Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவமயப்படுத்தலால் ஏற்பட்ட விளைவு…!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவமயப்படுத்தலால் ஏற்பட்ட விளைவு…!

625.500.560.350.160.300.053.800.900.160.90-8-e1592978585206.jpg?189db0&189db0

 

தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ மயப்படுத்தலால் ஐ.நாவின் பார்வைக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.நா. விசேட அறிக்கையாளரின் வருடாந்த அறிக்கை அமைந்துள்ளது.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

இலங்கையில் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும்கூட வடக்கு, கிழக்கு பகுதிகள் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். இத்தகைய கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் அவநம்பிக்கை மற்றும் அச்சமான சூழலை உருவாக்குகின்றது என ஐ.நா. விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பித்துள்ள வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் சந்திரிகா, மங்கள ஆகியோர் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி இடம்பெறுகின்றதெனில் இராணுவ மயப்படுத்தல் தேவையே இல்லை. போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் தீவிர இராணுவ மயப்படுத்தல் ஏன் என்று ஐ.நா. கேள்வி எழுப்புவதில் நியாயம் இருக்கின்றது.

போரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சுதந்திரமாக வாழ வழி விட வேண்டும். அதைவிடுத்து அவர்களைப் பழிவாங்கும் நோக்கும் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணித்து அச்சுறுத்துவது அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது சட்டமீறல் அல்ல. ஆனால், அதை இராணுவத்தைக் கொண்டு அடக்க முயல்வதுதான் பாரிய சட்ட மீறலாகும். இதை ஆட்சியிலுள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றனர்.

https://newuthayan.com/இராணுவமயப்படுத்தலால்-ஏற/

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

போரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சுதந்திரமாக வாழ வழி விட வேண்டும். அதைவிடுத்து அவர்களைப் பழிவாங்கும் நோக்கும் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணித்து அச்சுறுத்துவது அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

இதை ஆட்சியிலுள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றனர். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

காலம் கடந்த ஞானம். அன்றிச் சுடலை ஞானம் என்றும் கூறலாம்.

ஆட்சியில் இல்லாதபோதுதான் பலருக்குப் பலதும் புரிகிறது. இதனை உங்கள் வருங்கால அரசியல் செய்ய வருவோருக்குப் போதியுங்கள் அவர்களாவது ஞானம்பெறட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Paanch said:

காலம் கடந்த ஞானம். அன்றிச் சுடலை ஞானம் என்றும் கூறலாம்.

ஆட்சியில் இல்லாதபோதுதான் பலருக்குப் பலதும் புரிகிறது. இதனை உங்கள் வருங்கால அரசியல் செய்ய வருவோருக்குப் போதியுங்கள் அவர்களாவது ஞானம்பெறட்டும்.

மீண்டும் ஆட்சியைப் பிடிக்க போடும் வேடம். இதைத்தான் முதலைக் கண்ணீர் வடித்தல் என்பது. நாம் நம்பி வாக்குபோடுவோம் என்று நினைக்கலாம். இவா முதல் தேர்தலில் நிக்கும்பொழுது ஆயுதத்துக்கு தந்தையையும், கணவனையும் பறிகொடுத்தேன், உங்களின் வேதனை எனக்குப் புரியும் என்று வந்த தேவதை, செய்த ஊழியாட்டம் போதும். எங்கள் சொந்த இடங்களை அழித்து, அகதிகளாக அலைய வைத்த முதற் பெருமை இவவையே சேரும். மாமனாருடன் சேர்ந்து கொஞ்ச ஆட்டமே ஆடினவா. இப்ப அடக்கி வாசிக்கிறா. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

காலம் கடந்த ஞானம். அன்றிச் சுடலை ஞானம் என்றும் கூறலாம்.

ஆட்சியில் இல்லாதபோதுதான் பலருக்குப் பலதும் புரிகிறது. இதனை உங்கள் வருங்கால அரசியல் செய்ய வருவோருக்குப் போதியுங்கள் அவர்களாவது ஞானம்பெறட்டும்.

 

24 minutes ago, satan said:

மீண்டும் ஆட்சியைப் பிடிக்க போடும் வேடம். இதைத்தான் முதலைக் கண்ணீர் வடித்தல் என்பது. நாம் நம்பி வாக்குபோடுவோம் என்று நினைக்கலாம். இவா முதல் தேர்தலில் நிக்கும்பொழுது ஆயுதத்துக்கு தந்தையையும், கணவனையும் பறிகொடுத்தேன், உங்களின் வேதனை எனக்குப் புரியும் என்று வந்த தேவதை, செய்த ஊழியாட்டம் போதும். எங்கள் சொந்த இடங்களை அழித்து, அகதிகளாக அலைய வைத்த முதற் பெருமை இவவையே சேரும். மாமனாருடன் சேர்ந்து கொஞ்ச ஆட்டமே ஆடினவா. இப்ப அடக்கி வாசிக்கிறா. 

நரி இராசாவாகினாலும் மார்கழி மாதக்குளிருக்கு ஊழையிடும் என்றொரு பழமொழியுண்டு. இது தேர்தல் காலமாதலால் சிங்கங்கங்களாக வேடமனிந்து நின்கின்றன. பாவமிந்த மங்கள இங்குமின்றி அங்குமின்றி அரசியல் அலைவாகத் திரிகிறார். ஏன் இவர்களிடம் உண்மையான சனனாயகப் பண்பிருந்தால் வெறுமனே அரசை வெத்துவேட்டு விமர்சனம் செய்வதைவிடுத்து தமிழரின் நீதிக்காகக் குரல் கொடுக்கலாம். அதேவேளை சந்திரிகா அம்மையா தனதுஆட்சிக்  காலத்திற் செய்தபடுகொலைகளை முன்னுதாரணமாக ஒத்துக்கொண்டு தமிழரிடம் மன்னிப்புக் கேட்பதோடு அரசிடம் பேசி தமிழினத்துக்கான  இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுத்தால் நம்பலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nochchi said:

சந்திரிகா அம்மையா தனதுஆட்சிக்  காலத்திற் செய்தபடுகொலைகளை முன்னுதாரணமாக ஒத்துக்கொண்டு தமிழரிடம் மன்னிப்புக் கேட்பதோடு அரசிடம் பேசி தமிழினத்துக்கான  இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுத்தால் நம்பலாம். 

சிங்களவனின் அரசியலுக்கு மூலதனமே தமிழரும், இனப்பிரச்சனையுமே. அதைத் தீர்த்தால் எப்படி அரசியல் செய்வது, கொள்ளை அடிப்பது, வயிறு வளர்ப்பது?  

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nochchi said:

நரி இராசாவாகினாலும் மார்கழி மாதக்குளிருக்கு ஊழையிடும் என்றொரு பழமொழியுண்டு. 

பொருத்தமான....👍🏼அருமையான பழமொழி.... நொச்சி. இந்தப் பழமொழியை இப்போ தான்... முதன் முதலாக கேள்விப் படுகின்றேன். 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.