Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா தடுப்பூசி: முதல் சுற்றில் நல்ல முடிவுகளை கொடுத்துள்ள ஆக்ஸ்போர்ட் பரிசோதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கி கொரோனா தடுப்பூசி, மனிதர்களின் உடலில் எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தாததுடன், கொரோனாவை எதிர்த்துப் போராட மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவது முதல் சுற்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் ஆய்வகப் பரிசோதனைகளை முடித்து, மனிதர்களுக்கு தந்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் முதல் சுற்றில் இத்தகைய முடிவு வந்துள்ளது. எனினும் பரிசோதனை அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்த பிறகே பொதுப் பயன்பாட்டுக்கு உகந்ததா என்பது முடிவு செய்யப்படும்.

இந்த முதல் சுற்று மனிதப் பரிசோதனையில் இந்த தடுப்பூசி 1,077 பேருக்குச் செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. இதில், இந்த தடுப்பு மருந்து ரத்த வெள்ளை அணுக்களையும், ஆண்டிபாடிக்களையும் கொரோனா வைரசுக்கு எதிராகப் போராட வைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

பரிசோதனை முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் விதத்திலிருந்தாலும், கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாப்பாதற்கு இது போதுமானதா என இப்போதே கூற முடியாது. பெரும் திரளான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே இறுதி முடிவு தெரியவரும்.

பிரிட்டன் அரசு 100 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க ஏற்கனவே கொள்முதல் ஆணை தந்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-53477212

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை வெற்றி ; இந்தியாவில் சோதனைகள் நடத்த திட்டம், விரைவில் உற்பத்தி தொடங்குகிறது

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை வெற்றி ; இந்தியாவில் சோதனைகள் நடத்த திட்டம், விரைவில் உற்பத்தி தொடங்குகிறது

 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இந்தியா பங்குதாரர் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் சோதனைகள் நடத்த திட்டம்மிட்டு உள்ளது விரைவில் உற்பத்தி தொடங்குகிறது.
பதிவு: ஜூலை 21,  2020 06:28 AM
புதுடெல்லி

 இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை உருவாக்கியது. இந்த தடுப்பூசி முதற்கட்ட சோதனைக்காக கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1000 பேருக்கு செலுத்தப்பட்டது. இதில் பாதி பேருக்கு பரிசோதனையில் இருந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.


பொதுவாக இத்தகைய முதற்கட்ட சோதனையில், செலுத்தப்படுவோரின் பாதுகாப்பு மட்டும் கருத்தில் கொள்ளப்படும். ஆனால் இந்த சோதனையில் அவர்களுக்கு எத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது? என்பதும் ஆராயப்பட்டது.

இந்த சோதனை முடிவில் பரிசோதனையில் கலந்து கொண்ட 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இரட்டை பாதுகாப்பு உருவாகியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த தகவல்களை மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட்டில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்த்ரா செனிகாவுடன் இணைந்து இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உலக அளவில் தயாரிக்கும். ஏற்கனவே 200 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் கிடைத்து உள்ளது.அஸ்த்ரா செனிகா, புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் இணைந்து இந்த தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய உள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் சோதனை வெற்றி பெற்று இருப்பதன் மூலம் இந்த ஆட்கொல்லிக்கு விரைவில் கடிவாளம் போடப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

ஏற்கனவே நடைபெற்று வரும் பெரிய அளவிலான கட்ட 3 சோதனைகளில், அமெரிக்காவில் மட்டும் சுமார் 30,000 பேர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறும் போது

சோதனைகள் "நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளன, அதைப் பற்றி நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

தற்போதைய நிலைமை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளின் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டின் இறுதியில் அஸ்ட்ராஜெனெகா ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்."

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் சோதனைகள் தவிர, தென்னாப்பிரிக்காவில் 2,000 பேரும், பிரேசிலில் 5,000 பேரும் சோதனைகளில் பங்கேற்பார்கள்.

"நாங்கள் ஒரு வார காலத்திற்குள் இந்திய ஒழுங்குமுறைக்கு உரிம சோதனைகளுக்கு விண்ணப்பிப்போம். அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்தவுடன், இந்தியாவில் தடுப்பூசிக்கான சோதனைகளைத் தொடங்குவோம். கூடுதலாக, விரைவில் தடுப்பூசியை பெருமளவில் தயாரிக்கத் தொடங்குவோம் என்று அவர் கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/21062843/Oxford-Vaccine-Partner-Plans-Trials-In-India-Manufacturing.vpf

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.... உலக மக்களுக்கு ஆறுதலான செய்தி. 

பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில்...  
கெட்டிக்காரர் தான் படிக்கின்றார்கள், என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இந்தியாவில் டிசம்பர் மாதம் கிடைத்துவிடும் 100 கோடி ‘டோஸ்’ தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இந்தியாவில் டிசம்பர் மாதம் கிடைத்துவிடும் 100 கோடி ‘டோஸ்’ தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம்

 

உலகை உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.

இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

அதிலும் இந்த தடுப்பூசி இரட்டை பாதுகாப்பு கொண்டதாக அமைந்திருக்கிறது.

இதை ஆரோக்கியமான 1,107 தன்னார்வலர்களுக்கு போட்டு பரிசோதித்ததில், அவர்களுக்கு ‘ஆன்டிபாடி’ என்று அழைக்கப்படக்கூடிய நோய் எதிர்ப்புச்சக்தியை மட்டுமல்லாமல், வைரஸ்களை எதிர்த்து போராடும் வலிமை மிக்க ‘டி’ செல்களையும் உருவாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பது விஞ்ஞானிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்த தடுப்பூசி பரிசோதனை முடிவை இந்திய மருத்துவ நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.

டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரியின் உள்மருத்துவ மூத்த ஆலோசகர் டாக்டர் சுரஞ்சித் சாட்டர்ஜி கூறும்போது, “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பூசியின் ஆரம்ப கட்ட சோதனைகள் இதுவரை வெளிப்படையானவை. வரவேற்கத்தக்கவை. உலகளவில் நடத்தப்படும் அனைத்து சோதனைகளிலும், இது அறிவியல் ரீதியில் நடைபெற்றிருக்கிறது, நம்பகமானது” என தெரிவித்தார்.

டாக்டர் லால் பாத் லேப்ஸ் செயல்தலைவர் டாக்டர் அரவிந்த் லால் கருத்து தெரிவிக்கையில், “இது மிகவும் சாதகமானது. இதவரை உலகளவில் நடத்தப்பட்ட மிகச்சிறந்த சோதனை இது. ஆரம்பகட்ட முடிவுகள், இறுதியில் நல்ல முடிவுக்கு வழிநடத்தும். நல்ல பலனையும் தரும்” என்று கூறினார்.

அத்துடன், “இந்த மருத்துவ பரிசோதனை முக்கியமானது என்று நான் கருதுகிறேன். இந்த தொற்றுநோயை தடுத்து நிறுத்த வல்லது, தடுப்பூசி மட்டும்தான். தடுப்பூசி மிக முக்கியம். நான் அதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” எனவும் குறிப்பிட்டார்.

நொய்டாவை சேர்ந்த போர்டிஸ் ஆஸ்பத்திரியின் நுரையீரல் மருத்துவ துறை தலைவர் டாக்டர் மிருனாள் சிர்கார் கூறும்போது, “ இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் இந்திய செரம் இன்ஸ்டிடியூட்டும் இணைந்து செயல்பட்டுள்ளது. நாம் இந்த தடுப்பூசியை உருவாக்கினால், அது இந்தியாவுக்கு உண்மையிலேயே பலனைத்தரும். அது மருத்துவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பலன் தரும்” என குறிப்பிட்டார்.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை நிலையை அடைந்துள்ளது.

இது தவிர அடுத்த மாதம் இந்தியாவில் மனிதர்களுக்கு நாங்கள் இந்த தடுப்பூசியை செலுத்தி பார்க்கும் பரிசோதனையை தொடங்கி விடுவோம்.

தற்போதைய நிலவரப்படியும், இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் குறித்த சமீபத்திய தகவல்கள் படியும், இந்த ஆண்டு இறுதிக்குள் (டிசம்பர் மாதம்) தடுப்பூசி பயன்பாட்டுக்கு கிடைத்துவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த தடுப்பூசியை 100 கோடி ‘டோஸ்’கள் தயாரித்து வினியோகிப்பதற்கு நாங்கள் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த தடுப்பூசி இந்தியாவுக்காகவும், உலகம் முழுவதும் உள்ள குறைவான வருமானம் உள்ள நாடுகளுக்காகவும்தான், இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனை அடுத்த மாதம் நடக்க உள்ளதால், அதைத் தொடர்ந்து உற்பத்தியும் தொடங்கி விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எனவே கண்டிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய மக்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை பிரகாசமாக உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/India/2020/07/22010033/Coronavirus-vaccine-300400-million-doses-by-December.vpf

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந்தியாவில் நவம்பர் மாதம் ரூ.1000 விலையில் கிடைக்கும்- இந்திய நிறுவனம் நம்பிக்கை

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந்தியாவில் நவம்பர் மாதம் ரூ.1000 விலையில் கிடைக்கும்- இந்திய நிறுவனம் நம்பிக்கை

உலகை உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.

இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.


இந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும், இந்த தடுப்பூசி ரூ .1,000 விலையில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்தூள்ளது.

இதுகுறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனாவாலா கூறியதாவது:-

இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிட்டு  சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூச்சியின் பாதி பங்கு ஏற்றுமதி செய்யப்படும் - அதாவது ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்படும் சுமார் 6 கோடி டோஸ்களில் இந்தியாவுக்கு 3 கோடி டோஸ்கள் கிடைக்கும்.

200 மில்லியன் டாலர்களை சோதிக்கப்படாத இந்த் தடுப்பூசி மருந்துக்கு ஒதுக்க முடிவு செய்ய சரியாக 30 நிமிடங்கள் ஆனது.  மீதமுள்ள கட்டங்களில் மருத்துவ பரிசோதனைகள் நல்ல பலன்களைப் பெறாவிட்டால், முழு பங்கும்  போகும் அபாயங்கள் உள்ளன.

"ஆகஸ்டில் இந்தியாவில் 3 ஆம் கட்ட சோதனைகளுக்குச் செல்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது முடிவடைய இரண்டிலிருந்து இரண்டரை மாதங்கள் ஆகும் என்று நாங்கள் கணித்துள்ளோம். இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று சொன்னால் உற்பத்தியை தொடங்குவோம்.

தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால் அது எவ்வளவு நன்றாக வேலை செய்கிறது, எத்தனை பேரை அது பாதுகாக்கும் என்பது தெரியவில்லை என கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/22070430/Oxford-University-will-be-in-India-by-November-and.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் 7 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க நடவடிக்கை இந்திய மருந்து நிறுவனம் அறிவிப்பு

தினமும் 7 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க நடவடிக்கை இந்திய மருந்து நிறுவனம் அறிவிப்பு

ஓவ்வொரு நாளும் உலக நாடுகளில் புதிய உச்சத்தை தொடுகிற அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருகிறது. உலகமெங்கும் நேற்று மதிய நிலவரப்படி 1½ கோடி பேருக்கு மேல் பாதித்துள்ள இந்த வைரஸ் தொற்று, ஏறத்தாழ 6¼ லட்சம் பேரை கொன்றிருக்கிறது.

இந்த வைரசை தடுத்து நிறுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற மருத்துவ பரிசோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, ரூ.1000-க்கு குறைவான விலையில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மராட்டிய மாநிலத்தின் புனே நகரில் புதன்கிழமை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 59 ஆயிரமாக உள்ளது. மும்பையில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரமாக உளள்து. இந்த இரு நகரங்களிலும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த மராட்டிய மாநிலத்தில் பாதிப்புக்குள்ளானவர்களில் பாதி அளவினர் இருப்பார்கள்.

கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற சோதனை தளங்களாக பல்வேறு இடங்களுடன் மும்பை, புனேயையும் பட்டியலிட்டிருக்கிறோம். இந்த நகரங்களில் கொரோனா தீவிர பரவலை கொண்ட பல இடங்கள் (ஹாட்ஸ்பாட்டுகள்) உள்ளன. இது எங்கள் தடுப்பூசியின் செயல்திறனை புரிந்துகொள்ள உதவும்.

இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியிடம் இருந்து தேவையான அனுமதிகளைப் பெற்று, இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் முக்கியமான மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை ஆகஸ்டு மாத வாக்கில் நடத்த இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம்.

தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கு தேவையான வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, விரைவான ஒப்புதல்களை அளித்து உதவி இருக்கிறார்கள்.

நாங்கள் அவசரப்பட விரும்பவில்லை. பொதுமக்களுக்கு ஒரு பயனுள்ள தடுப்பூசியை வழங்குவதில்தான் நாங்கள் எங்கள் கவனத்தை செலுத்துகிறோம்.

ஆரம்ப மற்றும் உரிம சோதனைகளின் வெற்றியைத்தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் 30 முதல் 40 கோடி வரையிலான தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்.

அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் நாங்கள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம்மூலம் எங்கள் நிறுவனம், 100 கோடி டோஸ்களை இந்தியாவுக்காகவும், 70 குறைந்த மற்றும் மத்திய வருமான நாடுகளுக்காகவும் தயாரிக்க முடியும்.

தடுப்பூசிகளை தயாரிப்பதில் எங்களுக்கு எந்த சவால்களும் இல்லை. எனவே எங்கள் நிறுவனம் தினமும் 6 கோடி முதல் 7 கோடி வரையிலான தடுப்பூசிகளுடன் தயாரிப்பைத் தொடங்கும்.

எங்கள் நிறுவனம், கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிப்பதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல்களைப் பெற்றதும் தயாரிப்பினை தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/24023541/covid-19-Measures-to-produce-7-crore-vaccines-daily.vpf

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.