Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்முடியான முள்ளிவாய்க்கால்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 10 people, child and outdoor

 

அணையா நெருப்பாய்

ஆண்டுகள் முப்பத்தாறு

உரிமைக்காய் சுழன்றடித்த

ஊழித்தீ

 

தன் உயிர் நெய்யூற்றி

தான் வாழவன்றி

செந்தமிழ் வாழ

சொந்தங்கள் செழிக்க

செருக்காய் ஒரு தேசம் அமைக்க

சோர்வின்றி எரிந்தது.!

 

தேசங்கள் பல

பொறாமை கொள்ள

முள்முடி தரித்து

முள்ளிவாய்க்காலில்

ஊதியணைக்கப்பட்டது

அந்த உரிமைத் தீ.

 

காலக் கடிகாரத்தின்

கரம் ஒன்று ஒடிந்து

தசாப்தம் ஒன்று ஆனது தமிழுக்கு.

 

கரிகாலன் படையது

கரிந்தே போனது

பொஸ்பரஸோடு மல்ரிபரல்கள் தூவிய

கந்தகப் புயலுக்குள்.

 

கருவிற் சுமந்த சிசுக்களாய்

புலிகள் சுமந்த - மக்கள்

சிதைந்தே போயினர்

சிங்களத்தான் செருக்கிற்கு.

 

மீளும் ஓர் வேளை

முள்ளிவாய்க்கால் தனில் முளைக்கும்

உயிர்ப் புற்கள் கூட 

கட்டியம் கூறும்

நந்திக்கடலும்

களிங்கம் பாடும்

உரிமை என்ற ஒன்றுக்காய்

உலகம் ஒன்றுகூடி

எமக்காய்

அழுங்காலம் வரும். 

 

அதுவரை

சோராது உழைப்போம்

சோரம் போவர் பின்

சேராமல் உழைப்போம்..

 

தோல்வியில் அல்ல

வெற்றியில் அல்ல

தேவையில் இருக்கிறது

ஒரு தேசத்தின் பிறப்பு

அதுவே வரலாறு.!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான வரிகள், தேசத்தின் பிறப்புக்கு எம்மால் இயன்றதை செய்வோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைகாசி-18

 

கோலமயில் தோகையிழந்தது

கூவும் குயில் குரல்வளை அறுந்தது

பாடும் மீன் ஓசையிழந்தது

தவளும் நண்டு கால்கள் முறிந்தது

முள்ளிவாய்க்காலில் இது நடந்தது.

 

காயமே ஆகாயம் என்றானது

காணாமல் போவது கணக்கில்லாமலானது

நம்பியவர்கள் கைவிட

நம்பியார்கள் கையோங்கியது.

 

பார்த்திருந்த ஆகாய மூன் கலங்கியது

பாங்கி மூன் ஜெனிவாவில் தூங்கியது

டெல்லியில் சொக்கத்தங்கம் மின்னியது

சென்னையில் கட்டுமரம் அதைத் துலக்கியது.

 

ஆறாறு ஆண்டுகள் சீறிப் பாய்ந்தது

அடிபட்டு மூச்சிழந்தது 

முறம்கொண்டு புலி விரட்டிய ஆச்சியது

பேரக்குஞ்சுகள் போரினில் சிதைந்தது.

 

ஓரிருவரா

ஆறுநான்கு உலகத்தார் ஒருங்கிணைந்து

தாக்கி அழிக்க

தாங்கி நிற்க

அதென்ன வெறும் வன்னிக்காடா

தசையும் இழையமும் பின்னிய மானுடம் தானே.

 

உள்ளத்தில் உரிமை வேட்கை

உடலினில் வேகம்

உடனிருந்தும்

கருவிகள் அங்கே கைவிட

சிங்கமேவிய போலிப்புனைவின் பிறப்புகள்

எதிரிகளாகி ஆங்கோர் கொடூரம் புரிந்தது

அடங்கியது தமிழ் ஈழ உயிர் மூச்சு.

 

அன்றில் இருந்து இன்றுவரை

ஆயிரம் சோகங்கள்

அடிமை வாழ்வில்

அடங்கி வாழ்வதே அழகாகிப் போனது.

 

எழும்பி நிற்க

கால்கள் இல்லை

பிடித்து நிற்க 

கரங்கள் இல்லை

இருந்தும்...

உள்ளே ஒரு ஏக்கம்

உறங்கித்தான் கிடக்கிறது..!!

 

ஆக்கம்: நான் (17.05.2020)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சை நெகிழவைக்கும் கவிதைகள்.........!   🌹

  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2020 at 11:26, nedukkalapoovan said:

காலக் கடிகாரத்தின்

கரம் ஒன்று ஒடிந்து

தசாப்தம் ஒன்று ஆனது தமிழுக்கு.

 

உண்மையும் வலியும் சுமந்த வரிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: shoes, tree and outdoor

 

கந்தகத்தால் கருக்கிப் போட்டாலும்

கண்களை பிதுக்கிப் போட்டாலும்

கரங்களை கட்டிப் போட்டாலும்

கால்களை உடைத்துப் போட்டாலும்

காயத்தை அழித்துப் போட்டாலும்

கல்லறைகளை கிளறிப் போட்டாலும்

காத்து நின்ற காட்டு மரங்கள் நன்றி சொல்லும்

கரிகாலன் படைகளுக்கு அகவணக்கம் செய்யும்..!!

 

ஆக்கம்: நான் (17.05.2020)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வலிகளுடன் மாட்டுதான் வாழ்கை கடந்து போகின்றது. இயன்ற அளவில் மக்களை முன்னேற்றி விடுவோம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரன் ஒரு ஜீவநதி.. தமிழீழத் திருநாட்டின் வற்றாநதி. தமிழர் தேசிய உணர்வின் திருநதி. அதற்கு இல்லை என்றும் மறைவு..!!
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.