Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா அம்மான் உட்பட எவரும் எம்முடன் இணைந்து கொள்ளலாம் - ஆனந்தசங்கரி

Featured Replies

கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழர்களின் இருப்பை, இழந்தது போக இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்தற்காகவும், அமையப் போகின்ற அரசுடன் சோரம் போகாமல் பேரம் பேசும் சக்தியாக பலமடைவதற்காகவுமே தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.


IMG_1900.JPG


நான்கு கட்சிகள் இணைந்து புதிதாக தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கினர் இது தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று திங்கட்கிழமை (24) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவத்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக எமது கட்சி கிழக்கு மாகாணத்தின் களநிலவரங்ளை நன்கு ஆராய்ந்து எடுத்த முடிவே இது. இதே காலகட்டத்தில் இங்கு உருவான கிழக்கு தமிழர் ஒன்றியமும் அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்காக, கிழக்கு மாகாணத்தில உள்ள அனைத்து தமிழ்க் கட்சிகளையும் அழைத்து பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தது.

அதற்கமைவாக நாமும் எமது ஒத்துழைப்பை நல்க முன்வந்தோம். அதன் அடிப்படையில் - சிரேஷ்ட சட்டத்தரணி ரி. சுpவநாதனை தலைவராக கொண்ட கிழக்கு தமிழர் ஒன்றியம்,. முன்னாள் பிரதி அமைச்சர் நா. கணேசமூர்த்தி தலைவராகக் கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனை தலைவராகக் கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு மற்றும் தமிழர் விடுதைக் கூட்டணி அகிய நான்கு அமைப்புகள் மட்டுமே கலந்து கொண்டு கலந்துரையாடி மேற்படி முன்னணி அமைக்கப்பட்டது.

நிலைமை இவ்வாறு இருக்க முன்னணி சம்மந்தமாக ஆச்சரியப்படத்தக்க தவறான கருத்துக்களை ஒரு சிலர் தெரிவித்ததாக  சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. மேற்படி முன்னணி உருவாக்குதல் சம்மந்தமாக கருணா அம்மானுடன் நாம் எந்தவிதமான கலந்துரையாடல்களையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மேற்குறிப்பிட்ட நான்கு அமைப்புகள் மட்டுமே அதனை உருவாக்கியது என்பதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

எம்முடன் இணைய விரும்புபவர்கள் மேற்குறிப்பிட்ட நான்கு அமைப்புக்களால் உருவாக்கபட்ட தேர்தலுக்கான நடவடிக்கைக் குழுவை முறைப்படி அணுகி அவர்களின் சம்மதத்துடன் கருணா அம்மான் உட்பட எவரும் இணைந்து கொள்ளலாம்.

இந்த முன்னணியை ஆரம்பத்திலேயே அழித்துவிட எண்ணும் சில சக்திகளுக்கு துணை போகாமல் சிந்தித்து செயற்பட்டு முன்னணியின் வளர்ச்சிக்கு சம்மந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/76301

  • தொடங்கியவர்

வரும் வாய்ப்பை நழுவவிடாது ஒன்றிணைந்து சிறந்தமுறையில் பயன்படுத்த வேண்டும் - கருணா

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் காரைதீவு அமைப்பாளர் தி.ஞானேந்திரன் தலைமையில் விபுலாநந்தா கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்கள் முழுமையாக வாக்களித்து சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமலே ஒரு ஜனாதிபதியை உருவாக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் நாங்கள் காப்பாற்றப்பட்டிருந்தாலும் மறுபக்கம் பார்த்தால் அது எங்களுக்கு ஒரு ஆபத்தான விடயமும் கூட. ஏனென்றால் சிறுபான்மையினர் இல்லாமல் ஒரு ஜனாதிபதியை ஏற்படுத்தலாம் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. எது அப்படியிருந்தாலும் வரப்போகின்ற காலம் இந்த அரசாங்கம் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் நீடிக்கக்கூடிய வாய்ப்புகாணப்படுகின்றது.

கடந்த காலத்திலே ஆட்சிசெய்த மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சிறந்த முறையிலே இந்த நாட்டை ஆட்சி செய்யாத காரணத்தினால் நாடு கடுமையான பொருளாதார சிக்கலில் திண்டாடிய நிலையில்தான் புதிய மாற்றம் உருவாகியிருக்கிறது. இந்த அரசுஎவ்வளவு காலம் நீடிக்கின்றதோ அந்தக்காலம் வரை நாங்களும் அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்கள் முன்வந்து இவ்வாறான தெளிவுபடுத்தல்களை செய்து வருகின்றோம். கடந்த காலங்களில் நடைபெற்ற தவறுகள் இனிவரும் காலங்களிலும் நடந்துவிடக் கூடாது என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனால்தான் தேர்தல் விடயத்தில் அனைத்து மக்களையும் ஒன்றிணையும்படி கடந்த ஒரு வருட காலமாக கூறி வருகிறோம். அதை ஏற்று இன்று பல அணிகள் ஒன்றிணைய முன்வந்திருக்கின்றன. அதற்காக ஒரு தேர்தல் கூட்டமைப்பை உருவாக்க முடிவெடுத்துள்ளோம். தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயருடன் பயணிப்பதற்குரிய ஏற்பாடுகள் கிட்டத்தட்ட 90 வீதம் பூர்த்தியாகியுள்ளன. அதன்படி சூரியன் சின்னத்திலே போட்டியிட உயர் மட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் நீண்டகாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் பயணித்து அனைத்தையும் இழந்த நிலையிலே இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வடக்கிலும் கிழக்கிலும் பாரிய பின்னடைவுகளை நாம் சந்தித்திருக்கின்றோம். தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை என்ற கட்டத்தில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அம்பாறை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் யுத்த காலங்களிலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு பல உயிரிழப்புகளையும் அழிவுகளையும் எதிர்நோக்கிய மாவட்டம். அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பாதுகாப்பு என்பது இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

நான் பிரதி அமைச்சராக இருந்தபொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்திகளை செய்திருப்பதுடன் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புகளையும் வழங்கியிருந்தேன். ஆனால் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவ்வுதவிகள் குறைந்தளவிலேதான் கிடைத்திருக்கின்றன. இதனால்தான் எதிர்வரும் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு இங்குள்ள மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/76317

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம்.. வாய்ப்பனை ச்சாரி.. வாய்ப்பை.. நழுவ விட்டால்.. எப்படி... பணக்காரர் ஆவதாம். சிங்களக் குட்டிக்களோடு கொட்டமடிப்பதாம்.

சங்கரி.. கிளிநொச்சி மேஞ்சவர்.. இவர் சிங்களத்திகளை மேஞ்சவர். ஒருவர் கடிதம் எழுதித் துரோகி மற்றவர் களத்துரோகி. கூட்டணி அமோகமாக அமையும். 

ஒரு ஓட்டவிழுந்த கப்பல்.. இன்னொரு மூழ்கிப்போன கப்பலை துணைக்கழைக்குதாம். 

சும்மாவா வேலை வாய்ப்பு வழங்கினவர்!! எல்லோரிடமும் இலட்சக்கணக்கில் வாங்கித்தானே வேலை வழங்கினவர்... என்னிடம் பணம் இல்லை என்றதால் தன்னுடைய மருமகனுக்கு நிலவளவை திணைக்களத்தில் வேலை வாங்கி கொடுத்தவர்தானே!!??

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி ஏன் சங்கரியார் ரொம்ப வெட்கப்படுகிறார்?

கடந்த கால ஆட்சி ராஜபக்க்ஷ குடும்பத்தினரை மின்சாரகதிரையில் இருந்து தாமே காப்பாற்றியதாக கூறுகின்றனர். நீர் முண்டு குடுக்கும் ஆட்சியாளர் உம்மை மின்சாரக் கதிரைக்கு அனுப்பாமல் காத்துக்கொள்ளும் காணுமையோ. 

18 hours ago, ampanai said:

கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழர்களின் இருப்பை, இழந்தது போக இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்தற்காகவும், அமையப் போகின்ற அரசுடன் சோரம் போகாமல் பேரம் பேசும் சக்தியாக பலமடைவதற்காகவுமே தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.


IMG_1900.JPG

 

அதற்கமைவாக நாமும் எமது ஒத்துழைப்பை நல்க முன்வந்தோம். அதன் அடிப்படையில் - சிரேஷ்ட சட்டத்தரணி ரி. சுpவநாதனை தலைவராக கொண்ட கிழக்கு தமிழர் ஒன்றியம்,. முன்னாள் பிரதி அமைச்சர் நா. கணேசமூர்த்தி தலைவராகக் கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனை தலைவராகக் கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு மற்றும் தமிழர் விடுதைக் கூட்டணி அகிய நான்கு அமைப்புகள் மட்டுமே கலந்து கொண்டு கலந்துரையாடி மேற்படி முன்னணி அமைக்கப்பட்டது.

 

கருணாவும் இவரோட சேரவில்லை, பிள்ளையானும் சேரவில்லை.  அப்ப யாரோட இவர் கூட்டு வச்சிருக்கிறார். ஹிஸ்புல்லவோடைய? இவர் சொல்லுறதை பார்த்தால் ஒரு நாலு தனிப்படடவர்களுடன் கூட்டு மாதிரி  இருக்குது . இருந்தாலும் ஐயா தூங்குறதை பார்த்தால் நல்ல பிரயாசப்பட்டிருக்கிறார் போல்தான் தெரியுது .  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

அதுசரி ஏன் சங்கரியார் ரொம்ப வெட்கப்படுகிறார்?

 

43 minutes ago, Vankalayan said:

இருந்தாலும் ஐயா தூங்குறதை பார்த்தால் நல்ல பிரயாசப்பட்டிருக்கிறார் போல்தான் தெரியுது .  

ஐயா வெட்கப்படவுமில்லை, தூங்கவுமில்லை, ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருக்கிறார். பாவம் அவரும் எவ்வளவு காலம்தான் காத்திருப்பார்.... உறுமீனும் வந்தபாடில்லை, அதற்குள் சித்திரகுப்தன் கணக்கெழுதி முடித்துவிடுவான்போல் தெரிகிறதே.... 😮 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.