Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்திற்கு ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுத்து நிறுத்திய வட மாகாண சுகாதாரப் பிரிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த நிமிடமே வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறந்த சுகாதார கட்டமைப்பைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை பேரழிவில் இருந்து காப்பாற்றியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து சுவிஸ் போதகருடன் பழகியவர்களை விரைவாகக் கண்டுபிடித்தன் காரணமாகவும், அவர்களை தனிமைப்படுத்தியும் ஊரடங்கு உத்தரவை நீடித்ததுமே இன்று பாரிய சேதத்தைத் தடுக்க கூடியதாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் 15இற்கு உட்பட்டவர்களுடன் யாழ்ப்பாணத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

உண்மையில் நாம் அனைவரும் எமது சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்தோம் என பெருமைகொள்ளக் கூடிய நிலையில் யாழ்ப்பாணத்தை கொரோனா தொற்றில் இருந்து கட்டுப்படுத்தி வைத்துள்ளோம்.

ஆயினும், தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும். அவர்களுக்கும் கொரோனா நோய் இருப்பது கண்டுபிடிக்க பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். மேலும் மதகுருவுடன் நெருங்கிப் பழகிய அனைவருக்கும் மீள் பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பாடசாலைகள், பல்கலைக்கழகம் மீள் ஆரம்பிக்கும் திகதியையும் மீளாய்வு செய்தல் வேண்டும். 12 நாட்களின் பின்னர் யாழில் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இதற்குக் காரணம் நாங்கள் போதியளவிலான பரிசோதனைகளை செய்யாமலும், பரிசோதனை செய்து தொற்றில்லாதவர்களை மீள பரிசோதிக்காமையுமே காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் கூறியபடி மூன்று தடவைகளாவது பரிசோதனை செய்ய வேண்டும். முதல் தொடர்புடையவர்களை மட்டுமல்ல இரண்டாம், மூன்றாம் தொடர்புடையவர்களையும் பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். யாழ்ப்பாணத்தில், ஊரடங்கு தளர்த்துவது சம்பந்தமாக மாகாண பணிப்பாளர் தனது ஆளணியினருடன் மீளாய்வு செய்தல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலாலியில் இருந்த 14 பேருக்கும் 12 நாட்களின் பின்னரே இப்பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனால் வைத்தியசாலைகளில் மீண்டும் அவசியமற்ற சேவைகளை ஆரம்பிக்கும்போது உள்ள ஆபத்துக்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். எனவே, ஒரு நாளைக்குச் செய்கின்ற பரிசோதனைகளை அதிகரிப்பதற்கான வழிவகைகளை ஆராய்தல் இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாகும்.

 

https://www.ibctamil.com/srilanka/80/141253?ref=imp-news

18 minutes ago, உடையார் said:

உண்மையில் நாம் அனைவரும் எமது சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்தோம் என பெருமைகொள்ளக் கூடிய நிலையில் யாழ்ப்பாணத்தை கொரோனா தொற்றில் இருந்து கட்டுப்படுத்தி வைத்துள்ளோம்.

நல்லது. மக்களும் சுகாதர சேவையாளர்களும் தொடர்ந்தும் விழிப்பாக இருக்கவேண்டும். 

வடக்கில், கிழக்கில், மலையகத்தில் உட்பட வாழும் தமிழ் உறவுகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த தொற்றில் இருந்து மீளவேண்டும். 

2 hours ago, ampanai said:

நல்லது. மக்களும் சுகாதர சேவையாளர்களும் தொடர்ந்தும் விழிப்பாக இருக்கவேண்டும். 

வடக்கில், கிழக்கில், மலையகத்தில் உட்பட வாழும் தமிழ் உறவுகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த தொற்றில் இருந்து மீளவேண்டும். 

 

வடக்கில், கிழக்கில், மலையகத்தில், சிங்கள பகுதிகளில் வாழும் தமிழ், சிங்கள உறவுகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த தொற்றில் இருந்து மீளவேண்டும்.

அரசியல்வாதிகளை விடுவோம், சிங்கள மக்களின் இதயங்களை வெல்வோம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Knowthyself said:

 

சிங்கள மக்களின் இதயங்களை வெல்வோம்.

 

நடக்கிற காரியமா? இவ்வளவு அழிவுக்கும் பின்பும் ....சிங்கள மக்கள் இனவாதியை பெற்றி பெற வைத்துள்ளனர் ....சிங்கள மக்களின் வாக்குகள் தான் இனவாதிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது ....என்பதை மறந்து விட முடியாது.....

2 hours ago, putthan said:

நடக்கிற காரியமா? இவ்வளவு அழிவுக்கும் பின்பும் ....சிங்கள மக்கள் இனவாதியை பெற்றி பெற வைத்துள்ளனர் ....சிங்கள மக்களின் வாக்குகள் தான் இனவாதிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது ....என்பதை மறந்து விட முடியாது.....

சாம் சுங் கோஷரியையும் தமிழ் மக்கள் தான் வேறுவழியில்லாமல் தெரிவுசெய்தார்கள் ..

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Knowthyself said:

சாம் சுங் கோஷரியையும் தமிழ் மக்கள் தான் வேறுவழியில்லாமல் தெரிவுசெய்தார்கள் ..

சிங்கள சமுகத்தில் வேறு தெரிவு இருந்தும் இனவாதம் பேசி சிங்கள வாக்குகளை பெற்றார்கள்....இனவாதம் மூலம் ஆட்சி அமைப்பது என்பது 1958 ஆம் ஆண்டிலிருந்தே சிரிலங்காவில் நடைபெறுகின்றது என்பது நாம் அறிந்த உண்மை...

சம் சும் கோஸ்டிகளை  சிறிலங்கா தேசிய அரசியல்வாதிகளுடன் ஒப்பிட முடியாது...சிறிலங்கா தேசியம் சிறப்புடன் நடை பெறுவதற்கு சிங்கள இனவாத அரசியலொதுக்கப்பட வேண்டும்.அது ஒதுக்கப்படும் பட்சத்தில் சம்சும்  கோஸ்டிகளைன் அரசியலும் தமிழ் மக்களிடையே செல்வாக்கு இழந்து விடும்...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Knowthyself said:

சிங்கள மக்களின் இதயங்களை வெல்வோம்.

எங்கிருந்துதான் இப்படி கிளம்பி வருகிறார்களோ தெரியலை  நாங்கள் நினைக்கிறம்  அவர்களின் இதயங்களை வெல்வோம் என்று அவர்கள் நினைக்கிறார்களா ?

 

7 hours ago, putthan said:

சிங்கள சமுகத்தில் வேறு தெரிவு இருந்தும் இனவாதம் பேசி சிங்கள வாக்குகளை பெற்றார்கள்....இனவாதம் மூலம் ஆட்சி அமைப்பது என்பது 1958 ஆம் ஆண்டிலிருந்தே சிரிலங்காவில் நடைபெறுகின்றது என்பது நாம் அறிந்த உண்மை...

சம் சும் கோஸ்டிகளை  சிறிலங்கா தேசிய அரசியல்வாதிகளுடன் ஒப்பிட முடியாது...சிறிலங்கா தேசியம் சிறப்புடன் நடை பெறுவதற்கு சிங்கள இனவாத அரசியலொதுக்கப்பட வேண்டும்.அது ஒதுக்கப்படும் பட்சத்தில் சம்சும்  கோஸ்டிகளைன் அரசியலும் தமிழ் மக்களிடையே செல்வாக்கு இழந்து விடும்...

பெருமாள் [எங்கிருந்துதான் இப்படி கிளம்பி வருகிறார்களோ தெரியலை  நாங்கள் நினைக்கிறம்  அவர்களின் இதயங்களை வெல்வோம் என்று அவர்கள் நினைக்கிறார்களா ?]

 

சாம் சுங் கோஷரியையும் தமிழ் மக்கள் தான் வேறுவழியில்லாமல் தெரிவுசெய்தார்கள், அதனால் தழிழ் மக்கள் எல்லோரும் கூடாதவர்கள் அல்ல, அதுபோல்தான் சிங்கள மக்களும், நாங்கள் எல்லோரும் மேற்குலக மாயையில் இருந்து விடுபடுவோமாகயிருந்தால் சிங்கள மக்களின் இதயங்களை வெல்வது இலகு. நாங்கள், குரோத மனபான்மையில் ஊறிபோய், கண்மன் தெரியாமல் ஊருக்கு காசனிப்பி மிகபெரிய இடவெளியை (பொருளாதரத்தில், and etc.) எங்களிடையே ஏற்படுத்யள்ளோம், காசனுப்பியவர்களை அங்குள்ள சொந்தங்கள் மதிக்காமல் போனது வேறுகதை, சிங்கள மக்களை பொறுத்தவரை வறுமையிலுள்ளவர்கள் அதிகம் அதனால் கேடு.. அரசியல்வாதிகளால் அவர்களை வெல்லமுடிகிறது அத்துடன் இலகுவாக எங்களில் இருந்து கேடு..டவர்களை இலகுவாக உருவாக்கமுடிகிறது. உதாரணத்துக்கு, கனடாவிலிருந்து யாழ் உறுப்பினர் ஒருவர் சொன்னார், தான் லிபரலை ஆதரிப்பதில்லையாம் ஏனென்றால் அவர்கள் கஷட்டபட்டு உழைப்பவர்களின் காசைபுடுங்கி ஏழைகளுக்கு கொடுக்கிறார்களாம், இவர் ஒரு பதினைந்து வருடங்கள் தானிருக்கும் கனடாவந்து. இங்கு படித்த கேடு..ட்டவர்களை உருவாக்கியதுதான் மிச்சம். எங்களின் சொந்தக்காரியொருத்திசொல்லுரா, இலங்கையில் A/L லில் இரண்டாமிடம் வந்தவா ..ல், எலோரும் களவுவேலையும் பொய்யும் செய்யினம்/சொல்லீனம் அதனால் எங்கட பிள்ளையளுக்கும் கொஞ்சம் தெரிந்துக்கவேண்டுமாம், கச்மனுக்குள் வாறத்துக்கு, தப்பிதவறி ... பிளஸ் பாஸ்பண்ணாட்டிலென்று இன்னொரு வீட்டை வாடைகைக்கு எடுத்துவிட்டார்கள் ஆனால் பிள்ளை பாஸ்.

out of topics so I won't reply to your comments

 

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Knowthyself said:

பெருமாள் [எங்கிருந்துதான் இப்படி கிளம்பி வருகிறார்களோ தெரியலை  நாங்கள் நினைக்கிறம்  அவர்களின் இதயங்களை வெல்வோம் என்று அவர்கள் நினைக்கிறார்களா ?]

 

சாம் சுங் கோஷரியையும் தமிழ் மக்கள் தான் வேறுவழியில்லாமல் தெரிவுசெய்தார்கள், அதனால் தழிழ் மக்கள் எல்லோரும் கூடாதவர்கள் அல்ல, அதுபோல்தான் சிங்கள மக்களும், நாங்கள் எல்லோரும் மேற்குலக மாயையில் இருந்து விடுபடுவோமாகயிருந்தால் சிங்கள மக்களின் இதயங்களை வெல்வது இலகு. நாங்கள், குரோத மனபான்மையில் ஊறிபோய், கண்மன் தெரியாமல் ஊருக்கு காசனிப்பி மிகபெரிய இடவெளியை (பொருளாதரத்தில், and etc.) எங்களிடையே ஏற்படுத்யள்ளோம், காசனுப்பியவர்களை அங்குள்ள சொந்தங்கள் மதிக்காமல் போனது வேறுகதை, சிங்கள மக்களை பொறுத்தவரை வறுமையிலுள்ளவர்கள் அதிகம் அதனால் கேடு.. அரசியல்வாதிகளால் அவர்களை வெல்லமுடிகிறது அத்துடன் இலகுவாக எங்களில் இருந்து கேடு..டவர்களை இலகுவாக உருவாக்கமுடிகிறது. உதாரணத்துக்கு, கனடாவிலிருந்து யாழ் உறுப்பினர் ஒருவர் சொன்னார், தான் லிபரலை ஆதரிப்பதில்லையாம் ஏனென்றால் அவர்கள் கஷட்டபட்டு உழைப்பவர்களின் காசைபுடுங்கி ஏழைகளுக்கு கொடுக்கிறார்களாம், இவர் ஒரு பதினைந்து வருடங்கள் தானிருக்கும் கனடாவந்து. இங்கு படித்த கேடு..ட்டவர்களை உருவாக்கியதுதான் மிச்சம். எங்களின் சொந்தக்காரியொருத்திசொல்லுரா, இலங்கையில் A/L லில் இரண்டாமிடம் வந்தவா ..ல், எலோரும் களவுவேலையும் பொய்யும் செய்யினம்/சொல்லீனம் அதனால் எங்கட பிள்ளையளுக்கும் கொஞ்சம் தெரிந்துக்கவேண்டுமாம், கச்மனுக்குள் வாறத்துக்கு, தப்பிதவறி ... பிளஸ் பாஸ்பண்ணாட்டிலென்று இன்னொரு வீட்டை வாடைகைக்கு எடுத்துவிட்டார்கள் ஆனால் பிள்ளை பாஸ்.

out of topics so I won't reply to your comments

 

 

வணக்கம் நண்பரே நாங்கள் மேற்குலக மாயையில் இருந்து விடுபடுவதற்கு முதல் சிவப்பு சிந்தனைவாதிகள் (1977 முதல் ) எதற்கு எடுத்தாலும் புலம் பெயர் தமிழர்களை குற்றம் சாட்டுவதை விடவேண்டும் ....ஏழை சிங்கள மக்களின் வாக்குகள்தான் 1958 முதல் இனவாத அரசியல் வாதிகளை உருவாக்கின்றது....JVPபுரட்சியை உண்டாக்கிய ஏழை சிங்கள இளைஞர்களாலயே எழை சிங்கள மக்களை தங்களது வசம் இதுவரை இழுக்க முடியவில்லை ..இந்த நிலையில் நாங்கள் எப்படி சிங்கள மக்களை எம்வசம் இழுப்பது....எழை சிங்கள வாக்குகள் 50 வீதம் எமது வாக்கு 10 வீதம் தான் ....அந்த 50 வீதம் மாறவேண்டும், 10 வீததமிழ் வாக்குகள்  மாறினாலும், சிறிலங்கா தேசிய அர‌சியல் செழுமையாக இருக்க வேண்டும் என்றால் .....இனவாதிகளை  மதவாதிகளை உருவாக்குவதை   சிங்கள எழை வாக்காளர்கள் நிறுத்த வேண்டும்....

Edited by putthan

13 hours ago, putthan said:

வணக்கம் நண்பரே நாங்கள் மேற்குலக மாயையில் இருந்து விடுபடுவதற்கு முதல் சிவப்பு சிந்தனைவாதிகள் (1977 முதல் ) எதற்கு எடுத்தாலும் புலம் பெயர் தமிழர்களை குற்றம் சாட்டுவதை விடவேண்டும் ....ஏழை சிங்கள மக்களின் வாக்குகள்தான் 1958 முதல் இனவாத அரசியல் வாதிகளை உருவாக்கின்றது....JVPபுரட்சியை உண்டாக்கிய ஏழை சிங்கள இளைஞர்களாலயே எழை சிங்கள மக்களை தங்களது வசம் இதுவரை இழுக்க முடியவில்லை ..இந்த நிலையில் நாங்கள் எப்படி சிங்கள மக்களை எம்வசம் இழுப்பது....எழை சிங்கள வாக்குகள் 50 வீதம் எமது வாக்கு 10 வீதம் தான் ....அந்த 50 வீதம் மாறவேண்டும், 10 வீததமிழ் வாக்குகள்  மாறினாலும், சிறிலங்கா தேசிய அர‌சியல் செழுமையாக இருக்க வேண்டும் என்றால் .....இனவாதிகளை  மதவாதிகளை உருவாக்குவதை   சிங்கள எழை வாக்காளர்கள் நிறுத்த வேண்டும்....

 

[வணக்கம் நண்பரே நாங்கள் மேற்குலக மாயையில் இருந்து விடுபடுவதற்கு முதல்]

சிவப்பு பச்சை இருக்கட்டும், நாங்கள் மொத்தத்தில் திருந்தமாட்டம்!

50%, 10% (actually 8-9%) is a fact. 10%, இதில் கிட்டதட்ட 1% கொழுத்த பணக்காரர்களாக மாறிவிட்டார்கள், கிந்தியாவைபோல், இதுதான் பிரச்சனை. 
 

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது! அவனொருத்தன் வந்து போலீசும் ஆமியும் தான் காரணம் என்று பாராட்டிப்போறான். இவை தாங்கள் என்கினம். யாருக்கு வோட்டுப் போடுறது? பலாலியில்  தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சுகமாய் உறவுகளோடு சேரவேண்டும்.. அவர்கள் மூளை சலவை செய்யப்படாமல் இருக்க வேணடும்.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, satan said:

என்னப்பா இது! அவனொருத்தன் வந்து போலீசும் ஆமியும் தான் காரணம் என்று பாராட்டிப்போறான். இவை தாங்கள் என்கினம். யாருக்கு வோட்டுப் போடுறது? பலாலியில்  தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சுகமாய் உறவுகளோடு சேரவேண்டும்.. அவர்கள் மூளை சலவை செய்யப்படாமல் இருக்க வேணடும்.   

யார் காரணமென்றாலும் நம் உறவுகள் பாதுகாப்பாக கொரொணாவின் பாரிய அழிவில் இருந்து தப்பியிருப்பதே பெரிய சந்தோஷம்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் நாளாந்த  முன்னுக்கு பின் முரணான கருத்து வெளியீடு, அந்தச் சந்தோசத்தை கேள்விக்குறியாக்குதே. எல்லோரும் சேர்ந்து சதி செய்யினமோ? தமிழன் வீழ்ந்த, ஏமாந்த வரலாற்றைப் புரட்டினால்,  அவற்றில் எல்லாவற்றிலும் தமிழனே காரணமானான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.