Jump to content

வடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க?


Recommended Posts

spacer.png

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக ஓய்வு பெற்ற யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி நியமிக்கவுள்ளார் என நம்பகரமாகத் தெரிய வருகின்றது.

வடக்கு மாகாண ஆளுநராக தற்போது திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் இருக்கிறார். தேர்தல் காலம் வரைதான் அவர் பதவியில் இருப்பார். அவர் சுயவிருப்பின் பெயரில் ஓய்வு பெறவுள்ளார் என்பது நம்பகமாக அறிய வருகின்றது.

அடுத்து யார் என்பதில் குழப்பம் சிறிது இருந்தாலும், அவர் இராணுவ முகமே என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பதவிக்கு வந்த புதிதில் சகோதரர் மகிந்த ராஜபக்ச வழங்கிய அழுத்தத்தால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனக்கு நம்பகமான சிவில் அதிகாரிகளை தேடிப் பிடித்து பதவிகளில் அமர்த்தினார்.

இப்போது எந்தத் தலையீடும் இல்லாமல் இராணுவத்தினரைப் பதவிகளில் அமர்த்தி வருகின்றார். அவரின் 6 மாத ஆட்சிக் காலத்துக்குள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் 26 பேரை சிவில் நிர்வாக உயரதிகாரிகளாக நியமித்துள்ளார். இதனையே அவர் தொடரவுள்ளார்.

தேர்தல் முடிவடைந்ததும் அவரின் முதல் வேலையாக இருக்கப் போவது வடக்கு மாகாணத்துக்கு ஆளுநரை நியமிப்பதுதான். இந்தப் பதவிக்குப் பலர் முந்தியடித்தாலும், இருவர் தேர்வில் இருக்கிறார்கள்.

ஒருவர், இறுதிப் போர்க் காலத்தில் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்திரசிறி. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் வலது கையாக இருந்த இவர் ராஜபக்ச சகோதரர்களுக்கும் மிக வேண்டியவரானார். போர் முடிவடைந்தபின் ராஜபக்ச சகோதரர்களுக்கு விசுவாசமாக நடந்து கொண்டமையால் வடக்கு ஆளுநர் பதவி இலகுவாகக் கிடைத்தது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர், அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர் கிட்டத்தட்ட அந்த ஆட்சி ஆட்டம் கண்ட தருணத்தில் நாடு திரும்பினார். ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபயவுக்கு ஆதரவாக நின்றவர். இவர் இப்போது வடக்கு ஆளுநர் பதவியைக் குறி வைத்துக் காய்களை நகர்த்தியுள்ளார்.

ஆனால், இதே பதவிக்கு மற்றொரு மேஜர் ஜெனரலும் யாழ். மாவட்ட முன்னாள் தளபதியுமான ஹத்துருசிங்க போட்டியிடுகிறார். 1980 களில் இராணுவத்தில் சேர்ந்த இவர், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அதிக காலம் சேவையிலிருந்தார். 65 ஆவது படைப்பிரிவின் 652 ஆவது பிரிவான பீரங்கிப் படைக்குப் பொறுப்பாகவும் பின்னர் அந்தப் படைக்கு கட்டளையிடும் தளபதியாகவும் செயற்பட்டவர். இறுதியுத்தத்தில் முல்லைத்தீவில் படை நடத்தியவர்.

தமிழ் அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்ட இவரின் காலத்தில்தான் – போர் முடிந்த பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டம் முழுமையாக இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குள் கொண்டுவரப்பட்டது. இராணுவப் புலனாய்வை யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக செயற்படுத்தியதில் வெற்றி கண்ட இவரையே, இப்போது அரச உயர் மட்டம் அதிகம் விரும்புகிறது.

காரணம் வடக்கு முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் நினைவேந்தல்களை தடுக்கவும் பொருத்தமான ஒருவர் ஹத்துருசிங்க என்று அரச உயர்மட்டம் கருதுவதால் தேர்தல் முடிவடைந்ததும் வடக்கு ஆளுநராக அவர் நியமிக்கப்படும் அறிவிப்பு வெளியாகலாம்.

https://thamilkural.net/importantnews/40343/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி, பத்திரிகைகளில் வருமுன்னே நான் சொல்லிவிட்டேன்.

இவரல்ல.

வரப்போவது.... ஆறு மாதத்தில் ஓய்வு பெறும் தற்போதைய வடக்கு இராணுவத்தளபதி, ரூவான் வணிகசூரிய.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய திட்டம்?

hathurusinghe-2.jpgவடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஓய்வுபெற்ற யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்க வுள்ளார் என ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

வடக்கு மாகாண ஆளுநராக தற்போது திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் இருக்கின்றார். தேர்தல் காலம் வரைதான் அவர் பதவியில் இருப்பார். அவர் சுயவிருப்பின் பெயரில் ஓய்வுபெறவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல் வருமாறு;

அடுத்து யார் என்பதில் குழப்பம் சிறிது இருந்தாலும், அவர் இராணுவ முகமே என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பதவிக்கு வந்த புதிதில் சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய அழுத்தத்தால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு நம்பகமான சிவில் அதிகாரிகளை தேடிப் பிடித்து பதவிகளில் அமர்த்தினார்.

இப்போது எந்தத் தலையீடும் இல்லாமல் இராணுவத்தினரைப் பதவிகளில் அமர்த்தி வருகின்றார். அவரின் 6 மாத ஆட்சிக் காலத்துக்குள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் 26 பேரை சிவில் நிர்வாக உயரதிகாரிகளாக நியமித்துள்ளார். இதனையே அவர் தொடரவுள்ளார்.

தேர்தல் முடிவடைந்ததும் அவரின் முதல் வேலையாக இருக்கப் போவது வடக்கு மாகாணத்துக்கு ஆளுநரை நியமிப்பதுதான். இந்தப் பதவிக்குப் பலர் முந்தியடித்தாலும், இருவர் தேர்வில் இருக்கிறார்கள். ஒருவர், இறுதிப் போர்க் காலத்தில் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்திரசிறி. பீல்ட் மார்ல் சரத் பொன்சேகாவின் வலது கையாக இருந்த இவர் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் மிக வேண்டியவரானார். போர் முடிவடைந்தபின் ராஜபக்ச சகோதரர்களுக்கு விசுவாச மாக நடந்து கொண்டமையால் வடக்கு ஆளுநர் பதவி இலகுவாகக் கிடைத்தது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர், ஆஸ்திரேலியாவுக்குச் சென்றவர் கிட்டத்தட்ட அந்த ஆட்சி ஆட்டம் கண்ட தருணத்தில்நாடு திரும்பினார். ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவுக்கு ஆதரவாக நின்றவர். இவர் இப்போது வடக்கு ஆளுநர் பதவியைக் குறி வைத்துக்காய்களை நகர்த்தியுள்ளார். ஆனால், இதே பதவிக்கு மற்றொரு மேஜர் ஜெனரலும் யாழ். மாவட்ட முன்னாள் தளபதியுமான ஹத்துருசிங்க போட்டியிடுகிறார்.

1980 களில் இராணுவத்தில் சேர்ந்த இவர், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அதிக காலம் சேவையிலிருந்தார். 65 ஆவது படைப்பிரிவின் 652 ஆவது பிரிவான பீரங்கிப் படைக்குப் பொறுப்பாகவும் பின்னர் அந்தப் படைக்கு கட்டளையிடும் தளபதியாகவும் செயற் பட்டவர். இறுதியுத்தத்தில் முல்லைத்தீவில் படை நடத்தியவர். தமிழ் அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்ட இவரின் காலத்தில்தான் – போர் முடிந்த பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டம் முழுமையாக இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குள் கொண்டுவரப்பட்டது. இராணுவப் புலனாய்வை யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக செயற்படுத்தியதில் வெற்றிகண்ட இவரையே, இப்போது அரசஉயர் மட்டம் அதிகம் விரும்புகின்றது.

காரணம் வடக்கு முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் நினைவேந்தல்களை தடுக்கவும் பொருத்தமான ஒருவர் ஹத்துருசிங்க என்று அரச உயர்மட்டம் கருதுவதால் தேர்தல் முடிவடைந்ததும் வடக்கு ஆளுநராக அவர் நியமிக்கப்படும் அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரியவருகின்றது.

http://thinakkural.lk/article/43249

Link to comment
Share on other sites

சார்லஸ் அம்மையார் இருந்ததையும் இழந்துவிடடார்ப்போல. அவர் அமைச்சின் செயலராகவே இருந்திருக்கலாம். இருந்தாலும் அந்த அமைச்சும் ராணுவத்தால் நிரப்பட்டுவிட்ட்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.