Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவி!

 

 

 by : Benitlas

nnnn-20.jpg

கொரோனாவிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கியுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் நேற்று(புதன்கிழமை) பசில் ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போதே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் 22 மில்லியன் யூரோக்களை வழங்குவது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து, இங்கு தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகளை மீளவும் பாதுகாப்பாக அவர்களது நாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சுகாதார, பொருளாதாரத் துறைகள் சார்ந்து எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுதல் என்பன தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இலங்கைக்கு-ஐரோப்பிய-ஒன்ற/

15 hours ago, nunavilan said:

கொரோனாவிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கியுள்ளது.

இந்த உதவி முறையாக கண்காணிக்கப்படவில்லை எனின் கணிசமான நிதியை ஆட்சியிலுள்ள போர்க்குற்றவாளிகள் தான் கொள்ளையடிப்பார்கள்.

சகலருக்கும் சமத்துவமான முறையில் இந்த நிதி உதவிகள் கிடைக்கிறதை எப்பிடி உறுதி செய்யப்போறாங்கள்?
கூத்தமைப்புகாரர் இதை பற்றி கவலைப்பட மாட்டினம்.
வேறு ஆராவது ஐரோப்பிய யூனியனிடம் இவற்றை சொல்ல வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2020 at 18:41, போல் said:

இந்த உதவி முறையாக கண்காணிக்கப்படவில்லை எனின் கணிசமான நிதியை ஆட்சியிலுள்ள போர்க்குற்றவாளிகள் தான் கொள்ளையடிப்பார்கள்.

 

On 10/4/2020 at 05:55, Rajesh said:

சகலருக்கும் சமத்துவமான முறையில் இந்த நிதி உதவிகள் கிடைக்கிறதை எப்பிடி உறுதி செய்யப்போறாங்கள்?
கூத்தமைப்புகாரர் இதை பற்றி கவலைப்பட மாட்டினம்.
வேறு ஆராவது ஐரோப்பிய யூனியனிடம் இவற்றை சொல்ல வேணும்.

இந்த நிதிக்கான ஒப்பந்தம் எங்காவது கிடைக்குமா? ஐரோப்பிய யூனியனில் தயாரிக்கப்படும் கொரோனாவுக்கு எதிரான வக்சீனை ஏற்றுக்கொள்ளும் பரிட்சார்த்த பிரதேசங்களுக்கே இந்த நிதியில் முதலிடம் வழங்கப்படும் என்ற நிபந்தனை இருந்தால், தமிழர் பகுதிகள் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு பணத்தை பெறுவது சரியானதா?

அல்லது நிபந்தனையை அகற்றிவிட்டு பணத்தை தா என்று போராட்டம் செய்ய வேண்டுமா? பணத்தை மற்ற பிரதேசங்கள் பயன்படுத்தி பணம் முடியும்வரை போராட்டம் தொடரக்கூடும். போராட்டத்துக்கான செலவுகளுக்கு யார் பணம் தருவர்?

38 minutes ago, கற்பகதரு said:

இந்த நிதிக்கான ஒப்பந்தம் எங்காவது கிடைக்குமா? ஐரோப்பிய யூனியனில் தயாரிக்கப்படும் கொரோனாவுக்கு எதிரான வக்சீனை ஏற்றுக்கொள்ளும் பரிட்சார்த்த பிரதேசங்களுக்கே இந்த நிதியில் முதலிடம் வழங்கப்படும் என்ற நிபந்தனை இருந்தால், தமிழர் பகுதிகள் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு பணத்தை பெறுவது சரியானதா?

அல்லது நிபந்தனையை அகற்றிவிட்டு பணத்தை தா என்று போராட்டம் செய்ய வேண்டுமா? பணத்தை மற்ற பிரதேசங்கள் பயன்படுத்தி பணம் முடியும்வரை போராட்டம் தொடரக்கூடும். போராட்டத்துக்கான செலவுகளுக்கு யார் பணம் தருவர்?

வரலாற்று நிஜங்களை அறியாத பேதமையான கற்பனையில் காலத்தைக் கடத்தும் மந்த மனதில் இதுபோன்ற நையாடிக் கேள்விகள் மட்டுமே உருப்பெறும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

வரலாற்று நிஜங்களை அறியாத பேதமையான கற்பனையில் காலத்தைக் கடத்தும் மந்த மனதில் இதுபோன்ற நையாடிக் கேள்விகள் மட்டுமே உருப்பெறும்.

வரலாற்று நிஜங்களை அறிந்த அறிவாளியான உங்கள் ஞானத்தின்படி ஐரோப்பிய யூனியன் இலவசமாக பல மில்லியன்களை இலங்கை மக்களுக்கு அள்ளிக்கொடுப்பது மட்டுமன்றி, இலங்கையின் ஆட்சியாளரான கோத்தபாயவையும் கண்காணிக்கும் சக்தியையும் கொண்டிருக்கிறது என்கிறீர்கள்!! 😎

இப்படியான அறிவாளிகளால் ஈழத்தமிழ் மக்கள் வழிநடத்தப்பட்டால் இலங்கையில் ஒரு மொழி, ஒரு இனம் என்ற காலம் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம். ஒரு வேளை அதற்காக களமிறக்கப்பட்டவர்களுள் நீங்களும் ஒருவராகவும் இருக்கலாம், யார் கண்டது?🤑

 

 

13 hours ago, கற்பகதரு said:

ஒரு வேளை அதற்காக களமிறக்கப்பட்டவர்களுள் நீங்களும் ஒருவராகவும் இருக்கலாம், யார் கண்டது?

உங்களைப் போலவே சுயசிந்தனையின்றி மற்றவர்களும் எடுபிடிகளாக நயவஞ்சக கருத்துக்களை விதைக்க களமிறக்கப்பட்டவர்கள் என்று நினைக்கும் கேவலமான புத்தியை உங்களிடம் மிகமிக நீண்ட காலமாகவே வெளிப்பட்டு வருகிறது. பெயரை மாற்றி உருவை மாற்றினாலும் பழக்கதோசம் மாறாது என்பது தமிழரின் நன்மைகளுக்கு சுயமாக உழைக்கும் ஈழத் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.