Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் பொன் அணிகள் போர்

Featured Replies

இவ்விரு கல்லூரிகளுக்குமிடையில் கடந்த 1917 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி போர்க்காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் ஒழுங்காக நடைபெற்று வந்த வேளை கடந்த  2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக 2014 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை போட்டிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டி மாத்திரம் நடைபெற்றது.

இவ்வருடம் 2020 இல் 103 ஆவது வருட இரு நாள் போட்டியும் 28 ஆவது தடவையாக ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 07 திகதி மாரச் மாதம் இடம்பெறவுள்ளது.
87313320_597083507800842_766585975965168

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி

 

அத்துடன் யாழ் மாவட்டத்திலே முதல் முறையாக இருபதுக்கு -20 கிரிக்கெட்போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி மார்ச் மாதம் சென். பற்றிக்ஸ் கல்லாரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சென்.பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் அருட்பணி திருமகன், யாழ்ப்பாணக்  கல்லூரி அதிபர் வணக்கத்திற்குரிய சொலமன் மற்றும் கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்களின் பெரும் முயற்சியினால் மீண்டும் சகல போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் இரு நாள் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 32 தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 32 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன. ஒரு போட்டி இரத்துச் செய்யப்பட்டது. மிகுதிப் போட்டிகளின்  விபரம் கிடைக்கப்பெறவில்லை.ஒரு நாள் போட்டியில் (மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள்) 20 தடவைகள் சென் .பற்றிக்ஸ் கல்லூரியும் 6 தடவைகள் யாழ்ப்பாணக்கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இவ்வருடம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு செல்வன் பிலிப் ஐவன் றொசாந்தனும் யாழ்ப்பாண கல்லூரி அணிக்கு செல்வன் ஆ. சிந்துஜனும் தலைமை தாங்குகின்றனர். ஆறு ஆண்டுகளுக்குப்பின் நடைபெறவுள்ள இரு நாள் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இரு கல்லூரி அணி கிரிக்கெட் வீரர்களும் தத்தமது திறமைகளை வெளிக்கொணர்வார்கள் என்பது நிச்சயம்.

 

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என வர்ணிக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.


87146181_2515260855415606_78294515334932

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி

 

இவ்விரு கல்லூரிகளுக்குமிடையில் கடந்த 1917 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி போர்க்காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் ஒழுங்காக நடைபெற்று வந்த வேளை கடந்த  2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக 2014 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை போட்டிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டி மாத்திரம் நடைபெற்றது.

இவ்வருடம் 2020 இல் 103 ஆவது வருட இரு நாள் போட்டியும் 28 ஆவது தடவையாக ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 07 திகதி மாரச் மாதம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் யாழ் மாவட்டத்திலே முதல் முறையாக இருபதுக்கு -20 கிரிக்கெட்போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி மார்ச்  மாதம் சென். பற்றிக்ஸ் கல்லாரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சென்.பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் அருட்பணி திருமகன், யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் வணக்கத்திற்குரிய சொலமன் மற்றும் கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்களின் பெரும் முயற்சியினால் மீண்டும் சகல போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் இரு நாள் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 32 தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 32 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன. ஒரு போட்டி இரத்துச் செய்யப்பட்டது. மிகுதிப் போட்டிகளின்  விபரம் கிடைக்கப்பெறவில்லை.ஒரு நாள் போட்டியில் (மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள்) 20 தடவைகள் சென் .பற்றிக்ஸ் கல்லூரியும் 6 தடவைகள் யாழ்ப்பாணக்கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இவ்வருடம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு செல்வன் பிலிப் ஐவன் றொசாந்தனும் யாழ்ப்பாண கல்லூரி அணிக்கு செல்வன் ஆ. சிந்துஜனும் தலைமை தாங்குகின்றனர். ஆறு ஆண்டுகளுக்குப்பின் நடைபெறவுள்ள இரு நாள் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இரு கல்லூரி அணி கிரிக்கெட் வீரர்களும் தத்தமது திறமைகளை வெளிக்கொணர்வார்கள் என்பது நிச்சயம்.

https://www.virakesari.lk/article/76343

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சின்னப்ப பெடியளா இருக்கு வட்டுக்கோட்டை யாப்பாணக் கல்லூரி மாணவர்களை பார்க்க

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.....!  🌹

  • தொடங்கியவர்
On ‎2‎/‎24‎/‎2020 at 12:29 PM, ampanai said:

அத்துடன் யாழ் மாவட்டத்திலே முதல் முறையாக இருபதுக்கு -20 கிரிக்கெட்போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி மார்ச் மாதம் சென். பற்றிக்ஸ் கல்லாரி மைதானத்தில் நடைபெறவுள்ளது

இதன் மூலம் துடுப்பெடுத்தாட்டம் மேலும் வளரும்.

  • தொடங்கியவர்

வடக்கின் பொன் அணிகள் போரில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுகளால் அமோக வெற்றி

வடக்கில் பொன் அணிகள் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் , சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 103 ஆவது வருட கிரிக்கெட் போட்டி கடந்த 28,29 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

spc1.jpg

 

 

spc2.jpg

 

spc4.jpg

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 81 ஓட்டங்களை மட்டும் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 223 ஓட்டங்களுக்கு 07 விக்கெட்டுக்களை இழந்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

தனது இரண்டாவது இன்னிங்ஸில் யாழ்ப்பாணக் கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

05 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய சென் பற்றிக்ஸ் கல்லூரி விக்கெட் இழப்பின்றி வெற்றியை பெற்றுக்கொண்டது.

இப் போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் யாழ்ப்பாணக் கல்லூரி வீரர்களான ஏ.கௌசிகன் 22 ஓட்டங்களையும் எம். சிந்துஜன் 15,ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். சென்.பற்றிக்ஸ் கல்லூரி சார்பாக ஈ.டிலக்ஷன் 60 ஓட்டங்களையும் எஸ்.பி. கஸ்ரோ ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் எஸ்..கீர்த்தன் 42 ஓட்டங்களையும் ஏ.பி.டெஸ்வின் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் முதல் இன்னிங்ஸில் யாழ்ப்பாணக் கல்லூரி வீரர் எஸ்.பிரியங்கன் 67 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 05 விக்கெட்டுக்களையும் சென் பற்றிக்ஸ் கல்லூரி சார்பாக சுழல் பந்து வீச்சாளர் டி. டனிஷியஸ் முதல் இன்னிங்ஸில் 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களையும் , இரண்டாவது இன்னிங்ஸில் 43 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 06 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/76798

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.