Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

எமது முன்னோர்கள்  என்று பொதுவாக உரையாடும்போது  பொது தளங்களில் உத்தியோகபூர்வ  புள்ளிவிபரங்களை தான் நம்ப முடியும். அதன் அடிப்படையில் தான்  உரையாடவோ விவாதம் புரியவோ முடியும். எங்க அப்பா, அம்மம்பா, தாத்தா என்று கதை விடுவதை எல்லாம்  நம்பமுடியாது. 

இலங்கையின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை இணையுங்கள். அது மட்டும் தான் நம்பிக்கைக்குரியது.

எனது வம்சாவளியிலும் எல்லோரும் 70 வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள்.எனது அம்மா ஐயா உட்பட அப்பு ஆச்சி எல்லோருமே 70வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள். ஏனெனில் உணவு வகைகளும் அதற்கேற்ற உழைப்பும் மட்டுமே. அந்தக்காலத்தில் வழுக்கை தலை கூட மிக மிக அரிது. கண்பார்வை தெரியாமல் கண்ணாடி போடுபவர்களும் குறைவு.
 எல்லா புள்ளிவிபரங்களும் தரவுகளும் நம்பக்கூடியவை என்று கருத முடியாது. நம்பிக்கைதான் வாழக்கை.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, tulpen said:

எமது முன்னோர்கள்  என்று பொதுவாக உரையாடும்போது  பொது தளங்களில் உத்தியோகபூர்வ  புள்ளிவிபரங்களை தான் நம்ப முடியும். அதன் அடிப்படையில் தான்  உரையாடவோ விவாதம் புரியவோ முடியும். எங்க அப்பா, அம்மம்பா, தாத்தா என்று கதை விடுவதை எல்லாம்  நம்பமுடியாது. 

இலங்கையின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை இணையுங்கள். அது மட்டும் தான் நம்பிக்கைக்குரியது.

இந்த‌ நூற்றாண்டில் தான் அதிக‌ த‌மிழர்க‌ள் சீக்கிர‌மே இற‌க்கின‌ம் கூட‌ புல‌ம் பெய‌ர் நாட்டில் , போன‌ நூற்றாண்டில் எம் முன்னோர்க‌ள் குறைந்த‌து ஒரு குடும்ப‌த்தில் 10 பிள்ளைக‌ள் வ‌ர‌ பெத்து வாழ்ந்த‌வ‌ர்க‌ள் ,

இப்ப‌ ஒரு குடும்ப‌த்த‌ எடுத்து கொண்டா , அவைக்கு மிஞ்சி போனால் மூன்று அல்ல‌து நாலு பிள்ளைக‌ள் , எம் முன்னோர்க‌ள் 10 பிள்ளைக‌ளை பெத்து சிர‌ம‌ம் இல்லாம‌ வ‌ள‌த்த‌வை , இந்த‌ நூற்றாண்டில் ?

1 hour ago, குமாரசாமி said:

எனது வம்சாவளியிலும் எல்லோரும் 70 வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள்.எனது அம்மா ஐயா உட்பட அப்பு ஆச்சி எல்லோருமே 70வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள். ஏனெனில் உணவு வகைகளும் அதற்கேற்ற உழைப்பும் மட்டுமே. அந்தக்காலத்தில் வழுக்கை தலை கூட மிக மிக அரிது. கண்பார்வை தெரியாமல் கண்ணாடி போடுபவர்களும் குறைவு.
 எல்லா புள்ளிவிபரங்களும் தரவுகளும் நம்பக்கூடியவை என்று கருத முடியாது. நம்பிக்கைதான் வாழக்கை.

குமாரசாமி  நான் என்றுமே மற்றவரின் தனிப்பட்ட விடயங்களுக்கும் தலையீடு செய்யவில்லை.

இவை மூடத்தனங்கள் என்று பொது வெளியில் சொல்வது ஒன்றும் தவறல்ல. மூடத்தனங்களை மூடத்தனங்கள் என்று தான் சொல்ல முடியும்.

எனது அப்பாவும், தாத்தாவும்  90 வயதுவரை வாழ்ந்தார்கள். ஆகவே அந்த  ஆதாரத்தின் அடிப்படையில்  இலங்கையின்  முன்னோர்கள் எல்லோருமே 90 வயதுவரை  உயிர் வாழ்ந்தார்கள்  என்று  வடிகட்டின மூடத்தனமான ஒரு கருத்தை ஒருவர் முன் வைக்கும் போது அதை சுட்டிக்காட்டுவது தவறாகாது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எனது இரத்த அழுத்த வருத்தத்திற்கு முதலில் ஒரு குளிசை தான் எடுத்தேன். அதன் பக்க விளைவு  தசை உளைச்சல். தசை உளைச்சல் வலிக்கு இன்னொரு குளிசை. அந்த இன்னொரு குளிசையால் மலம் இறுக்கப்படுகின்றது.மலம் இலகுவாக போவதற்கு வேறு ஒரு குளிசை.அந்த மலம் இளக்கி குளிசையால் கண்ணெரிவு........ 
இப்படியே  ஆங்கில மருந்துகள் ஒரு தொடர்கதை.
100 வயது வரைக்கும் வலி வன்மத்துடன் வாழ்வதை விட 50 வயதில் வருத்தம் ஏதும் இல்லாமலும் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமலும்/செலவுகள் கொடுக்காமலும் நிம்மதியாய் சாகலாம் ஜஸ்டின் சார்.

அண்ணை, உங்களுக்கு ஆங்கில மருத்துவத்தின் பின்விளைவுகள் ஏன், ஏனைய மருத்துவத்தில் பின்விளைவுகள் ஏன் இல்லை, இதெல்லாம் நான் திரும்பவும் விளக்கப் போவதில்லை! ஏனெனில் எல்லாம் நான் போன வருடமே விபரமாக எழுதியாகி விட்டது, யாழில் தான் இருக்கிறது! 

எனவே, உங்களுக்கு விளங்கினதை நீங்கள் செய்ய வேண்டும்!

ஆனால், மற்றவர்களுக்கு நான் சொல்வது, இந்த மூன்று ஏரியாக்களில் பி.எச்.டி எடுத்ததாக சொல்லும் மலேசிய தமிழ் பரியாரி தாயத்து விற்கிற பேர்வழி! பாவப்பட்டவருக்கு மூன்று பி.எச்.டி எடுத்தும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை எனும் போதே அவரது தகுதிகள் விளங்கவேணும்! 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

எங்க‌ட‌ முன்னோர்க‌ள் 90 , 97 வ‌ய‌து வ‌ர‌ வாழ்ந்த‌வை , கார‌ண‌ம்  அப்போது சாப்பாட்டுக்குள் கிமிக்க‌ள் இல்ல‌ , இய‌ற்கை வ‌யித்திய‌ம் கைய‌ பிடித்து என்ன‌ நோய் இருக்கு என்று க‌ண்டு பிடிக்கும் திற‌மை வாய்ந்த‌வ‌ர்க‌ள் தான் எம் முன்னோர்க‌ள் 👏💪

பையன், சும்மா சொல்லுங்கோவன் ஒருக்கா! 1925 இல் இலங்கையில் ஒராளின் சராசரி வாழ்வுக் காலம் என்ன? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Justin said:

அண்ணை, உங்களுக்கு ஆங்கில மருத்துவத்தின் பின்விளைவுகள் ஏன், ஏனைய மருத்துவத்தில் பின்விளைவுகள் ஏன் இல்லை, இதெல்லாம் நான் திரும்பவும் விளக்கப் போவதில்லை! ஏனெனில் எல்லாம் நான் போன வருடமே விபரமாக எழுதியாகி விட்டது, யாழில் தான் இருக்கிறது! 

எனவே, உங்களுக்கு விளங்கினதை நீங்கள் செய்ய வேண்டும்!

ஆனால், மற்றவர்களுக்கு நான் சொல்வது, இந்த மூன்று ஏரியாக்களில் பி.எச்.டி எடுத்ததாக சொல்லும் மலேசிய தமிழ் பரியாரி தாயத்து விற்கிற பேர்வழி! பாவப்பட்டவருக்கு மூன்று பி.எச்.டி எடுத்தும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை எனும் போதே அவரது தகுதிகள் விளங்கவேணும்! 😎

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

2 minutes ago, Justin said:

பையன், சும்மா சொல்லுங்கோவன் ஒருக்கா! 1925 இல் இலங்கையில் ஒராளின் சராசரி வாழ்வுக் காலம் என்ன? 

40 தொடக்கம்50 வரைக்கும். ஆனால் சாகும் வரைக்கும் வலிகள் இல்லாமல் நோய் இல்லாமல் வாழ்ந்தார்கள்.அந்த வயதிலும் பேரப்பிள்ளைகள் இருந்தார்கள்

4 minutes ago, Justin said:

பையன், சும்மா சொல்லுங்கோவன் ஒருக்கா! 1925 இல் இலங்கையில் ஒராளின் சராசரி வாழ்வுக் காலம் என்ன? 

40 தொடக்கம்50 வரைக்கும். ஆனால் சாகும் வரைக்கும் வலிகள் இல்லாமல் நோய் இல்லாமல் வாழ்ந்தார்கள்.அந்த வயதிலும் பேரப்பிள்ளைகள் இருந்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இலங்கையின் சராசரி வாழ்ககை காலம்

1950 ல. 54.5 வருடங்கள். 

2018 ல்  76.6 வருடங்கள். 

ஆனால் இலங்கையின் வாழ்ககைகாலம் போன நூற்றாண்டில் 94  வருடஙகள் என்று  நீங்கள் தாராளமாக இங்கு  புளுகலாம்.  ஏனென்றால் அதை நம்ப இங்கு சிலர்  உண்டு. இந்த சந்தோசத்தில் ஏதாவது   டெனிஸ் வலைத்தளங்களில்  போய் இப்படி புளுகிடாதேங்க. உங்களை பத்தி தப்பா நினைப்பாங்க. 

 

2 hours ago, பையன்26 said:

ஹா ஹா , நீங்க‌ள் இப்ப‌ தான் நித்திரைய‌ விட்டு எழும்பி இருக்கிறீங்க‌ள் , இங்கை யாரும் புழுகுற‌துக்கு நேர‌ம் ஒதுக்குவ‌தில்லை , அப்ப‌டி நீங்க‌ள் ஒதுக்கினா நீங்க‌ள் தான் ம‌கா பெரிய‌ புழுக‌ன் , 

என்ர‌ 
ஆச்சி இற‌க்கும் போது 97 வ‌ய‌து
அம்ம‌ம்மா இற‌க்கும் போது 88வ‌ய‌து ,
அப்பாட‌ பெரிய‌ம்மா 90 வ‌ய‌து ,

அப்பாட‌ அப்பா 70 வ‌ய‌து 

அப்ப‌ம்மா 80 வ‌ய‌து , எங்க‌ட‌ ஊரில் வாழ்ந்த‌ முன்னோர்க‌ள் 70வ‌ய‌த‌ தாண்டின‌வ‌ர்க‌ள் , 

இட‌ம் பெய‌ர்ந்து த‌மிழீழத்தில் ப‌ல‌ ஊர்க‌ளில் இருந்து இருக்கிறேன் எத்த‌னையோ முன்னோர்க‌ள பார்த்து இருக்கிறேன் ,

கைவ‌ச‌ம் நிறைய‌ புகைப் ப‌ட‌ங்க‌ள் இருக்கு எம் முன்னோர்க‌ளுடைய‌ , அத‌ இந்த‌ பொது வெளியில் இணைக்க‌ விரும்ப‌ல‌ , எந்த‌ புத்துக்க‌ எந்த‌ பாம்பு  ‌ இருக்கும் என்று தெரியாத‌ உல‌கில் நாம் வாழுகிறோம் ,

பையன், கணிதத்தில ஒரு சின்னக் கேள்வி! 1950 இல சராசரி வாழ்வுக் காலம் 54 வயது, உங்களுக்கு தெரிய நாலு பேர் 70 தாண்டியிருக்கினம்! அப்ப அதிகமானோர் எந்த வயது மட்டும் வாழ்ந்திருப்பீனம் என்று ஊகிக்கிறீர்கள்? 

கணக்கு பொய் சொல்லாது பையா, என்னையும் நம்ப வேணாம், ருல்பெனையும் நம்ப வேணாம், இந்த கேள்விக்கு என்ன பதில்?

1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

40 தொடக்கம்50 வரைக்கும். ஆனால் சாகும் வரைக்கும் வலிகள் இல்லாமல் நோய் இல்லாமல் வாழ்ந்தார்கள்.அந்த வயதிலும் பேரப்பிள்ளைகள் இருந்தார்கள்

40 தொடக்கம்50 வரைக்கும். ஆனால் சாகும் வரைக்கும் வலிகள் இல்லாமல் நோய் இல்லாமல் வாழ்ந்தார்கள்.அந்த வயதிலும் பேரப்பிள்ளைகள் இருந்தார்கள்

அண்ணை, 40 , 50 இல் சாவோம் எண்டு தெரிந்தால் 15 இல் கலியாணம் கட்டி 20 இல் பத்தைப் பெறத்தானே வேணும் (அப்ப தான் பத்தில் ஐந்து பிழைத்து வளரும்!).

 செத்த போதும் தாங்களே நடந்து போய் சமாதியில் அமர்ந்தார்களா? இன்றைக்கு அம்புலன்சில் வந்து சிகிச்சை அழிப்பது போல அன்றில்லை, இதயநோயில் பொட்டென்று போனார்கள்! 

இதெல்லாம் அந்தக் காலத்தில் ஆரோக்கியம் உயர்வென்பதன் அறிகுறியா? அப்படி நினைத்தால் பரவாயில்லை, ஆனால் இதை ஒரு கண்டு பிடிப்பாகச் சொல்லிக் கொண்டு திரியாதீர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய கால கட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்டோரை பூமிக்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் பாரமாகவே கருதுகின்றார்கள். வயோதிபர்களுக்குரிய மருத்துவ செலவும் விண்ணை முட்டுகின்றதாம்.
ஏன் கொரோனாவில் கூட முதியவர்களை மரணிக்க விட்டுவிட்டார்கள். அக்கறை கூட எடுக்கவில்லை. வயோதிப வயதில் முதியவர் இல்லத்திற்கு போவதை விட  ஒரு வயதில் மரணிப்பதே மேல்

சேகுவாராவின் கொள்கையில்  60 வயதுக்கு மேல் இருந்து என்ன் பயன்...இளையவர்களுக்கு வழி விட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

பையன், சும்மா சொல்லுங்கோவன் ஒருக்கா! 1925 இல் இலங்கையில் ஒராளின் சராசரி வாழ்வுக் காலம் என்ன? 

என் முன்னோர்க‌ள் உயிருட‌ன் இருந்து இருந்தா நீங்க‌ள் கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் ஒரு வினாடியில் எழுதி இருப்பேன் 

என் க‌ண்ணால் க‌ண்ட‌த‌ பார்த‌வைய‌ எழுதினேன் , 

யாழில் ஒரு திரி திற‌வுங்கோ எம் முன்னோர்க‌ள் ப‌ற்றி அப்ப‌ தெரியும் நான் சொன்ன‌து எவ‌ள‌வு உண்மை என்று 🤞 /

  • கருத்துக்கள உறவுகள்
On ‎05‎-‎07‎-‎2020 at 06:56, தமிழ் சிறி said:

phone.jpg

தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு

தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது.

கொழும்பு- கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 29 ஆம் திகதியே திடீர் மரணமடைந்திருந்தார். இந்நிலையில் இந்த திடீர் மரணம் தொடர்பாக மரண பரிசோதகர் இரேஷா தேஷானி விசாரணையை முன்னெடுத்திருந்தார்.

இதன்போதே  அவரது  மனைவி ஆனந்தன் தர்ஷிகா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனக்கு தெரிந்தவரையும் அவருக்கு அல்சர்  வருத்தம் மாத்திரமே இருந்தது வேறு  எந்ததொரு நோயும் இருக்கவில்லை.

கடந்த 29ஆம் திகதி, இரவு 9  மணியளவில், கையடக்கத் தொலைபேசியில், எனது கணவன் கேம் விளையாடிகொண்டிருந்ததை அவதானித்தேன்.

எனவே அதனை நிறுத்தி விட்டு உறங்குமாறு கூறினேன். ஆனால் அதனை கேட்காமல் விளையாடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில்  அடுத்த நாள் அதிகாலை இரண்டு மணியளவில் திடீரெனச் சத்தம் கேட்டு எழும்பிச் சென்று பார்த்தேன். அவர் மூக்கு மற்றும் வாயில் இரத்தம் வடிந்த நிலையில் கிடந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்தப்போது, உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் 5 மணி நேரத்துக்கும் மேலதிகமாக  தொலைபேசியை பயன்படுத்தியதன் காரணமாக அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு, மூளை நரம்பு வெடித்தமையினால் அவர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்” என அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/தொலைபேசியில்-வீடியோ-கேம்/

இவர் வியாபாரி என்று கேள்விப் பட்டேன் ...கடையிலும் கல்லா பெட்டியோடு இருந்திருப்பார் ...வீட்ட வந்தும் ஒரே இடத்தில் இருந்து விளையாடிக் கொண்டு இருந்திருப்பார்...தொடர்ச்சியாகவே செய்திருப்பார் என்று நினைக்கிறேன்...பட்டென்று போயிட்டார் 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Justin said:

 செத்த போதும் தாங்களே நடந்து போய் சமாதியில் அமர்ந்தார்களா? இன்றைக்கு அம்புலன்சில் வந்து சிகிச்சை அழிப்பது போல அன்றில்லை, இதயநோயில் பொட்டென்று போனார்கள்! 

இதெல்லாம் அந்தக் காலத்தில் ஆரோக்கியம் உயர்வென்பதன் அறிகுறியா? அப்படி நினைத்தால் பரவாயில்லை, ஆனால் இதை ஒரு கண்டு பிடிப்பாகச் சொல்லிக் கொண்டு திரியாதீர்கள். 

இன்று உலகம் முழுவதும் வீட்டுக்கு வீடு இருதய நோய், வீட்டுக்கு வீடு புற்று நோய்.
இவையெல்லாம் அல்லது இப்படியான அதிகரிப்பு அன்றில்லையே ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

என் முன்னோர்க‌ள் உயிருட‌ன் இருந்து இருந்தா நீங்க‌ள் கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் ஒரு வினாடியில் எழுதி இருப்பேன் 

என் க‌ண்ணால் க‌ண்ட‌த‌ பார்த‌வைய‌ எழுதினேன் , 

யாழில் ஒரு திரி திற‌வுங்கோ எம் முன்னோர்க‌ள் ப‌ற்றி அப்ப‌ தெரியும் நான் சொன்ன‌து எவ‌ள‌வு உண்மை என்று 🤞 /

இது பற்றி திரி எதற்கு, பல தடவை ஆதாரங்களோடு சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது! நீங்கள் சனத்தொகையின் நாட்டின், சராசரி வாழ்வு காலத்தைத் தான் பார்க்கலாமேயொழிய என் தாத்தா எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்ற ஒற்றைத் தகவலை வைத்துக் கொண்டு முன்னோரின் ஆரோக்கியம் பற்றி முடிவு செய்ய முடியாது! 

உதாரணம்: இந்த மாநிலத்தில் கொரனா வந்து ஒரே குடும்பத்தில் ஐவரில் மூவர் இறந்தனர்! இதை வைத்துப் பார்த்தால் கொரனா ஏற்பட்டால் 60 வீதமானோர் இறப்பர் என்று கொள்ள வேண்டும்! ஆனால், உண்மையில் 5 வீதமானோர் தான் அமெரிக்காவில் இறக்கின்றனர்!

எப்படி இது சாத்தியம்? சராசரி, பகுதியெண், தொகுதியெண் இப்படியான விடயங்களை தேடிப் படியுங்கள்! நேரத்தை வீணாக்காதீர்கள்! 
 

6 minutes ago, குமாரசாமி said:

இன்று உலகம் முழுவதும் வீட்டுக்கு வீடு இருதய நோய், வீட்டுக்கு வீடு புற்று நோய்.
இவையெல்லாம் அல்லது இப்படியான அதிகரிப்பு அன்றில்லையே ஏன்?

திரும்ப திரும்ப எழுத இயலாது, ஏற்கனவே சொன்ன பதில்கள் நினைவில்லையெனில் தேடி வாசியுங்கள்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, பையன்26 said:

என் முன்னோர்க‌ள் உயிருட‌ன் இருந்து இருந்தா நீங்க‌ள் கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் ஒரு வினாடியில் எழுதி இருப்பேன் 

என் க‌ண்ணால் க‌ண்ட‌த‌ பார்த‌வைய‌ எழுதினேன் , 

யாழில் ஒரு திரி திற‌வுங்கோ எம் முன்னோர்க‌ள் ப‌ற்றி அப்ப‌ தெரியும் நான் சொன்ன‌து எவ‌ள‌வு உண்மை என்று 🤞 /

சென்ற வருடம் நான் ஆஸ்பத்திரியில் இருந்த போது எனது படுக்கைக்கு அருகில் ஒரு 86 வயதுக்காரர். 3 மாதத்திற்கு ஒரு முறை ஆஸ்பத்திரிக்கு வந்து போவாராம். சுவாசப்பையை சீர் செய்து கொண்டு போவாராம்.  அவர் தொடர்து சொன்னார்...
மருந்துக்கொம்பனியும் டாக்குத்தர்மாரும் ஆஸ்பத்திரிகளும் உழைக்கோணும் எண்டு தன்னை 100 வயது வரை வைத்திருப்பார்களாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சென்ற வருடம் நான் ஆஸ்பத்திரியில் இருந்த போது எனது படுக்கைக்கு அருகில் ஒரு 86 வயதுக்காரர். 3 மாதத்திற்கு ஒரு முறை ஆஸ்பத்திரிக்கு வந்து போவாராம். சுவாசப்பையை சீர் செய்து கொண்டு போவாராம்.  அவர் தொடர்து சொன்னார்...
மருந்துக்கொம்பனியும் டாக்குத்தர்மாரும் ஆஸ்பத்திரிகளும் உழைக்கோணும் எண்டு தன்னை 100 வயது வரை வைத்திருப்பார்களாம்

தெரிவு அவருடையதல்லவா? அவரே நோய்க்குரிய வகையில் குடி சிகரட் உடல் பயிற்சியின்மை என்று நோயை வாங்கியிருக்கக் கூடும்! டாக்டர் தலையில் துவக்கு வைத்தா மருந்தைக் கொடுக்கிறார்? எனவே, மருந்துடன் நூறு வயது வாழ விருப்பமிலையெனில் அதைத் தான் அவரோ யாரோ செய்ய வேண்டும்! 
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Justin said:

எப்படி இது சாத்தியம்? சராசரி, பகுதியெண், தொகுதியெண் இப்படியான விடயங்களை தேடிப் படியுங்கள்! நேரத்தை வீணாக்காதீர்கள்! 
 

திரும்ப திரும்ப எழுத இயலாது, ஏற்கனவே சொன்ன பதில்கள் நினைவில்லையெனில் தேடி வாசியுங்கள்! 

தப்பி ஓடுறதுக்கும் இப்பிடி ஒரு வழி இருக்கோ....😎

நாங்கள் தேடி வாசிக்கோணும் எண்டால் நீங்கள் என்ன கோதாரிக்கு  என்னத்தை எழுதுறீங்கள்🙃

Just now, Justin said:

தெரிவு அவருடையதல்லவா? அவரே நோய்க்குரிய வகையில் குடி சிகரட் உடல் பயிற்சியின்மை என்று நோயை வாங்கியிருக்கக் கூடும்! டாக்டர் தலையில் துவக்கு வைத்தா மருந்தைக் கொடுக்கிறார்? எனவே, மருந்துடன் நூறு வயது வாழ விருப்பமிலையெனில் அதைத் தான் அவரோ யாரோ செய்ய வேண்டும்! 
 

குடி சிகரெட் இல்லாதவனுக்கும் அதே வருத்தங்கள் தான் சாரே!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

தப்பி ஓடுறதுக்கும் இப்பிடி ஒரு வழி இருக்கோ....😎

நாங்கள் தேடி வாசிக்கோணும் எண்டால் நீங்கள் என்ன கோதாரிக்கு  என்னத்தை எழுதுறீங்கள்🙃

இதே கேள்வியை நீங்கள் ஒரு 10 தடவை கேட்டு நானும் பத்து தடவைகள் எழுதி விட்டேன்! அந்தப் பதிலை யாழில் தேடி வாசிக்கலாம்! அல்லது வெளியில் தேடியும் வாசிக்கலாம்! நீங்களே தேடிப் படித்தால் மறக்காது, மறந்த படியால் தானே மீள மீளக் கேட்கிறீர்கள்?  

4 minutes ago, குமாரசாமி said:

தப்பி ஓடுறதுக்கும் இப்பிடி ஒரு வழி இருக்கோ....😎

நாங்கள் தேடி வாசிக்கோணும் எண்டால் நீங்கள் என்ன கோதாரிக்கு  என்னத்தை எழுதுறீங்கள்🙃

குடி சிகரெட் இல்லாதவனுக்கும் அதே வருத்தங்கள் தான் சாரே!

சராசரி, பகுதியெண், தொகுதியெண், இதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! சில தெளிவுகள் கிடைக்கலாம்! இது இல்லாமல் நான் விளக்குவது கடினம், நான் என் நேரத்தை வீணாக்கவும் விரும்பவில்லை! 
 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

இது பற்றி திரி எதற்கு, பல தடவை ஆதாரங்களோடு சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது! நீங்கள் சனத்தொகையின் நாட்டின், சராசரி வாழ்வு காலத்தைத் தான் பார்க்கலாமேயொழிய என் தாத்தா எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்ற ஒற்றைத் தகவலை வைத்துக் கொண்டு முன்னோரின் ஆரோக்கியம் பற்றி முடிவு செய்ய முடியாது! 

உதாரணம்: இந்த மாநிலத்தில் கொரனா வந்து ஒரே குடும்பத்தில் ஐவரில் மூவர் இறந்தனர்! இதை வைத்துப் பார்த்தால் கொரனா ஏற்பட்டால் 60 வீதமானோர் இறப்பர் என்று கொள்ள வேண்டும்! ஆனால், உண்மையில் 5 வீதமானோர் தான் அமெரிக்காவில் இறக்கின்றனர்!

எப்படி இது சாத்தியம்? சராசரி, பகுதியெண், தொகுதியெண் இப்படியான விடயங்களை தேடிப் படியுங்கள்! நேரத்தை வீணாக்காதீர்கள்! 
 

திரும்ப திரும்ப எழுத இயலாது, ஏற்கனவே சொன்ன பதில்கள் நினைவில்லையெனில் தேடி வாசியுங்கள்! 

நேர‌த்தை வீன் ஆக்க‌ வில்லை ,
நான் மேல‌ எழுதின‌து , இப்ப‌த்த‌ சாப்பாட்டுக்குள் அதிக‌ கிமிக்க‌ள் க‌ல‌க்க‌ப் ப‌டுது , எம் முன்னோர்க‌ள் ஆரோக்கிய‌மான‌ சாப்பாடு சாப்பிட்டு நோய் நொடியின்ரி நீண்ட‌ கால‌ம் வாழ்ந்தார்க‌ள் , 


நான் என் ஆச்சி அம்ம‌ம்மாவை மைய‌ப் ப‌டுத்தி எழுத‌ வில்லை , சின்ன‌னில் பார்த்த‌ முதிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் 80வ‌ய‌துக்கு பிற‌க்கு தான் இற‌ந்த‌வை ,

எங்க‌ட‌ ப‌ள்ளி ஆசிரிய‌ர் கூட‌ அன்மையில் தான் இற‌ந்து போனா 85 வ‌ய‌து 

இந்த‌ நூற்றாண்டில் யாருக்கு எப்ப‌ என்ன‌ ந‌ட‌க்கும் என்று தெரியாது / 

நான் ஊரில் வாழ்ந்த‌ கால‌த்தில் பார்த்த‌வைய‌ தான் எழுதினேன் 😉🤞

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.