Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ – காணி பதிவை இலத்திரனியல் முறைமையில் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈ – காணி பதிவை இலத்திரனியல் முறைமையில் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

July 1, 2020

காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளைத் தவிர்ப்பதற்கும் பதிவு பொறி முறைமையைத் துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.

காணிப் பதிவின் போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் தாமதங்கள் காரணமாகப் பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

 

காணி ஆணையாளர் திணைக்களம், காணி உரித்துகள் நிர்ணய நிறுவனம், நில அளவைத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களம் ஒன்றிணைந்த வகையில் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவு செய்யும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவு செய்தல் நடவடிக்கை தொடர்பாக நேற்று 30 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

காணிப் பதிவுசார் நிறுவனங்களை ஒன்றிணைப்பதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வனஜீவராசிகள், வன பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சையும் ஒன்றிணைத்து குழுவொன்றை நியமித்து இவ்வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

gotha.jpg

ஈ – காணி (இலத்திரனில் முறைமை) பதிவின் ஊடாக உறுதிப்பத்திரம், காணி பொழிப்பு அறிக்கை கணினிமயப்படுத்தப்படும். பொழிப்பு அறிக்கை பெற்றுக்கொள்ளும்போது கணினிமயப்படுத்தப்பட்ட ஆவணத்தை வழங்குவதற்கும் சட்டத்தரணிகளுக்கு, பத்திரத்துறை பதிவாளர்களுக்கு மற்றும் எந்தவொரு நபருக்கு அல்லது அரச நிறுவனத்திற்கு இணையவழி மூலம் காணி பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் மூலம் காணி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

 

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்துடன் (ICTA) ஒன்றிணைந்து ஆகஸ்ட் மாதமளவில் இவ்வேலைத்திட்டத்தை மக்கள் மயப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு ஈ – காணி (இலத்திரனில் முறைமை)யின் கீழ் பதிவு செய்யும் காணிகளுக்கு இலத்திரனியல் கணக்குப் புத்தகம் ஒன்றையும் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க, பதிவாளர் நாயகம் என்.சி.வித்தான, காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சி.எம்.ஹேரத், காணி உரித்துகள் நிர்ணய ஆணையாளர் நாயகம் ஜி.எம்.எச்.பிரியதர் ஷனி, நில அளவையாளர் நாயகம் ஏ.எல்.எஸ்.சி. பெரேரா இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) தலைவர் ஜயந்த த சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
 

http://thinakkural.lk/article/50733

4 hours ago, கிருபன் said:

வனஜீவராசிகள், வன பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சையும் ஒன்றிணைத்து குழுவொன்றை நியமித்து இவ்வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

மோசமான பேர்வழிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

கெதியா யாழ்ப்பாண தேச வழமைச் சட்டத்தில் கை வைப்பார்கள். ☹️

தேச வழமைச் சட்டம் தொடர்பாக விளக்கம் தருவதற்கு எங்கள் கோசான் சே இருந்தால் உதவியாக இருந்திருக்கும்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கெதியா யாழ்ப்பாண தேச வழமைச் சட்டத்தில் கை வைப்பார்கள். ☹️

தேச வழமைச் சட்டம் தொடர்பாக விளக்கம் தருவதற்கு எங்கள் கோசான் சே இருந்தால் உதவியாக இருந்திருக்கும்.🙂

தேசவழமை சட்டம் இலங்கையின் சட்டத்தினுள் இடம் பிடித்துள்ள ஒன்று. அது ஒரு common sense இணை அடிப்படையாக கொண்டதாலேயே டச்சு காரர்கள் அதனை சட்டமாக்கினார்கள்.

அதாவது உங்களுக்கு ஒரு காணி, உங்கள் பரம்பரை சொத்து, உள்ளது. நீங்கள் அதனை விற்க முடிவு செய்தால், தேசவழமை சட்டப்படி, முதலில் உங்கள் சகோதரங்களுக்கோ, வாங்கக்கூடிய உறவினர்களுக்கோதான் முதலில் offer பண்ணனும். பரம்பரை சொத்து, குடும்பத்தின் கையினை விட்டு போகக்கூடாது என்று ஒரு உறவு நினைத்தால் அதில் தவறு இல்லை என்பதே இந்த சட்டத்தின் அடிப்படை.

யாரும் வாங்க முன்வராவிடில் வெளியே விற்பீர்கள்.

அப்படி ஒருத்தருக்கும் சொல்லாமல் விற்பனை செய்தால், உங்கள் உறவு கோர்ட்டுக்கு போய், உங்களுக்கு வந்த பணத்தினை நான் தருகிறேன். தேசவழமை சட்டப்படி எனக்கு அந்த சொத்து வரவேண்டும் என்றால், நீங்கள் என்ன விலைக்கு வித்தீர்களோ, அந்த அளவு பணம் உங்களிடம் வாங்கியவருக்கு போக, ஆதனம் உங்கள் உறவுக்கு போகும். இது நீங்கள் நீதிமன்று போகாமலே நடக்கும்.

இதில நடைமுறை சிக்கல் என்னவெண்டால், முத்திரை வரியை குறைக்க, நீங்கள், 100 ரூபாவுக்கு வித்ததை, 40 ரூபா என்று சொல்லி பதிந்து இருப்பியள்.

வாங்கினர்.... திருடனுக்கு தேள் கொட்டினமாதிரி... வந்து உங்களிடம் நிற்பார்... மிச்சக்காசை வை என்று.

நீங்கள் தான் காசை இழந்தவராக முடியும். ஆகவே இந்த வேலையினை, உறவுக்குள் கொடுப்பதன் மூலம், கச்சிதமாக செய்து முடிக்கலாம். கோட்டு பிரச்னையும் வராது.

இந்த சட்டத்தில் கை வைக்காமல் இருப்பதன் காரணம், சட்டம் மாத்தினாலும், நீங்கள் உங்கள் உறவுக்கு தான் விக்கபோகிறீர்கள் என்பதனை எப்படி தடுப்பது?

சட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நீங்கள் யாருக்கு விற்கப்போகிறீர்கள் என்பது உங்கள் முடிவு.

சட்டம் இருப்பதால், உங்கள் உறவுகள் இடையே யாருக்கு வியாபாரம் செய்வது என்பதும் உங்கள் முடிவு தான். 

ஆனாலும், வெளியில் கொடுத்தால் கூடுதலான பணம் வரும் என்றால், நீங்கள் உறவுகளுடன் சமரசம் செய்து கொள்வீர்கள். அவர்களும் ஒத்துழைப்பார்கள். இதுதான் நிதர்சனம்.

சட்டம் மாத்தினால், ஒரு முஸ்லீமுக்கோ, சிங்களவருக்கோ விற்பனை செய் என்று சொல்ல முடியாதல்லவா. 

அதிலும் பார்க்க முக்கியமாக, ஒரு குறித்த சமூகம், தம்மிடையே வேறு சமூகத்தவர் வந்து இருப்பதனை விரும்புவதில்லை. ஆகவே அவர்கள், எப்படியாவது அந்த ஆதனம், வெளியே போகக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி, தமக்குள் வாங்கிக் கொள்வர். ஆகவே சட்டத்தினை மாத்தினாலும் பிரயோசனம் இல்லை என்பதாலேயே, அதில் கை வைக்காமல் இருக்கிறார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

தேசவழமை சட்டம் இலங்கையின் சட்டத்தினுள் இடம் பிடித்துள்ள ஒன்று. அது ஒரு common sense இணை அடிப்படையாக கொண்டதாலேயே டச்சு காரர்கள் அதனை சட்டமாக்கினார்கள்.

அதாவது உங்களுக்கு ஒரு காணி, உங்கள் பரம்பரை சொத்து, உள்ளது. நீங்கள் அதனை விற்க முடிவு செய்தால், தேசவழமை சட்டப்படி, முதலில் உங்கள் சகோதரங்களுக்கோ, வாங்கக்கூடிய உறவினர்களுக்கோதான் முதலில் offer பண்ணனும். பரம்பரை சொத்து, குடும்பத்தின் கையினை விட்டு போகக்கூடாது என்று ஒரு உறவு நினைத்தால் அதில் தவறு இல்லை என்பதே இந்த சட்டத்தின் அடிப்படை.

யாரும் வாங்க முன்வராவிடில் வெளியே விற்பீர்கள்.

அப்படி ஒருத்தருக்கும் சொல்லாமல் விற்பனை செய்தால், உங்கள் உறவு கோர்ட்டுக்கு போய், உங்களுக்கு வந்த பணத்தினை நான் தருகிறேன். தேசவழமை சட்டப்படி எனக்கு அந்த சொத்து வரவேண்டும் என்றால், நீங்கள் என்ன விலைக்கு வித்தீர்களோ, அந்த அளவு பணம் உங்களிடம் வாங்கியவருக்கு போக, ஆதனம் உங்கள் உறவுக்கு போகும். இது நீங்கள் நீதிமன்று போகாமலே நடக்கும்.

இதில நடைமுறை சிக்கல் என்னவெண்டால், முத்திரை வரியை குறைக்க, நீங்கள், 100 ரூபாவுக்கு வித்ததை, 40 ரூபா என்று சொல்லி பதிந்து இருப்பியள்.

வாங்கினர்.... திருடனுக்கு தேள் கொட்டினமாதிரி... வந்து உங்களிடம் நிற்பார்... மிச்சக்காசை வை என்று.

நீங்கள் தான் காசை இழந்தவராக முடியும். ஆகவே இந்த வேலையினை, உறவுக்குள் கொடுப்பதன் மூலம், கச்சிதமாக செய்து முடிக்கலாம். கோட்டு பிரச்னையும் வராது.

இந்த சட்டத்தில் கை வைக்காமல் இருப்பதன் காரணம், சட்டம் மாத்தினாலும், நீங்கள் உங்கள் உறவுக்கு தான் விக்கபோகிறீர்கள் என்பதனை எப்படி தடுப்பது?

சட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நீங்கள் யாருக்கு விற்கப்போகிறீர்கள் என்பது உங்கள் முடிவு.

சட்டம் இருப்பதால், உங்கள் உறவுகள் இடையே யாருக்கு வியாபாரம் செய்வது என்பதும் உங்கள் முடிவு தான். 

ஆனாலும், வெளியில் கொடுத்தால் கூடுதலான பணம் வரும் என்றால், நீங்கள் உறவுகளுடன் சமரசம் செய்து கொள்வீர்கள். அவர்களும் ஒத்துழைப்பார்கள். இதுதான் நிதர்சனம்.

சட்டம் மாத்தினால், ஒரு முஸ்லீமுக்கோ, சிங்களவருக்கோ விற்பனை செய் என்று சொல்ல முடியாதல்லவா. 

அதிலும் பார்க்க முக்கியமாக, ஒரு குறித்த சமூகம், தம்மிடையே வேறு சமூகத்தவர் வந்து இருப்பதனை விரும்புவதில்லை. ஆகவே அவர்கள், எப்படியாவது அந்த ஆதனம், வெளியே போகக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி, தமக்குள் வாங்கிக் கொள்வர். ஆகவே சட்டத்தினை மாத்தினாலும் பிரயோசனம் இல்லை என்பதாலேயே, அதில் கை வைக்காமல் இருக்கிறார்கள்.

அதனை இல்லாமல் செய்யும் முயற்சிகள் ஆரம்பமாகி பல காலமாகிவிட்டது  நாதர்ஸ். என்ன வேகம் கொஞ்சம் மட்டு. அவ்வளவும்தான். சம்பிக்கதான் இதன் பின்ணணியில் என்று கொழும்பை மையமாகக் கொண்ட சிரேஸ்ர சட்டத்தரணி ஒருவர் எனக்கு கூறினார். ☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அதனை இல்லாமல் செய்யும் முயற்சிகள் ஆரம்பமாகி பல காலமாகிவிட்டது  நாதர்ஸ். என்ன வேகம் கொஞ்சம் மட்டு. அவ்வளவும்தான். சம்பிக்கதான் இதன் பின்ணணியில் என்று கொழும்பை மையமாகக் கொண்ட சிரேஸ்ர சட்டத்தரணி ஒருவர் எனக்கு கூறினார். ☹️

அது தான் சொன்னேன். ஆரம்பித்து, அதிலுள்ள பிரயோசனமின்மை புரிந்து கைவிடப்பட்டது.

செய்யவேண்டியதாக இருந்தால் பண்டா, டட்லி, சிறிமா, ஜேஆர் செய்யாமல் சும்மா பாட்டாலியிடம் விட்டு இருந்திருப்பார்களா?

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.