Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் கொரோனா தொடர்பில் மக்கள் பீதியடைய வேண்டாம் -  யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

Featured Replies

இன்றைய தினம் இத்தாலியிலிருந்து வருகை தந்த ஒருவரின் மனைவி தலைச்சுற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வந்திருந்தார்.
FB_IMG_1584019669285.jpg


எனினும் வைத்தியசாலையிலிருந்தவர்கள் கொரோனாவாக இருக்கலாம் என்ற அச்சத்தில் பீதி அடைந்த போதிலும் மருத்துவ பரிசோதனையின் போது அவருக்கு அவ்வாறான எந்த ஒரு சான்றும் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

எனினும் வடக்கில் கொரோனா தொற்றுவதற்குரிய சாத்தியங்கள் மிகக் குறைவு எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை கொரோனா தொற்று உள்ளவர் ஒருவருடன் நெருக்கமாகப் பழகும் ஒருவருக்கே ஒரு தொற்று ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

எனவே வடக்கினை பொறுத்த வரைக்கும் அவ்வாறு இல்லை ஒருவருக்கு  கூட தொற்று ஏற்பட வில்லை எனவே வடக்கு மக்கள் கொரோனா தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை.

தேவையற்ற விதத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யவோ அல்லது பீதியடையவோ தேவையில்லை எனவே இது தொடர்பில் வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் போதியளவு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு யாராவது இனங்காணப்பட்டு அதற்குரிய சிகிச்சை அளிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் மத்திய அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே வடக்கு மக்கள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை எனவும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/77681

  • தொடங்கியவர்
15 minutes ago, ampanai said:

எனவே வடக்கு மக்கள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை எனவும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்கள் யாழ் மக்களுக்கு கிடைத்த ஒரு பெரும் வரம் !

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ampanai said:

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்கள் யாழ் மக்களுக்கு கிடைத்த ஒரு பெரும் வரம் !

அங்கு பணிபுரிவோர் சிலரைச் சந்திக்கும் சந்தற்பம் 2018ல் ஏற்பட்டது. அவர்கள் தெரிவித்ததற்கும், உங்கள் பாராட்டுக்கும் பெரும் மாற்றம் உள்ளது. 

  • தொடங்கியவர்
2 minutes ago, Paanch said:

அங்கு பணிபுரிவோர் சிலரைச் சந்திக்கும் சந்தற்பம் 2018ல் ஏற்பட்டது. அவர்கள் தெரிவித்ததற்கும், உங்கள் பாராட்டுக்கும் பெரும் மாற்றம் உள்ளது. 

எனக்கு அவரை தனிப்பட்ட ரீதியாக தெரியாது. வரும் செய்திகளையும் அவரின் ஆளுமையையும் வைத்தே அவ்வாறு சொன்னேன்.

கனடாவில் கூட,சில வைத்தியசாலை பணிப்பாளர்கள் மக்களுக்கு இந்த இக்கட்டான காலத்தில் செய்திகளை வழங்குவதுடன் தாம்  மக்களுக்கு தேவையான ஆலோசனைகளை முக்கியமாக நம்பிக்கையை வழங்குகின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

அங்கு பணிபுரிவோர் சிலரைச் சந்திக்கும் சந்தற்பம் 2018ல் ஏற்பட்டது. அவர்கள் தெரிவித்ததற்கும், உங்கள் பாராட்டுக்கும் பெரும் மாற்றம் உள்ளது. 

எல்லா இடத்திலும் போட்டியும்,பொறாமையும் இருக்கும் தானே 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ampanai said:

இன்றைய தினம் இத்தாலியிலிருந்து வருகை தந்த ஒருவரின் மனைவி தலைச்சுற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வந்திருந்தார்.
FB_IMG_1584019669285.jpg


எனினும் வைத்தியசாலையிலிருந்தவர்கள் கொரோனாவாக இருக்கலாம் என்ற அச்சத்தில் பீதி அடைந்த போதிலும் மருத்துவ பரிசோதனையின் போது அவருக்கு அவ்வாறான எந்த ஒரு சான்றும் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

எனினும் வடக்கில் கொரோனா தொற்றுவதற்குரிய சாத்தியங்கள் மிகக் குறைவு எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை கொரோனா தொற்று உள்ளவர் ஒருவருடன் நெருக்கமாகப் பழகும் ஒருவருக்கே ஒரு தொற்று ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

எனவே வடக்கினை பொறுத்த வரைக்கும் அவ்வாறு இல்லை ஒருவருக்கு  கூட தொற்று ஏற்பட வில்லை எனவே வடக்கு மக்கள் கொரோனா தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை.

தேவையற்ற விதத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யவோ அல்லது பீதியடையவோ தேவையில்லை எனவே இது தொடர்பில் வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் போதியளவு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு யாராவது இனங்காணப்பட்டு அதற்குரிய சிகிச்சை அளிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் மத்திய அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே வடக்கு மக்கள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை எனவும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/77681

இது பிழையான தகவல் அல்லவா? தொற்று உள்ளவர் தொட்ட கார்ட்போட்டில் 3 நாட்களுக்கு இருக்கும் கொரோனா வைரஸ்.

மேலும் 80% தொற்றுள்ளவர்களுக்கு வெறும் காய்ச்சல் குணமாயே இருக்கும். பெரிய பாதிப்புக்கள் காட்டாது. எனவே வடக்கில் தொற்றாளர் இல்லை என அடித்து கூற முடியாது.

இத்தாலியில் intensive care unit சிகிச்சை தேவைபட்டவர்களால் சிஸ்டமே overwhelmed ஆகியுளது. 5% மக்களுக்கு ICU தேவைபடால் வடக்கில் போதிய ICU படுக்கைகள் இருக்கிறதா?

எனக்கென்னமோ இது கொஞ்சம் அலட்சிய போக்காகவே படுகிறது.  

5 hours ago, goshan_che said:

இது பிழையான தகவல் அல்லவா? தொற்று உள்ளவர் தொட்ட கார்ட்போட்டில் 3 நாட்களுக்கு இருக்கும் கொரோனா வைரஸ்.

மேலும் 80% தொற்றுள்ளவர்களுக்கு வெறும் காய்ச்சல் குணமாயே இருக்கும். பெரிய பாதிப்புக்கள் காட்டாது. எனவே வடக்கில் தொற்றாளர் இல்லை என அடித்து கூற முடியாது.

இத்தாலியில் intensive care unit சிகிச்சை தேவைபட்டவர்களால் சிஸ்டமே overwhelmed ஆகியுளது. 5% மக்களுக்கு ICU தேவைபடால் வடக்கில் போதிய ICU படுக்கைகள் இருக்கிறதா?

எனக்கென்னமோ இது கொஞ்சம் அலட்சிய போக்காகவே படுகிறது.  

உண்மைதான் “கொரோனாவா கொக்கா வந்து பார் யாழ்பாணத்திற்கு”  என்று யாழ்பாணத்தில்  இருந்து முகநூல் பதிவு ஒன்று பார்ததேன். 

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-Doctor-Sathyamoorthy.jpg

வடக்கில் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம்!

வடக்கில் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) தெரிவிக்கையில், “இத்தாலியிலிருந்து இன்று வருகைதந்த ஒருவரின் மனைவி தலைச்சுற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். எனினும் வைத்தியசாலையில் இருந்தவர்கள் கொரோனா தாக்கமாக இருக்கலாம் என்ற அச்சத்தில் பீதியடைந்த போதிலும் மருத்துவ பரிசோதனையின் போது அவருக்கு அவ்வாறான எந்த ஒரு சான்றும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்பின்னர் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

எனினும் வடக்கில் கொரோனா தொற்றுவதற்குரிய சாத்தியங்கள் மிகக்குறைவு. எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை. கொரோனா தொற்று உள்ளவர் ஒருவருடன் நெருக்கமாக பழகும் ஒருவருக்கே இவ்வாறு தொற்று ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

எனவே வடக்கினைப் பொறுத்த வரைக்கும் அவ்வாறு இல்லை. ஒருவருக்குக் கூட தொற்று ஏற்படவில்லை. எனவே வடக்கு மக்கள் கொரோனா தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை. தேவையற்ற விதத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யவோ அல்லது பீதியடையவோ தேவையில்லை.

எனவே இது தொடர்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் போதியளவு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு யாராவது இனங்காணப்பட்டால் அதற்குரிய சிகிச்சை அளிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் மத்திய அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/வடக்கில்-கொரோனா-வைரஸ்-தொ/

13 hours ago, ரதி said:

எல்லா இடத்திலும் போட்டியும்,பொறாமையும் இருக்கும் தானே 

 

உண்மை। சிலருக்கு அதிகாரிகள் நேர்மையாக , கண்டிப்பாக இருப்பது பிடிக்காது। இதனால் பிழையான தகவல்களை மக்களுக்கு இவர்கள் வழங்குதட்கு சந்தர்ப்பம் உண்டு। எல்லாரயும் சன்தோஷப்படுத்த முயட்சிதால் நிர்வாகத்தை கொண்டு செல்ல முடியாது।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.