Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1000கோடி ரூபா கோரி மான நஷ்ட வழக்கு தொடருவேன் – சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1000-கோடி ரூபா கோரி மான நஷ்ட வழக்கு தொடருவேன் – சுமந்திரன்

sumo-1.jpg

நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவுக்கு என்ன நடந்தது என முன்னாள் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் அண்மையில் கேள்வியெழுப்பியிருந்தனர் நிலையில் அவர் தமிழரசு கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த நிதியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தானே கனடாவிலிருந்து பெற்று வந்ததாக குறிப்பிட்டார். ஆனால் நுண்நிதிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கோ பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கோ குறித்த நிதியிலிருந்து இதுவரை எந்த உதவிகளும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் தமிழரசுக்கட்சி ஊடாகக் கிடைத்த நிதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை செய்வதற்கு அழுத்தம் கொடுப்போம் என தெரிவித்திருந்தார்.

தமிழரசுக் கட்சியின் படைத்தல், காத்தல், மறைத்தல், அருளள், அழித்தல் ஆகிய ஐந்து தொழில்களையும் ஒருவரே கையில் எடுத்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் சுமந்திரன் மீதும் குற்றம்சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில் அண்மையில் சுமந்திரன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறித்த விடையம் தொடர்பில் தன்மீது வீண் பழி போடப்பட்டுள்ளதாகவும் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் அவர்களுக்கு எதிராக 1000கோடி ரூபா நஷ்ட்ட ஈடு கோரி மான நஷ்ட வழக்கு தொடரவிருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளார்.

https://www.vanakkamlondon.com/sumanthiran-11-07-2020/

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் கோடிக்கு எத்தனை பூச்சியம் என்று எண்ணி முடிப்பதற்குள் விமலேஸ்வரி காந்தரூபன் போய்ச்சேர்ந்துவிடுவா. பிறகென்னெண்டு வழக்கு நடாத்துவது 😂😂

விமலேஸ்வரி போட்டதும் ஒரு டமார வெடி சுமந்திரன் விட்டதும் பண்டார வெடி. சத்தம் மட்டும்தான் வரும். 😀

தேர்தல் முடியும்வரை நாங்கள் சிரிப்போம். 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

1000-கோடி ரூபா கோரி மான நஷ்ட வழக்கு தொடருவேன் – சுமந்திரன்

sumo-1.jpg

சிங்கன் காசு விசயத்திலையே கண்ணாயிருக்கிறான்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

சிங்கன் காசு விசயத்திலையே கண்ணாயிருக்கிறான்.:cool:

சிங்கியும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

சிங்கியும் தான்.

பங்கு பிரிப்பில் பிரச்சனை போலும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

ஆயிரம் கோடிக்கு எத்தனை பூச்சியம் என்று எண்ணி முடிப்பதற்குள் விமலேஸ்வரி காந்தரூபன் போய்ச்சேர்ந்துவிடுவா. பிறகென்னெண்டு வழக்கு நடாத்துவது 😂😂

விமலேஸ்வரி போட்டதும் ஒரு டமார வெடி சுமந்திரன் விட்டதும் பண்டார வெடி. சத்தம் மட்டும்தான் வரும். 😀

தேர்தல் முடியும்வரை நாங்கள் சிரிப்போம். 😜

ஒன்றுமே இல்லை என்று எப்படி சொல்லலாம் இதே தமிழரசு கூட்டத்தில் மாவையின் மகன் குழற தான் கொண்டுவந்தனான் என்று ஒப்புதல் வாக்கு மூலம் சுமத்திரன் கொடுத்து உள்ளாரே ?

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

ஒன்றுமே இல்லை என்று எப்படி சொல்லலாம் இதே தமிழரசு கூட்டத்தில் மாவையின் மகன் குழற தான் கொண்டுவந்தனான் என்று ஒப்புதல் வாக்கு மூலம் சுமத்திரன் கொடுத்து உள்ளாரே ?

ஐயா முட்டையில் மயிர் பிடுங்க வேண்டாம்.

இங்கு யாழ் களத்திலுள்ள ஒருவராவது  ""தேனெடுத்தவன் புறங்கையை நக்காது இருப்பான்"" என்று கூறத் திருவுளம் கொள்வாரோ ? 

அப்படியிருக்க நீர் நான் கூற வந்த விடயத்தை விட்டுவிட்டு நூலில் தொங்கிக் கொண்டு நிற்கிறீர். 

தேர்தல் முடிந்த பின்னர் விமலேஸ்வரி காந்தரூபன் இந்த விடயத்தை பெரிதாக்கி உண்மையைக் கண்டறிவாரோ ? இல்லையென்றால் அவர் கொழுத்தியது வெடிதானே 😀

இலங்கை மத்திய வங்கியிடமே ஆயிரம் கோடி பணமில்லை. அப்படியிருக்க சுமந்திரன் அவரிடம் ஆயிரம் கோடி கேட்டால் அவர் பணத்திற்கு எங்கே போவார் 😂 

இப்போது கூறுங்கள் யாருடைய வெடி பெரியது  😂😂

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kapithan said:

ஐயா முட்டையில் மயிர் பிடுங்க வேண்டாம்.

இங்கு யாழ் களத்திலுள்ள ஒருவராவது  ""தேனெடுத்தவன் புறங்கையை நக்காது இருப்பான்"" என்று கூறத் திருவுளம் கொள்வாரோ ? 

ஏன்  யாழ்கள கருத்தாளர்களை உங்கடை சுயநல அரசியலுக்கு இழுக்கிறீர்கள் ?

முட்டையில் மயிர் இருக்கெண்டு இதுவரைக்கும் எனக்கு தெரியாது  உங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கவும் அது உங்கடை வேலை எண்ணுவது எங்கடையது அல்ல  கோபிக்க கூடாது .

47 minutes ago, Kapithan said:

அப்படியிருக்க நீர் நான் கூற வந்த விடயத்தை விட்டுவிட்டு நூலில் தொங்கிக் கொண்டு நிற்கிறீர். 

நீங்கள்  யாரை சொல்கிறீர்கள் என்பது எனக்கு விளங்குது உங்களை மறந்து சொன்ன தகவலுக்கு  நன்றி 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

1) ஏன்  யாழ்கள கருத்தாளர்களை உங்கடை சுயநல அரசியலுக்கு இழுக்கிறீர்கள் ?

2) முட்டையில் மயிர் இருக்கெண்டு இதுவரைக்கும் எனக்கு தெரியாது  உங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கவும் அது உங்கடை வேலை எண்ணுவது எங்கடையது அல்ல  கோபிக்க கூடாது .

3) நீங்கள்  யாரை சொல்கிறீர்கள் என்பது எனக்கு விளங்குது உங்களை மறந்து சொன்ன தகவலுக்கு  நன்றி 

1) இதில் எங்கே ஐயா அரசியல் இருக்கிறது 😂😂

2) 🤥......😧......🙄......😴

3) ""நூல்""என்பதற்குள் இத்தனை விடயங்களா 😳😳😳

ஆழ்ந்த நித்திரையை அனுபவியுங்கள் (Good night (இதற்கும் வேறு அர்த்தம் கற்பிக்கக் கூடாதல்லவா 😀) )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.