Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகடிவதை: எண்மருக்கு இடைக்காலத் தடை

Featured Replies

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கிளிநொச்சி வளாகத்தில், பகடிவதையில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில், எட்டு மாணவர்களுக்கு, இன்று (10) முதல், பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/வன்னி/பகடிவதை-எண்மருக்கு-இடைக்காலத்-தடை/72-245246

‘சம்பந்தப்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணப் பல்கலைகழகக் கிளிநொச்சி வளாகத்தில், பகடிவதையில் ஈடுபட்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணப் பல்கலைகழகக் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகடிவதை தொடர்பில் தாம் கவனமாகவும் நுணுக்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார்.

தனக்குக் கிடைத்த அறிக்கையின் படி, பல்கலைக்கழக நிர்வாகத்தால் பகடிவதையில் ஈடுபட்டோரின் விவரங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதென்று தெரிவித்த ஆளுநர், இதற்கமைய, பல்கலைக்கழக நிர்வாகத்தினரை தான் சந்திக்க இருப்பதாகவும் கூறினார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சம்பந்தப்பட்டோருக்கு-எதிராக-நடவடிக்கை-எடுக்கப்படும்/71-245224

நல்ல முயற்சி!

  • கருத்துக்கள உறவுகள்

இது பகிடிவதை இல்லை .....
அப்படி என்றாலும் அதில் இருக்கும் "வதை" என்ற வார்த்தையை 
கல்விக்கு என்று போகும் பல்கலைகழக வளாகம் இவளவு காலமும் 
எவ்வாறு பார்த்து வந்தது என்பது அருவெறுப்பானது.

இது ஒரு பாலியல் வன்கொடுமை 
பாலியல் வன்கொடுமையை பலர் உடல்ரீதியானதாகவே பார்த்து வருகிறார்கள் 
வார்த்தைகளாலும் இது நடக்கிறது என்பது எமது மக்களுக்கு புரியவில்லை.
எல்லா வக்கிரர்களும் ஒரே ரகத்தை சார்ந்தவர்கள் இல்லை  

மாணவி மீதான பகிடி வதை! யாழ்.பல்கலை மாணவர்கள் எட்டுப் பேருக்கு விதிக்கப்பட்டது தடை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பகிடிவதையில் ஈடுபட்டகுற்றச்சாட்டில், எட்டு மாணவர்களுக்கு, இன்று (10) முதல், பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாகவும் விசாரணைகளில் தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவும் பல்கலைக்கழக எல்லைக்குள் நுழைவதற்கான (Out of Bounds) இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பகிடிவதை தொடர்பில் சான்றாதாரங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் மேலும் சில மாணவர்களுக்கு உள்நுழைவதற்கான தடை விதிக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே குறித்த எட்டுப்பேருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த உள்நுழைவதற்கான தடை விதிக்கப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணைகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைக்கு உள்ளாகுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் புதுமுக மாணவர்களுக்கு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் பகிடிவதை தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கை வடக்கு மாகாண ஆளுநருக்கு நாளை கிடைக்கப் பெறும் எனவும் அதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆளுநர் முடிவெடுப்பார் என்றும் ஆளுநர் செயலகத் தகவல்கள் தெரிவித்தன

.https://www.ibctamil.com/srilanka/80/136838

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Rajesh said:

இன்று (10) முதல், பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிரந்தரத்தடை விதிக்கப்படவேண்டும். இவர்களால்  பாதிக்கப்பட்ட மாணவரின் வலி இவர்களும் அனுபவிக்க வேண்டும். விரும்பினால் இவர்கள் வீட்டிலிருந்தவாறே கல்வியை தொடர நிர்வாகம் உதவலாம். ஆனால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு அவசியம். அழித்தொழிக்கப்பட வேண்டிய வைரசுகள் இவர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.