Jump to content

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை: செல்பேசி செயலிகளை அழிக்கும் இந்தியர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை: செல்பேசி செயலிகளை அழிக்கும் இந்தியர்கள்

இந்திய பிரதமர் நரேந்திர மோதி - சீன அதிபர் ஷி ஜின் பிங் ஆகியோரின் சந்திப்பு சென்ற ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்தது.

 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தவறியதற்காக சீனாவின் மீது ஏற்கனவே கோபத்தில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள், தற்போது எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி அந்த நாடு மீதான தங்களது எதிர்ப்பை திறன்பேசிகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி வருகிறது. சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இந்திய மக்களிடையே முன்னெப்போதுமில்லாத வகையில், வாட்சாப் உள்ளிட்ட குறுஞ்செய்தி செயலிகள் வாயிலாக சீன எதிர்ப்பு பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

சீன பொருட்களை புறக்கணிக்க அழைப்பு

குறிப்பாக, 'சீனாவை சேர்ந்த அல்லது சீன நிறுவனங்களோடு கூட்டு வைத்துள்ள நிறுவனங்களுக்கு சொந்தமான செயலிகளை திறன்பேசியிலிருந்து நீக்குங்கள்' என்று அந்த பகிர்வுகள் வலியுறுத்துகின்றன.

மேலும், ட்விட்டரில் தினந்தினம் ட்ரெண்டாகி வரும் "BoycottChina", "BoycottChineseApp" மற்றும் "BoycottChineseProducts" உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் இந்திய மக்களிடையே நிலவி வரும் சீன எதிர்ப்பு மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் அவ்வப்போது சீன தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், தற்போது லட்சக்கணக்கான மக்கள் சீன திறன்பேசி செயலிகளை தங்களது அலைபேசிகளிருந்து நீக்குவது முற்றிலும் புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பயன்பாட்டாளர்களின் திறன்பேசியில் உள்ள சீன செயலிகளை மட்டும் நீக்குவதாக கூறப்பட்ட "Remove China Apps" என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டது.

ஆனால், கூகுளின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு மாறாக இந்த செயலி செயல்பட்டதால் ஜூன் 3ஆம் தேதி இது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

டிக்டாக், பப்ஜி மொபைல், ஷேர்ஐடி, செண்டர், காம் ஸ்கேனர், பியூட்டி பிளஸ், க்ளாஷ் ஆஃப் கிளான்ஸ், லைக் மற்றும் யுசி பிரௌசர் உள்ளிட்டவை மக்களின் சீன எதிர்ப்பு மனநிலையால் இலக்கு வைக்கப்பட்ட சில செயலிகளாகும்.

டிக்டாக் செயலியை இந்தியர்கள் தங்களது திறன்பேசியில் இருந்து நீக்கினால் அதன் உரிமையாளரான சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று வாட்சாப் பயனாளர்களிடையே பரவிய செய்தி இதன் வீரியத்தை அதிகரித்துவிட்டது.

சீனாவுக்கு பாதிப்பு ஏற்படுமா?

இந்தியாவை சேர்ந்த பெரும் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்புகளுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக மற்றும் முதலீடு சார்ந்த விடயங்களில் பிணைப்பு அதிகமாக உள்ளது.

 

எனவே, சீனாவுக்கு எதிரான இந்திய மக்களின் இதுபோன்ற எதிர்ப்பலைகள் நடைமுறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது கடினமே.

இந்தியாவில் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் 2.34 பில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக இந்திய அரசின் தரவுத்தளம் கூறும் நிலையில், மும்பையை சேர்ந்த தனியார் சந்தை மதிப்பீட்டு நிறுவனமோ இதன் மதிப்பு நான்கு பில்லியன் டாலர்களை கடந்துவிட்டதாக கூறுகிறது.

எனவே, சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட திறன்பேசி செயலிகளை நீக்கும் இந்திய மக்களின் செயல்பாடு உண்மையில் எத்தனை காலத்திற்கு நீடிக்கும், அதனால் ஏற்படும் தாக்கம் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/global-52918186

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, உடையார் said:

சீனாவுக்கு எதிரான இந்திய மக்களின் இதுபோன்ற எதிர்ப்பலைகள் நடைமுறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது கடினமே.

இந்தியாவில் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் 2.34 பில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக இந்திய அரசின் தரவுத்தளம் கூறும் நிலையில், மும்பையை சேர்ந்த தனியார் சந்தை மதிப்பீட்டு நிறுவனமோ இதன் மதிப்பு நான்கு பில்லியன் டாலர்களை கடந்துவிட்டதாக கூறுகிறது.

எனவே, சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட திறன்பேசி செயலிகளை நீக்கும் இந்திய மக்களின் செயல்பாடு உண்மையில் எத்தனை காலத்திற்கு நீடிக்கும், அதனால் ஏற்படும் தாக்கம் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எல்லைகளாற் பிழவுண்டு பொருண்மியத்தாற் கட்டுண்டு கிடக்கும் உலகில், மக்களின் மனநிலையைக்  கூட்டுக் கருத்தாக்கத்திற்குச் செல்ல முடியாதவாறு இந்தக் கூட்டுக் களவாணிப் பன்னாட்டுக் கொள்ளையர்கள் கட்டி வைத்துள்ளதன் விளைவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசலம் பூசியிருக்கலாம் செல்லிடப்  பேசியில், covid 19 இற்கு குடித்து போல. 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.