Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தர்மச்சக்கர ஆடை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் மஸாஹிமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு எதிராக இலங்கை போலீஸார் தொடர்ந்திருந்த வழக்கை மீளப் பெற்றுள்ளனர்.

மஹியங்கண நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை நீதவான் ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மா அதிபரின் அறிவுரைக்கு அமைவாக, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாதென்றும், அதனால் வழக்கை மீளப் பெற்றுக் கொள்வதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்கிலிருந்தும் மேற்படி பெண்ணை விடுவிப்பதாக நீதவான் அறிவித்தார்.

கண்டி மாவட்டம் - கொலங்கொட எனும் பிரதேசத்தைச் சேர்ந்த மஸாஹிமா (தற்போது வயது 48) எனும் பெண், தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் என்றும், அதன் மூலம் அவர் பௌத்த மதத்தை அவமதித்து விட்டார் எனவும், அதன் மூலம் அவர் இனமுறுகலை ஏற்படுத்தினார் என்றும் குற்றம்சாட்டி, கடந்த வருடம் மே மாதம் 17ஆம் தேதி - ஹசலக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மறுநாள் மஹியங்கண நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் - பதுளை சிறைச்சாலையில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார்.

மேற்படி பெண் மீது தொடரப்பட்ட வழக்கில் கொழும்பைச் சேர்ந்த சட்டத்தரணி தம்பதிகள் ஏ.எம்.எம். சறூக் மற்றும் பாத்திமா நுஸ்ரா சறூக் ஆகியோர் ஆஜராகி வந்தனர். கட்டணம் எதனையும் பெறாமல் மேற்படி சட்டத்தரணிகள் இந்த வழக்கில் ஆஜராகிமை குறிப்பிடத்தக்கது.

சரியான வடிவம் அரசிடம் இல்லை

இதேவேளை, குற்றம்சாட்டப்பட்ட பெண் அணிந்திருந்த ஆடையில் உள்ளது, தர்மச் சக்கரம்தானா என்பதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக அதனை புத்த சமய அலுவல்கள் ஆணையாளருக்கும், தர நிர்ணய சபையினருக்கும் தாங்கள் அனுப்பியதாகவும், ஆனால் அதனை ஒப்பிட்டு நோக்குவதற்கு தம்மிடம் தர்மச் சக்கரத்தின் சரியான வடிவம் இல்லை என்று அவர்கள் கூறி விட்டனர் எனவும், கடந்த வருடம் ஜுன் மாதம் நீதிமன்றில் போலீஸார் தெரிவித்திருந்தனர்.

தர்மச் சக்கர ஆடை வழக்கு: பெண்ணுக்கு எதிரான வழக்கை, மீளப்பெற்றனர் போலீஸார்

பட மூலாதாரம், FAcebook

 

இதனையடுத்து தன்னை போலீஸார் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, மேற்படி மஸாஹிமா எனும் பெண், கடந்த வருடம் ஜுன் மாதம் நடுப்பகுதியளவில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், குறித்த பெண்ணை கைது செய்து விளக்க மறியலில் வைத்திருந்தமையின் மூலம் அவரின் அடிப்படை உரிமை மீளப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவருக்கு நீதிமன்றின் மூலம் நஷ்டைஈட்டைப் பெற்றுக் கொடுக்கப் போவதாகவும் சட்டத்தரணி சறூக் கூறினார்.

"குறித்த பெண்ணுக்கு நஷ்டஈட்டை வழங்குமாறு நேற்றைய தினம் மஹியங்கண நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தோம். ஆனால், வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது என்று மட்டுமே சட்ட மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும், நஷ்டஈடு வழங்குவது தொடர்பில் அவர் எதனையும் குறிப்பிடவில்லை என்றும் மன்றில் நீதவான் கூறினார். எனவேதான், உச்ச நீதிமன்றின் மூலம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுக்கத் தீர்மானித்துள்ளோம்" எனவும் சட்டத்தரணி சறூக் தெரிவித்தார்.

புத்தரை பச்சை குத்திய நயோமி கோல்மன்

இலங்கையில் இதுபோன்றதொரு 'பௌத்த சமய அவமதிப்பு' குற்றச்சாட்டு ஒன்றினை 2014ஆம் ஆண்டு பிரித்தானியாவைச் சேர்ந்த நயோமி கோல்மன் எனும் பெண் - இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்தபோது எதிர்கொண்டார்.

தர்மச் சக்கர ஆடை வழக்கு: பெண்ணுக்கு எதிரான வழக்கை, மீளப்பெற்றனர் போலீஸார்

பட மூலாதாரம், facebook

 

அப்போது அந்தப் பெண்ணின் இடதுகை புஜத்தில் புத்தரின் வடிவம் பச்சை குத்தப்பட்டிருந்ததைக் காரணம் காட்டி, அவரை போலீஸார் கைது செய்து, 04 நாட்கள் தடுத்து வைத்திருந்தனர். பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டார்.

பிரித்தானியா சென்ற நயோமி கோல்மன், அந்த சம்பவத்துக்கு எதிராக இலங்கையின் உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். மூன்று வருடங்கள் நீடித்த அந்த வழக்கின் தீர்ப்பு 2017ஆம் ஆண்டு, நயோமி கோல்மன் எனும் அந்தப் பெண்ணுக்கு சார்பாக வழங்கப்பட்டது.

புத்தரின் உருவத்தை தனது உடலில் பச்சை குத்திக் கொண்டமை, அந்தப் பெண்ணின் அடிப்படை உரிமை என, தனது தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், அந்தப் பெண்ணை கைது செய்ததன் மூலம் அவரின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

எனவே, புத்தரின் உருவத்தை பச்சை குத்திக் கொண்டதாகக் கூறி, அந்தப் பெண்ணைத் தடுத்து வைத்தமைக்கு நஷ்டஈடாக 05 லட்சம் ரூபாவை அரசாங்கம் வழக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்தோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழக்குச் செலவாக 02 லட்சம் ரூபாவை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவற்றுக்கு மேலதிகமாக அந்தப் பெண்ணைக் கைது செய்த கட்டுநாயக்க போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் போலீஸ் சார்ஜன்ட் ஆகியோர், தலா 50 ஆயிரம் ரூபாயை அந்தப் பெண்ணுக்கு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

https://www.bbc.com/tamil/sri-lanka-53818951

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிழம்பு said:

பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு எதிராக இலங்கை போலீஸார் தொடர்ந்திருந்த வழக்கை மீளப் பெற்றுள்ளனர்.

மஹியங்கண நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை நீதவான் ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மா அதிபரின் அறிவுரைக்கு அமைவாக, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாதென்றும், அதனால் வழக்கை மீளப் பெற்றுக் கொள்வதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்கிலிருந்தும் மேற்படி பெண்ணை விடுவிப்பதாக நீதவான் அறிவித்தார்.

கண்டி மாவட்டம் - கொலங்கொட எனும் பிரதேசத்தைச் சேர்ந்த மஸாஹிமா (தற்போது வயது 48) எனும் பெண், தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் என்றும், அதன் மூலம் அவர் பௌத்த மதத்தை அவமதித்து விட்டார் எனவும், அதன் மூலம் அவர் இனமுறுகலை ஏற்படுத்தினார் என்றும் குற்றம்சாட்டி, கடந்த வருடம் மே மாதம் 17ஆம் தேதி - ஹசலக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மறுநாள் மஹியங்கண நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் - பதுளை சிறைச்சாலையில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார்.

மேற்படி பெண் மீது தொடரப்பட்ட வழக்கில் கொழும்பைச் சேர்ந்த சட்டத்தரணி தம்பதிகள் ஏ.எம்.எம். சறூக் மற்றும் பாத்திமா நுஸ்ரா சறூக் ஆகியோர் ஆஜராகி வந்தனர். கட்டணம் எதனையும் பெறாமல் மேற்படி சட்டத்தரணிகள் இந்த வழக்கில் ஆஜராகிமை குறிப்பிடத்தக்கது.

சரியான வடிவம் அரசிடம் இல்லை

இதேவேளை, குற்றம்சாட்டப்பட்ட பெண் அணிந்திருந்த ஆடையில் உள்ளது, தர்மச் சக்கரம்தானா என்பதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக அதனை புத்த சமய அலுவல்கள் ஆணையாளருக்கும், தர நிர்ணய சபையினருக்கும் தாங்கள் அனுப்பியதாகவும், ஆனால் அதனை ஒப்பிட்டு நோக்குவதற்கு தம்மிடம் தர்மச் சக்கரத்தின் சரியான வடிவம் இல்லை என்று அவர்கள் கூறி விட்டனர் எனவும், கடந்த வருடம் ஜுன் மாதம் நீதிமன்றில் போலீஸார் தெரிவித்திருந்தனர்.

தர்மச் சக்கர ஆடை வழக்கு: பெண்ணுக்கு எதிரான வழக்கை, மீளப்பெற்றனர் போலீஸார்

பட மூலாதாரம், FAcebook

 

இதனையடுத்து தன்னை போலீஸார் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, மேற்படி மஸாஹிமா எனும் பெண், கடந்த வருடம் ஜுன் மாதம் நடுப்பகுதியளவில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், குறித்த பெண்ணை கைது செய்து விளக்க மறியலில் வைத்திருந்தமையின் மூலம் அவரின் அடிப்படை உரிமை மீளப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவருக்கு நீதிமன்றின் மூலம் நஷ்டைஈட்டைப் பெற்றுக் கொடுக்கப் போவதாகவும் சட்டத்தரணி சறூக் கூறினார்.

"குறித்த பெண்ணுக்கு நஷ்டஈட்டை வழங்குமாறு நேற்றைய தினம் மஹியங்கண நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தோம். ஆனால், வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது என்று மட்டுமே சட்ட மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும், நஷ்டஈடு வழங்குவது தொடர்பில் அவர் எதனையும் குறிப்பிடவில்லை என்றும் மன்றில் நீதவான் கூறினார். எனவேதான், உச்ச நீதிமன்றின் மூலம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுக்கத் தீர்மானித்துள்ளோம்" எனவும் சட்டத்தரணி சறூக் தெரிவித்தார்.

புத்தரை பச்சை குத்திய நயோமி கோல்மன்

இலங்கையில் இதுபோன்றதொரு 'பௌத்த சமய அவமதிப்பு' குற்றச்சாட்டு ஒன்றினை 2014ஆம் ஆண்டு பிரித்தானியாவைச் சேர்ந்த நயோமி கோல்மன் எனும் பெண் - இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்தபோது எதிர்கொண்டார்.

தர்மச் சக்கர ஆடை வழக்கு: பெண்ணுக்கு எதிரான வழக்கை, மீளப்பெற்றனர் போலீஸார்

பட மூலாதாரம், facebook

 

அப்போது அந்தப் பெண்ணின் இடதுகை புஜத்தில் புத்தரின் வடிவம் பச்சை குத்தப்பட்டிருந்ததைக் காரணம் காட்டி, அவரை போலீஸார் கைது செய்து, 04 நாட்கள் தடுத்து வைத்திருந்தனர். பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டார்.

பிரித்தானியா சென்ற நயோமி கோல்மன், அந்த சம்பவத்துக்கு எதிராக இலங்கையின் உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். மூன்று வருடங்கள் நீடித்த அந்த வழக்கின் தீர்ப்பு 2017ஆம் ஆண்டு, நயோமி கோல்மன் எனும் அந்தப் பெண்ணுக்கு சார்பாக வழங்கப்பட்டது.

புத்தரின் உருவத்தை தனது உடலில் பச்சை குத்திக் கொண்டமை, அந்தப் பெண்ணின் அடிப்படை உரிமை என, தனது தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், அந்தப் பெண்ணை கைது செய்ததன் மூலம் அவரின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

எனவே, புத்தரின் உருவத்தை பச்சை குத்திக் கொண்டதாகக் கூறி, அந்தப் பெண்ணைத் தடுத்து வைத்தமைக்கு நஷ்டஈடாக 05 லட்சம் ரூபாவை அரசாங்கம் வழக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்தோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழக்குச் செலவாக 02 லட்சம் ரூபாவை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவற்றுக்கு மேலதிகமாக அந்தப் பெண்ணைக் கைது செய்த கட்டுநாயக்க போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் போலீஸ் சார்ஜன்ட் ஆகியோர், தலா 50 ஆயிரம் ரூபாயை அந்தப் பெண்ணுக்கு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

https://www.bbc.com/tamil/sri-lanka-53818951

அப்போ இவளவு நாளும் தர்ம சக்கரம் என்று சும்மா படம் காட்டி கொண்டு இருந்தார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கும் நிறைய சட்ட உதவிகள் தேவையாக உள்ளதல்லவா? இவர்களிடம் கேட்கலாமா? நீராவியடி பிள்ளையாருக்கும், திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும், விரிவுரையாளர் கண்ணதாசனுக்கும் சுமந்திரன் உதவினார். அவரையும், கள்ளவாக்கு என்று அரச பக்கம் அனுப்பியாச்சு. குருபரன் ஒன்று இரண்டு செய்கிறார். மற்றவர்களுக்கு எங்களிடம் சட்டத்தரணிகள் இல்லாததால், எங்களையும் தமிழ் பேசும் சகோதரர்கள் என்று கருதி உதவுமாறு இந்த முஸ்லிம் சட்டத்தரணி தம்பதிகளுடம் கெஞ்சிக் கேட்டு பார்க்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

கள்ளவாக்கு என்று அரச பக்கம் அனுப்பியாச்சு

கள்ள வாக்கு வந்ததே சிங்களவர்களிடம் இருந்து தமிழர்களின் ஒற்றுமையை குலைக்கவே வந்த வேலை முடிந்தால் போயிருக்கணும் போ சொல்லுங்கள் அந்த கள்வனை இப்படி சொன்னால் போகுமா ?

 

12 minutes ago, கற்பகதரு said:

நீராவியடி பிள்ளையாருக்கும், திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும், விரிவுரையாளர் கண்ணதாசனுக்கும் சுமந்திரன் உதவினார்.

அவர் உதவி பிரச்சனை முடிந்ததா ?

 

13 minutes ago, கற்பகதரு said:

இந்த முஸ்லிம் சட்டத்தரணி தம்பதிகளுடம் கெஞ்சிக் கேட்டு பார்க்கலாமா?

புதியவர்களை நீங்கள்  நம்புவது இல்லையே ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

நீராவியடி பிள்ளையாருக்கும், திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும், விரிவுரையாளர் கண்ணதாசனுக்கும் சுமந்திரன் உதவினார். அவரையும், கள்ளவாக்கு என்று அரச பக்கம் அனுப்பியாச்சு.

 

2 hours ago, பெருமாள் said:

அவர் உதவி பிரச்சனை முடிந்ததா ?

இது கூட தெரியவில்லையா?  

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஈஸ்ட்காமில்  *** சுமத்திரன் சில்வருடங்களுக்கு முன்பு கூட்டம் ஒன்று பவுன்சர் பாதுகாப்புடன் வைத்தார் கேள்வி கேட்கப்படுது  பதில் இதற்க்கு இலங்கை அரசியல் யாப்பை படித்து தெரிந்து கொள்ளுங்கள் .

இரண்டாவது கேள்வி கேட்கப்படுது  பதில் அதற்கும் நீங்கள்  ஆறுதலாக இலங்கையின் அரசியல் யாப்பை படித்து புரிந்துகொள்ளுங்கள் .

மூன்றாவது கேள்வி கேட்க்க எழவும் பவுன்சர்களால் அந்த கேள்வி கேட்ட நபர் எச்சரிக்க படுகிறார் 

அதன்பின் கூட்டத்தில் இருப்பவர்களை பார்த்து எச்சரிக்கும் தொனியில் யாரும் கூட்டத்தை குழப்பும் வண்ணம் நடந்து கொண்டால் அவருக்கு நடந்ததுதான் நடக்கும் .

 

இணையத்தில் இருப்பது தெரியும் உங்களுக்கு அவை பற்றி விளக்கம் இருக்கா ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

இணையத்தில் இருப்பது தெரியும் உங்களுக்கு அவை பற்றி விளக்கம் இருக்கா ?

 

10 hours ago, பெருமாள் said:

அவர் உதவி பிரச்சனை முடிந்ததா ?

உங்களுக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியுமா? 😁

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

தமிழ் மக்களுக்கும் நிறைய சட்ட உதவிகள் தேவையாக உள்ளதல்லவா? இவர்களிடம் கேட்கலாமா? நீராவியடி பிள்ளையாருக்கும், திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும், விரிவுரையாளர் கண்ணதாசனுக்கும் சுமந்திரன் உதவினார். அவரையும், கள்ளவாக்கு என்று அரச பக்கம் அனுப்பியாச்சு. குருபரன் ஒன்று இரண்டு செய்கிறார். மற்றவர்களுக்கு எங்களிடம் சட்டத்தரணிகள் இல்லாததால், எங்களையும் தமிழ் பேசும் சகோதரர்கள் என்று கருதி உதவுமாறு இந்த முஸ்லிம் சட்டத்தரணி தம்பதிகளுடம் கெஞ்சிக் கேட்டு பார்க்கலாமா?

தாராளமாக நீங்கள் கெஞ்சலாம் ...we don't have any issue. 
At the end of the day it's your wish😂🤣😆. சுத்துமாத்து அரச பக்கம் போயிட்டாரா இது எப்போ ...?
அவர் வந்த வேலை இன்னும் முடியவில்லையே இப்போதானே 22 இலிருந்து 9 ஆக்கியிருக்கிறார் கொஞ்சம் பொறுங்கோ 9 ஐ 0 ஆக்கிவிட்டு அரசதரப்பில் தேசியப்பட்டியல் பா .ஊ ஆக மிக சீக்கிரமே வருவார்   

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அரசதரப்பில் தேசியப்பட்டியல் பா .ஊ ஆக மிக சீக்கிரமே வருவார்   

வி. முரளிதரன் மாதிரியும்  ஆகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சுத்துமாத்து அரச பக்கம் போயிட்டாரா இது எப்போ ...?
அவர் வந்த வேலை இன்னும் முடியவில்லையே இப்போதானே 22 இலிருந்து 9 ஆக்கியிருக்கிறார் கொஞ்சம் பொறுங்கோ 9 ஐ 0 ஆக்கிவிட்டு அரசதரப்பில் தேசியப்பட்டியல் பா .ஊ ஆக மிக சீக்கிரமே வருவார்   

சுத்திச்சுத்தி சுமந்திரனின் கொல்லைக்குள் தானா இன்னமும் நிற்கிறீர்கள்? அதற்கு வெளியால் எதுவுமில்லை - இல்லையா?

 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கற்பகதரு said:

சுத்திச்சுத்தி சுமந்திரனின் கொல்லைக்குள் தானா இன்னமும் நிற்கிறீர்கள்? அதற்கு வெளியால் எதுவுமில்லை - இல்லையா?

கொஞ்சம் மேலே போய் நீங்கள் எழுதினதை நீங்களே வாசிக்கிறீர்களா...? 
தர்மசக்கரத்திற்குள் சுத்துமாத்து சும்மை   இழுத்துகொண்டுவந்து சொருகியது யாரென்று (வழமை போல)  
....😂😂😆

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, அக்னியஷ்த்ரா said:

கொஞ்சம் மேலே போய் நீங்கள் எழுதினதை நீங்களே வாசிக்கிறீர்களா...? 
தர்மசக்கரத்திற்குள் சுத்துமாத்து சும்மை   இழுத்துகொண்டுவந்து சொருகியது யாரென்று (வழமை போல)  
....😂😂😆

 

On 18/8/2020 at 07:05, கற்பகதரு said:

தமிழ் மக்களுக்கும் நிறைய சட்ட உதவிகள் தேவையாக உள்ளதல்லவா? இவர்களிடம் கேட்கலாமா? நீராவியடி பிள்ளையாருக்கும், திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும், விரிவுரையாளர் கண்ணதாசனுக்கும் சுமந்திரன் உதவினார். அவரையும், கள்ளவாக்கு என்று அரச பக்கம் அனுப்பியாச்சு. குருபரன் ஒன்று இரண்டு செய்கிறார். மற்றவர்களுக்கு எங்களிடம் சட்டத்தரணிகள் இல்லாததால், எங்களையும் தமிழ் பேசும் சகோதரர்கள் என்று கருதி உதவுமாறு இந்த முஸ்லிம் சட்டத்தரணி தம்பதிகளுடம் கெஞ்சிக் கேட்டு பார்க்கலாமா?

நான் எழுதியது இந்த முஸ்லிம் சட்டத்தரணிகள் பற்றி. சுமந்திரனும் குருபரனும் உதவுகிறார்கள் என்றும் எழுதினேன்.

நீங்களோ, சுமந்தரன் பெயரைக்கண்டதும் பேதி போகிறவர் மாதிரி குழம்பிப் போய் சுமந்திரம் சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள்.😆

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

அவரையும், கள்ளவாக்கு என்று அரச பக்கம் அனுப்பியாச்சு

சுமந்திரன் உதவுகிறார் என்று எழுதினீர்கள் சரி , எதற்கு கள்ளவாக்கு விடயத்தை இழுத்துகொண்டுவந்து உங்கடை தனிப்பட்ட குடைச்சலுக்கு அலம்பினீர்கள் ...? 
என்னை கள்ளவாக்கு என்று சொல்கிறார்கள் இனி நான் தமிழர்களுக்கு உதவமாட்டேன் என்று சும் உங்களிடம் சொன்னாரா...?
அப்படி அவர் உங்களிடம் சொல்லியிருந்தாலும் நீங்கள் தான் வாங்கிக்கட்ட வேண்டிவரும் ஏனென்றால் சுமந்திரத்தை எங்களிடம் சொல்வது நீங்கள் ...Can't Help ...😂😂🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.