Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாய்ந்தமருது நகர சபை விவகாரம் – அமைச்சரவையின் அதிரடி தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Cabinet-Decisions.jpg

சாய்ந்தமருது நகர சபை விவகாரம் – அமைச்சரவையின் அதிரடி தீர்மானம்

சாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்துக்கான வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/சாய்ந்தமருது-நகர-சபை-விவ/

  • கருத்துக்கள உறவுகள்

சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவிப்பு நீக்கப்பட்டது…

February 20, 2020

Sainthmarthu-3.jpg

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து சாய்ந்தமருதிற்கு தனியான நகரசபை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தாார். நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, கடந்த 15 ஆம் திகதி சாய்ந்தமருதினை தனியான நகர சபையாக அறிவித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது
 

http://globaltamilnews.net/2020/137158/

இப்போது கல்முனைக்குடியான் வெடி கொளுத்துறான், சாய்ந்தமருதான் ஓடி ஒளிகிறான்। இது ஒரு நல்ல முடிவு। கல்முனை தமிழ் பிரிவுக்கு முடிவு கண்டபின்னர் இரண்டையும் ஒரே நேரத்தில் வர்த்தமானியில் பிரசுரிக்க கோத்த கடடளையிட்டுள்ளார்।

  • கருத்துக்கள உறவுகள்

சாய்ந்தமருது பிரேச சபை வாபஸ் தொடர்பான செய்தியின் உண்மைத் தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சாய்ந்தமருது பிரதேச சபை அறிவிப்பை அரசாங்கம் வாபஸ்பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கும் செய்தியின் உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

 

அத்துடன் என்மீது அபாண்டங்களையும் பொய் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி சிறையிலடைத்து எம்மை அடக்கலாம் என அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து செயற்பட்டுவருகின்றார். 

ஆனால் அவர் கடந்த காலங்களில் அமைச்சராக இருந்துகொண்டு அரசாங்க பணத்தில் வீடுகளை கட்டி தனது உறவினர்களுக்கு வழங்கியும் இரண்டு கடவுச்சீட்டுக்களை வைத்துக்கொண்டும் துரோக செயலில் ஈடுபட்டுக் கொண்டுதான் எங்கள் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாகவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/76108

6 hours ago, Vankalayan said:

இப்போது கல்முனைக்குடியான் வெடி கொளுத்துறான், சாய்ந்தமருதான் ஓடி ஒளிகிறான்। இது ஒரு நல்ல முடிவு। கல்முனை தமிழ் பிரிவுக்கு முடிவு கண்டபின்னர் இரண்டையும் ஒரே நேரத்தில் வர்த்தமானியில் பிரசுரிக்க கோத்த கடடளையிட்டுள்ளார்।

இரண்டு சிறுபான்மை இனங்களையும் ஒற்றுமையையாக இணைந்து செயல்பட வேண்டுகிறதா பெரும்பான்மை இனம் ? 🙂 

’கல்முனை உள்ளூராட்சி நிர்வாகம்’ : நூல் வெளியீடு

எம்.என்.எம்.அப்ராஸ், அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய “கல்முனை உள்ளூராட்சி நிர்வாகம்” எனும் நூல் வெளியீட்டு விழா, நாளை மறுதினம் (22) பிற்பகல் 4.15 மணியளவில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராசிக் பரீத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கல்முனை மரபுரிமை ஆய்வு வட்டத்தின் ஏற்பாட்டில், முன்னாள் பட்டின சபைத் தலைவர் ஏ.எம். முகைதீன் பாவா முன்னிலையில், மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.

கல்முனையின் 250 வருடகால உள்ளூராட்சி நிர்வாக வரலாறுகள், அவற்றுக்கான சான்றாதாரங்கள், புள்ளிவிவரங்கள், புகைப்படங்களை உள்ளடக்கிய 250 பக்கங்களைக் கொண்ட தொகுப்பாக இந்நூல் வெளியிடப்படுகிறது. இது நூலாசிரியர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ்வின் மூன்றாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/அம்பாறை/கல்முனை-உள்ளூராட்சி-நிர்வாகம்-நூல்-வெளியீடு/74-245834

14 hours ago, ampanai said:

இரண்டு சிறுபான்மை இனங்களையும் ஒற்றுமையையாக இணைந்து செயல்பட வேண்டுகிறதா பெரும்பான்மை இனம் ? 🙂 

என்ன இருந்தாலும் சோனவனை நம்பி காரியத்தில் இறங்கினால் அம்போதான்। அவனுகளுடைய நோக்கமே தங்களுக்கு கிடைக்கவிடடாலும் பரவாயில்லை தமிழனுக்கு கல்முனை வடக்கு பிரதேச சபை கிடைக்கக்கூடாது என்பதுதான் ।

கல்முனைக்குடியான் எழுதிய ஒரு கட்டுரை வாசித்தேன்। அதில் அவர்கள் சாய்ந்தமருதனை எதிர்காலத்தில் தங்களுடன் இணைந்து செயட்படும்படியும் எப்படி என்றாலும் கல்முனை பிரிப்பதட்கு எதிராக தங்களுடன் கரம் கோர்க்கும்படியும் அழைப்பு விடுத்திருக்கிறார்।

அதாவது தமிழனுக்கு கிடைக்கக்கூடாது என்பதுதான் அவர்களது நோக்கம்। சாய்ந்தமருது இப்போது சாய்ந்து விட்ட்து। தமிழர்கள் கல்முனையையும் சாய்க்க போராட வேண்டும்। ஒற்றுமையே பலம்। 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.