Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் – ஜனாதிபதி எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் – ஜனாதிபதி எச்சரிக்கை

 

 

  by : Yuganthini

godappaya-3.jpg

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகியோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது கொழும்பு முதல் இரத்தினபுரி வரையிலான அதிவேக வீதிக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் சுரங்கத் தொழிலாளர்கள் குறித்த அனைத்து அனுமதிப்பத்திரங்களையும் ஒரு நிறுவனத்தின் ஊடாக வழங்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்வேன்” என அவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை அவிசாவளை முதல் ஓப்பநாயக்க வரையிலான பழைய ரயில் மார்க்கத்துக்குரிய இடங்களில் வசிக்கும்  35,000 இற்கும் மேற்பட்டோருக்கு சட்டரீதியான காணி உரிமம் இல்லாமை குறித்தும், இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/பாலியல்-வன்கொடுமையில்-ஈட/

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளுக்கும்.... கடுமையான தண்டனை கிடைக்குமா சார். 😁

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, nunavilan said:

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகியோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அப்படித் தண்டனை வழங்கினால் உங்களைப் பாதுகாக்கப் பாதுகாப்புப் படையே இல்லாமல் போய்விடுமே சனாதிபதி அவர்களே! 🤔

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

அப்படித் தண்டனை வழங்கினால் உங்களைப் பாதுகாக்கப் பாதுகாப்புப் படையே இல்லாமல் போய்விடுமே சனாதிபதி அவர்களே! 🤔

உண்மை. சரியாகச் சொன்னீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படின்னா முதற் தண்டனை இவருகே. முள்ளிவாய்க்காலின் போது தமிழ் பெண்கள் இராணுவத்திற்கு தமிழ் ஆண்கள் இந்துமா சமுத்திரத்திற்கு என்று பகிரங்கமாகக் கூவிய பாதுகாப்புச் செயலர் இவர். இவருக்கான தண்டனையை யார் முதலில் வழங்குவது...??!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.