Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகிறது; 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-720x450.jpg

ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகிறது; 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

பிரான்ஸ் நாட்டிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள அதிநவீன தொழிநுட்பங்களை கொண்ட  ரஃபேல் விமானங்கள் இன்று (புதன்கிழமை) இந்தியா வந்தடையவுள்ளன.

குறித்த விமானங்கள் பிற்பகல் 2 மணி அளவில் ஹரியானாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டில் இருந்து கடந்த திங்கட்கிழமை அன்று புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்தாப்ரா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியுள்ளது.

இவ்வாறு தரையிறக்கப்பட்ட  குறித்த விமானங்கள் காலை 11.00 மணிக்கு அங்கிருந்த புறப்பட்டு குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரை வந்தடையவுள்ளன. அதன் பிறகு பிற்பகல் 2.00 மணிக்கு ஹரியானா மாநிலத்தின் அம்பாலா விமானப்படை தளத்தை வந்தடையவுள்ளது.

அத்துடன் ரஃபேல் போர் விமானங்களின் வருகையை முன்னிட்டு அம்பாலா விமானப்படை தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் 05 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் வரும் நேரத்தில் எந்த ட்ரோன்களும் பறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/ரஃபேல்-போர்-விமானங்கள்-இ-2/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Five-Rafale-jets-in-the-Indian-airspace-flanked.jpg

இந்தியாவை வந்தடைந்தன ரஃபேல் போர் விமானங்கள்!

பிரான்சிடம் இருந்து இந்தியாவால் கொள்வனவு செய்யப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவின் ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப் படைத் தளத்தில் தரையிறங்கின.

கடந்த 27ஆம் திகதி பிரான்சில் இருந்து பயணத்தை ஆரம்பித்த ஐந்து ரஃபேல் விமானங்களே இன்று (புதன்கிழமை) பிற்பகல் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன.

பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த 36 ரஃபேல் ஜெற் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்குகின்றன.

இந்நிலையில், முதற்கட்டமாக பிரான்சில் இருந்து ஐந்து அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன

ரஃபேல் விமானங்களின் நீண்டதூர பயணம் பிரான்சில் இருந்து நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமானத் தளத்தில் குறித்த விமானங்கள் தரையிறக்கப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன.

ரஃபேல் போர் விமானங்களின் பயணத்தின்போது உரிய உதவிகளை வழங்குவதற்காக பிரான்சின் விமானப்படை விமானங்களும் இந்த பயணத்தில் இணைந்திருந்தன.

பயண தூரம் அதிகம் என்பதால் ரபேல் போர் விமானங்களுக்கு நடு வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்நிலையில் 30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை இந்திய விமானப்படை தனது டுவிற்றரில் பகிர்ந்துகொண்டுள்ளது.

https://athavannews.com/இந்தியாவை-வந்தடைந்தன-ரபே/

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் என்ன .. புரோகிதர்வாள கூப்பிட்டு பூஜைய போட வேண்டியதுதான்..👍

main-qimg-4fb0911a94c629486588015a01cd8e

memees.php?w=240&img=dml2ZWsvdml2ZWstYWN

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப திண்ணை காலியாகும் 😂

  • கருத்துக்கள உறவுகள்

ரஃபேல் கொள்வனவு குறித்து ராகுல் காந்தியின் முக்கிய 3 கேள்விகள்!

ராகுல்-காந்தி-720x400.jpg

பிரான்ஸிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானங்களில் 5 விமானங்கள் முதற்கட்டமாக இந்தியா வந்துள்ளன.

இந்நிலையில், இது தொடர்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ருவிட்டர் பக்கத்தில் மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தி இட்டுள்ள பதிவில்,  “ரஃபேல் போர் விமானங்களைப் பெற்ற இந்திய விமானப்படைக்கு வாழ்த்துக்கள். 3 கேள்விகளுக்கு இந்திய அரசு பதில் அளிக்க முடியுமா?

ஒவ்வொரு ரஃபேல் விமானத்தையும் 526 கோடி ரூபாய்க்கு  வாங்குவதற்கு பதிலாக ஏன் 1670 கோடிக்கு வாங்கப்பட்டது. 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அதை ரத்து செய்து ஏன் 36 விமானங்கள் வாங்கப்பட்டன?

இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிப்பதற்கு பதிலாக  திவாலான அனில் அம்பானி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் ஏன் வழங்கப்பட்டது”  எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/ரஃபேல்-கொள்வனவு-குறித்து/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.