Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளைஞனை கொன்ற இராணுவத்துக்கு எதிராக வீதி மறியல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞனை கொன்ற இராணுவத்துக்கு எதிராக வீதி மறியல்!

FB_IMG_1592663374790.jpg?189db0&189db0

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று (20) மாலை மணல் ஏற்றச் சென்ற கெற்பேலியை சேர்ந்த இளைஞன் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ-9 வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட இளைஞனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

 

https://newuthayan.com/இளைஞனை-கொன்ற-இராணுவத்துக/

முகமாலையில் இராணுவத்தால் இளைஞன் சுட்டுக்கொலை!

105020783_264459248317765_8135242593926741185_n_1080-copy-768x576-1.jpg?189db0&189db0

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று (20) மாலை 6.15 மணியளவில் மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிாசூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 1 மணி நேரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் மருத்துவர் இல்லாமையால் காத்திருந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இதன்போது தென்மராட்சி – கெற்பேலியை சேர்ந்த திரவியம் இராமலிங்கம் (24-வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

தற்போது பளை வைத்தியசாலை வளாகத்தில் பொதுமக்கள் கூடியுள்ளதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/முகமாலையில்-இராணுவத்தா/

 

சுட்டு கொலை செய்வதும் தவறு, தொடர்ந்து மண் கடத்துவதும் தவறு. 

இந்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலரும் மணல் கடத்தலுக்கு சென்றிகளாக பயன்படுத்த படுகின்றனர். 

9 hours ago, உடையார் said:

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று (20) மாலை 6.15 மணியளவில் மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிாசூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆயுதம் இல்லாத அமெரிக்க கறுப்பினத்தவரை காவல்துறை கொன்றால் அது உலக செய்தி 

ஆயுதம் இல்லாத ஈழத்தமிழரை  சிங்கள இராணுவம் கொன்றால் ? அது ......

முகமாலையில் துப்பாக்கி சூட்டிற்குள்ளான இளைஞன் தொடர்பில் இராணுவ ஊடகப்பேச்சாளர் தற்போது வெளியிட்டுள்ள தகவல்!

நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத பகுதிக்குள் பிரவேசித்தவர்களை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்த போதே கிளிநொச்சி முகமாலை பகுதியில் இராணுவத்தினரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

முகமாலைப் பகுதியில் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் பலியாகியமை தொடர்பில் வினவிய போதே அவர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி பளை முகமாலை பகுதியில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பளை கெற்பலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய திரவியம் இராமகிருஸ்ணன் என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பளை வைத்தியசாலை வளாகத்தில் பொதுமக்கள் கூடியுள்ளதால் பதற்றமான நிலை ஏற்பட்டிருந்ததாகவும் அங்குள்ள எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 1 மணி நேரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் மருத்துவர் இல்லாமையால் காத்திருக்க நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டை கண்டித்து பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏ 9 வீதியை மறித்து போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமரத்னவை ஐ.பி.சி தமிழ் தொடர்புகொண்டு வினவியது.

அதன் போது முகமாலை பகுதியில் உயர்பாதுகாப்பு அற்ற சுமார் 6.5 கிலோமீற்றர் பகுதி நிலக்கண்ணி வெடி அகற்றப்படாத பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதிக்குள் சிலர் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வு உள்ளிட்ட ஏனைய சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் ரோந்து சென்ற படையினர் அவர்களை கைதுசெய்ய சென்ற போது மோட்டார் சைக்களில் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும் அதன் போதே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/145578

முகமாலை துப்பாக்கிச்சூடு பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு வடக்கு ஆளுநர் உத்தரவு

முகமாலை காரைக்காடு குளப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பாக பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மேலும் தெரிவிக்கையில், “முகமாலை காரைக்காடு குளப்பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உட்பட அதனோடு ஒட்டியதாக நிகழ்ந்த விடயங்கள் தொடர்பாக அதிக கரிசனை கொண்டிருக்கின்றேன்.

அச்சம்பவம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பட்டு வருவதையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.

இந்நிலையில், நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக வடக்க மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளேன்.

அச்சம்பவம் தொடர்பாக பூரணமான விசாரணையை முன்னெடுத்து முழுமையான அறிக்கையொன்றை அளிக்குமாறும் கோரியுள்ளேன். அத்துடன் வடக்கு மாகாண மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அமைதியை சீர்க்குலையக்கூடாது என்பதையும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/முகமாலை-துப்பாக்கிச்சூட/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

ஆயுதம் இல்லாத அமெரிக்க கறுப்பினத்தவரை காவல்துறை கொன்றால் அது உலக செய்தி 

ஆயுதம் இல்லாத ஈழத்தமிழரை  சிங்கள இராணுவம் கொன்றால் ? அது ......

அமெரிக்காவின் CNN, MSNBC, FOX ஆகிய செய்தி நிறுவனங்கள் இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் அமெரிக்க கிராமங்களில் இருந்து இந்த செய்திகளை ஒளிபரப்புகின்றன. உலக மக்கள், நீங்கள் உட்பட, இந்த செய்திகளை கேட்கிறீர்கள், படிக்கிறீர்கள். ஆகவே அது உலக செய்தி.

  1. கிளிநொச்சி, முகமாலையில் இருந்து ஈழத்தமிழர் கொல்லப்பட்டதை  வெளியிட்ட ஈழத்து செய்தி நிறுவனங்கள் எவை, ஐ.பி.சி. மட்டுமே மேற்படி செய்தியில் உள்ளது?
  2. அவற்றின் (ஐ.பி.சி. உட்பட) செய்திகளை ஆர்வத்துடன் படிக்கும்/கேட்கும் மக்கள் எத்தனை நாடுகளில் வாழ்கிறார்கள்?
  3. ஒவ்வொரு நாட்டிலும் அண்ணளவாக, எத்தனை ஆயிரம் மக்கள்  மேற்படி ஈழத்து செய்தி நிறுவனங்களின் செய்திகளை ஆர்வத்துடன் கேட்கிறார்கள்?
  4. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யலாம்?

மேற்படி அமெரிக்க செய்தி நிறுவனங்கள், தமது செய்திகளை கேட்கும்/படிக்கும் மக்களின் தொகையை அதிகரிக்க பெரும் முதலீடு செய்து, கடும் உழைப்பால் அதை சாதித்துள்ளன. ஈழத்து செய்தி நிறுவனங்களும் அவ்வாறு செய்தால், ஈழத்து செய்திகளும் உலக செய்திகளாகும். தமிழ்நெற் ஆரம்பிக்கப்ட்ட காலத்தில் இவ்வாறான கருத்தை வழங்கி இருந்தேன். ஆனால், அவர்களின் நோக்கம் வேறாக இருந்தது.

 

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, போல் said:

அவர்களை கைதுசெய்ய சென்ற போது மோட்டார் சைக்களில் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும் அதன் போதே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்

நல்லவேளை! கைது செய்ய முயன்றபோது, இராணுவத்தினரை நோக்கி சுட்டார்கள். இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் ஆயுததாரி உயிரிழந்தார், என்று சொல்லவில்லை.  வழமையாக இப்படித்தான் கதையை முடிக்கிறவர்கள். இன்னொரு செய்தியாளர் கூட்டத்தில் அப்பிடி வந்தாலும் வரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.