Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டிலிருந்து பணி புரியும் வாரம்” - டுவிட்டரில் ஜனாதிபதி தெரிவிப்பு

Featured Replies

நாளை 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணிபுரியும் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மூன்று மொழிகளிலும் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 20, நாளை முதல் 27 வரையான காலப்பகுதி அரச, தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

நாளை 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை - அரச மற்றும் தனியார் துறையினருக்குப் பொது விடுமுறை. வீட்டிலிருந்து பணி புரியும் வாரம்” என இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய்க்கிருமியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அறிவித்தலை அனைவரும் பின்பற்றவும்! என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/78223


கணணி பயன்படுத்த அவசியமற்ற தொழில்களுக்குதான் இது சாத்தியமாகும்.

கணணி பயன்படுத்த வேண்டிய தொழில்கள் எனில் இலங்கையில் கொழும்பில் கூட இது எந்தளவுக்கு சாத்தியம் எனத் தெரியவில்லை. செல்லிடத் தொலைபேசிகளுக்கு உரிய இணைய வசதி தாராளமாகவும் மிகவும் குறைந்த விலையிலும் அங்கு இருப்பினும் வீடுகளுக்கு வழங்கப்படும் கட்டற்ற இணைய வசதி என்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. விலையும் அதிகம்.

விவசாயம், மீன் பிடி, சிறு வணிகம், சிறு உற்பத்திகள் போன்றவற்றில் தங்கியிருக்கும் வடக்கும் கிழக்கும் இதனால் மீண்டும் கடும் நெருக்குதல்களுக்கு உள்ளாகும்.

ஏதோ மேலை நாடுகள் செய்யீனம் என்டு இவையளும் கனவுலகத்துல மிதந்து "Working at Home" என்டு முடிவு.

சொறிலங்கால ஒரு 5% ஆன வேலைகள் கூட இந்த முறைல செய்யமுடியா என்டு தான் தெரியுது.

அதுக்குரிய உட்கட்டமைப்புக்கள் சீரான நிர்வாக கட்டமைப்புக்கள் சொறிலங்கால இல்லை. 

மென்பொருள் வேலைகள் சாத்தியமாகும்.

  • தொடங்கியவர்

சனாதிபதியின் குறுஞசெய்தியினை நெறியாள்கை செய்ப்பவருக்கும் வேலை  வேண்டுமே 🙂 

  • தொடங்கியவர்

20 முதல் 27 வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக பிரகடனப்படுத்தியதற்கு காரணம் இது தான் !

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அது ஒரு தொற்று நோய் நிலைமையாக மாறுவதைத் தவிர்ப்பதற்காக செயற்படுவது அனைத்து அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களினதும் பொதுமக்களினதும் பொறுப்பாகும்.

அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு மார்ச் 20, நாளை முதல் 27 வரையான காலப்பகுதி அரச, தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதி அரச விடுமுறை நாட்களாக கருதப்பட மாட்டாது. 2020.03.21 மற்றும் 22ஆம் திகதி மட்டும் சாதாரண அரச விடுமுறை நாட்களாக கருதப்படும்.

பொதுமக்கள் சேவையினை தொடர்ச்சியாக பேணுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனினும் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கையாக அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சட்டவாக்க நிறுவனங்கள் உள்ளார்ந்த முறைமையொன்றினை பின்பற்றி மார்ச் 20 முதல் 27 வரை தமது அலுவலக பணிகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்காலத்தில் தெரிவு செய்யப்பட்ட சில அரச சேவைகளை தொலைமுறைமையின் கீழ் செயற்படுத்த இந்த அனுபவம் அடிப்படையாகக் கொள்ளப்படும்.

மக்கள் வாழ்க்கையை வழமையான முறையில் பேணுவதற்கு தேவையான சுகாதார, உள்ளூராட்சி, போக்குவரத்து, வங்கி, உணவு, நீர், மின்சாரம் ஆகிய வழங்கள் சேவைகளும் உர விநியோகம், நெல் கொள்வனவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட செயலாளர் அலுவலகங்கள், பிரதேச செயலாளர் அலுவலகங்களின் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். தொலைமுறைமையொன்றை பயன்படுத்தும்போது குறித்த நிறுவனத் தலைவர்கள் முடியுமானளவு தமது பணிக்குழாமை அலுவலகத்திற்கு வரவழைப்பதை முடியமானளவு மட்டுப்படுத்த வேண்டும்.

அதற்காக மின்னஞ்சல், (E-mail) குறுஞ்செய்தி, (SMS) தொலைபேசி போன்ற தொழிநுட்ப முறைமைகள் போன்ற மாற்று நடைமுறைகளை பயன்படுத்த முடியும்.பொதுமக்கள் அலுவலகங்களில் ஒன்றுகூடுவதை தவிர்த்து, பொதுமக்கள் சேவையை உரிய முறையில் தொடர்ச்சியாக முன்னெடுத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்த வேண்டும்.

இதற்காக தனிப்பட்ட தொலைபேசிகளை பயன்படுத்தும்போது மேலதிக செலவுகள் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கம் தேவையான நிவாரணங்களை வழங்கும். இத்தகைய சந்தர்ப்பங்களின்போது அரசாங்கத்தின் அனைத்து அதிகாரிகளும் தொடர்ச்சியாக மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு உரிய முறைமையை பின்பற்றுவார்களென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்று நோயாக பரவுவதை தவிர்ப்பதே முக்கிய நோக்கமாகும். எனவே பல்வேறு நிறுவனங்களினூடாக வழங்கபடும் சேவைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதென்பதால் தமது பணிக்குழாமினரை அறிவூட்டி, பணிக்குழாமினரை மட்டுப்படுத்துவதற்காக தமது நிறுவனங்களில் எழுத்து மூலமான முறைமையொன்றினை ஏற்படுத்திக்கொள்ளல் நிறுவனத் தலைவர்களின் பொறுப்பாகும்.

தனியார் துறைகளும் மேற்படி முறைமைகளுக்கேற்ப தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அனைத்து வர்த்தக சபைகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/78255

1 hour ago, ampanai said:

இக்காலப்பகுதி அரச விடுமுறை நாட்களாக கருதப்பட மாட்டாது. 2020.03.21 மற்றும் 22ஆம் திகதி மட்டும் சாதாரண அரச விடுமுறை நாட்களாக கருதப்படும்.

எப்படித்தான் சடைந்தாலும் இவை விடுமுறையாகவே இருக்கப் போகிறது.

இணையவழி சேவைகளில், தகவல் தொழில்நுட்ப  சேவைகளில் மிகவும் பின்தங்கிய நாடுகளில் இலங்கையும் ஒன்று.

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’புதிய தலைமுறை சரியான திட்டமிடுதலுடன் சரியான நேரத்தில் வேலைகளை செய்து முடிப்பது உலகை அச்சுறுத்தும் கொரோனா வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள் செய்ய வேண்டியவை..! இரவு முழுவதும் வேலை பார்த்துவிட்டு, காலையில் அதிக நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும் வீட்டில் இருப்பதால் கண்ட நேரங்களிலும் நொறுக்குத் தீணிகளை அதிகளவு சாப்பிடாதீர்கள் ஆரோக்கியமான உணவுகள், ஊட்டச்சத்து உணவுகளை உரிய நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது வீட்டில்தானே இருக்கிறோம் என அலட்சியம் இல்லாமல், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் ஜிம் மூடப்பட்டுள்ளதால் உடற்பயிற்சி மேற்கொள்வதை வீட்டிலிருந்தே தொடரலாம் எல்லாற்றையும் விட வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம் 19/03/2020 www.puthiyathalaimurai.com’ எனச்சொல்லும் உரை

  • கருத்துக்கள உறவுகள்

023017content_93018391-2508-4fdb-bb2b-c4

☺️..😊

  • தொடங்கியவர்

திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என்ற ஒவ்வொரு வேலை நாளும் சனி.ஞாயிறு  மாதிரியே இருக்கும்  🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.