Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூரில், ஒரே நாளில் 1426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி -

Featured Replies

சிங்கப்பூரில், அதிகப்பட்சமாக, ஒரே நாளில், 1426 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8014 ஆக உயர்ந்தது.

இன்று பாதிப்பு உறுதியான 1426 பேரில், 1410 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள். மீதி 16 பேர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் ஆவார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை, தனிமைப் படுத்தி, தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை வழங்கியதில் சுகாதாரத்துறை காட்டிய தீவிரத்தால், சிங்கப்பூர் குடிமக்களிடையே கொரோனா பரவுவது பெருவாரியாக கட்டுப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/107480/சிங்கப்பூரில்,-ஒரே-நாளில்-1426பேருக்கு-கொரோனா-தொற்றுஉறுதி

சிங்கப்பூர் நிலைமை மோசம் போலத்தான் இருக்கு

  • தொடங்கியவர்
16 minutes ago, ampanai said:

இன்று பாதிப்பு உறுதியான 1426 பேரில், 1410 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள். மீதி 16 பேர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் ஆவார்கள்.

ஒரு நாடு. இரு வேறு மக்கள் பிரிவு.

வேலைக்காக வந்து தொற்று நோயால் அவதிப்படும் தொழிலாளர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kali said:

சிங்கப்பூர் நிலைமை மோசம் போலத்தான் இருக்கு

சிங்கையின் நிலைமை கட்டுப்பாட்டில் தான் உள்ளது,
இந்த மேற்கூறிய பரவல் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் , வெளிநாட்டு தொழிலாளிகளின் dormitory களில் உள்ள அளவுக்கு மீறிய இட நெருக்கடியே இதற்க்கு காரணம் (முதல் பரவல் இனங்காணப்பட்ட குறிப்பிட்ட இரண்டு  டோம்களில் மட்டும் தங்கியிருந்தவர் 19000 பேர் ) அப்போதே MOM , மற்றும்  MOH தங்களது பணிகளை முடுக்கி விட்டுவிட்ட்டன , இவர்கள் அனைவரும் எப்போதோ தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர்,

அடுத்தது வெளிநாட்டு ஊழியர்களின் மெத்தனப்போக்கு ,சிங்கப்பூர் அரசு ஒன்று கூட வேண்டாம் என்று எத்தனை தடவை வலியுறுத்தியும் தாங்கள் எதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் போல் எதனையும் காதில் வாங்குவதில்லை, இப்போது வேலை அனுமதியையும் பிடுங்கி இனி எப்போதும் சிங்கப்பூரில் தொழில் செய்ய முடியாது என்று இறுக்கியதும் தான் அடங்கியிருக்கிறார்கள்   

11 hours ago, அக்னியஷ்த்ரா said:

சிங்கையின் நிலைமை கட்டுப்பாட்டில் தான் உள்ளது,
இந்த மேற்கூறிய பரவல் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் , வெளிநாட்டு தொழிலாளிகளின் dormitory களில் உள்ள அளவுக்கு மீறிய இட நெருக்கடியே இதற்க்கு காரணம் (முதல் பரவல் இனங்காணப்பட்ட குறிப்பிட்ட இரண்டு  டோம்களில் மட்டும் தங்கியிருந்தவர் 19000 பேர் ) அப்போதே MOM , மற்றும்  MOH தங்களது பணிகளை முடுக்கி விட்டுவிட்ட்டன , இவர்கள் அனைவரும் எப்போதோ தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர்,

அடுத்தது வெளிநாட்டு ஊழியர்களின் மெத்தனப்போக்கு ,சிங்கப்பூர் அரசு ஒன்று கூட வேண்டாம் என்று எத்தனை தடவை வலியுறுத்தியும் தாங்கள் எதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் போல் எதனையும் காதில் வாங்குவதில்லை, இப்போது வேலை அனுமதியையும் பிடுங்கி இனி எப்போதும் சிங்கப்பூரில் தொழில் செய்ய முடியாது என்று இறுக்கியதும் தான் அடங்கியிருக்கிறார்கள்   

விபரங்களுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

தங்கும் விடுதிகளின் ஊழியர்கள் மே 4 வரை வேலை செய்ய அனுமதி இல்லை

தற்போது தங்கும் விடுதிகளில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் மே மாதம் 4ஆம் தேதிவரை வேலை செய்ய அனுமதியில்லை. 

 

கிருமிப் பாதிப்புக்கு அதிகம் ஆளாகியுள்ள இவர்களது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக நேற்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.

 

அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்று அவர் விளக்கினார்.

அதன்படி கிருமிப் பரவலுக்கான அதிரடி நடவடிக்கைகள் நடப்பில் உள்ள காலகட்டத்தில் தொடர்ந்து இயங்க உரிமம் பெற்றிருந்த நிறுவனங்களும் இனி நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனால் நிறுவனங்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

 

இருப்பினும் இப்புதிய நடவடிக்கை தொடர்பில் முதலாளிகள், ஊழியர்கள் என இருதரப்பினரது ஒத்துழைப்பும் தேவை என்று அமைச்சர் டியோ கேட்டுக்கொண்டார்.

கிருமிப் பரவலின் அபாயத்தைக் குறைக்க இது ஒரு முக்கிய நடவடிக்கை என்று அவர் சுட்டினார்.

இது இன்றிலிருந்து நடப்புக்கு வருவதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

இதற்கிடையே ஊழியர்களின் நலனை உறுதிசெய்திட தங்கும் விடுதிகளே நிர்வகிக்கும் அதிகாரிகளுடன் முதலாளிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்தியது.

 

https://www.tamilmurasu.com.sg/singapore/story20200422-42939.html?utm_expid=._AUaFQhbTD-qRSC6dCpQAQ.0&utm_referrer=https%3A%2F%2Fwww.tamilmurasu.com.sg%2F

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.