Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘’யாரை தொடர்புகொள்வது? என்ன செய்வது? - இத்தாலியில் சிக்கித் தவிக்கும் தமிழர்

Featured Replies

இத்தாலியில் சிக்கித் தவிக்கும் தமிழர்

படத்தின் காப்புரிமை Nicolò Campo

கோவையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஸ்ரீநித்தின் ஜெயபால் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக இத்தாலியில் சிக்கியுள்ளார்.

இந்தியாவிற்கு திரும்புவதற்கான உதவிகள் வேண்டி பலமுறை தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்கள் பதிலளிக்காமல் அலட்சியமாக நடந்துகொள்வதாக பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்துள்ளார்.

"நான் சொந்தமாக மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறேன். பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்று வருவேன். பிப்ரவரி 26 ஆம் தேதி கோவையிலிருந்து இத்தாலி நாட்டின் ரோம் நகருக்கு வந்தேன். பயணத்திட்டத்தின்படி மார்ச் 14ஆம் தேதி இந்தியாவிற்கு மீண்டும் திரும்புவதாக இருந்தது. ஆனால், இத்தாலியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு முன்னரே கிளம்பிவிடலாம் என முடிவுசெய்து நேற்று விமானநிலையம் சென்றேன்" என்று ஸ்ரீநித்தின் தெரிவித்தார்.

"கொரோனா பாதிப்பு இல்லை என்ற கோவிட்-19 சான்றிதழ் இருந்தால் மட்டுமே இந்தியாவிற்கு அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், என்னைப்போலவே 10க்கும் மேற்பட்டோர் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் விமான நிலையத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டனர்" என்றார் அவர்.

@DrSJaishankar Dear Hon.Minister, I am from Coimbatore, Tamil Nadu and I came for a business trip to Rome, Italy and been here for last 10 days. I am trying to fly out to India and I am being blocked by Airline authorities here - stating that - Indian government has authorized.

— Srinithin Jayabal (@Srinithin_J) 10 மார்ச், 2020

இந்தியாவிற்கு செல்ல உதவி செய்யக்கோரி இத்தாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை பல முறை தொலைபேசியில் அழைத்தபோதும் அவர்கள் அழைப்புகளை ஏற்கவில்லை என கூறுகிறார் இவர்.

"கொவிட்-19 சான்றிதழ் இருந்தால் மட்டுமே இந்தியாவிற்கு செல்ல முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. ஆனால், கொவிட்-19 சான்றிதழை வழங்க இத்தாலி மருத்துவர்கள் மறுக்கின்றனர். இது குறித்து புகாரளிக்க இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்புகொண்டால் பதிலளிப்பதேயில்லை. கொரோனா தாக்குதலால் இந்திய தூதரக அலுவலகமும் மூடப்பட்டுள்ளது. யாரை தொடர்புகொள்வது, என்ன செய்வது என தெரியாமல் சிக்கித்தவித்து வருகிறேன்" என கூறுகிறார் ஸ்ரீநித்தின்.

இத்தாலியில் சிக்கியுள்ள தன்னை விரைவில் மீட்டு இந்தியாவிற்கு அழைத்து செல்லுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரிடம் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார் இவர்.

இத்தாலியில் சிக்கித் தவிக்கும் தமிழர்படத்தின் காப்புரிமை Anadolu Agency

"நான் இந்தியாவின் குடிமகன். எனக்கு இந்தியாவில் ரேஷன் கார்டு உள்ளது. அரசாங்கத்தின் விதிகளின்படி அனைத்து வரிகளையும் கட்டுகிறேன். முறையான அனுமதிகள் பெற்றுதான் இத்தாலிக்கு வந்துள்ளேன். ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் இங்கு சிக்கியிருக்கும் எனக்கு இந்திய அரசாங்கம் எந்த உதவியும் இதுவரை செய்யவில்லை"

"என்னை எதிர்பார்த்து என் குடும்பத்தினர் கோவையில் காத்திருக்கின்றனர். 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். என்னைப்போலவே 30க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் இங்கு சிக்கித் தவித்து வருகின்றனர். எங்களை விரைவில் இந்தியாவிற்கு அழைத்து செல்லவேண்டும். இந்தியாவில் வைத்து எல்லாவித மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொள்ளட்டும், இல்லையேல் இத்தாலியிலேயே மருத்துவ சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்" என தெரிவித்தார் ஸ்ரீநித்தின்.

மேலும், இத்தாலியில் சிக்கியுள்ளது பற்றி தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறினார் ஸ்ரீநித்தின்.

https://www.bbc.com/tamil/india-51835430

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.