Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது கருத்தை பூதாகரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை - கருணா

Featured Replies

In இலங்கை     June 25, 2020 2:03 pm GMT     0 Comments     1489     by : Vithushagan

தேர்தல் பிரசாரத்திற்காக நான் தெரிவித்த கருத்துக்களை பூதாகரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை என கருணா அம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய அவர் 7 மணிநேர நீண்ட வாக்குமூலம் அளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “நான் நடந்த உண்மையைக் கூறியிருக்கிறேன். எதுவித தவறான கண்ணோட்டத்திலும் எதுவும் நான் சொல்லவில்லை. எவரையும் புண்படுத்தும் விதத்திலும் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

இந்த நாட்டு மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். எங்களுடைய தேர்தல் பிரசாரம் தொடரும். ஆனால் எதுவித வன்முறையும் இனத்துவேசமும் இல்லாத விதத்தில் தேர்தல் பிரசாரத்தை கொண்டு செல்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது கருத்து தொடர்பாக நாட்டின் பல பாகங்களிலும் அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

அது தவறான விடயம். அந்தக் காலத்தில் நடந்த விடயத்தை ஒரு உவமைக்காக, மேடைப் பிரசாரமாக, தேர்தல் பிரசாரமாகக் கூறினேன். ஆகவே, இதை பூதாகரமாக்குவதில் எதுவித அர்த்தமும் இல்லை.

எங்களுடைய அரசாங்கத்திற்கு சிங்கள மக்களின் வாக்குகளைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சினையே இது. ஆகவே, இதை நாங்கள் முறியடித்து வெற்றியடைவோம்.

அம்பாறை மாவட்டத்தில் நாங்கள் ஒரு தனித் தமிழ் கட்சியாகப் போட்டியிடுகின்றோம். என்னைப் பொறுத்தவரையில் எந்தவொரு கட்சியினரையோ, மத குருமாரையோ புண்படுத்தும் வகையில் எதுவும் கதைக்கவில்லை.

அதேநேரத்தில், இராணுவத்தையும் நாங்கள் குறைத்துக்கூற விரும்பவில்லை. எங்களது இராணுவம் பல சாதனைகளைப் படைத்து, அனர்த்தங்கள் வருகின்ற போது மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற இராணுவம். அந்த வகையில் நான் அதனை ஒரு நாளும் குறைத்துக் கூறவில்லை” எனத்  தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/எனது-கருத்தை-பூதாகாரமாக்/

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேசியது தேர்தல் பிரச்சாரத்துக்கே – இவ்வாறு கூறுகிறார் கருணா!

karuna-6-720x450-1.jpg?189db0&189db0

அந்தக்காலத்தில் நடந்த விடயத்தை தான் தேர்தல் பிரச்சாரத்துக்காக பேசினேன். அதை பூதாகரமாக்குவது அர்த்தமற்றது என்று கருணா எனும் வி.முரளிதரன் தெரிவித்தார்.

இன்று (25) சிஜடியில் ஆஜராகி போரின் போது புலிகளுடன் இருந்து இராணுவ வீரர்களை கொன்றமை தொடர்பில் வாக்குமூலமளித்த பின்னர் ஊடகங்களில் பேசும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்தக்காலத்தில் நடந்த விடயத்தை தான் தேர்தல் பிரச்சாரத்துக்காக பேசினேன். அதை பூதாகரமாக்குவது அர்த்தமற்றது என்று கருணா எனும் வி.முரளிதரன் தெரிவித்தார்.

இன்று (25) சிஜடியில் ஆஜராகி போரின் போது புலிகளுடன் இருந்து இராணுவ வீரர்களை கொன்றமை தொடர்பில் வாக்குமூலமளித்த பின்னர் ஊடகங்களில் பேசும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும்,

‘நான் நடந்த உண்மையைக் கூறியிருக்கின்றேன். எதுவித தவறான கண்ணோட்டத்திலும் எதுவும் நான் கொடுக்கவில்லை. எவரையும் புண்படுத்தும் விதத்திலும் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

இந்த நாட்டு மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். எங்களுடைய தேர்தல் பிரசாரம் தொடரும். ஆனால் எதுவித வன்முறையும் இனத்துவேசமும் இல்லாத விதத்தில் தேர்தல் பிரசாரத்தை கொண்டு செல்வோம்.

எனது கருத்து தொடர்பில் நாட்டின் பல பாகங்களிலும் அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அது தவறான விடயம். அந்தக் காலத்தில் நடந்த விடயத்தை ஒரு உவமைக்காக, மேடைப் பிரசாரமாக, தேர்தல் பிரசாரமாகக் கூறப்பட்ட விடயம். ஆகவே, இதை பூதாகரமாக்குவதில் எதுவித அர்த்தமும் இல்லை. எங்களுடைய அரசாங்கத்திற்கு சிங்கள மக்களின் வாக்குகளைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சினை இது. ஆகவே, இதை நாங்கள் முறியடித்து வெற்றியடைவோம்.

அம்பாறை மாவட்டத்தில் நாங்கள் ஒரு தனித் தமிழ் கட்சியாகப் போட்டியிடுகின்றோம். என்னைப் பொறுத்தவரையில் எந்தவொரு கட்சியினரையோ, எந்தவொரு மத குருமார்களையோ புண்படுத்துகின்ற மாதிரி எதுவும் கதைக்கவில்லை. அதேநேரத்தில், இராணுவத்தையும் நாங்கள் குறைக்க விரும்பவில்லை. எங்களது இராணுவம் பல சாதனைகளைப் படைத்து பல அனர்த்தங்கள் வருகின்ற போது மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற இராணுவம். அந்த வகையில் நான் அதனை ஒரு நாளும் குறைத்து எதனையும் கூறவில்லை.’ – என்றார்.

 

https://newuthayan.com/தான்-பேசியது-தேர்தல்-பிர/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

எனது கருத்து தொடர்பில் நாட்டின் பல பாகங்களிலும் அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அது தவறான விடயம். அந்தக் காலத்தில் நடந்த விடயத்தை ஒரு உவமைக்காக, மேடைப் பிரசாரமாக, தேர்தல் பிரசாரமாகக் கூறப்பட்ட விடயம். ஆகவே, இதை பூதாகரமாக்குவதில் எதுவித அர்த்தமும் இல்லை. எங்களுடைய அரசாங்கத்திற்கு சிங்கள மக்களின் வாக்குகளைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சினை இது. ஆகவே, இதை நாங்கள் முறியடித்து வெற்றியடைவோம்.

அம்பாறை மாவட்டத்தில் நாங்கள் ஒரு தனித் தமிழ் கட்சியாகப் போட்டியிடுகின்றோம். என்னைப் பொறுத்தவரையில் எந்தவொரு கட்சியினரையோ, எந்தவொரு மத குருமார்களையோ புண்படுத்துகின்ற மாதிரி எதுவும் கதைக்கவில்லை. அதேநேரத்தில், இராணுவத்தையும் நாங்கள் குறைக்க விரும்பவில்லை. எங்களது இராணுவம் பல சாதனைகளைப் படைத்து பல அனர்த்தங்கள் வருகின்ற போது மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற இராணுவம். அந்த வகையில் நான் அதனை ஒரு நாளும் குறைத்து எதனையும் கூறவில்லை.’ – என்றார்.

கொரானவை விட பயங்கரமான கும்மான் 
என்ன இப்படி பம்முறார் ...CID ட்ரீட்மெண்ட் அப்பிடி,
அப்பிடியே போய் ராஜபக்ஷ சகோதரர்கள் மற்றும் சவேந்திர சில்வாவின் பூட்ஸ் கால்களை நக்கி அதை புகைப்படமாக  வெளியிட்டால் உங்களை சிறந்த தேசியவாதியாக சிங்கள மக்கள் நம்புவார்கள், தேர்தலுக்கும் உதவும்    
 

11 hours ago, அக்னியஷ்த்ரா said:

ராஜபக்ஷ சகோதரர்கள் மற்றும் சவேந்திர சில்வாவின் பூட்ஸ் கால்களை நக்கி அதை புகைப்படமாக  வெளியிட்டால் உங்களை சிறந்த தேசியவாதியாக சிங்கள மக்கள் நம்புவார்கள், தேர்தலுக்கும் உதவும்    

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.