Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோவிட்-19 தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236ஆக உயர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

605032_7119088_amubalne_updates-720x450.jpg

கோவிட்-19 தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236ஆக உயர்வு

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 118 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சீனா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸிற்கு புதிதாக 889பேர் பாதிப்படைந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 75,465 பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 411பேர் தொற்றுநோயின் மையப்பகுதியான ஹூபேயிலிருந்து வந்தவர்கள் என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கானோர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென அஞ்சப்படுகின்றது.

http://athavannews.com/கோவிட்-19-தொற்றுக்கு-உயிரி/

ஆதலால் நானே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து இந்த வைரஸை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளேன். 

முதல் கட்டமாக கைகுலுக்குவது, முத்தம் கொடுத்து வரவேற்காமல் இவ்வாறு வரவேற்க வேண்டும்   🙂 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, ampanai said:

ஆதலால் நானே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து இந்த வைரஸை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளேன். 

முதல் கட்டமாக கைகுலுக்குவது, முத்தம் கொடுத்து வரவேற்காமல் இவ்வாறு வரவேற்க வேண்டும்   🙂 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

சும்மா பகிடி விடாதேங்கோப்பா.....கொறினா ஜேர்மனுக்கை வந்துட்டுதாம்

  • கருத்துக்கள உறவுகள்

சுமே வேறு ஒரு திரியில் தென் கொரியாவில் கிறீத்துவ குழுக்கள் த்ட்டமிட்டு கோவிட்19ஐ பரப்புவதாக குறிப்பிட்டிருந்தார். ஆரம்ப்த்தில் நம்புவது கடினமாக இருந்தது. அது தொடர்பான செய்தி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

https://sputniknews.com/asia/202002251078403849-south-korea-testing-200000-members-of-cult-tied-to-majority-of-countrys-covid-19-cases/

4 hours ago, குமாரசாமி said:

சும்மா பகிடி விடாதேங்கோப்பா.....கொறினா ஜேர்மனுக்கை வந்துட்டுதாம்

உண்மை. ஆனால், சிலநேரங்களில் துன்பம் வரும் வேளையில் சிரிப்பும் ஒரு மருந்தாக இருக்கும்.  

கொரோனா வைரஸ்: தென் கொரியாவில் விரைவாகப் பரவுவது ஏன் 

சீனாவை தவிர அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் நாடாக தற்போது தென் கொரியா விளங்குகிறது. ஒரே வாரத்தில் தென் கொரியாவில் 900க்கும் மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் விரைவாக பரவிய இந்த வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தென் கொரியா தயார் நிலையில் இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக, தென் கொரியாவில் மட்டும் இவ்வளவு விரைவாக கொரோனா வைரஸ் பரவியதன் காரணம் என்ன என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது.

கோவிட் - 19 வைரஸ் பாதிப்பு தென்கொரியாவின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இடையேதான் அதிகம் பரவியுள்ளது. எதையும் வெளிப்படுத்தாமல் பிரச்சனைகளை தங்கள் சமூகத்திற்குள்ளேயே ரகசியமாக காக்கும் தன்மை கொண்ட பிரிவினராக இவர்கள் கருதப்படுகிறார்கள். இதனால் வைரஸ் பாதிப்பு இருப்பது வெளியில் தெரிய நாள் ஆனது என சிலர் விமர்சிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/global-51634584

வைரஸ் பாதிப்பு விரைவாக பரவ என்ன காரணம் ?

கிறிஸ்துவ மதத்தினருக்கு சொந்தமான ஷிஞ்சியோன்ஜி தேவாலயத்தில் தான் முதல் முதலில் வைரஸ் பாதிப்பு பரவ துவங்கியது என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த கிறிஸ்துவ குழுவில் உள்ள 61 வயதான மூத்த உறுப்பினர் ஒருவருக்கு முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என தென் கொரியாவின் சுகாதார அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே இந்த நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து, விசாரணையும் நடத்தி வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு இந்த குறிப்பிட்ட தேவாலயம் நடத்திய பல பிரார்த்தனை கூட்டங்களில் கலந்துக்கொண்டுள்ளார் என தெரியவருகிறது.

எனவே அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் உள்ளவர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்திருக்கக்கூடும். மேலும் பரவ வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

 

இந்த வைரஸ் மக்களின் சமூகப் பழக்கவழக்கங்கள் மற்றும் தொடர்புகளை பாதிக்கிறது என்று தொற்று நோய் நிபுணர் மருத்துவர் லியோங் ஹோ நாம் பிபிசியிடம் தெரிவித்தார்.

தேவாலயத்தில் பிரார்த்தனைகளின்போது அழும்போதும், பாடும்போதும் உமிழ்நீர் வெளியாக வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இந்த வைரஸ் தொற்று பரவுகிறது என்றும் மருத்துவர் லியோங் ஹோ நாம் கூறுகிறார்.

எனவே தென் கொரியாவில் இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பிராத்தனை கூட்டங்கள் மற்றும் சேவைகளை தற்போது நிறுத்தியுள்ளனர்.

 

ஷிஞ்சியோன்ஜி தேவாலயம்

1980ல் நிறுவப்பட்ட இந்த ஷிஞ்சியோன்ஜி தேவாலய குழுவில் 2.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். பிரார்த்தனையின்போது உறுப்பினர்கள் அனைவரும் அருகே அருகே மண்டியிட்டு அமரும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். பிராத்தனைக்கு பிறகும் அனைவரும் ஒன்று கூடுகின்றனர்.

மேலும் இந்த மதக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அதை வெளிப்படுத்தாமல் ரகசிய அடையாளமாக வைத்துக்கொள்வார்கள் என்று தென் கொரிய பிபிசி செய்தியாளர் லாரா பிக்கர் கூறுகிறார்.

பிரார்த்தனைகள் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த நிலையிலும், சிலர் தேவாலயத்திற்கு செல்வதாகவும், விதியை மீறி தேவாலயம் செல்பவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சுகாதார துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த குறிப்பிட்ட கிறிஸ்துவ மதத்தினரின் மீது பொது மக்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

645x344-china-coronavirus-death-toll-tops-2444-as-fears-spread-worldwide-1582440964206-720x450.jpg

கொரோனா வைரஸ்: உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,698ஆக உயர்வு

உலகளவில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,698ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,000இற்க்கும் அதிகமாக உள்ளது.

சீனாவை தவிர்த்து தென் கொரியாவில் 890இற்க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர்.

குவைத், பஹ்ரைன், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று (திங்கட்கிழமை) பதிவானது.

குவைத்தில் மூன்று பேரும், ஓமானில் இரண்டு பேரும் பஹ்ரைன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், துருக்கி, பாகிஸ்தான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஈரானுடனான எல்லைகளை மூடிவிட்டன.

ஈரானில் 61பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதோடு, 12பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-உலகளவில்-உய/

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

சும்மா பகிடி விடாதேங்கோப்பா.....கொறினா ஜேர்மனுக்கை வந்துட்டுதாம்

கும்ஸ், ரென்சன் வேண்டாம். உங்களுக்கு வயது 30க்குள்ளே என்பதால் பயப்படத் தேவையில்லை. எதற்கும் இந்த அட்டவணையைப் பார்த்து அவதானமாக நடந்து கொள்ளுங்கள்.

D94-E6437-2-BEC-4-D16-AFF7-9356-FE4-F721

மேற்குலம் கோடை காலத்தை நெருங்கிவருவதால், கோவிட்டின் தாக்கமும் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது. 

ஆனால், சில அமெரிக்க மருந்து நிறுவனங்கள் வேண்டுமென்றே வைரஸ் தடுப்பு மருந்தை வெளியிடவில்லை எனவும் கூறப்படுகின்றது. காரணம் $$$$$$$$$$$$$ 😞 

 

Corona_Virus.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, Kavi arunasalam said:

கும்ஸ், ரென்சன் வேண்டாம். உங்களுக்கு வயது 30க்குள்ளே என்பதால் பயப்படத் தேவையில்லை. எதற்கும் இந்த அட்டவணையைப் பார்த்து அவதானமாக நடந்து கொள்ளுங்கள்.

D94-E6437-2-BEC-4-D16-AFF7-9356-FE4-F721

30க்குள்ளை????  வாசிக்கவே கண் குளிருது. உண்மையாய் 30க்குள்ளை இருந்தால்!!!!!!
இப்ப உள்ள நாகரீக முன்னேற்றத்துக்கு என்ன கலக்கு கலக்கலாம்..🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

f5f70db2bc824d43a3ef392554062b26_18.jpg

கொரோனா தாக்கம் : உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – உலக சுகாதார ஸ்தாபனம்

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் Tedros Adhanom Ghebreyesus இதனைத் தெரிவித்துள்ளார்.

பெருமளவில் கட்டுப்படுத்த முடியாமல் பூதாகரமாக எழும் தொற்று நோய் பரவலை, ‘பாண்டமிக்’ என மருத்துவத்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பினை ‘பாண்டமிக்’ என அறிவிக்கவும் உலக சுகாதார நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் இதுவரையில் இரண்டாயிரத்து 715 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் மாத்திரம் தற்போது, 78 ஆயிரத்து 64 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் சீனாவில் புதிதாக 500 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

27 ஆயிரத்து 323 பேர் குணமடைந்து, மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

http://athavannews.com/கொரோனா-தாக்கம்-உலக-நாடுக/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.