Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரிசிக்கு சாயம் பூசிய கில்லாடி வர்த்தகர்; அபராதம் விதித்த நீதிமன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MGA_8917-960x640.jpg?189db0&189db0

 

மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் அரிசிக்கு சிகப்பு நிறமூட்டம் செய்து விற்பனைக்காக களஞ்சியப்படுத்தியிருந்த வேளை கைது செய்யப்பட்ட விற்பனை நிலைய உரிமையாளருக்கு நீதிமன்றினால் இருபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் யு.எல்.அப்துல் மஜீது நீதிமன்றுக்கு தெரிவித்த குற்றச்சாட்டிற்கிணங்க விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து நீதிபதி 20 ஆயிரம் ரூபா அபராதத்தினை விதித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறு கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்படுமிடத்து வர்த்தக நிலையத்தின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமென ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் எச்சரிக்கையினையும் விடுத்தார்.

செயற்கையாக சிகப்பு நிறச்சாயமூட்டிய அரிசியை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை மற்றும் அதிகம் உடைந்த அரிசியை உணவு நியம ஒழுங்கு விதிக்கு முரணாக விற்பனைக்காக வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவருக்கெதிராக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் முதலாம் திகதியன்று நடாத்தப்பட்ட தற்காலிக சந்தையில் காணப்பட்ட அரிசி மாதிரியை ஆதாரமாகக் கொண்டு அந்த அரிசி கொள்வனவு செய்யப்பட்ட விற்பனை நிலையம் மறுநாள் சுகாதார திணைக்கள அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 9 மூடை அரிசி முத்திரையிடப்பட்டதுடன், அதில் சிறிய தொகுதி அரிசி தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பட்டது. அங்கு நடாத்தப்பட்ட பரிசோதனையின் பிரகாரம் அரிசி நிறமூட்டப்பட்டமை உறுதி செய்யப்பட்டதையடுத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. (150)

  • MGA_8908-1024x683.jpg?189db0&189db0
 
6 hours ago, உடையார் said:

இதனையடுத்து நீதிபதி 20 ஆயிரம் ரூபா அபராதத்தினை விதித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறு கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்படுமிடத்து வர்த்தக நிலையத்தின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமென ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் எச்சரிக்கையினையும் விடுத்தார்.

தண்டனை போதாது!

6 hours ago, உடையார் said:

மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் அரிசிக்கு சிகப்பு நிறமூட்டம் செய்து விற்பனைக்காக களஞ்சியப்படுத்தியிருந்த வேளை கைது செய்யப்பட்ட விற்பனை நிலைய உரிமையாளருக்கு நீதிமன்றினால் இருபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாயம் பூசுபவர்களுக்கு என்ன தண்டனை? எவ்வளவு அபராதம் ??🤔

Just now, ampanai said:

அரசியல் சாயம் பூசுபவர்களுக்கு என்ன தண்டனை? எவ்வளவு அபராதம் ??🤔

யாரோ குண்டு வைக்க சதி என்டு சொல்லி அரச வரப்பிரசாதங்களையும் பாதுகாப்பையும் வழங்கிறது.
சொகுசு வீடு வழங்கிறது.
இப்பிடி நிறைய இருக்கு.
அதுகளை நம்பி ஏமாந்த மக்கள் தொடர்ந்து ஏமாந்து அழியவேண்டிய தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Rajesh said:

தண்டனை போதாது!

போதாது, இப்படிப்பட்டவர்களை வாழ்கையில் கடை நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது 

1 hour ago, உடையார் said:

போதாது, இப்படிப்பட்டவர்களை வாழ்கையில் கடை நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது 

உங்களால முடியுமா உடையார் இப்படியெல்லாம் செய்ய। அவனுகளுக்கு அதெல்லாம் கைவந்த கலை। கடை நடத்த அனுமதி கொடுக்க கூடாது எண்டு எழுதினத்தை அவன் கேள்விப்படடால், உங்களுக்கு மடடக்களப்பு மாந்தீரீகம்தான்। கவனம்।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.