் நோயாளிகள் மீது பாலியல் துன்புறுத்தல் : மருத்துவருக்கு ஆயுள் தண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Manish-Shah.jpg

பெண் நோயாளிகள் மீது பாலியல் துன்புறுத்தல் : மருத்துவருக்கு ஆயுள் தண்டனை

பெண் நோயாளிகள் மீது 90 பாலியல் தாக்குதல்களை மேற்கொண்ட மருத்துவர் மனீஷ் ஷாவுக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குடும்பக் கட்டுப்பாடு மருத்துவ நிபுணராகப் பணியாற்றிய மனீஷ் ஷா (Manish Shah), லண்டனில் பணிபுரிந்தபோது 23 பெண்கள் மற்றும் 15 வயதுச் சிறுமிகள் மீது தனது தனிப்பட்ட இச்சைக்காக ஆக்கிரமிப்பு உடற்சோதனைகளை மேற்கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது.

ரொம்ஃபேர்டைச் சேர்ந்த மனீஷ் ஷா, மே 2009 மற்றும் ஜூன் 2013 க்கு இடையில் காலத்தில் பெண்கள் மீது தேவையற்ற உடற்சோதனைகளை மேற்கொண்டார்.

நோயாளிகளின் ஆரோக்கியம் குறித்துப் பயமுறுத்துவதற்கு ஏஞ்சலினா ஜோலி (Angelina Jolie) மற்றும் ஜேட் கூடி (Jade Goody) ஆகியோரை அவர் எடுத்துக்காட்டுகளாக கூறியுள்ளார் என்று ஓல்ட் பெய்லி நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் மனீஷ் ஷா தனது அதிகார நிலையைத் துஷ்பிரயோகம் செய்த மோசடியாளர் என்று நீதிபதி ஆன் மொலினியூ (Anne Molyneux) விவரித்துள்ளார்.

நீர் கதைகளை உருவாக்கி பெண் நோயாளிகளைப்  பீதிக்கு உள்ளாக்கியுள்ளீர் என்றும் மனீஷ் ஷாவைப் பார்த்து நீதிபதி தெரிவித்துள்ளார்.

உமது நடத்தை பாலியல் சார்ந்தது மட்டுமல்ல, உமது இச்சையின் விருப்பத்தால் உந்தப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகள் பல சந்தர்ப்பங்களில் பெண்களை அவமானப்படுத்தியுள்ளன என்று நீதிபதி கூறினார்.

மனீஷ் ஷாவால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இளம் பெண்ணொருவர் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில்; மருத்துவரைச் சந்திந்த பின்னர் கவலை, பயம் மற்றும் நடுக்கம் ஏற்பட்டன என்று தெரிவித்தார்.

மேலும் ஆண்களைப் பற்றி தான் வித்தியாசமாக உணர்ந்ததாகவும், அவர்கள் பெண்களை ஒரு பாலியல் பொருளாகப் பார்ப்பதைப் பற்றிக் கவலைப்படுவதாகவும் கூறினார்.

அத்துமீறிய உடற்சோதனைகளை காக்கும் மருந்து என்று கூறிய 50 வயதான மருத்துவர் மனீஷ் ஷா, கடந்த இலையுதிர்காலத்தில் மவ்னி மருத்துவ மையத்தில் (Mawney Medical Centre) பாதிக்கப்பட்ட 6 பேருக்கு எதிரான 25 பாலியல் குற்றங்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

Mawney-Medical-Centre.jpg

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையில், மனீஷ் ஷா 18 பேர் தொடர்பான குற்றங்களுக்குத் தண்டனை பெற்றார். மொத்தம் 23 பெண் நோயாளிகளுடன் தொடர்புடைய 90 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

ஹொலிவூட் நட்சத்திரமான ஏஞ்சலினா ஜோலிக்கு மார்பகப் புற்றுநோய் இருந்ததை பற்றிக் கூறி ஒரு பெண்ணிடம் மார்பகங்களைப் பரிசோதிக்க விரும்புகிறீர்களா என்று மனீஷ் ஷா கேட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பெண்ணிடம் தொலைக்காட்சிப் பிரபலம் ஜேட் கூடியைப் பற்றிக் குறிப்பிட்டு உங்களது நலன்களுக்காக மார்பகங்களைப் பரிசோதிக்க விரும்புகிறீர்களா என்று கேட்டுள்ளார்.

ஷா ஒருபோதும் கையுறைகளை அணியவிரும்புவதில்லை என்றும் ஒரு பெண்ணை முழுமையாக நிர்வாணமாக்கி உடற்சோதனையில் ஈடுபட்டார் என்றும் ஜூரிகள் மன்றில் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் அவரது உடற்சோதனையை துஷ்பிரயோகம் மற்றும் அவமானம் என்று உணர்கிறார்கள். மேலும் அவர்கள் மனீஷ் ஷா மீது வைத்திருந்த நம்பிக்கையும் தகர்க்கப்பட்டுள்ளது என்று கருதுகின்றனர்.

பெண்களை உடற்சோதனை மூலம் துஷ்பிரயோகப்படுத்தியதற்கு மனீஷ் ஷா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக்கொண்டார். எனினும் அவரது மன்னிப்பு போதுமானதாக இருக்கவில்லை.

http://athavannews.com/பெண்-நோயாளிகள்-மீது-பாலி/

############   ############    #############   ##############   #############

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வைத்தியர் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவிலும் இப்படிப்பட்ட டாக்டர்கள் இருப்பதாக நோயாளிகள் கூறக் கேட்டதுண்டு. ஆனால் விசாரணைகள் என்று வந்து எவரும் தண்டிக்கப்பட்டதாக இல்லை.

இப்படியான குற்றச்சாட்டுகளில் அடிக்கடி தெற்காசிய நாட்டைச் சேர்ந்தோர்.. அல்லது பூர்வீகமாகக் கொண்டோர் சிக்குவது குறிப்பிடத்தக்கது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

சொறீலங்காவிலும் இப்படிப்பட்ட டாக்டர்கள் இருப்பதாக நோயாளிகள் கூறக் கேட்டதுண்டு. ஆனால் விசாரணைகள் என்று வந்து எவரும் தண்டிக்கப்பட்டதாக இல்லை.

இப்படியான குற்றச்சாட்டுகளில் அடிக்கடி தெற்காசிய நாட்டைச் சேர்ந்தோர்.. அல்லது பூர்வீகமாகக் கொண்டோர் சிக்குவது குறிப்பிடத்தக்கது. 

இதை எழுத‌க் கூடாது தான் , என்றாலும் எழுதுகிறேன் , வ‌ருத்த‌ம் பார்க்க‌ போன‌ பெண்ண‌ ம‌ருத்துவ‌ம‌னையில் இருந்து கூட்டிட்டு ஓடின‌வ‌ர் டாக்ட‌ர் , ப‌ல‌ போராட்ட‌ங்க‌ளுக்கு ம‌த்தியில் அந்த‌ பிள்ளையை மீட்டாச்சு ச‌கோத‌ரா , இது 2018ம் ஆண்டு ந‌ட‌ந்த‌து , 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, தமிழ் சிறி said:

பெண் நோயாளிகள் மீது பாலியல் துன்புறுத்தல் : மருத்துவருக்கு ஆயுள் தண்டனை

பொம்புளையளின்ரை அந்தரங்க வருத்தங்களுக்கு பொம்புளை டொக்டரிட்டை போறதுதான் நல்லது.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2020 at 4:36 AM, nedukkalapoovan said:

சொறீலங்காவிலும் இப்படிப்பட்ட டாக்டர்கள் இருப்பதாக நோயாளிகள் கூறக் கேட்டதுண்டு. ஆனால் விசாரணைகள் என்று வந்து எவரும் தண்டிக்கப்பட்டதாக இல்லை.

இப்படியான குற்றச்சாட்டுகளில் அடிக்கடி தெற்காசிய நாட்டைச் சேர்ந்தோர்.. அல்லது பூர்வீகமாகக் கொண்டோர் சிக்குவது குறிப்பிடத்தக்கது. 

மற்றவை "வெளுத்ததெல்லாம் பால்" என்ற போர்வைக்குள் அல்லது 
மாயைக்குள் மறைந்து போகின்றது ......
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.