Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

9 மாகாணங்களும் பெளத்த – சிங்களவர்களுக்கே சொந்தமானவை; ஞானசார தேரர் அதிரடியாகக் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

9 மாகாணங்களும் பெளத்த – சிங்களவர்களுக்கே சொந்தமானவை; ஞானசார தேரர் அதிரடியாகக் கருத்து

June 19, 2020

ganasarar.jpg“9 மாகாணங்களும் பெளத்த – சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற நினைப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, பெளத்த மதத்துக்கென ஏற்கனவே இருக்கும் இடங்களுக்கு மேலாக ஓர் அடி நிலத்தைக்கூட கிழக்கில் எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதிக்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பில் ஞானசார தேரர் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள 9 மாகாணங்களும் பெளத்த – சிங்களவர்களுக்கே சொந்தமானவை. அதாவது முழு நாடும் பெளத்த – சிங்கள பூமி. இதை நான் பல தடவைகள் எடுத்துரைத்துள்ளேன். வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள் என்பதற்காக அந்த மாகாணங்களை தமிழ்பேசும் மக்களின் சொந்தத் தாயகமாக அங்கீகரிக்க முடியாது. வடக்கு, கிழக்கு நிலங்களை அவர்களின் சொந்த நிலங்களாகக் கருத முடியாது.

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளவத்தையில் தமிழ்பேசும் மக்கள் கூடுதலாக வாழ்கின்றார்கள் என்பதற்காக அந்தப்பிரதேசத்தை தமிழ்பேசும் மக்களுக்குச் சொந்தமானது என்று கூற முடியுமா? கிழக்கில் தொல்பொருள் இடங்களை அடையாளங்காண்பதற்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியை நாம் வரவேற்கின்றோம். அதேபோல் வடக்கிலும் ஜனாதிபதி செயலணி நிறுவப்பட வேண்டும். அங்குள்ள பெளத்த – சிங்கள புராதனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.

 

http://thinakkural.lk/article/47801

2 minutes ago, கிருபன் said:

9 மாகாணங்களும் பெளத்த – சிங்களவர்களுக்கே சொந்தமானவை; ஞானசார தேரர் அதிரடியாகக் கருத்து

கள்ளத்தோணில வந்த இவர் இதை பங்களாதேஷ்ல போய்யெல்லோ சொல்லணும்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Gowin said:
28 minutes ago, கிருபன் said:

மாகாணங்களும் பெளத்த – சிங்களவர்களுக்கே சொந்தமானவை; ஞானசார தேரர் அதிரடியாகக் கருத்து

கள்ளத்தோணில வந்த இவர் இதை பங்களாதேஷ்ல போய்யெல்லோ சொல்லணும்.

சகல சிங்கள அரசியல்வபதிகள் மனதில் உள்ளதை இவர் வெளிப்படையாக சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன புதிசா..

பண்டாரநாயக்கா - தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்து மொத்த சொறீலங்காவையும் பெளத்த சிங்கள மாக்கினார்.

அப்புறம் டட்லி..

சிறீமாவோ..

 ஜே ஆர்

பிரேமதாச..

டி பி விஜேதுங்கா..

சந்திரிக்கா..

மகிந்த..

மைத்திரி..

ரணில்..

கோத்தா..

இவர்களும் இதே நிலைப்பாடு தான்.

பெரும்பான்மை சிங்களவர்களிடம் பள்ளியில் இருந்து திணிக்கப்பட்டு வருவதும் இதுதான்.

ஆனால்.. உந்த பிக்கனிடம்.. டி என் ஏ ரெஸ்ட் எடுப்பம் வா என்று சொல்லுங்கள்... ஆள் துள்ளுற துள்ளில.. சொறீலங்கா இந்து சமுத்திரத்துக்குள் புதைஞ்சிடும். 😀

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளவத்தையில் தமிழ்பேசும் மக்கள் கூடுதலாக வாழ்கின்றார்கள் என்பதற்காக அந்தப்பிரதேசத்தை தமிழ்பேசும் மக்களுக்குச் சொந்தமானது என்று கூற முடியுமா?

அப்படி நாங்கள் யாரும் கூறவில்லையே, ஏன்? அது எங்களது இல்லை.  அங்கிருந்தவர்களை  ஒவ்வொரு இனக்கலவரத்தின் போதும், தமிழரை கப்பலில் ஏத்தி, உங்கட இடத்துக்கு போங்கோ என்று வடக்கு, கிழக்குக்கு அனுப்பி வைத்ததை மறந்து விட்டார். ஒரு தடவை கொழும்பில் தங்கியிருந்த தமிழரை இரவோடிரவாக ஏத்தி வவுனியாவில் கோத்தா இறக்கி விட்டு சர்வதேச அழுத்தம் காரணமாக அடுத்தநாள் மீண்டும் ஏத்தி கொண்டுபோய் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் விட்டார்கள். நீங்களே ஒத்துக்கொண்டதை கேக்கிறோம்.  இந்தக் கோமாளி  நல்லாய் குடு அடிச்சுப்போட்டு வீம்பு பேசுறார். கோத்தாவுக்கு விசர் எழும்ப இவர் காணாமற் போய்விடுவார். அதுவரை தலை கால் தெரியாமல் ஆடுவார்.

சொல்வதில் தப்பில்லை என்றே வைத்தாலும் இது எப்படி முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்கள்.?🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.