Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சி..! 1 மாதத்தில் 17 வயது சிறுவன் உட்பட 22 பேர் சத்தமில்லாமல் கைது, அதிர்ச்சி சம்பவம் அம்பலம்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சி..! 1 மாதத்தில் 17 வயது சிறுவன் உட்பட 22 பேர் சத்தமில்லாமல் கைது, அதிர்ச்சி சம்பவம் அம்பலம்.!

செவ்வாய், 30 ஜூன் 2020 10:24 PM

tamil-eelam.jpg

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த மாதம் மட்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் 22 பேர் சத்தமில்லாமல் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

குறித்த 22 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த விடயம் வெளிவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தேர்தல் காலத்தில் மிகவும் இரகசியமாக இடம்பெறும் இந்தக் கைதுகள் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. கைதானவர்களில் சிலர் கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

சிலர் விசாரணைக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் மட்டும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமையோடு மாதம் முழுமையாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உறவுகளால் முறையிடப்பட்டுள்ளது.

அனைவரும் ஒரே குற்றச் சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர் என ஜூன் மாதத்தில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 பேரில் ஒருவர் 17 வயதுச் சிறுவன் என பெற்றோரினால் பிறப்புச் சான்றிதழ் ஆதாரத்துடன் மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட எவர் தொடர்பிலும் இதுவரை எந்த நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://jaffnazone.com/news/18950

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ரிஐடிக்கு புலிக்காய்ச்சல் வடக்கில் 21 பேர் கைது!

27a9e260-62087a44-counter-terrorism-act-edited-_850x460_acf_cropped.jpg?189db0&189db0

 

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முற்படுகின்றனர் என்று குற்றம்சாட்டி பயங்கரவாத விசாரணை பிரிவினரால் (ரிஐடி) வடக்கு மாகாணத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சத்தம் சந்தடியின்றி ரிஜடியினர் இந்த கைது வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு இன்னும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 7 பேரும் முல்லைத்தீவில் நேற்று ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களோடு இன்னும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவிக்கையில், “எமக்கு 12 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப் பெற்றது. கிளிநொச்சியில் இருந்து 12 முறைப்பாடுகளும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு முறைப்பாடு கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் சிலர் கிளிநொச்சியில் உள்ள ரிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை நாம் நேரில் சென்று பார்வையிட்டோம். சிலர் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள்.” – என்றார்.

 

https://newuthayan.com/மீண்டும்-ரிஐடிக்கு-புலிக/

இது ஊர்ஜிதப்படுத்தப்பட்ட  செய்தியா?

Edited by Dash

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Dash said:

இது ஊர்ஜிதப்படுத்தப்பட்ட  செய்தியா?

ரெண்டு வெவ்வேறு தளத்தில் வந்தால் உண்மை இருக்கக்கூடும் தோழர்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் ரி.ஐ.டியால் 21 பேர் கைது: புலிகளை மீளுருவாக்கும் முயற்சியின் பெயரால் சத்தம் சந்தடியில்லாமல் வேட்டை!

Posted: 2020-06-30 10:19:05 EST

tid_arrested.jpg 

தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாணத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் சத்தம் சந்தடியில்லாமல் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 7 பேரும், முல்லைத்தீவில் நேற்று ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் காலத்தில் நடைபெறும் இந்தக் கைதுகள் மக்கள் மத்தியில் பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

"எமக்குப் 13 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன. கிளிநொச்சியிலிருந்து 12 முறைப்பாடுகளும் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு முறைப்பாடும் கிடைத்துள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர். அவர்களை நாம் நேரில் பார்வையிட்டோம். சிலர் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றார்கள்" என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன், ஜெயபுரம், வன்னேரிப் பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவைச் சேர்ந்த இளைஞர் ஒருவனும் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் இந்தத் திடீர் கைதுகள் தொடர்பில் வட மாகாணத்தில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சமேற்பட்டுள்ளது.

http://aruvi.com/article/tam/2020/06/30/13874/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் திருநாட்டில் இது ஒன்றும் புதிதில்லை. பயமுறுத்தி வாக்குச் சேகரிக்கவும், தம் சேர்ந்தார்க்கு வோட்டு வாங்கவும் இல்லாத ஆயுதங்கள், சுவரொட்டிகள் மீட்ப்பு. பயங்கரவாதத்தை கட்டி எழுப்புகிறார்கள், வெளிநாட்டில் இருந்து பணஉதவி பெற்று. எப்படியெப்படியெல்லாம் கதை புனைவார்கள். நம்ம தலைமைகளும்: எங்களையும் கொல்வதற்கு சதித் திட்டம் போட்டார்கள் என்று புரளி கிளப்புவினம். இதெல்லாம் தேர்தல் உத்தி. வரவு செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக ஆட்களை கடத்தி  சாதித்த நாடல்லவா. எங்கடை ஆக்கள் ம்..... மூச்.... வாயே திறக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.