Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவசரகால நிலையில் சீனாவிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்!

Featured Replies

சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக பெறுகின்றது இலங்கை அரசாங்கம்.

90344004_226309751757906_794393307501926


உலகளாவிய அளவில் பரவிவரும் கொரோனா தொற்றுநோய் இலங்கையையும் பாதித்துள்ள நிலையில் சீன அரசாங்கதின் ஆதரவுடன் சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு உதவும் வகையில் இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகைக் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளது.

நாட்டின் அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு இந்த சலுகைக் கடன்களை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ள பின்னணியில் அதற்கான பத்திரங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

அத்துடன் அரைவாசிக்கும் குறைவான சர்வதேச பங்கு சந்தை வட்டி வீதத்தில் நீண்டகால கடன் திட்டமாக இந்த தொகை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசாங்கம் சீனாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் இந்த கடன் தொகை அவசரமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்க விடயமாகும்.

https://www.virakesari.lk/article/78309

  • தொடங்கியவர்
8 minutes ago, ampanai said:

அத்துடன் அரைவாசிக்கும் குறைவான சர்வதேச பங்கு சந்தை வட்டி வீதத்தில் நீண்டகால கடன் திட்டமாக இந்த தொகை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசாங்கம் சீனாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் இந்த கடன் தொகை அவசரமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்க விடயமாகும்.

சாண் என்ன முழம் என்ன 🙂 

அடுத்த பத்து தலைமுறை சீனாவிற்கு உழைக்க வேண்டியதுதான் 😞 

8 hours ago, ampanai said:

 

ஒவொரு முறையும் அவசர கால நிலைமையை? உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைத்தும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை। இந்த சேமிப்பை கொரோன தொற்று அவசர தேவைகளுக்கு பயன்படுத்த போவதாக கூறினார்கள்। இது எந்த அவசர நிலைமையோ தெரியவில்லை।

உலகில், நாட்டின் குழப்ப நிலைகளை வைத்து பிச்சையெடுக்கவும், கொள்ளை இலாபமடிக்கவும் தெரிந்த ஒரே அரசு சிங்கள-பௌத்த போர்க்குற்றவாளிகளின் அரசாகத்தான் இருக்க முடியும்.

  • தொடங்கியவர்

தேர்தலில் வெல்லவும், அதுவும் 3/2 உடன் வெல்லவும் மகிந்த அண்ட் கோ விரும்புகின்றது. அதற்கு மக்களுக்கு மானியங்களை வழங்கவேண்டும்  ஆசைகளை உருவாக்கவேண்டும். 

சீனாவிற்கு இலங்கையில் காலை மேலும் அகலமாக ஆழமாக பதிக்கவேண்டும். 

இரண்டுபேரும் இலங்கை மக்களை ஏமாற்றவும் உறிஞ்சவும் தயாராகி பல வருடங்கள் ஆகிவிட்டன. 

19 hours ago, ampanai said:

சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக பெறுகின்றது இலங்கை அரசாங்கம்.

90344004_226309751757906_794393307501926

https://www.virakesari.lk/article/78309

பின்னுக்கு சுவர்ல மாட்டியிருக்கிற படம் ஆருக்கோ ஏதோ செய்தி சொல்லுதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Rajesh said:

பின்னுக்கு சுவர்ல மாட்டியிருக்கிற படம் ஆருக்கோ ஏதோ செய்தி சொல்லுதோ?

என்ன படம் அது?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

என்ன படம் அது?

துட்டகைமுனுவும் எல்லாளனும் போர் செய்த படம்போல் தெரிகிறது. வஞ்சகமாக வெற்றிகொள்வதும் அதனைப் போற்றித் துதிப்பதும் சிங்களத்தின் வரலாறு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/20/2020 at 8:22 PM, ampanai said:

உலகளாவிய அளவில் பரவிவரும் கொரோனா தொற்றுநோய் இலங்கையையும் பாதித்துள்ள நிலையில் சீன அரசாங்கதின் ஆதரவுடன் சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு உதவும் வகையில் இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகைக் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளது.

நான் சொல்லல.......ஏதாவது அழிவுகள் வந்தால் சிறிலங்காவுக்கு வருமானம் வருமெண்டு........

 

  • தொடங்கியவர்

சலுகை கடன்; வட்டி குறைவு....நாடு ஈடு வைப்பு!

இந்த ஊரடங்கின் காரணமாக சனத்தொகை அதிகரித்து, அடுத்த தலைமுறை உழைத்து வட்டியும் முதலுமாயும் கட்டல் வேண்டும். 

ஆனால், மகிந்த அண்ட் கோ வீட்டில் .... பண மழை தான். ( 'கொமிசன் ') 

Edited by ampanai

6 hours ago, குமாரசாமி said:

என்ன படம் அது?

போர்குற்றவாளி சொறிலங்கா ஜனாதிபதியானதும் ஹிந்தியாவுக்கு அழைக்கப்பட்ட போது மோடி வரவேற்பறையில் பெரிசா ஒரு படம் மாட்டி வைச்சிருந்தாராம். அது அனுமான் சொறிலங்காக்கு தீ வைக்கிறமாதிரி படமாம். அதை போர்குற்றவாளிக்கு சுட்டிக்காட்டி விளக்கம் வேற சொன்னாராம். சொறிலங்கால அநியாயம் நடந்தா ஹிந்தியா முந்தியும் நடவடிக்கை எடுத்திருக்கு என்டு. (அவர் சொன்ன அநியாயம் சீனாவுக்கு சார்பா போனா என்டுதான் இருக்கும்). போர்குற்றவாளி முகம் வெளிறிப் போச்சாம். இப்பிடி ஹிந்திய ஊதுகுழல் ஊடகமொன்றில ஒரு செய்தி இருந்திச்சு.

அதுக்கு பதிலாடி குடுக்கிற மாதிரித் தான் சீன உதவி வழங்கும் நிகழ்வில துட்டகைமுனுவும் எல்லாளனும் போர் செய்த படம் திட்டமிட்டு மாட்டப்பட்டது போல தெரியுது. ஹிந்தியனுனுக்கு சொறிலங்கன் அப்பப்ப டொச் வைக்கிறதும் ஹிந்தியன் அடிபட்ட நாய் போல காலை தூக்கிக்கொண்டு குலைக்கிறதும் வழமையா நடக்கிற ஒன்டு தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.