Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயக்கச்சி வெடி சம்பவம்; ஆசிரியை கைது; கரும்புலி நாள் பாதாகையும் மீட்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கச்சி வெடி சம்பவம்; ஆசிரியை கைது; கரும்புலி நாள் பாதாகையும் மீட்பு!

unnamed.png?189db0&189db0

கிளிநொச்சி – பளை, இயக்கச்சியில் நேற்று முன் தினம் (03) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்தமை தொடர்பில் ஆசிரியை ஒருவரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குற்றச்செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடையப் பொருட்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் குறித்த ஆசிரியையை கைது செய்துள்ளனர்.

இந்த வெடிச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளிற்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதியைச் சுற்றி பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பிளாஸ்ரிக் குண்டுகள் 2, கரும்புலி நாள் பதாதை 1, தொலைபேசி 1, மடிக்கணணி 1, டொங்குள் 1, இறுவெட்டு 1 ஆகியவைகளை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் சம்பவத்தில் படுகாயமடைந்தவர், முன்னாள் போராளி என்றும் அவர் ஜனநாயக போராளிகள் கட்சியின் அங்கத்தவராக செயற்பட்டு வந்துள்ளாரென்றும் பொலிஸாரின் விசாரணைகள் தெரிவிக்கின்றது.

  • pic1.jpg?189db0&189db0
  • maxresdefault-1024x576.jpg?189db0&189db0
  • IMG_20200706_000251.jpg?189db0&189db0

     

https://newuthayan.com/இயக்கச்சி-வெடி-சம்பவம்-ஆ/

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல்காலங்களின்பொழுதும், மாவீரர் நாள், கரும்புலிகள் நாள் ஆகிய நாட்களிலும் மட்டும் இந்தக் குண்டுவெடிப்புகளும், கைதுகளும் நடப்பது ஏன்?

மற்றைய நாட்களில் "மீள ஒருங்கிணையும் புலிகள்" தூங்குகிறார்களோ??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

தேர்தல்காலங்களின்பொழுதும், மாவீரர் நாள், கரும்புலிகள் நாள் ஆகிய நாட்களிலும் மட்டும் இந்தக் குண்டுவெடிப்புகளும், கைதுகளும் நடப்பது ஏன்?

மற்றைய நாட்களில் "மீள ஒருங்கிணையும் புலிகள்" தூங்குகிறார்களோ??

ரகு அண்ணை 
இவ்வளவு காலமும் புலிகள் மட்டும்தான் ஒன்றிணைந்தார்கள். இந்த தேர்தலுக்கு 
மர்ம நபர் கோவில், தேவாலயம் என உடமைகளுடன் சுற்றித்திரிய தொடங்கியுள்ளார் 
அதாவது சகரான் குழுவினரும் ஆபரேஷனில் இறங்கியுள்ளனராம்  

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

தேர்தல்காலங்களின்பொழுதும், மாவீரர் நாள், கரும்புலிகள் நாள் ஆகிய நாட்களிலும் மட்டும் இந்தக் குண்டுவெடிப்புகளும், கைதுகளும் நடப்பது ஏன்?

மற்றைய நாட்களில் "மீள ஒருங்கிணையும் புலிகள்" தூங்குகிறார்களோ??

தமிழர்கள் தலைநிமிர்ந்தவிடக்கூடாது .
 இப்படியான  கதைகளைப் பரப்புவதனூடாக சிங்கள வாக்குவங்கியைக் கவர்தல்.
அனைத்துலக சமூகத்திடம் பயங்கவாதிகளின் நிழல் இன்னும் இருக்கிறது என்று காட்டுவதூடாக  தமிழினத்தின் அரசியலை வேறுதிசை நோக்கித் திருப்புதலும் காலத்தைக் கடத்துதலும் போன்ற  நன்மைகளை அடையச் சிங்களம் போடும் நாடகமே யாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகள் தினத்தில் முல்லைதீவில் குண்டை வெடிக்கவைக்க திட்டமிட்டனர்- ஐலன்ட் செய்தி

July 7, 2020

கரும்புலிகள் தினத்தில் தாக்குதலை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட குண்டே இயக்கச்சியில் வெடித்தது என விசாரணையாளர்கள் தெரிவிப்பதாக ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இயக்கச்சியில் முன்கூட்டியே வெடித்த குண்டை முல்லைத்தீவிற்கு கொண்டு சென்று வெடிக்கவைப்பதற்கான திட்டம் காணப்பட்டது என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

bomb-1.jpg

 

முன்னாள் போராளிகளும் கிளிநொச்சியை சேர்ந்த பல இளைஞர்களும் கரும்புலிகள் தினத்தை கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர் என விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர் என ஜலன்ட் தெரிவித்துள்ளது.

 

சனிக்கிழமை சம்பவத்தினை தொடர்ந்து குண்டு தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னாள் பேராளியின் மனைவியையும் கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,அவரும் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளி, குண்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவின் போராளி அவரதுபெயர் மேனன் என ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

 

மேனன் முதலில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவரது நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அனுராதபர வைத்தியசாலையி;ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஐலன்ட் தெரிவித்துள்ளது.

மேனனின் வீட்டை சோதனையிட்டவேளை இரு குண்டுகளையும் வெடிக்கவைக்கும் கருவிகளையும் கண்டுபிடித்தனர்.முன்கூட்டியே குண்டு வெடித்ததன் காரணமாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் கரும்புலிகள் தினத்தில் தங்கள் திட்டத்தினை முன்னெடுக்க முடியவில்லை என ஐலன்ட் தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டவர் எனவும்விடுதலையான பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியில் இணைந்தவர் எனவும் தெரியவந்துள்ளதாக விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனஐலன்ட் தெரிவித்துள்ளது.

இதேவேளை யாழ்பல்கலைகழக மாணவர்கள் கரும்புலிகள் தினத்தை கடைப்பிடித்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ஐலன்ட் குறிப்பிட்டுள்ளது.

 

http://thinakkural.lk/article/52409

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.