Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு உலக வங்கி 128 மில்லியன் டொலர்  நிதியுதவி

Featured Replies

இலங்கைக்கு உலக வங்கி 128 மில்லியன் டொலர்  நிதியுதவி

கொவிட் 19 நோய் தொற்றை எதிர்த்துப் போராட இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு உலக வங்கி முன் வந்துள்ளது.

இதன்மூலம், இலங்கை மக்களுக்கு பயனளிக்கும் மற்றும் வைரஸ் பரவுவதை நிறுத்துவதற்கு அல்லது குறைக்க முன்னுரிமை அளிக்கும், நோய் தொற்று எண்ணிக்கையை குறைக்கும் மற்றும் சமூகங்களில் பரவலை தடுக்க உதவும்.

மேலும், ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளின் திறனை வலுப்படுத்தல், நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல், மற்றும் கை கழுவுதல்,சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளியை பேணல் (Social Distance) பற்றி பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றுக்கும் உதவும்" என்று உலக வங்கி கூறியுள்ளது.

இந்நிலையில், உலக வங்கி இந்தியாவுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள், பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள், ஆப்கானிஸ்தானுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள், மாலதீவுக்கு 7.3 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் நிதியுதவியாக வழங்கவுள்ளது.

கொவிட்-19 தாக்கத்தின் தீவிரத்தைக் குறைக்க அடுத்த 15 மாதங்களில் 160 பில்லியன் டொலர்கள் உதவித்தொகை அறிவிக்கவுள்ளது. உலகின் ஏழை மக்கள் சுற்றுச்சூழல் ஆகியவைதான் பிரதான கவனம். மேலும் விரைவில் இதிலிருந்து மீள்வது பொருளாதார சரிவையும் தடுக்குமென உலகவங்கி தெரிவித்துள்ளது.
 

இலங்கைக்கான நிதியதவி தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மற்றும் நோபாள், மாலைதீவிற்கான உலக வங்கியின் பணிப்பாளர், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்க்கான அவசர நிலைமைகளின் போது நாட்டை தயார்படுத்தவும் உலக வங்கியானது, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும்.</p>
தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தவும் மக்களைப் பாதுகாக்கவும் இலங்கை ஏற்கெனவே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கைக்கான எமது ஆதரவு, பாதிப்புகளை குறித்து எதிர்கால அபாயத்திலிருந்து பாதுகாக்க உதவும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/79194

  • தொடங்கியவர்

’மத்திய வங்கியால் மக்களுக்கு நிவாரணம்’

கொரோனா வைரஸால் நாடு எதிர்கொண்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பொருளாதாரச் சிக்கல்களைக் குறைப்பதற்காக, மத்திய வங்கியினால், பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்று, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டீ. லக்‌ஷ்மன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல், இந்நாட்டில் அதிகரித்துவரும் நிலையில், சாதாரண மக்கள் இயல்பு வாழ்க்கையை சுமூகமாக நடத்திச் செல்ல முடியாத சூழல் எற்பட்டுள்ளது என்றும் இதனால், பொருளாதாரம், வங்கித்துறை, வர்த்தகத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் எவ்வாறு செயற்படுகின்றன என்றும், அவை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், ஆளுநரால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மத்திய-வங்கியால்-மக்களுக்கு-நிவாரணம்/175-247910

  • கருத்துக்கள உறவுகள்

உலகவங்கி எல்லா நாடுகளுக்கும் மில்லியன் பில்லியன் என்று தன்னிச்சயாய் அள்ளிக் குடுக்குது சரி நல்ல விடயம்....ஆனால் இந்த உலக வங்கிக்கு யார் இவ்வளவு பணம் கொடுக்கிறார்கள்....ஏதாவது மிசின் வச்சு நோட்டு கீட்டு அடிக்குதா ......தெரியவில்லை, அதுதான் ஒரு சின்ன சந்தேகம்.....!  🤔

  • தொடங்கியவர்

பணக்கார நாடுகளும் உலக பங்கு சந்தைகள், திறைசேரிகள் (capital markets) ஊடாகவும் திரட்டப்படும் பணம் ..அங்கத்துவ நாடுகளுக்கு, நெருக்கடி காலத்தில்  கொடுத்து உதவப்படும்.

இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின்னர் உருவாக்கப்பட்டது.   

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை எத்தனை வீதம் ராஜபக்ச குடும்பத்தின் பொக்கற்றுக்குள்ளை போகுதோ தெரியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, வாதவூரான் said:

இதிலை எத்தனை வீதம் ராஜபக்ச குடும்பத்தின் பொக்கற்றுக்குள்ளை போகுதோ தெரியாது

ஏற்கனவே வெளிநாட்டு நிதிகளில் வாழும் நாடு.
அதில் சுனாமி மூலம் பெரும் வருவாயை பெற்றது.
அதற்கு பின் 2009 இன அழிப்பின் உலக நாடுகள் கொடுத்த வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு கொடுத்த வருவாய் எண்ணிலடங்காது.
இப்போது கொரோனா நிதியுதவி மற்றும் கடன் தள்ளுபடிகள்.

அழிவுகள் மூலம் வரும் நிதிகளை வைத்து வயிறு வளர்க்கும் நாடு சிறிலங்கா.

14 hours ago, வாதவூரான் said:

இதிலை எத்தனை வீதம் ராஜபக்ச குடும்பத்தின் பொக்கற்றுக்குள்ளை போகுதோ தெரியாது

உதை சுருட்ட தான் ராஜபக்ச கும்பல் ஒரு பெரும் கோஷ்டியை நியமிச்சு இருக்கு!
வழமை போல வடபகுதிக்கு உதவி என்ட பேர்ல தான் கொள்ளைக் கோஷ்டி பிளான் போட்டிருக்கு.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.