Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வட மாகாணம் தொடர்ச்சியாக கல்வியில் வீழ்ச்சியடைவதற்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற செயற்பாடே காரணம்- தவராசா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணம் தொடர்ச்சியாக கல்வியில் வீழ்ச்சியடைவதற்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற செயற்பாடே காரணம்- தவராசா

(தி.சோபிதன்)

வடக்கு மாகாணம் கல்வியில் தொடர்ச்சியாக வீழ்ச்சியான நிலையில் காணப்படுவதற்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற  செயற்பாடே காரணம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது வெளியாகியுள்ள சாதாரண பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது வடக்கு மாகாணசபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடு.

இதனை நான் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். மாகாணசபை ஆட்சியில் இருந்தபோது கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும், ஆசிரியர்கள் பகிரந்தளிப்பதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்று பல தடவைகள் கூறியிருந்தேன்.

எனினும் அதனை எவரும் செவிமடுக்கவில்லை.பின்னடைவில் இருப்பதற்கு காரணம் யுத்தத்தின் விளைவு யுத்தத்தின் விளைவு என்றே கூறிக் கொண்டிருந்தார்கள்.போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள் ஆகியும் கல்வியில் முன்னேற்றம் காண முடியாத நிலைமை காணப்படுகின்றது. ஆடத் தெரியாதவள் மேடை சரியில்லை என்பதுபோல எதற்கெடுத்தாலும் யுத்தம் தான் காரணம் என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

கல்வி முகாமைத்துவம் என்பது மாகாணத்தின் விடயமாகும். அதனை இவர்கள் செய்யாது விட்டுவிட்டு ஒவ்வொரு நொண்டிச் சாட்டுகள் கூறிக்கொண்டு இருப்பதில் பயனில்லை. மாகாணசபை விட்டதன் விளைவுதான் இன்று வரை வடக்கு மாகாணம் கல்வியில் பின்னடைவில் இருக்கின்றது.

மாகாணசபை ஆட்சியில் இருந்தபோது கல்வியமைச்சர் தான் கல்வியை முன்னேற்ற போவதாக சில வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருந்தார்.

பின்னர் அவர்களது சண்டையில்  புதிதாக ஒரு கல்வியமைச்சர் வந்தார். அவரும் தான் கல்வி தொடர்பில் புதிய திட்டங்களை செய்யப்போவதாக கூறினார். அவர் வேலையை தொடங்குவதற்கு முன்பாகவே மாகாண சபையின் ஆட்சி காலம் முடிவடைந்து விட்டது.

மாகாணசபையை வினைத்திறனாக செயற்படுத்தாமல் விட்டுவிட்டு போரைக் காரணம் காட்டுவதில் எந்த நியாயமும் இல்லை என்றார்
 

https://www.virakesari.lk/article/81184

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, கல்வியின் வீழ்ச்சிக்கு பெற்றோரும் மாணவர்களும் காரணமில்லை. மாகாணசபைதான் காரணம். ☹️

4 hours ago, கிருபன் said:

செயற்பாடே காரணம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

சொறிலங்கா கொலைகார அரசுக்கு முண்டு கொடுத்து தமிழினத்தை அழித்து வாழும் இவர்கள் வடமாகாணத்தில் கட்டவிழ்த்து விடும் சமூகவிரோத செயல்களே முதற்காரணம்.

12 hours ago, Kapithan said:

ஆக, கல்வியின் வீழ்ச்சிக்கு பெற்றோரும் மாணவர்களும் காரணமில்லை. மாகாணசபைதான் காரணம். ☹️

இவர்கள் அதிகாரத்தில் இருந்திருந்தால் மாற்றி சொல்லி இருப்பர்। உண்மையான கரணம் பெற்றோரும் , புலம் பெயர் மக்களுமே। எல்லோரும் இல்லாவிடடாலும் அநேகமானோர் இதட்கு பதில் சொல்லியே அக்கா வேண்டும்। தாராளமாக பணம் அனுப்புகிறார்கள்। பணம் பிரச்சினை இல்லை। ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள்। உடனே ஒரு மோட்டார் சைக்கிள் , கெடட நண்பர்கள் என்று சகவாசம் தொடங்குகிறது। இரவில் பார்த்தால் ஒழுங்கைகளுக்குள் இருந்து மது , கஞ்ச போன்ற போதைப்பொருட்களுடன் காணலாம்। இது நான் கண்ணால் கண்ட காட்சிகள்। பெற்றோர் பிள்ளைகள் எங்கு போகின்றார்கள் என்பதை கவனிப்பதாக தெரியவில்லை। எனவே இந்த அரசியல்வாதிகள் சொல்வதுபோல மாகாண சபையில் குற்றம் சாட்டிவிட்டு தப்ப முடியாது। அரசியல்வாதிகள்தான் அரசுடனும் , சடடம் ஒழுங்கு தரப்பு , கல்வி சார் சமூகம் , பெற்றோர் , சமயத்தலைவர்களை கொண்ட குழுவாக ஒரு அமைப்பை உருவாக்கி இதட்கு ஒரு தீர்வை காண வேண்டும்। புலம்பெயர் மக்களும் நீங்கள் அனுப்பும் பணம் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா என கவனித்தால் நல்லது। 

  • கருத்துக்கள உறவுகள்

சரிந்துகொண்டிருக்கும் ஒரு சரித்திரம்!!

 
பிரசுரிக்கபட்ட திகதி: 01/05/2020 (வெள்ளிக்கிழமை)
 
 

சரிந்துகொண்டிருக்கும் ஒரு சரித்திரம்!!

 

2019 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் அண்மையில் வெளியாகி பல கல்லூரிகளின்/மாணவர்களின் சிறப்பான முடிவுகள் சமூகவெளியில் பாராட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. சார்ந்தோருக்கு வாழ்த்துகள்.

👏

ஆனால் கடந்த 15 வருட முடிவுகளை ஆராய்ந்த போது பல நுண்ணிய சரிவுகளை தெளிவாக அவதானிக்க முடிந்தது.
யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு உள்ளிட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மாவட்டங்களின் அடைவு மட்டங்கள் நல்ல நிலையில் இருந்து படிப்படியாக சரிந்து பட்டியலின் கடைசி நிலைகளை அடைந்துள்ள நிலையில்? அம்பாந்தோட்டை, மாத்தறை போன்ற சற்று பின்தங்கியிருந்த தென்பகுதி மாவட்டங்கள், பலகாலமாக முதலிடத்தை அலங்கரிந்த கொழும்பு மாவட்டத்தை 3ம் நிலைக்கு தள்ளிவிட்ட முதல் இரு நிலைகளை அலங்கரித்திருப்பது பிரமிப்பு ஊட்டியது.
கடந்த 15 வருடமாக இது எப்படி நடந்துள்ளது என்பதை 5 வருட இடைவெளியில் கீழே கொடுத்துள்ளேன்.

 

2005
கொழும்பு-1ம் இடம்
வவுனியா - 2ம் இடம்
மாத்தறை- 9ம் இடம்
யாழ்ப்பாணம்-10 ம் இடம்
மட்டக்களப்பு-13ம் இடம்
அம்பாந்தோட்டை- 15 ம் இடம்
திருகோணமலை- 21
முல்லைதீவு- 24
கிளிநோச்சி- 25

 

2010
கொழும்பு- 1ம் இடம்
வவுனியா - 7ம் இடம்🔻
மாத்தறை- 5ம் இடம்⬆️
யாழ்ப்பாணம்-12 ம் இடம்🔻
அம்பாந்தோட்டை- 10 ம் இடம்⬆️
மட்டக்களப்பு-15🔻
திருகோணமலை- 22🔻
முல்லைதீவு- 24
கிளிநோச்சி- 25

 

2015
கொழும்பு-1ம் இடம்
வவுனியா - 19ம் இடம்🔻
மாத்தறை- 2ம் இடம்⬆️
யாழ்ப்பாணம்-21 ம் இடம்🔻
அம்பாந்தோட்டை-
3 ம் இடம்⬆️
மட்டக்களப்பு-18🔻
திருகோணமலை- 23🔻
முல்லைதீவு- 24
கிளிநோச்சி- 25

 

2019
கொழும்பு 3ம் இடம்
வவுனியா - 21ம் இடம்🔻
மாத்தறை- 2ம் இடம்
யாழ்ப்பாணம்-19 ம் இடம்
அம்பாந்தோட்டை- 1 ம் இடம்⬆️
மட்டக்களப்பு-18
திருகோணமலை- 23
முல்லைதீவு- 24
கிளிநோச்சி- 25

 

இங்கே தென்பகுதி மாவட்டங்கள் முன்னேறி விட்டதே என்பது என் பிரச்சினை இல்லை. இலங்கையின் எல்லா பகுதிகளும் முன்னேற வேண்டியது அவசியமே.

ஆனால் அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களால் முடிந்த விடையங்கள் ஏன் வடபகுதி மாவட்டங்களால் முடியவில்லை என்பது தான் பிரச்சினை!


போர்க்கால சூழல் கடந்து எல்லோருக்கும் சமவாய்ப்புகள் இருக்கும் இன்றைய நிலையில் மூன்று வித நிலைகளே இங்கு காரணங்களாகிஇருக்க முடியும்.


1) அவர்கள் முன்னேறிக்கொண்டிருக்கும் போது நாங்கள் அப்படியே இருக்கிறோம்
2) எங்களது முன்னேற்றத்தை விட அவர்களது முன்னேற்றம் அதிகமாக உள்ளது.
3) கற்றலில் எங்கள் அடைவுகள் சரிந்துகொண்டிருக்கிறது.

 

இன்றைய உலக வழக்கில் G.C.E O/L பெறுதிகளில் வாழ்க்கை தங்கியிருக்கவில்லை என்றும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் பல தன்முனைப்பு அறிவுரைகள் முன்வைக்கப்படலாம். என்னைப் பொறுத்தவரையிலும் கூட இந்த பெறுபேறுகளில் சாதித்தவன் மட்டும் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதையும் நம்பவில்லை.

 

ஆனால், இந்தப் பெறுபேறுகள் இலங்கையின் வடக்கு கிழக்கு மாவட்டங்களுக்கானவை அல்லவே. இலங்கை முழுவதற்குமானவை. இன்னமும் இலங்கையின் உயர் கல்வித்திட்டம் மற்றும் இடைநிலை/கடுநிலை அரச வேலைத் தகுதிகள் இந்த சாதாரணதரப் பரீட்சை பெறுதிகளை வைத்தே அமைக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. அதைவிட இலங்கையை பொறுத்தமட்டில் பெரும்பான்மை வேலைவாய்புகள் அரச துறை சார்ந்தே அமைந்துள்ளது.

 

ஆக இந்த நிலை இன்னும் தொடருமாயின், நாளடைவில் அரச வேலைவாய்ப்புகளில் எங்கள் பகுதியினரின் எண்ணிக்கைகள் சரிய தென்பகுதியினர் படிப்படியாக அந்த இடைவெளிகளை நிரப்ப ஆரம்பிப்பார்கள். அதுமட்டுமல்ல, பணபலமுள்ள ஒரு சிலர்/சுயமுயற்சியாளர்கள் என திறன்மிக்க சிலர் வாழ்க்கையில் முன்னேறினாலும் வேலைவாய்பின்றி பல வடக்கு கிழக்கு இளைஞர்கள் பின்தங்கி நிற்பர். இவை இன்று கண்ணுக்கு தெரியாது. ஆனால் நாளை நடக்கும் போது தான் தெரியும். ஆனால் அப்போது எங்கள் சமுதாயம் மேலும் பின்தங்கி நிற்கும்.

 

இந்த நிலைக்கு காரணங்களாக பின்வருவன இருக்ககூடும்.


1) பெற்றோர்களின் கண்காணிப்பு குறைபாடுகள்/ கண்டிப்புகுறைபாடுகள் குறைவான அழுத்தம்.
2) கல்விமீதான விருப்பு பொதுவாக குறைந்து பிற விடையங்கள் மீதான ஆர்வம்.அளவுக்குமீறிய வசதிகளும் இதில் அடங்கும்.
3) கல்விதான் அழியாத ஒரே ஒரு சொத்து என்ற போர்க்காலத்தில் இருந்ந நம்பிக்கை இன்று இல்லாமல் போனமை
4) வடக்கு கிழக்கு பிராந்திய கல்வித்துறையில் இருக்கும் குறைபாடுகள்
5) சக மாணவர்களையும் ஊக்கப்படுத்தி முன்னேற்றி விடுவதில் முன்னிலை மாணவர்களின் அக்கறை குறைந்தமை.

 

இதில் 4 வது காரணியின் பங்கு மிக குறைவானது. ஏராளமான ஆசிரியர்கள், கல்வியியலாளர்கள் நல்ல பெறுபேறுகளை பெறுவதற்காக அன்றாடம் போராடுவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். ஆனால் இன்றைய நடைமுறைச் சட்டங்கள், பெற்றோரின் அழுத்தங்களால், பல ஆசிரியர்கள் கண்டிப்புடன் செயற்பட முடியாமை ஓரு காரணியாக இருக்கலாம்.

 

ஆனால் மற்றைய நான்கு காரணிகளும் மிக முக்கியமானவை. இந்த சரிவை இனியும் நாமும் உணர்ந்து கொள்ளவில்லை என்றால் போர்காலத்தில் கூட கல்வித்துறையில் சாதனைகளுடன் திகழ்ந்த எங்கள் வடக்கு கிழ்க்கு பிரதேசங்கள் வசதிகள் வந்ததால் அழிந்துபோனதாகவே வரலாறு எழுதும்.

 

இந்த சரிவில் சமூகத்தில் உள்ள நம் அத்தனை பேருக்கும் முக்கிய பங்கு உண்டு. நீங்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லமுடியாது.


இனி என்ன செய்யவேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும், எப்படி கட்டுப்பாடுகளுடன்/ பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதை கள கல்வியியலாளர்கள், பெற்றோர்கள், மாணவர்களின் சுயபுத்திக்கே விட்டுவிடுகிறேன். சரிந்து கொண்டிருக்கும் எங்கள் சரித்திரங்களை உங்கள் நெஞ்சை சாய்த்து நிமிர்த்த முயலுங்கள்!!
அதுவே நிரந்தரமற்ற எங்கள் வாழ்வில் நாங்கள் எங்கள் சந்ததிக்கு செய்யும் தலையாய கடமை..

🙏

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே!

 http://www.valvettithurai.org/an-analysis-on-northern-province-gce-ordinary-exam-results-11514.html?fbclid=IwAR3Er13z2yoqlaR7uALrCIBUw1puBllpX4-T3ftbQeYMJIgjSSpPY7kBgLs

 

 

 

 

(R.தமிழ்மாறன்)

 

     
 
23 hours ago, பெருமாள் said:

சரிந்துகொண்டிருக்கும் ஒரு சரித்திரம்!!

 
பிரசுரிக்கபட்ட திகதி: 01/05/2020 (வெள்ளிக்கிழமை)
 
 

சரிந்துகொண்டிருக்கும் ஒரு சரித்திரம்!!

 

2019 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் அண்மையில் வெளியாகி பல கல்லூரிகளின்/மாணவர்களின் சிறப்பான முடிவுகள் சமூகவெளியில் பாராட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. சார்ந்தோருக்கு வாழ்த்துகள்.

👏

ஆனால் கடந்த 15 வருட முடிவுகளை ஆராய்ந்த போது பல நுண்ணிய சரிவுகளை தெளிவாக அவதானிக்க முடிந்தது.
யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு உள்ளிட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மாவட்டங்களின் அடைவு மட்டங்கள் நல்ல நிலையில் இருந்து படிப்படியாக சரிந்து பட்டியலின் கடைசி நிலைகளை அடைந்துள்ள நிலையில்? அம்பாந்தோட்டை, மாத்தறை போன்ற சற்று பின்தங்கியிருந்த தென்பகுதி மாவட்டங்கள், பலகாலமாக முதலிடத்தை அலங்கரிந்த கொழும்பு மாவட்டத்தை 3ம் நிலைக்கு தள்ளிவிட்ட முதல் இரு நிலைகளை அலங்கரித்திருப்பது பிரமிப்பு ஊட்டியது.
கடந்த 15 வருடமாக இது எப்படி நடந்துள்ளது என்பதை 5 வருட இடைவெளியில் கீழே கொடுத்துள்ளேன்.

 

2005
கொழும்பு-1ம் இடம்
வவுனியா - 2ம் இடம்
மாத்தறை- 9ம் இடம்
யாழ்ப்பாணம்-10 ம் இடம்
மட்டக்களப்பு-13ம் இடம்
அம்பாந்தோட்டை- 15 ம் இடம்
திருகோணமலை- 21
முல்லைதீவு- 24
கிளிநோச்சி- 25

 

2010
கொழும்பு- 1ம் இடம்
வவுனியா - 7ம் இடம்🔻
மாத்தறை- 5ம் இடம்⬆️
யாழ்ப்பாணம்-12 ம் இடம்🔻
அம்பாந்தோட்டை- 10 ம் இடம்⬆️
மட்டக்களப்பு-15🔻
திருகோணமலை- 22🔻
முல்லைதீவு- 24
கிளிநோச்சி- 25

 

2015
கொழும்பு-1ம் இடம்
வவுனியா - 19ம் இடம்🔻
மாத்தறை- 2ம் இடம்⬆️
யாழ்ப்பாணம்-21 ம் இடம்🔻
அம்பாந்தோட்டை-
3 ம் இடம்⬆️
மட்டக்களப்பு-18🔻
திருகோணமலை- 23🔻
முல்லைதீவு- 24
கிளிநோச்சி- 25

 

2019
கொழும்பு 3ம் இடம்
வவுனியா - 21ம் இடம்🔻
மாத்தறை- 2ம் இடம்
யாழ்ப்பாணம்-19 ம் இடம்
அம்பாந்தோட்டை- 1 ம் இடம்⬆️
மட்டக்களப்பு-18
திருகோணமலை- 23
முல்லைதீவு- 24
கிளிநோச்சி- 25

 

இங்கே தென்பகுதி மாவட்டங்கள் முன்னேறி விட்டதே என்பது என் பிரச்சினை இல்லை. இலங்கையின் எல்லா பகுதிகளும் முன்னேற வேண்டியது அவசியமே.

ஆனால் அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களால் முடிந்த விடையங்கள் ஏன் வடபகுதி மாவட்டங்களால் முடியவில்லை என்பது தான் பிரச்சினை!


போர்க்கால சூழல் கடந்து எல்லோருக்கும் சமவாய்ப்புகள் இருக்கும் இன்றைய நிலையில் மூன்று வித நிலைகளே இங்கு காரணங்களாகிஇருக்க முடியும்.


1) அவர்கள் முன்னேறிக்கொண்டிருக்கும் போது நாங்கள் அப்படியே இருக்கிறோம்
2) எங்களது முன்னேற்றத்தை விட அவர்களது முன்னேற்றம் அதிகமாக உள்ளது.
3) கற்றலில் எங்கள் அடைவுகள் சரிந்துகொண்டிருக்கிறது.

 

இன்றைய உலக வழக்கில் G.C.E O/L பெறுதிகளில் வாழ்க்கை தங்கியிருக்கவில்லை என்றும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் பல தன்முனைப்பு அறிவுரைகள் முன்வைக்கப்படலாம். என்னைப் பொறுத்தவரையிலும் கூட இந்த பெறுபேறுகளில் சாதித்தவன் மட்டும் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதையும் நம்பவில்லை.

 

ஆனால், இந்தப் பெறுபேறுகள் இலங்கையின் வடக்கு கிழக்கு மாவட்டங்களுக்கானவை அல்லவே. இலங்கை முழுவதற்குமானவை. இன்னமும் இலங்கையின் உயர் கல்வித்திட்டம் மற்றும் இடைநிலை/கடுநிலை அரச வேலைத் தகுதிகள் இந்த சாதாரணதரப் பரீட்சை பெறுதிகளை வைத்தே அமைக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. அதைவிட இலங்கையை பொறுத்தமட்டில் பெரும்பான்மை வேலைவாய்புகள் அரச துறை சார்ந்தே அமைந்துள்ளது.

 

ஆக இந்த நிலை இன்னும் தொடருமாயின், நாளடைவில் அரச வேலைவாய்ப்புகளில் எங்கள் பகுதியினரின் எண்ணிக்கைகள் சரிய தென்பகுதியினர் படிப்படியாக அந்த இடைவெளிகளை நிரப்ப ஆரம்பிப்பார்கள். அதுமட்டுமல்ல, பணபலமுள்ள ஒரு சிலர்/சுயமுயற்சியாளர்கள் என திறன்மிக்க சிலர் வாழ்க்கையில் முன்னேறினாலும் வேலைவாய்பின்றி பல வடக்கு கிழக்கு இளைஞர்கள் பின்தங்கி நிற்பர். இவை இன்று கண்ணுக்கு தெரியாது. ஆனால் நாளை நடக்கும் போது தான் தெரியும். ஆனால் அப்போது எங்கள் சமுதாயம் மேலும் பின்தங்கி நிற்கும்.

 

இந்த நிலைக்கு காரணங்களாக பின்வருவன இருக்ககூடும்.


1) பெற்றோர்களின் கண்காணிப்பு குறைபாடுகள்/ கண்டிப்புகுறைபாடுகள் குறைவான அழுத்தம்.
2) கல்விமீதான விருப்பு பொதுவாக குறைந்து பிற விடையங்கள் மீதான ஆர்வம்.அளவுக்குமீறிய வசதிகளும் இதில் அடங்கும்.
3) கல்விதான் அழியாத ஒரே ஒரு சொத்து என்ற போர்க்காலத்தில் இருந்ந நம்பிக்கை இன்று இல்லாமல் போனமை
4) வடக்கு கிழக்கு பிராந்திய கல்வித்துறையில் இருக்கும் குறைபாடுகள்
5) சக மாணவர்களையும் ஊக்கப்படுத்தி முன்னேற்றி விடுவதில் முன்னிலை மாணவர்களின் அக்கறை குறைந்தமை.

 

இதில் 4 வது காரணியின் பங்கு மிக குறைவானது. ஏராளமான ஆசிரியர்கள், கல்வியியலாளர்கள் நல்ல பெறுபேறுகளை பெறுவதற்காக அன்றாடம் போராடுவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். ஆனால் இன்றைய நடைமுறைச் சட்டங்கள், பெற்றோரின் அழுத்தங்களால், பல ஆசிரியர்கள் கண்டிப்புடன் செயற்பட முடியாமை ஓரு காரணியாக இருக்கலாம்.

 

ஆனால் மற்றைய நான்கு காரணிகளும் மிக முக்கியமானவை. இந்த சரிவை இனியும் நாமும் உணர்ந்து கொள்ளவில்லை என்றால் போர்காலத்தில் கூட கல்வித்துறையில் சாதனைகளுடன் திகழ்ந்த எங்கள் வடக்கு கிழ்க்கு பிரதேசங்கள் வசதிகள் வந்ததால் அழிந்துபோனதாகவே வரலாறு எழுதும்.

 

இந்த சரிவில் சமூகத்தில் உள்ள நம் அத்தனை பேருக்கும் முக்கிய பங்கு உண்டு. நீங்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லமுடியாது.


இனி என்ன செய்யவேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும், எப்படி கட்டுப்பாடுகளுடன்/ பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதை கள கல்வியியலாளர்கள், பெற்றோர்கள், மாணவர்களின் சுயபுத்திக்கே விட்டுவிடுகிறேன். சரிந்து கொண்டிருக்கும் எங்கள் சரித்திரங்களை உங்கள் நெஞ்சை சாய்த்து நிமிர்த்த முயலுங்கள்!!
அதுவே நிரந்தரமற்ற எங்கள் வாழ்வில் நாங்கள் எங்கள் சந்ததிக்கு செய்யும் தலையாய கடமை..

🙏

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே!

 http://www.valvettithurai.org/an-analysis-on-northern-province-gce-ordinary-exam-results-11514.html?fbclid=IwAR3Er13z2yoqlaR7uALrCIBUw1puBllpX4-T3ftbQeYMJIgjSSpPY7kBgLs

 

 

 

 

(R.தமிழ்மாறன்)

 

     
 

மன்னர் மாவடடம் கடந்த நான்கு , ஐந்து வருடங்களாக முன்னேற்றமடைந்து வருகின்றது। வடக்கு , கிழக்கு எல்லா மாவட்ட்ங்களையும் இங்கு தமிழ்மாறன் குறிப்பிட்டிருந்தாலும் மன்னர் மாவட்த்தை தவிர்த்திருக்கிறார்। முன்னேற்றமடைந்ததை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாரா , அல்லது தனக்கு ஏற்ற மாதிரி எழுதவருகிறாரோ தெரியவில்லை। அல்லது வேறு மாகாணத்துடன் இணைத்துவிடடாரோ தெரியவில்லை। முதலில் உண்மையாய் ஏற்றுக்கொள்ள பழகவேண்டும்। எழுதவேண்டும் என்பதட்காக எழுதக்கூடாது। 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.