Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13வது திருத்தத்தை கைவிடுவது குறித்து அரசியல் கட்சிகள் ஆராயவேண்டும் – மிலிந்த மொராகொட

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13வது திருத்தத்தை கைவிடுவது குறித்து அரசியல் கட்சிகள் ஆராயவேண்டும் – மிலிந்த மொராகொட

June 28, 2020

அரசியல் கட்சிகள் 13 வது திருத்தத்தையும் மாகாணசபை முறையையும் கைவிடுவது குறித்து சிந்திக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொராகொட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாகாணசபை முறையை நீக்கவேண்டும்,அதிகாரங்களை மறுசீரமைக்கப்பட்ட மாநாகர சபைகள்,நகரசபைகள் போன்ற உள்ளுராட்சி அமைப்புகளிற்கு வழங்கவேண்டும் என அவர் கருத்துவெளியிட்டுள்ளார்.

northern-pro-council-300x162.jpg

 

இந்த அமைப்புகள் மக்களிற்கு நெருக்கமாக உள்ளதன் காரணமாக சமூகமட்டத்தில் மக்களிற்கு எழும் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கான சிறந்த நிலையில் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணும் நோக்கத்துடன் 1987 இல் 13வது திருத்தம் நடைமுறைக்கு வந்தபோதிலும் மாகாணசபைகள் மிதமிஞ்சியவை, செலவுமிக்கவை,பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை- திறமையற்றவை என்பது நிருபிக்கப்பட்டுள்ளது என மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.

 

Mr-Milinda-Moragoda-300x200.jpg

 

எமது சமூகத்தில் இனரீதியான, மதரீதியான,பிராந்திய ரீதியிலான துருவமயப்படுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக சாத்தியமான ஜனநாயக வழிமுறைகளை உருவாக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நோக்கத்தினை அடைவதற்கான பலனுள்ள வழி மதம் இனம் பிராந்திய பன்முகதன்மை போன்ற பிரச்சினைகளிற்கு தீர்வைகாணக்கூடிய மேல்சபையை உருவாக்குவதே என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகள் குறித்த தங்களது நிலைப்பாட்டினை அரசியல்கட்சிகள் தெளிவாக தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைக்கவேண்டும் என மிலிந்த மொராகொட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/49859

8 hours ago, கிருபன் said:

13வது திருத்தத்தை கைவிடுவது குறித்து அரசியல் கட்சிகள் ஆராயவேண்டும் – மிலிந்த மொராகொட

இந்தியன் கையால ஆகாதவன் என்டு விளங்கினபடியா மிலிந்த சொறிஞ்சு பாக்கிறார்!

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Rajesh said:

இந்தியன் கையால ஆகாதவன் என்டு விளங்கினபடியா மிலிந்த சொறிஞ்சு பாக்கிறார்!

 

இந்திய - அமெரிக்கக் கூட்டு 2009இல் தமிழினத்தின் காவலரணாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கைத் தீவிலிருந்து அகற்றியதோடு நடைமுறை அரசை நீக்கி ஒற்றைமைய அதிகார சக்தியாகச் சிங்கள அரசை மாற்றியதன் வழியாக இலங்கையரசுக்குச் செல்லாக்காசென்பதை கடந்து செல்லும் காலங்கள் பதிவு செய்து செல்லப்போகிறது. அதேவேளை;   சீனாவைப்பின்பற்றி கொங்கொங் போன்றதொரு நகர்வுக்கான அடித்தளமிடுகிறது. சிங்களம்.  தனித்துவமான ஆட்சியதிகார முறையை ஒளித்து நேரடியாட்சியின் மூலம் கட்டுபடுத்தும் நிலையைப்போல் இங்கும் எந்த அதிகாரமும் அற்ற மாகாணசபை முறையை ஒழித்துவிடச் சிந்திக்கிறது சிங்களம்.அதனொரு நகர்வே மிலிந்த மொறகொடவின் கூற்று. இவரது கூற்றுத் தொடர்பாக எந்தத் தமிழ் அரசியல்வாதியாவது எதிர்வினையாற்றினார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, nunavilan said:

 

 

கேட்டுதே கூத்தமைப்பு! கரடியே காறித்துப்பிப்போட்டுது.😎

Edited by குமாரசாமி
கலோ கூத்தமைப்பு! கரடியே காறித்துப்பிப்போட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கேட்டுதே கூத்தமைப்பு! கரடியே காறித்துப்பிப்போட்டுது.😎

இதென்ன எங்களுக்கு புதிசே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.